search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சஸ்பெண்டு"

    • விற்பனையாளர் பருப்பு இல்லை என்று சொல்பவர்கள் வரட்டும் , நான் பேசி கொள்கிறேன் என மெத்தனமாக பதில் அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
    • ஊழியரை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு சார்பதிவாளர் செல்வி உத்தரவிட்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் - 15வேலம்பாளையம் தொடக்க வேளாண்மைக்கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 59, வேலம்பாளையம் ரேசன் கடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேசன் கார்டு இல்லாமல் சுமார் 20 கிலோ பருப்பை வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற போது அங்கிருந்த பொதுமக்கள் ரேசன்கார்டு இல்லாமல் இவ்வளவு பருப்பை எப்படி மொத்தமாக கொண்டு செல்கிறீர்கள் என அந்த வாலிபரை பார்த்து கேட்டனர்.

    மேலும் கார்டுதாரர்கள் கேட்டால் பருப்பு இல்லை என திருப்பி அனுப்பிவிட்டு கடைக்காரர்களுக்கு மொத்தமாக விற்பனை செய்கிறீர்களா என விற்பனையாளரிடம் இது குறித்து கேள்வி எழுப்பினர்.

    அதற்கு விற்பனையாளர் பருப்பு இல்லை என்று சொல்பவர்கள் வரட்டும் , நான் பேசி கொள்கிறேன் என மெத்தனமாக பதில் அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்தநிலையில் 15வேலம்பாளையம் ரேசன் கடையில், ரேசன் கார்டு இல்லாமல் விற்பனையாளர் ராமாத்தாள் மொத்தமாக பருப்பை விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு சார்பதிவாளர் செல்வி இன்று உத்தரவிட்டார்.

    • மின்சாரம் பாய்ந்து கேங்மேன் காயம்
    • திருச்சி உதவி மின் பொறியாளர் சஸ்பெண்டு


    திருச்சி


    திருச்சி தென்னூரில் உள்ள தலைமை மின்வாரிய பொறியாளர் அலுவ லகத்தின் மலைக்கோட்டை பிரிவில் ராஜீவ் காந்தி என்பவர் கேங்மேனாக பணியாற்றி வருகிறார்.


    இவர் இரு தினங்களுக்கு முன்பு பணியில் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து பலத்த காயம் அடைந்தார்.பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


    மின் இணைப்பை துண்டி க்காமல் உரிய பாதுகாப்பு இல்லாமல் 110 கே.வி. மின் கம்பத்தில் ஏறி பணி செய்யு மாறு உயர் அதிகாரி வாய்மொழி உத்தர விட்டதா கவும், மின்சாரம் உள்ள பகுதி களில் அவர்க ளை பணியில் ஈடுபடுத்த கூடாது என்ற விதிக்கு புறம்பாக ராஜீவ் காந்தியை பணி செய்ய வைத்ததால் இந்த விபத்து நடந்ததாக புகார் எழுந்தது. அதைத் தொ டர்ந்து பாதிக்க ப்பட்ட வருக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். விபத்துக்கு காரணமான அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் தென்னூர் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பா ட்டம் நடந்தது.மேலும் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய பொறி யாளர் அலுவலகம் முன்பும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் மின்வாரிய அதிகாரிகள், கேங் மேன்கள் தரப்பில் நடத்த பேச்சு வார்த்தையில் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க ப்படும் என உறுதி அளிக்க ப்பட்டது. இதைத் தொட ர்ந்து சம்பந்தப்பட்ட உதவி மின் பொறியாளர் ஆர். சரவ ணன் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்ப ட்டுள்ளார்.




    • செட்டிபுண்ணியம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் ஒருவரை பிடிக்க போலீசார் பல்வேறு முயற்சியில் ஈடுபட்டும் சிக்காமல் இருந்தார்.
    • போலீஸ்காரர் கோகுலை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் அதிரடியாக உத்தரவிட்டார்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களை ஒழிப்பதில் போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அனைத்து போலீசாரும் தங்களது போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனையை ஒழிக்கவும், இதில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். மேலும் இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மறைமலைநகர் அருகே உள்ள செட்டிபுண்ணியம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் ஒருவரை பிடிக்க போலீசார் பல்வேறு முயற்சியில் ஈடுபட்டும் சிக்காமல் இருந்தார். இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்தபோது மாமல்லபுரம் அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வரும் கோகுல் என்பவர் கஞ்சா வியாபாரிக்கு போலீசாரின் நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவித்து வந்தது தெரியவந்தது. மாவட்ட போதை தடுப்பு சிறப்பு பிரிவில் உள்ள போலீஸ்காரர் கோகுல் பல குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீஸ்காரர் கோகுலை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் அதிரடியாக உத்தரவிட்டார்.

    • ரேசன் கடை விற்பனையாளர் சஸ்பெண்டு
    • அதிகாரி நடவடிக்கை

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்ட ராம்பட்டு அடுத்த தென் கரும்பலூர் 124 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.

