search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்னல்"

    • திருச்சி மாநகரில் விபத்துகள் அதிகம் நடைபெறும் 21 பகுதிகளில் பிரத்யேக சிக்னல் அமைக்கப்பட உள்ளது
    • போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

    திருச்சி,

    திருச்சி மாநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தங்கள் கண்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் குளிர் கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையம் முன்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகர போலீஸ் கமிஷனர் சத்யபிரியா பங்கேற்று 200-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து நிருபர்களிடம் கூறுகையில், திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக செயல்படும் மதுபான கூடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் பகுதியில் அதிக விபத்துகள் நடக்கும் பகுதியில் ஒன்றாக உள்ளதால், அங்கு சிக்னல் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் 21 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளிலும் இதுபோன்ற சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளது. இதேபோன்று போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாலை விதிகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது என்றார்.

    • வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வரிசையாக சென்றது.
    • சிக்னலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குனியமுத்தூர்,

    கோவையில் உள்ள முக்கிய சாலைகளில் கோவை தடாகம் சாலை மிகவும் முக்கியமான சாலையாகும்.காந்தி பார்க், பால் கம்பெனி, ஜி.சி.டி, வெங்கடாபுரம், வேலண்டி பாளையம், கோவில்மேடு, இடை யார்பாளையம், சிவாஜி காலனி, டி.வி.எஸ் நகர், கணுவாய், ஆனைகட்டி பகுதிகளுக்கு செல்லும் முக்கியமான சாலை இதுவாகும்.

    இந்த சாலையின் மையப்பகுதி இடையர் பாளையம் பிரிவாகும். இடையர்பாளையம் பிரிவில் உள்ள 4 ரோடு சந்திப்பில் ஒருபுறம் கவுண்டம் பாளையத்திற்கும், ஒருபுறம் வடவள்ளிக்கும், ஒருபுறம் கணுவாய்க்கும், ஒருபுறம் காந்தி பார்க்குக்கும் செல்லக்கூடிய சாலை யாகும்.

    இந்த 4 ரோடு சந்திப்பில் எந்த நேரமும் வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக சென்று கொண்டிருக்கும். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வரிசையாக சென்றது.

    ஆனால் தற்போது பல மாதங்களாக இந்த சிக்னல் செயல்படவில்லை. இதனால் வாகனங்கள் அனைத் தும் அத்துமீறி செல்லும் அவல் நிலை உள்ளது. இது குறித்து மக்கள் கூறியதாவது:- சராசரியாக ஒரு நாளைக்கு இந்த இடையர்பாளையம் பகுதி சிக்னலில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கிறது.

    சிக்னல் இயங்கி கொண்டி ருக்கும்போது எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தற்போது சிக்னல் இயங்கப்படவில்லை. போக்குவரத்து போலீசாரும் நிற்பதில்லை. இதனால் வாகனங்கள் அனைத்தும் தாறுமாறாக செல்லும் சூழ்நிலை உள்ளது.

    4 சக்கர வாகனங்கள் வருவதற்கு முன்கூட்டியே இரு சக்கர வாகனங்கள் குறுக்கே புகுவதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகிறது .

    குழந்தைகளை அழைத் துக் கொண்டு பள்ளிக்கு செல்லும் தாய்மார்கள் அவ்வப்போது கீழே விழுந்து எழும் சூழ்நி லையும் காணப்படுகிறது. மேலும் தடாகம் சாலை யானது செங்கல் லாரிகள் அதிகம் பயணிக்கும் சாலையாக உள்ளது.

    எனவே போக்குவரத்து போலீசார் இதனை கருத்தில் கெண்டு இந்த சிக்னலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் போக்குவரத்து போலீசார் இந்த இடத்தில் நின்று போக்குவரத்தை சீரமைக்க வேண்டும். இல்லையென்றால் தினமும் விபத்துகளை சந்திக்க நேரிடும்.

    எனவே இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குடிமங்கலம் நால்ரோடு வழியில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
    • சேலம், சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களும் இந்த வழியாக செல்கின்றன.

    உடுமலை :

    உடுமலையிலிருந்து பல்லடம் திருப்பூர் செல்லும் சாலை, பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலை ஆகியவை சந்திக்கும் முக்கியமான இடமாக குடிமங்கலம் நால்ரோடு பகுதி உள்ளது. இந்த வழியில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக உடுமலை பகுதியில் இருந்து சேலம், சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களும் இந்த வழியாக செல்கின்றன. மேலும் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கும் குடிமங்கலம் நால்ரோடு பகுதி வந்து பஸ் ஏறி செல்கின்றனர். நால்ரோடு பகுதி மிகவும் விசாலமாகவும் ரவுண்டான அமைக்கும் வகையிலும் உள்ளது இதனால் சாலை கடப்பதற்கு வேகமாக வரும் வாகனங்கள் பாதசாரிகளின் மீது மோதி விடுகின்றன.

