search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்னல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோடை வெயில் தொடங்கிய நிலையில் புதுவையில் வெயில் அளவு 95 டிகிரிக்குள்ளேயே இருந்து வந்தது
    • சிக்னலுக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள் வெயிலில் அவதிப்படாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    தமிழகம், புதுவையில் கடந்த ஆண்டுகளில் இல்லாததைவிட தற்போது அதிக அளவில் வெயில் கொளுத்தி வருகிறது. இயல்பைவிட 9 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    கோடை வெயில் தொடங்கிய நிலையில் புதுவையில் வெயில் அளவு 95 டிகிரிக்குள்ளேயே இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் 98.6 டிகிரி என பதிவானது. நேற்று 100.4 டிகிரியாக வெயில் பதிவானது. இதன்மூலம் இந்த ஆண்டு முதல்முறையாக 100 டிகிரியை வெயில் தாண்டி உள்ளது.

    வழக்கத்தை விட காலை 10 மணிக்கு மேல் பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்தது. நேற்று மே தின விடுமுறை என்பதால் பொதுமக்கள், தொழிலாளர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினார்கள். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியே வந்தவர்கள் தகிக்கும் வெயிலால் தவித்தனர்.

    இந்நிலையில் புதுச்சேரி பொதுப்பணித்துறை நிர்வாகம் எஸ்.வி. பட்டேல் சாலையில் உள்ள அதிதி சிக்னலில் தற்காலிக பச்சை நிற மேற்கூரையை அமைத்துள்ளது.

    சிக்னலுக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள் வெயிலில் அவதிப்படாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதேபோல் தமிழகத்தில் திருச்சி மாவட்டத்திலும் சிக்னலில் தற்காலிக பச்சை நிற மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 100 மீட்டருக்கு 1 சிக்னல் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்க முடியாமல் தவித்து வந்தனர். சிக்னலில் தவிக்கும் வாகன ஓட்டிகளின் சிரமத்தை தவிர்க்க காவல் துறை சார்பில் தற்காலிக பச்சை நிற மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பட்டால் சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருச்சி, புதுச்சேரியை தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும் சிக்னலில் தற்காலிக பச்சை நிற மேற்கூரை அமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • கடலூரில் உள்ள சாலையோரம் தள்ளுவண்டி கடை களை வைத்து துணி வியாபாரம் செய்ய தொடங்கி உள்ளனர்.
    • மஞ்சக் குப்பம் நேதாஜி சாலை களில் மாலை வேளை யில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

    கடலூர்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 12-ந் தேதி( ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் நகரில் உள்ள ஜவுளிக்கடை களில் துணிகளை வாங்க மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் பலர் தீபாவளியையொட்டி கடலூரில் உள்ள சாலை யோரம் தள்ளுவண்டி கடை களை வைத்து துணி வியா பாரம் செய்ய தொடங்கி உள்ளனர். இதனால் கடலூர் லாரன்ஸ் சாலை, இம்பீரியல் சாலை, மஞ்சக் குப்பம் நேதாஜி சாலை களில் மாலை வேளை யில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. மேலும் வியா பாரிகள் பட்டாசு கடைகள் வைக்கும் பணியிலும் மும் முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக் பாக்கெட், திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் நடை பெறுவதை தடுக்கும் பொருட்டு, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம் உத்தரவின் பேரில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் கடலூர் நகரில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க காவல்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாநகரில் கடலூர் மஞ்சக் குப்பம், திருப்பாதிரிப்புலியூர் சிக்னல், நாகம்மன் கோவில் உள்ளிட்ட 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் போலீசார் தீவிர கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • 65 சிக்னல்களிலும் பரபரப்பான நேரங்களில் 10 நிமிடங்கள் வரையில் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பது தெரியவந்துள்ளது.
    • போக்குவரத்து சிக்னல் இல்லாமல் வாகனங்கள் செல்வதற்கு வழி ஏற்படுத்துவது குறித்தும் போலீசார் ஆலோசனை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் போக்குவரத்து சிக்னலில் நீண்ட நேரமாக காத்திருப்பதும் நெரிசலுக்கு ஒரு காரணம் என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் சென்னை மாநகர் முழுவதும் போக்குவரத்து சந்திப்புகளில் அதிரடி ஆய்வு நடத்தினர்.

