search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீரபாண்டி பிரிவு"

    • பல்லடத்தில் இருந்து திருப்பூருக்கு வீரபாண்டி பிரிவு வழியாக வாகனங்கள் வருகின்றன.
    • வீரபாண்டிபிரிவு சிக்னல் நேரம் முதலில் 60நொடிகளாக இருந்தது தற்பொழுது ‌‌45நொடிகளாக மாற்றப்பட்டுள்ளது.

    வீரபாண்டி :

    கோவை, பொள்ளாச்சி , உடுமலை பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் பல்லடத்தில் இருந்து திருப்பூருக்கு வீரபாண்டி பிரிவு வழியாக வருகின்றன.இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும்.அதில் வீரபாண்டிபிரிவு சிக்னல் நேரம் முதலில் 60நொடிகளாக இருந்தது.தற்பொழுது ‌‌ 45நொடிகளாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நொச்சிப்பாளையம் பிரிவு வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.மேலும்‌ அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் இந்த வழியாகத்தான் செல்கிறது. பல நேரங்களில் இந்த போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கிவிடுகின்றன.

    மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்த‌‌ சிக்னலின் நேரத்தை முதலில் இருந்த 60நொடிகளாக மாற்றம் செய்ய வேண்டும் என்று பலமுறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கலெக்டர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×