search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வட்டவிளை"

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • இடலாக்குடி அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்க தயார் செய்து வைக்கப்பட்டிருந்த காலை உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சி 39-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மேயர் மகேஷ் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். அந்த பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் கழிவு நீர் ஓடைகளை ஆய்வு செய்த மேயர் மகேஷ் இடலாக்குடி அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்க தயார் செய்து வைக்கப்பட்டிருந்த காலை உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.

    இதைத் தொடர்ந்து 39-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணியை மேற்கொள்ள சுகாதார பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 41- வது வார்டுக்கு உட்பட்ட வட்டவிளை பகுதியில்ரூ. 25 லட்சம் செலவில் சாலை பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஆணையர் ஆனந்த மோகன் என்ஜினியர் பாலசுப்பிரமணியன் மண்டல தலைவர் அகஸ்டி னா கோகிலாவாணி, மாநக ராட்சி கவுன்சிலர் அனிலா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், அதிமுக தொழிற்சங்க செயலாளர் சுகுமாறன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வட்டவிளை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
    • வட்டவிளை குளம் சீரமைக்க 47 லட்ச ருபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சிக்கு உட்பட்ட 41-வது வார்டுக்கு உட்பட்ட வட்டவிளை, ஈத்தாமொழி ரோடு, மேலபுது தெரு, பறக்கை ரோடு, பட்டாரியார் சாஸ்தா தெரு உள்ளிட்ட பகுதியில் மேயரும், தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ், அனைத்து துறை அதிகாரிகளுடன் சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.

    ஆய்வின் போது பொது மக்களின் கோரிக்கையை ஏற்று வட்டவிளை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். மேலும் வட்டவிளை குளம் சீரமைக்க 47 லட்ச ருபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலா வாணி, மாமன்ற உறுப்பி னர் அனிலா, தலைமை செயற்குழு உறுப்பினர் சதா சிவன், மாநகர துணை செயலாளர்கள் வேல் முருகன், ராஜன், பகுதி செயலாளர்கள் ஷேக் மீரான், துரை, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எம். ஜே ராஜன் உள்ளிட்ட பலரும் ஆய்வின் போது கலந்து கொண்டனர்.

    ×