    இதில் சென்னை மாநகர் முழுவதும் 65 சிக்னல்களில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அது போன்ற சிக்னல்களில் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியது என்பது பற்றியும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் இந்த 65 சிக்னல்களிலும் பரபரப்பான நேரங்களில் 10 நிமிடங்கள் வரையில் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து போக்குவரத்து சிக்னல் இல்லாமல் வாகனங்கள் செல்வதற்கு வழி ஏற்படுத்துவது குறித்தும் போலீசார் ஆலோசனை நடத்தினர். இதில் சிக்னலை கடந்து நேராக செல்லும் வாகனங்கள் எத்தனை? வளைவில் திரும்பி செல்லும் வாகனங்கள் எத்தனை? என்றும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் நேராக செல்லும் வாகனங்கள் அதிக அளவிலும் வளைவில் செல்லும் வாகனங்கள் குறைந்த அளவிலும் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிக்னல்களை மூடிவிட்டு யூ வளைவில் திரும்புவதை தடுத்து அந்த வாகனங்கள் சில அடி தூரம் சென்று மீண்டும் திரும்பி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஏற்பாடுகளை ஸ்பென்சர் சந்திப்பு மற்றும் தி.நகர் சிக்னல் ஆகிய இடங்களில் போலீசார் அமல்படுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் கூறும்போது, 'கோவை மாநகரில் இதுபோன்று சிக்னல்களில் போக்குவரத்து மாற்றங்களை மேற்கொண்டதில் நல்ல பலன் கிடைத்திருப்பதாகவும் அந்த முறையை சென்னையில் தற்போது அமல்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறும்போது, சென்னை மாநகர் முழுவதும் இது போன்று மேலும் பல சிக்னல்களை அணைத்து விட்டு வாகனங்களை இயக்க முடியுமா? என்பது பற்றி தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறோம் என்று தெரிவித்தனர்.

    இந்த போக்குவரத்து மாற்றம் வாகனங்களுக்கு சில அசவுகரியங்களை ஏற்படுத்தினாலும் சிக்னல்களில் நேராகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    இதன் மூலம் சென்னை மாநகரில் விரைவில் பல்வேறு சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் அணைத்து வைக்கப்பட்டு வாகனங்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் ஆய்வு நடத்தி முடிவுகளை மேற்கொள்ள உள்ளனர்.

    • மக்கள் குடியேறி வருவதால் விழுப்புரம் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
    • இதற்கு வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள விரிவாக்கப் பகுதிகளில் மக்கள் குடியேறி வருவதால் விழுப்புரம் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக விழுப்புரம் - புதுவை சிக்னலில் இருந்து கம்பன் நகர் வரை போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டு வந்தது. இந்த சாலையின் நடுவில் வைக்கப்பட்ட ரிப்லெக்ஸ் தடுப்பு கட்டை சேதமடைந்ததால், போக்குவரத்து நெரிசல் அதிகமானது. இதையடுத்து விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த் மற்றும் போலீசார், புதிய இரும்பினால் ஆன தடுப்புகளை அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர். இதற்கு வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • 8 விரைவு ரெயில்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காலதாமதமாக சென்னை நோக்கி சென்றது.

    திண்டிவனம்:

    சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு திண்டிவனம், விழுப்புரம் வழியாக ரெயில்கள் சென்று வருகின்றன.

    இரவு திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்து வந்தது. இதையடுத்து திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பகுதியில் காரைக்காலில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரெயில் மீதும், தண்டவாளத்திலும் அருகே இருந்த மரம் விழுந்தது.

    இதனால் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்திவிட்டார். மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மரம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. மரம் விழுந்ததால் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. பின்னர் சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த ரெயில்களும், வட மாவட்டத்தில் இருந்து வந்த கம்பன் ,பாண்டியன் முத்துநகர், கன்னியாகுமரி , போன்ற 8 விரைவு ரெயில்களும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காலதாமதமாக சென்னை நோக்கி சென்றது. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    • பல்லாவரம்-குன்றத்தூர் சாலை சந்திப்பில் இருந்த சிக்னல் கம்பம் அகற்றப்பட்டது.
    • ஜி.எஸ்.டி. சாலையை கடக்க நடந்து செல்பவர்கள் தடுப்புகளை தாண்டி செல்லும் நிலை நீடித்து வருகிறது.

