search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்துகளை தடுக்க 9 இடங்களில் சிக்னல்
    X

    விபத்துகளை தடுக்க 9 இடங்களில் சிக்னல்

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
    • சாலை பாதுகாப்பு நிதி ரூ.8 லட்சம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் விபத்துகளை தடுப்பதற்காக நிதி ரூ.68 லட்சத்து 11ஆயிரத்து 486 மற்றும் மாநில குற்ற ஆவணக் காப்பகத்தால் வழங்கப்படும் சாலை பாதுகாப்பு நிதி ரூ.8 லட்சம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிதியிலிருந்து போக்குவரத்து சிக்னல்கள்- 10, சோலார் ஒளிரும் பிளிங்கர்ஸ்- 20, போக்குவரத்து ஓளிரும் கூம்புகள் - 100, ஒளிரும் தடியடி விளக்குகள் 100, ஒளிரும் சிறிய தடியடி விளக்குகள் 100, போக்குவரத்து பிரதிபலிப்பு முக்கோணங்கள் - 100, மரம் பிரதிபலிப்பான்கள் 1000, போக்குவரத்து தடுப்பாண்கள் - 48, சோலார் போக்குவரத்து தடுப்பாண்கள் - 18 உள்பட போக்குவரத்து உபகரணங்கள் வாங்கப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இதில் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தைமேடு அருகில் 4 சாலைகள் சந்திக்கும் சந்திப்பு பகுதியில் புதியதாக போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமை தாங்கி சிக்னல்களை தொடங்கி வைத்தார்.

    இதேபோல் மாவட்டம் முழுவதிலும் 9 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேசுவரய்யா, இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×