    இங்கு போக்குவரத்து போலீசாரும் பணியில் இருப்பதில்லை. எனவே குடிமங்கலம் நால்ரோடு பகுதியில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் அதிவேகமாக வருகிறது.
    • தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரும், 42-வது வார்டு கவுன்சிலருமான அன்பகம் திருப்பதி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபுவிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாநகராட்சி மங்கலம் ரோடு பாரப்பாளையம் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் வாசல் நான்கு முக்கு சாலை சந்திப்பில் அமைந்துள்ளது. அந்த பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் அதிவேகமாக வருகிறது. இதனால் குழந்தைகளும், வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் பள்ளியின் முன் உள்ள ரவுண்டானாவில் சிக்னல் அமைக்க வேண்டும். அதுவரை அங்கு தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும்.

    அதே ரோட்டில் குமரன் மகளிர் கல்லூரியில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கிறார்கள். மாலை 4 மணிக்கு கல்லூரி முடியும் நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட மினிபஸ்கள் கல்லூரியின் வாசலில் நிறுத்தி பயணிகளை ஏற்ற போட்டி போடுகிறார்கள். இதனால் இருசக்கர வாகனங்கள் மூலம் மாணவிகளை அழைக்க வரும் 400-க்கும் மேற்பட்ட பெற்றோர் கடும் சிரமத்தை சந்திக்கிறார்கள். மற்ற வாகனங்கள் கடந்து செல்ல சிரமப்படுகிறது. அதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையே வாக்குவாதம் பிரச்சினை ஏற்படுகிறது. அங்கு போக்குவரத்து காவலரை நியமித்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும். ஏற்கனவே இதுகுறித்து கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

    சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் உறுதியளித்துள்ளார்.

    • போக்குவரத்து போலீசாரின் இந்த ஏற்பாட்டுக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
    • காலை மற்றும் மாலை நேரங்களில் சிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை வருகிறது.

    வடவள்ளி

    கோவை தடாகம் சாலையில் லாலி ரோடு சிக்னல் உள்ளது. மருதமலை, தடாகம், காந்திபார்க், மேட்டுப ்பாளையம் சாலை ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சந்திப்பாக இந்த பகுதி உள்ளது.

    இந்த சாலையில் கடக்கும் வாகனங்கள் சிக்னலில் மிக நீண்ட தூரம் காத்திருக்கின்றன. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் சிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை வருகிறது.

    இதனால் தடாகம்- மருதமலை, லாலி ேராடு பகுதிகளில் அதிகளவில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அந்த பகுதிகளில் சிக்னல் நிறுத்தி வைக்கப்பட்டது.

    மேலும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு சிறிய ரவுண்டானா போன்று அமைக்கப்பட்டது.

    இதன் மூலம் காந்தி பார்க் பகுதியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் மருதமலை செல்லவும், தடாகம் செல்லக்கூடிய வாகனங்கள் ெசல்லும் பாதையும் மாற்றி அமைக்கப்பட்டது.

    இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முன்பு போல் காத்திருக்காமல் உடனே செல்கின்றனர்.

    நேற்று மாலை முதல் தொடரப்பட்ட இந்த வெள்ளோட்டம் வெற்றி அடைந்திருப்பதாக போக்குவரத்து துறையும், நெடுஞ்சாலைத்துறை யினரும் தெரிவித்துள்ளனர். இதற்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த வெள்ளோட்ட பணியானது போக்குவரத்து துறை துணை கமிஷனர் மதிவாணன் மற்றும் சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் மனுநீதி ஆகியோர் ஏற்பாட்டில் நடை பெற்றது. இதே போன்று சிந்தாமணி பகுதியிலும் போக்குவரத்து வெள்ளோட்டம் பார்க்கப் பட்டு வருகிறது.

    • புதிய பஸ் நிலையத்துக்கு சென்று கும்பகோணம் பஸ்சில் ஏறும் சூழல் உள்ளது.
    • 4 ராஜ வீதிகளிலும் சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார். ஆணையர் சரவணகுமார் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் மேயர் சண்.ராமநாதன் பேசியதாவது :-

    தஞ்சாவூர் மாநகராட்சியால் முழுமையாக மீட்கப்பட்ட 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டதும் பல கோடி மதிப்பிலான யூனியன் கிளப் கட்டிடத்தில் நூலகம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் வர உள்ளது. மாமன்னர் ராஜ ராஜ சோழன் சதய விழாவை அரசு விழாவாக அறிவித்த முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இந்த மாமன்றம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

    இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு:-

    மண்டல குழு தலைவர் புண்ணியமூர்த்தி: தஞ்சையில் இருந்து கும்பகோணத்துக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் புதிய பஸ் நிலையத்திலேயே நிரம்பி வழிகிறது. இதனால் பழைய பஸ் நிலையத்திலிருந்து ஏறும் பயணிகள் இடம் கிடைக்க முடியாமல் அவதி அடைகின்றனர்.

