search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வட்டவிளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் மகேஷ் ஆய்வு
    X

    வட்டவிளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் மகேஷ் ஆய்வு செய்தபோது எடுத்த படம் 

    வட்டவிளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் மகேஷ் ஆய்வு

    • வட்டவிளை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
    • வட்டவிளை குளம் சீரமைக்க 47 லட்ச ருபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சிக்கு உட்பட்ட 41-வது வார்டுக்கு உட்பட்ட வட்டவிளை, ஈத்தாமொழி ரோடு, மேலபுது தெரு, பறக்கை ரோடு, பட்டாரியார் சாஸ்தா தெரு உள்ளிட்ட பகுதியில் மேயரும், தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ், அனைத்து துறை அதிகாரிகளுடன் சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.

    ஆய்வின் போது பொது மக்களின் கோரிக்கையை ஏற்று வட்டவிளை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். மேலும் வட்டவிளை குளம் சீரமைக்க 47 லட்ச ருபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலா வாணி, மாமன்ற உறுப்பி னர் அனிலா, தலைமை செயற்குழு உறுப்பினர் சதா சிவன், மாநகர துணை செயலாளர்கள் வேல் முருகன், ராஜன், பகுதி செயலாளர்கள் ஷேக் மீரான், துரை, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எம். ஜே ராஜன் உள்ளிட்ட பலரும் ஆய்வின் போது கலந்து கொண்டனர்.

    Next Story
    ×