    தாம்பரம்:

    பல்லாவரத்தில் உள்ள மேம்பாலம் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திறக்கப்பட்டது. தாமபரத்தில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் இந்த மேம்பாலத்தால் நெரிசல் இன்றி சென்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் வாகன நெரிசல் பெருமளவு குறைந்து உள்ளது.

    இந்த நிலையில் மேம்பால பணி ஆரம்பிக்கப்பட்ட போது அதன் அருகே பல்லாவரம்-குன்றத்தூர் சாலை சந்திப்பில் இருந்த சிக்னல் கம்பம் அகற்றப்பட்டது. இதன்பின்னர் அந்த இடத்தில் சிக்னல் கம்பம் அமைக்கப்படவில்லை.

    மேலும் தாம்பரம் நோக்கி செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் கீழ் திரும்பி சென்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அந்த வழியாக நடந்து செல்பவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    சந்தை சாலை மற்றும் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பில் தொடங்கும் ஒருவழி மேம்பாலம், இந்திரா காந்தி சாலை மற்றும் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பில் முடிவடைகிறது. ஜி.எஸ்.டி. சாலையை கடக்க நடந்து செல்பவர்கள் தடுப்புகளை தாண்டி செல்லும் நிலை நீடித்து வருகிறது.

    அகற்றப்பட்ட இடத்தில் சிக்னல் கம்பம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் ஜி.எஸ்.டி சாலையில் இருந்து குன்றத்தூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் இந்திரா காந்தி சாலையில் வலதுபுறம் திரும்ப முடியவில்லை. அதேபோல், குன்றத்தூரில் இருந்து வரும் வாகனங்கள் தாம்பரம் நோக்கி ஜி.எஸ்.டி. சாலையில் 1.5 கி.மீ. சுற்றி செல்ல வேண்டி உள்ளது.

    இதுகுறித்து வாகன ஓட்டி ஒருவர் கூறும்போது, மேம்பாலம் கட்டுவதற்கு முன்பு போரூர், குன்றத்தூர், பம்மல் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ஏராளமான வாகனங்கள் சிக்னல் வழியாகச் சென்று வந்தன. தற்போது சிக்னல் இல்லாததால் இந்திரா காந்தி சாலையில் இருந்து ஜி.எஸ்.டி. சாலையைக் கடக்க நடந்து செல்பவர்கள் மீது அடிக்கடி வாகனங்கள் மோதி வருகின்றன. போக்குவரத்து சிக்னல் கம்பம் குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. காலை, மாலை நேரங்களில் ஆபத்தான முறையில் பள்ளி மாணவ-மாணவிகள் சாலையை கடந்து செல்லும் நிலை உள்ளது என்றார். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறும்போது, இந்திரா காந்தி சாலையில் விரைவில் சிக்னல் அமைக்கப்படும் என்றனர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
    • சாலை பாதுகாப்பு நிதி ரூ.8 லட்சம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் விபத்துகளை தடுப்பதற்காக நிதி ரூ.68 லட்சத்து 11ஆயிரத்து 486 மற்றும் மாநில குற்ற ஆவணக் காப்பகத்தால் வழங்கப்படும் சாலை பாதுகாப்பு நிதி ரூ.8 லட்சம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிதியிலிருந்து போக்குவரத்து சிக்னல்கள்- 10, சோலார் ஒளிரும் பிளிங்கர்ஸ்- 20, போக்குவரத்து ஓளிரும் கூம்புகள் - 100, ஒளிரும் தடியடி விளக்குகள் 100, ஒளிரும் சிறிய தடியடி விளக்குகள் 100, போக்குவரத்து பிரதிபலிப்பு முக்கோணங்கள் - 100, மரம் பிரதிபலிப்பான்கள் 1000, போக்குவரத்து தடுப்பாண்கள் - 48, சோலார் போக்குவரத்து தடுப்பாண்கள் - 18 உள்பட போக்குவரத்து உபகரணங்கள் வாங்கப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இதில் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தைமேடு அருகில் 4 சாலைகள் சந்திக்கும் சந்திப்பு பகுதியில் புதியதாக போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமை தாங்கி சிக்னல்களை தொடங்கி வைத்தார்.