    இதனால் பலர் புதிய பஸ் நிலையத்துக்கு சென்று கும்பகோணம் பஸ்சில் ஏறும் சூழல் உள்ளது. எனவே புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுவது போல் பழைய பஸ் நிலையத்தில் ஆரம்ப மையமாகக் கொண்டு கும்பகோணத்திற்கு பஸ்கள் இயக்க வேண்டும். இதேபோல் திருச்சிக்கும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்க வேண்டும்.

    மண்டல குழு தலைவர் மேத்தா: சதய விழாவை அரசு

    விழாவாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் காமராஜ் மார்க்கெட்டை திறந்து வைத்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    மணிகண்டன் : ரூ.500-க்கு கீழ் வருமானம் உள்ள அம்மா உணவகம் மூடப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏழைகளுக்கு பயன்படும் அம்மா உணவகத்தை மூடக்கூடாது ‌‌. தஞ்சை மாநகரில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். தஞ்சை மாநகரில் உள்ள சாந்திவனம், ராஜகோரி, மாரிகுளம் ஆகிய மூன்று சுடுகாட்டில் உடல்களை எரிக்க தனியார் அமைப்புக்கு கான்ட்ராக்ட் விடப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக கருதுகிறேன்.

    இதற்கு பதில் அளித்து மேயர் சண்.ராமநாதன் கூறும்போது, சுடுகாட்டில் உடல்களை இலவசமாக தகனம் செய்யப்படும் என்று நான் பதவி ஏற்றவுடன் திட்டம் கொண்டு வந்து செயல்படுத்தினேன். கடந்த முறை உடல் தகனம் செய்ய பணம் வாங்கப்பட்டது. ஆனால் நான் மேயராக பதவி ஏற்றவுடன் முழுக்க முழுக்க இலவசமாக உடல் தகனம் செய்யப்படும் என்று அறிவித்தேன். இந்தத் திட்டத்தில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை.

    ஒருபோதும் முறைகேடு நடக்க விட மாட்டேன். ஒரு சுடுகாட்டுக்கு உடல்களை எரியூட்ட 27 டன் அளவுக்கு மரக்கட்டைகள், ரூ.12 ஆயிரம் வைக்கோல்கள் தேவைப்படுகிறது. மேலும் 2 உடலுக்கு 1 சிலிண்டர் எரியூட்ட தேவைப்படுகிறது. இவற்றையெல்லாம் அறியாமல் கவுன்சிலர் எந்த விதத்தில் பேசுகிறார் என தெரியவில்லை. இருந்தாலும் முழுக்க முழுக்க உடல்கள் இலவசமாக மட்டும்தான் தகனம் செய்யப்பட்டு வருகிறது என்பதை உறுதிப்பட கூறுகிறேன். ஒருபோதும் முறேகேடு நடக்காது. மேலும் அம்மா உணவகம் மூடப்படாது என்றார்.

    தொடர்ந்து கவுன்சிலர் கோபால் பேசும் போது : 4 ராஜ வீதிகளிலும் சாலைகளை சீரமைக்க வேண்டும். கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதை தடுக்க வேண்டும். தெற்கு வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனை சீரமைத்து போக்குவரத்து ஒழுங்குபடுத்த வேண்டும் என்றார்.

    யு.என்.கேசவன்: 30-வது வார்டு சவுராஷ்ட்ரா கீழ ராஜ வீதியில் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. அதை தடுத்து அங்கு வேலி கட்ட வேண்டும். கூடுதல் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.

    ஜெய் சதீஷ்: எனது வார்டில் ரூ.49 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. அந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    தமிழ்வாணன் : மாநகரில் பல இடங்களில் போக்குவரத்து சிக்னல் கிடையாது. அனைத்து இடங்களிலும் போக்குவரத்து சிக்னலை வைத்து ஒழுங்குபடுத்த வேண்டும். அனைத்து: சாலைகளையும் சுத்தப்படுத்த வேண்டும்.

