search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை பணி"

    • ‘மாலைமலர்’ செய்தி எதிரொலியாக கீழக்கரை இஸ்லாமியா பள்ளி செல்லும் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
    • மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளிக்கு செல்லும் வழியில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலை சேதம் அடைந்த தால் புதிய சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு சாலை அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டது. ஒப்பந்ததாரர் அலட்சியம் காரணமாக பணி தொடங்க வில்லை.

    குறுகலான சாலையின் ஒரு பக்கம் உடைக்கப்பட்ட பேவர் பிளாக் கற்கள். மறு பக்கம் மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து கடந்த 6-ந்தேதி 'மாலைமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவின்பேரில் தற்போது சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இருப்பினும் குறைந்த எண்ணிக்கையில் தொழிலா ளர்கள் வேலை செய்வதால் பணி தாமதமாக நடந்து வருகிறது. நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சாலை பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உத்திரங்குடி, மேலஉத்தி–ரங்குடி, குமாரமங்கலம், கீழ பாலையூர் சாலைப் பணிகளை தொடங்க வேண்டும்.
    • நிதி ஆதாரத்திற்கு தகுந்தாற்போல் அனைத்து பணிகளும் படிப்படியாக செயல்படுத்தப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் உமாப்பிரியா தலைமை வகித்தார்.

    துணைத் தலைவர் பாலச்சந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலெட்சுமி வரவேற்றார். தீர்மானங்களை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரவீன்குமார் படித்தார். கூட்டத்தில்

    நாகூரான்(அதிமுக): உத்திரங்குடி, மேலஉத்தி–ரங்குடி, குமாரமங்கலம், கீழ பாலையூர் சாலைப் பணிகளை தொடங்க வேண்டும். அபிவித்தீஸ்வரம் மயாண கொட்டகையை சீரமைக்க வேண்டும்.

    சத்தியேந்திரன்(திமுக): எண்கண் சுப்ரமணியசுவாமி கோயிலுக்கு புதிய திருமணமண்டபம் கட்ட ரூ.3 கோடி, கோயில் திருப்பணிகள் புனரமைக்க ரூ.1 கோடி வழங்கிய தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    ஏசுராஜ்( அதிமுக): பெரும்புகழூர் ஊராட்சி வெட்டாற்றில் ரூ 8 லட்சம் மதிப்பில் படித்துறை கட்டியதற்கு நன்றி. அதுபோல் எங்கள் வார்டின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். வாசு(திமுக): காட்டூர் ஊராட்சியில் 3 சாலைகள், சமுதாயகூடம் பழுது நீக்கம் செய்ததற்கு நன்றி.

    மீரா(அதிமுக): மேலராதாநல்லூர் குழு கட்டிடம் மோசமாக உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும்.

    துணைத் தலைவர் பாலச்சந்திரன்: கொரடாச்சேரி ஒன்றியத்தில் தேவைப்படும் அனைத்து பணிகளையும் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படிப்படியாக அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

    உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து ஒன்றியக்குழு தலைவர் உமாபிரியா பேசினார். அப்போது அவர் கூறியதாவது, கொரடாச்சேரி ஒன்றியத்தில் 44 ஊராட்சிகளிலும் ரூ.12 கோடி மதிப்பில் 28 சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

    நிதி ஆதாரத்திற்கு தகுந்தாற்போல் அனைத்து பணிகளும் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றார். கூட்டத்தில் பொறியாளர்கள் ரவீந்திரன், சசிரேகா, வட்டார வளர்ச்சி தணிக்கை அலுவலர் முரளி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் சுப்புலெட்சுமி நன்றி கூறினார். 

    • பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
    • அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறைசார்பில் தரைப்பாலம் மேம்பாலங்க ளாகவும், புதிய தார் சாலை பணிகள் ரூ.50 கோடியில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறி யாளர் பழனிவேல் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளிலும் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர், கொத்தூர் பகுதி களில் தரைப்பாலமாக இருந்த பாலங்கள் அனைத் தும் உயர்மட்ட பாலங்களாக மாற்றி அமைக்கப்பட்டு வரு கிறது. அந்த பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதேபோல், மல்லகுண்டா பகுதியில் விரிவாக்கம் செய்து 7 கி.மீ. சாலை அமைக்கும் பணியை அவர் பார்வை யிட்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். மேலும் 16 அடி இடைநிலை சாலையாக மாற்றி அமைக் கும் பணிகளையும் அதனு டைய தரத்தையும் ஆய்வு செய்தார்.

    ஆம்பூர் பகுதியில் கைலாச கிரி, மிட்டாளம் பாலம் கட்டும் பணிகளை ஆய்வு செய்து அந்தப் பணிகளையும் விரை வில் டிக்க உத்தரவிட்டார். முடி மேலும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

    • மரங்கள் வெட்டி அகற்றம்
    • 1 கி.மீட்டருக்கு ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரை செலவிடப்படுகிறது

    திருவண்ணாமலை:

    தண்டராம்பட்டு வழியாக திருவண்ணா மலையிலிருந்து அரூர் வரை செல்லும் நான்கு வழி சாலை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    திருவண்ணாமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

    பவுர்ணமி நாட்களிலும் திருவிழா காலங்களிலும் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கார் வேன் பஸ்களில் திருவண்ணா மலைக்கு வருகின்றனர்.