    இதேபோல் மாவட்டம் முழுவதிலும் 9 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேசுவரய்யா, இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    • சிக்னல்களில் போடப்பட்டுள்ள தடை கோட்டை தாண்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
    • சிக்னலில் பொம்மைகளுடன் கலை நிகழ்ச்சி நடத்தி போக்குவரத்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

    சென்னை:

    போக்குவரத்து காவல்துறை சார்பில் சென்னை முழுவதும் இன்று தடை கோட்டை தாண்டி செல்லக் கூடாது என்று வாகன ஓட்டிகளிடம் போலீசார் விழிப்புணர்வு செய்தனர்.

    போக்குவரத்து சிக்னல்களில் தடை கோட்டை தாண்டும் வாகன ஓட்டிகளை செல்போனில் படம் பிடித்து அபராதம் விதிக்கும் முறை தீவிரமாக சென்னை முழுவதும் நடந்து வருகிறது. அவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வாகன ஒட்டிகளின் செல்போனுக்கே சில நிமிடங்களில் அபராதம் சென்று விடும்.

    இதுகுறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று முதல் 3 நாட்களுக்கு நடக்கிறது. அனைத்து போக்குவரத்து சந்திப்புகளிலும் தடை கோட்டை தாண்டும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் சாலை விதிகளை மீறக்கூடாது. சிக்னல்களில் போடப்பட்டுள்ள தடை கோட்டை தாண்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். தேவையில்லாமல் அபராதத்தை செலுத்தாதீர்கள். ரூ.500 இருந்தால் ஒரு குடும்பத்தின் ஒரு நாள் சராசரி செலவை சமாளிக்கலாம். தேவையில்லாமல் உங்களுக்கு அபராதம் விதிக்க எங்களுக்கு ஆசையில்லை. எனவே போக்குவரத்து விதிமுறைகளை மதித்து செல்லுங்கள் என விழிப்புணர்வு செய்தனர்.

    வேப்பேரியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையில் சிக்னலில் பொம்மைகளுடன் கலை நிகழ்ச்சி நடத்தி போக்குவரத்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

    • ரெயில்வே மூத்த பொறியாளர் ஏ.கே.ஸ்பாட் மற்றும் மற்றொரு அதிகாரி மஹிந்தா ஆகியோர் ஒரு சிக்னல் பிழையே விபத்துக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.
    • மற்ற அதிகாரிகள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் லைனில் நுழைந்தது விபத்துக்கு காரணம் தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த 2-ந்தேதி இரவு நடைபெற்ற கோர ரெயில் விபத்தில் 288 பேர் பலியானார்கள். நூற்றுக் கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்த விபத்துக்கு நாச வேலை காரணமாக இருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.

    இதற்கிடையே ரெயில்வே துறை சார்பில் 5 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு இரண்டு பக்க விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இதில் ரெயில்வே மூத்த பொறியாளர் ஏ.கே.ஸ்பாட் மற்றும் மற்றொரு அதிகாரி மஹிந்தா ஆகியோர் ஒரு சிக்னல் பிழையே விபத்துக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

    மற்ற அதிகாரிகள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் லைனில் நுழைந்தது விபத்துக்கு காரணம் தெரிவித்துள்ளனர். ஆனால் மகிந்தா இதை மறுத்துள்ளார். லெவல் கிராசிங் கேட் எண் 94-க்கு முன்னால் ரெயில் தடம் புரண்டதாகவும், இதனால் லூப் லைனுக்கு மாறுவதற்கு முன்பு விபத்து நடந்ததாகவும் வாதிட்டுள்ளார். மேலும் ரெயில்வே மூத்த அதிகாரி ஒருவர் மெயின் லைன் வழியாக சிக்னல் மற்றும் பாயிண்ட் அமைக்கப்படும்போது லூப் லைனில் ரெயில் நுழைவதற்கான சாத்திய கூறு இல்லை என்று நிராகரித்துள்ளார்.