    காந்திமதி : தற்காலிக மீன் மார்க்கெட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அருகே உள்ள ரேஷன் கடை பகுதிக்கு வருகிறது. இதனால் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் மக்கள் அவதி அடைந்துள்ளனர். இதை தடுக்க வேண்டும். மேலும் மார்க்கெட் மற்றும் உள்ள வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதிகளில் சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    சரவணன் : சீனிவாசபுரம் அகழிபாலத்தில் மாடுகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக மாலை இரவு நேரங்களில் மாடுகள் அங்கேயே படுத்துக் கொள்கிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாடுகளை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நீலகண்டன் : பொது இடங்களில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும்.

    ஸ்டெல்லா : கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி பகுதிக்கு நேரில் சென்று நிவாரண உதவி வழங்கிய முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதேபோல் மற்ற கவுன்சிலர்களும் தங்களது வார்டு சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை குறித்து பேசினர்.

    இதற்கு மேயர் சண்.ராமநாதன், கவுன்சிலர்கள் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • சிறுசிறு விபத்துகளும் ஏற்படுகிறது.
    • சிக்னல் உருவாக்கினால் போக்குவரத்து மிகவும் சீராகும்.

    குனியமுத்தூர்:

    கோவையின் பிரதான சாலைகளில் சிக்னல் மிகவும் இன்றியமையாத ஒன்றாக கருதப்படுகிறது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து செல்லும் சூழலில், சிக்னல் ஒவ்வொரு வாகனத்தையும் கட்டுப்படுத்தி வரிசை ப்படுத்தி அனுப்பும்முக்கிய காரணியாக அமைகிறது.

    கோவை பாலக்காடு சாலையில் இருந்து உக்கடம் பகுதிக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் குனியமுத்தூர் அடுத்த புட்டுவிக்கி சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. அதேபோன்று பொள்ளாச்சி ரோட்டில் இருந்து உக்கடம் மற்றும் டவுன் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் கரும்புக்கடை வழியாக செல்லாமல் புட்டுவிக்கி சாலை வழியாக உக்கடம் சென்றடையும் வண்ணம் திருப்பி விடப்பட்டுள்ளது.

    உக்கடம் மேம்பாலம் பணிகள் நடைபெறுவதால் கடந்த பல ஆண்டுகளாக இத்தகைய புட்டுவிக்கி சாலை மிகவும் ஒரு பிரதான சாலையாக உருவாகியுள்ளது.

    ஏராளமான நான்கு சக்கர வாகனங்களும், பஸ்களும், கனரக வாகனங்களும் எந்த நேரமும் சாலையில் பயணிக்கும் வண்ணம் உள்ளது. இருசக்கர வாகனத்தில் டவுன் பகுதிக்கு செல்பவர்கள் கூட ஆத்துப்பாலம் கரும்புக்கடை வழியாகச் சென்று நெரிசலில் சிக்க வேண்டாம் என்று பெரும்பாலும் இச்சாலை வழியாக தான் பயணிக்கின்றனர்.

    இந்தநிலையில் குனியமுத்தூரில் இருந்து புட்டுவிக்கி சாலை திரும்பும் இடத்தில் சிக்னல் இல்லாத காரணத்தால் அவ்வப்போது வாகனங்கள் சீராக செல்ல முடியாமல் போக்குவரத்து தடை ஏற்படும் நிலை உள்ளது. பெரிய கனரக வாகனங்கள் இந்த இடத்தில் திரும்பும்போது எதிரே வரும் வாகனம் காரணமாக திரும்ப முடியாமல் ஒன்றை ஒன்று உரசிக் கொண்டு நிற்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் போக்குவரத்து தடை ஏற்படுகிறது.

    ஒரு சில நேரங்களில் இருசக்கர வாகனங்கள் முந்தி க்கொண்டு பாய்வ தால் சிறுசிறு விபத்து களும் ஏற்படுகிறது. என்ன தான் போக்குவரத்து காவலர்கள் நின்றாலும் சிக்னல் இல்லாத காரணத்தால் வாகனங்களுக்கு போக்குவரத்து தடை ஏற்படும் சூழ்நிலை உள்ளது. சில சமயங்களில் புட்டுவிக்கி சாலைக்கு திரும்ப முடியாமல் நீண்ட வரிசையில் நான்கு சக்கர வாகனங்களும், லாரிகளும், பஸ்களும் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

    எனவே இந்த இடத்தில் சிக்னல் உருவாக்கினால் போக்குவரத்து மிகவும் சீராகும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

    • திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • அரசு மதுபான கடைகளில் விலை அதிகம் வைத்து மதுபானம் விற்பதை தடுக்க வேண்டும்.