    அதுபோன்ற நாட்களில் போக்குவரத்து அதிகம் இருக்கும். தண்டராம்பட்டு, தானிப்பாடி போன்ற பெரிய கிராமங்கள் வழியாக ஊருக்குள் வருகிற போது போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

    இதனை தவிர்க்க இந்த சாலையை பைபாஸ் சாலைகளுடன் கூடிய நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி திருவண்ணா மலையில் இருந்து தண்ட ராம்பட்டு வழியாக அரூர் வரை நான்குவழிச்சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதற்காக திருவண்ணாமலையில் இருந்து தண்டராம்பட்டு வரை செல்லும் சாலையில் இருபுறமும் இருந்த புளிய மரங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு தரைப்பாலங்கள் அமைத்து நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஆங்காங்கே ரோட்டின் குறுக்கே சாத்தனூர் அணையில் இருந்து வரும் குடிநீர் குழாய் இணைப்பு குழாய்கள் பழுது பார்க்கப்பட்டு தரைப்பாலங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளுக்காக ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது. இந்த சாலை விரிவாக்க பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • அதிகரித்து வரும் வாகனங்கள் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
    • மாடம்பாக்கம் செல்லும் சாலையை ரூ.13.5 கோடி மதிப்பில் விரிவுப்படுத்த நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டு உள்ளது.

    தாம்பரம்:

    வேளச்சேரி-தாம்பரம் சாலையில் ராஜகீழ்பாக்கம் சந்திப்பில் இருந்து மாடம்பாக்கம் செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் அதிகரித்து வரும் வாகனங்கள் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் ராஜகீழ்பாக்கம் சந்திப்பில் இருந்து மாடம்பாக்கம் செல்லும் சாலையை ரூ.13.5 கோடி மதிப்பில் விரிவுப்படுத்த நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டு உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இந்த சாலை தற்போது 7 மீட்டர் அகலத்தில் உள்ளது. இதனை 14 மீட்டருக்கு அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மழைநீர் வடிகால்வாயும் அமைக்கப்படுகிறது.

    இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ராஜ கீழ்ப்பாக்கம், மாடம் பாக்கம், கிழக்கு தாம்பரம் வழியாக ஜி.எஸ்.டி. ரோடு இணைக்கப்படும். மாடம்பாக்கம் சாலையை அகலப்படுத்தினால் வாகன ஓட்டிகள் ஜி.எஸ்.டி. சாலையை பயன்படுத்தி நெரிசல் இல்லாமல் தென் சென்னை பகுதிகளுக்கு செல்ல முடியும் என்றார்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • இடலாக்குடி அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்க தயார் செய்து வைக்கப்பட்டிருந்த காலை உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சி 39-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மேயர் மகேஷ் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். அந்த பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் கழிவு நீர் ஓடைகளை ஆய்வு செய்த மேயர் மகேஷ் இடலாக்குடி அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்க தயார் செய்து வைக்கப்பட்டிருந்த காலை உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.

    இதைத் தொடர்ந்து 39-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணியை மேற்கொள்ள சுகாதார பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 41- வது வார்டுக்கு உட்பட்ட வட்டவிளை பகுதியில்ரூ. 25 லட்சம் செலவில் சாலை பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஆணையர் ஆனந்த மோகன் என்ஜினியர் பாலசுப்பிரமணியன் மண்டல தலைவர் அகஸ்டி னா கோகிலாவாணி, மாநக ராட்சி கவுன்சிலர் அனிலா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், அதிமுக தொழிற்சங்க செயலாளர் சுகுமாறன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ரூ.5.45 கோடியில் சாலை பணிகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தாமதமின்றி விரைவில் பணியை முடிக்குமாறு ஒப்பந்ததாரரிடம் கூறினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதியில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தளவாய்புரம் முதல் இனாம்கோவில்பட்டி சாலையில் ரூ.5.45 கோடி மதிப்பீட்டில் 2 பாலங்களுடன் சேர்த்து 4 கி.மீ தூரத்துக்கு சாலை அமைக்கப்படுகிறது.

    இந்த பணிக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டு பாலம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் பேசிய எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தாமதமின்றி விரைவில் பணியை முடிக்குமாறு ஒப்பந்ததாரரிடம் கூறினார்.

    இதில் பொறியாளர் முத்துமுனிகுமாரி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கடலூர் அருகே ஆமை வேக சாலை பணியால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
    • குண்டு குழியுமாக இருப்பதால் நடந்து செல்பவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கீழே விழும் அபாயமும் உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதிய சாலைகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது கடலூர் மற்றும் கடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் புதியதாக வாய்க்கால் மற்றும் தார் சாலை போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களாக இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மற்றும் குறிப்பாக வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். இதனால் இந்த பாதிப்பு என்றால் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்காக ஏற்கனவே உள்ள சாலைகளை மறுசீரமைப்பின் போது ஏற்படும் விளைவுகளால் சாலைகளில் ஆங்காங்கே குண்டு குழியுமாகவும் மற்றும் குறிப்பாக அதிக நோய்களை பரப்பக்கூடிய வகையில் சாலைகளில் மேகமூட்டம் போல் வரக்கூடிய மாசடைந்த புகையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது.

    ஆங்காங்கே குண்டு குழியுமாக இருப்பதால் நடந்து செல்பவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கீழே விழும் அபாயமும் உள்ளது. மேலும் இதனால் பெரும் பாதிப்பு என்றால் இந்த சாலையில் இருந்து வரும் மிகப்பெரிய மாசடைந்த புகையினால் மோட்டார் சைக்கிள் மற்றும் நடந்து செல்பவர்களின் கண்களிலும் அந்தப் புகையை சுவாசிப்பதனால் உடல்நலம் பெரும் பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ளது. இந்த தூசியினால் விரைவாக உடல் நலப் பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    ×