    விபத்துக்கு சிக்னல் செயல் இழந்ததே காரணம் என்று ஆய்வு அறிக்கை கூறினாலும் அந்த சிக்னல் பச்சை நிறத்தில் இருந்ததாக கூறியிருப்பதால் டேட்டா லாக்கர் அறிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த டேட்டா லாக்கர் என்பது மைக்ரோ செயலி அடிப்படையிலான சிஸ்டமாகும்.

    இது ரெயில்வே சிக்னலின் அமைப்பை கண்காணிக்கிறது. இதன் தரவை ஸ்கேன் செய்து பார்த்தால் உண்மை புலப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ரெயில்வே அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, பூர்வாங்க விசாரணையின் கட்டத்தில் வெவ்வேறு துறைகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பது மிகவும் இயல்பானது.

    ஒவ்வொருவரும் வெவ்வெறு கண்ணோட்டத்தை கொண்டு இருக்கலாம். ரெயில்வே பாதுகாப்பு ஆணையரின் விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதற்கிடையே டிவிஷன் ரெயில்வே மேலாளர் ரின் கேஸ் ராய் கூறும் போது, பாதை உள்ளதா, அனைத்தும் சரியாக உள்ளதா போன்ற அனைத்து முன்நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த பின்னரே கிரீன் சிக்னல் கிடைக்கும். சின்ன சின்ன பிரச்சனை வந்தாலும் தொழில்நுட்ப ரீதியாக எந்த சூழலிலும் கிரீன் சிக்னல் இருக்க முடியாது.

    யாரோ ஒருவர் அதை சீர்குலைக்கும் வரை உடல் ரீதியாக அதை கட்டுப்படுத்தும் வரை அது பசுமையாக இருக்க முடியாது. சிக்னல் பச்சை நிறத்தில் இருந்ததாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் லோகோ பைலட் மற்றும் உதவி பைலட் ஆகியோர் கூறியுள்ளனர்.

    ஒவ்வொரு நிகழ்வையும் பதிவு செய்யும் டேட்டா லாக்கர் கூட சிக்னல் பச்சை நிறத்தில் இருந்ததை காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு விசாரணை குழுவின் கருத்து வேறுபாட்டினால் விபத்துக்கான காரணம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

    • 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிக்னல் அமைத்துள்ளனர்.
    • ரிமோட் மூலம் இயக்கக்கூடிய அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் சிக்னல் கம்பங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    அவிநாசி ூ

    அவிநாசியில் போக்குவரத்து போலீசார் பெரும் முயற்சி எடுத்து தனியார் பங்களிப்பு மூலம் ஏறத்தாழ, 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிக்னல் அமைத்துள்ளனர். அவை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

    இது குறித்து போக்குவரத்து ஆய்வாளர் சக்திவேல் கூறியதாவது:- சென்னைக்கு அடுத்ததாக எல்.இ.டி., சிக்னல்கள் மற்றும் ரிமோட் மூலம் இயக்கக்கூடிய அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் அவினாசியில் சிக்னல் கம்பங்கள் பொருத்தப்பட்டுள்ளது. திருப்பூர் ரோடு, புதிய பஸ் நிலையம் , மங்கலம் ரோடு, சேவூர் ரோடு ஜங்ஷன் ஆகிய பகுதிகளில் 'டைமருடன்' சிக்னல், சுதந்திரநல்லூர் கணினி ஜங்ஷன், மங்கலம் ரோடு ரவுண்டானா, மேட்டுப்பாளையம் பிரிவு, சூளை பிரிவு, கால்நடை மருத்துவமனை, சீனிவாசபுரம், டி.எஸ்.பி., ஆபீஸ், மேற்கு ரத வீதி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், நெடுஞ்சாலை மற்றும் சுற்றுலா பயணியர் மாளிகை அருகில்.

    புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் சாலையை கடப்பதற்கான சிக்னல், கைகாட்டி பிரிவு, திருப்பூர் ரோட்டில் பைபாஸ் பாலம் உள்ளிட்ட பகுதிகளிலும் சிக்னல் கம்பங்கள் பொருத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக நான்கு இடங்களில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.இன்னும் 20 நாட்களுக்குள் அனைத்து பகுதிகளிலும் சிக்னல் பொருத்தப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அதன்பின் எஸ்.பி., பங்கேற்று பயன்பாட்டிற்கு அளிக்க உள்ளார்.