    பல்லடம் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் கே. சி. எம். பி. சீனிவாசன் தலைமை வகித்தார். வர்த்தகர் அணி செந்தில்குமார், பொருளாதார அணி மனோகர் ,ஒன்றியத் தலைவர் ரமேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய பொதுச் செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். இந்தக் கூட்டத்தில்,அரசு மதுபான கடைகளில் விலை அதிகம் வைத்து மதுபானம் விற்பதை தடுக்க வேண்டும், காரணம்பேட்டை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் நீர் பாசன வசதி ஏற்படுத்தி தர வேண்டும், விசைத்தறி தொழிலை பாதுகாத்திட வேண்டும் , காரணம் பேட்டை சிக்னலில் போக்குவரத்து காவலர் நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில்,திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்வில் 2 இடம் பிடித்த காரணம்பேட்டையை சேர்ந்த பாலசண்முகத்திற்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பல்லடம் நகர பா.ஜ.க செயற்குழு கூட்டம் நகர தலைவர் வடிவேலன் தலைமையில் நடைபெற்றது. இதில் மகளிர் அணி மாநில செயலாளர் சுதா மணி, திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவர் வினோத் வெங்கடேஷ், மற்றும் நிர்வாகிகள் மணிவேல், மனோகரன், பன்னீர் செல்வகுமார், நகர்மன்ற உறுப்பினர்கள் சசிரேகா ரமேஷ், ஈஸ்வரி, உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல பல்லடம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் பூபாலன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிமுத்து, விவசாய அணி ரமேஷ்,மற்றும் குருமூர்த்தி,உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • போக்குவரத்து நிறைந்த இந்த இடத்தில் டிராபிக் சிக்னல் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.
    • பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அந்த இடத்தில் சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அடிக்கடி அந்த சிக்னல் பழுதாகி வருகிறது.

    குனியமுத்தூர்:

    பாலக்காடு மெயின் ரோடு குனியமுத்தூரில் ஜங்ஷன் உள்ளது. இங்கு 4 புறமும் வாகனங்கள் அடிக்கடி சென்று கொண்டிருக்கும். இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

    கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் வாகனங்களும் மற்றும் பாலக்காடு, மதுக்கரை, கோவைபுதூர் போன்ற பகுதியில் இருந்து கோவைக்கு வரும் வாகனங்களும் இப்பகுதியை கடந்து தான் வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    இப்படி போக்குவரத்து நிறைந்த இந்த இடத்தில் டிராபிக் சிக்னல் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் அடிக்கடி சிறு, சிறு விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் சிக்னல் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அந்த இடத்தில் சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அடிக்கடி அந்த சிக்னல் பழுதாகி வருகிறது. இதனால் மீண்டும் வாகன தடுமாற்றமும், வாகன போக்குவரத்து தடை ஏற்படும் நிலை உள்ளது.

    இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், சாலையின் இருபுறங்களிலும் செல்லும் குறுக்கு சாலையில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளது. எனவே காலை மற்றும் மாலை வேளைகளில் இரு சக்கர வாகனங்களும் ஆட்டோக்களும் அதிகமாக இப்பகுதியை கடந்து சென்று கொண்டிருக்கும்.

    ஆனால் சிக்னல் பழுது ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் தாறுமாறாக ஓடுகிறது. இதனால் சிறு, சிறு விபத்துகளும் நடைபெற்று வருகிறது. எனவே பழுது இல்லாத சிக்னல் இப்பகுதியில் தேவை என்று வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • பல்லடத்தில் இருந்து திருப்பூருக்கு வீரபாண்டி பிரிவு வழியாக வாகனங்கள் வருகின்றன.
    • வீரபாண்டிபிரிவு சிக்னல் நேரம் முதலில் 60நொடிகளாக இருந்தது தற்பொழுது ‌‌45நொடிகளாக மாற்றப்பட்டுள்ளது.

    வீரபாண்டி :

    கோவை, பொள்ளாச்சி , உடுமலை பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் பல்லடத்தில் இருந்து திருப்பூருக்கு வீரபாண்டி பிரிவு வழியாக வருகின்றன.இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும்.அதில் வீரபாண்டிபிரிவு சிக்னல் நேரம் முதலில் 60நொடிகளாக இருந்தது.தற்பொழுது ‌‌ 45நொடிகளாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நொச்சிப்பாளையம் பிரிவு வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.மேலும்‌ அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் இந்த வழியாகத்தான் செல்கிறது. பல நேரங்களில் இந்த போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கிவிடுகின்றன.

    மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்த‌‌ சிக்னலின் நேரத்தை முதலில் இருந்த 60நொடிகளாக மாற்றம் செய்ய வேண்டும் என்று பலமுறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கலெக்டர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×