    • வாலிபர் சிக்னலை உடைத்ததை கவனிக்காமல் இருந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.
    • நாட்டையே உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்து நடந்த நேரத்தில் வாலிபர் சிக்னலை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் இன்று காலை ரெயிலுக்காக பயணிகள் ஏராளமானோர் காத்திருந்தனர்.

    அப்போது மது போதையில் தள்ளாடியபடி வாலிபர் ஒருவர் பிளாட்பாரத்தில் நடந்து சென்றார்.

    ரெயில் நிலையத்தில் ஓரத்தில் உள்ள சிக்னல் கம்பம் அருகே சென்று கம்பத்தை மேலும் கீழுமாக பார்த்தார்.

    அங்கிருந்த கற்களை எடுத்து சிக்னல் கம்பத்தில் உள்ள சிவப்பு மற்றும் பச்சை நிற விளக்குகள் மீது எறிந்தார்.

    இதில் விளக்குகள் சேதம் அடைந்தன. மேலும் மின்கம்பத்திலும் கற்கள் பட்டு சத்தம் கேட்டது.

    இதனை கண்ட போலீசார் விரைந்து ஓடி சென்று வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர் திருப்பத்தூர் பிரான் லைனை சேர்ந்த கோகுல் (வயது 30) என்பது தெரியவந்தது. அப்போது கோகுல்ராஜ் கூறுகையில்:-

    திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வருகிறேன். காதலி என்னிடம் பேசவில்லை. எனக்கு காதல் தோல்வி ஏற்பட்டு விட்டது.

    ஆத்திரமடைந்த நான் ரெயில் சிக்னல் கம்பத்தின் மீது கற்கள் வீசினேன் என்றார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலிபர் சிக்னலை உடைத்ததை கவனிக்காமல் இருந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.

    நாட்டையே உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்து நடந்த நேரத்தில் வாலிபர் சிக்னலை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருப்பூரில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
    • சிக்னல் ப்ரீ ரோடு திட்டம் நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூரில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. குமரன் சாலை, மங்கலம் சாலை, பல்லடம் சாலை, அவிநாசி சாலை, பி.என்.ரோடு உள்ளிட்ட பிரதான இடங்களில் அதிக அளவிலான வாகன போக்குவரத்து எப்பொழுதும் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. திருப்பூர் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் போக்குவரத்து நெரிசல் இருந்த வண்ணம் உள்ளது.

    குறிப்பாக மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள சிக்னலால் மங்களம் செல்லக்கூடிய வாகனங்கள் வளர்மதி பாலம் வரை நீண்ட வரிசையில் நிற்கின்றது. அதேபோன்று ரயில் நிலையம் மார்க்கமாக செல்லக்கூடிய வாகனங்கள் பல்லடம் சாலையில் உள்ள பாலம் வரை நிற்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் மாநகர போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் சிக்னல் ப்ரீ ரோடு திட்டம் நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தால் வாகனங்கள் சிக்னலில் நீண்ட நேரம் நிற்க அவசியம் ஏற்படாது.

    இதையடுத்து திருப்பூர் மாநகராட்சி சிக்னலில் இதற்கான ஒத்திகை நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி சிக்னல் அணைத்து வைக்கப்பட்டு வழி மாற்றம் செய்தனர். குமரன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பல்லடம் சாலைக்கும், மங்கலம் சாலைக்கும் சிக்னலில் நிற்காமல் சென்றது .

    அதேபோன்று பல்லடம் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பூங்கா சாலை வழியாக செல்லாமல் தாடிக்காரன் முக்கு வழியாக நட்ராஜ் தியேட்டர் சென்று ெரயில் நிலையம் சென்றது. இந்த ஒத்திகையால் எப்பொழுதும் பரப்பரப்பாக காணப்படும் பூங்கா சாலை நேற்று இரவு 7,30 மணிக்கு வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சிக்னல் ப்ரீ ரோடு திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் இனி நீண்ட நேரம் சிக்னலில் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

    ×