    இதன் கட்டுப்பாட்டில் அதே கிராமத்தில் கூட்டுறவு பொது விநியோகத் திட்டம் மூலம் ரேசன் கடை இயங்கி வருகிறது.

    இந்த கடையில் விற்பனையாளராக செங்கம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 48) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் கடந்த மாதம் பொதுமக்களுக்கு அரிசி பருப்பு சரியான முறையில் போடவில்லை என்று மாவட்ட கூட்டுறவு சார் பதிவாளர் மணிவண்ணனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    அதன் அடிப்படையில் வங்கி செயலாளர் அண்ணா மலை விசாரணை செய்தார். அப்போது பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய 2,500 கிலோ அரிசி, 100 கிலோ பருப்பு ஆகியவை பொதுமக் களுக்கு வழங்காமல் அவர் விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட கூட்டுறவு சார்பதிவாளருக்கு கடிதம் எழுதினார்.

    அதன் அடிப்படையில் பொது மக்களுக்கு அரிசி பருப்பு வழங்காமல் விற்பனை செய்த சுரேஷ் குமாரை கடந்த 30-ந் தேதி முதல் தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட கூட்டுறவு சார்பதிவாளர் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

    • திடீரென கதவு திறக்கவும் மறுபுறத்தில் 5-வது பிளாட்பார்மில் பவுலேஷ் தவறி விழுந்தார்.
    • விபத்து நடந்த வந்தே பாரத் ரெயிலின் சி3 பெட்டியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தார்.

    சேலம்:

    சென்னை-கோவை இடையே சேலம் வழியாக வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 26-ந் தேதி வந்தே பாரத் ரெயிலில் சென்னை கீழக்கட்டளை திருவள்ளுவர் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து ஆய்வாளர் பவுலேஷ் (வயது 70). அவரது மனைவி ரோஸ் மார்க் கரெக்ட் ஆகியோர் சி3 பெட்டியில் ஈரோட்டிற்கு பயணித்தனர்.

    மாலை 6 மணிக்கு சேலத்திற்கு வந்த வந்தே பாரத் ரெயில் 4-வது பிளாட்பார்மில் வந்து நின்றது. அப்போது தனது இருக்கையில் இருந்து எழுந்த பவுலேஷ் ரெயிலின் அவசர கதவு அருகே வந்து நின்றிருந்தார். அப்போது திடீரென கதவு திறக்கவும் மறுபுறத்தில் 5-வது பிளாட்பார்மில் பவுலேஷ் தவறி விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு ரெயில்வே போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனை செய்து அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    இந்த விபத்தில் அவசர கதவின் பட்டனை யாரும் அழுத்தி திறக்காத நிலையில் அது எப்படி தானாக திறந்து பவுலேஷ் கீழே விழுந்தார் என ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா நேரடியாக சேலம் ரெயில்வே நிலையத்துக்கும் சென்று விசாரித்தார். பின்னர் கோவை புறப்பட்டு சென்ற அவர் விபத்து நடந்த வந்தே பாரத் ரெயிலின் சி3 பெட்டியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தார்.

    அதில் சேலம் ரெயில்வே நிலைய பகுதியில் இருந்து 2 ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள பாதைகளில் இறங்கி வந்து வந்தே பாரத் ரெயிலின் அவசரக் கதவு பட்டனை அழுத்தி திறந்து ரெயிலில் ஏறி மறுமுனையில் 4-வது பிளாட்பார்மில் இறங்கி சென்றது தெரியவந்தது.

    இந்த இருவரும் சென்ற சிறிது நேரத்தில் அவசர கதவு பகுதிக்கு பவுலேஷ் சென்று கதவின் மீது கை வைக்கவும் அது திறந்து கீழே விழுந்து உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவசர கதவை திறந்து வைத்த ரெயில்வே ஊழியர்கள் குறித்து கோட்ட மேலாளர் விசாரணை நடத்தினார்.

    அப்போது அவர்கள் சேலம் ரெயில்வே நிலைய பாயிண்ட் மேன்களாக பணியாற்றி வரும் தாமரைச்செல்வன், மீனா ஆகியோர் என தெரியவந்தது. அவர்கள் இருவரையும் சஸ்பெண்டு செய்து கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா உத்தரவிட்டார். தொடர்ந்து துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

    • பேராசிரியர் மற்றும் மாணவர்கள் பேசிய ஆடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
    • விசாரணை அறிக்கையை உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் கல்லூரி கல்வியியல் துறை இயக்குனருக்கு அனுப்பி வைத்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் 2023-24-ம் ஆண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் மாதம் முடிந்தது.

    இதில் முதல்கட்ட கலந்தாய்வில் மாணவர்கள் தங்கள் விண்ணப்பித்த பாடப்பிரிவு கிடைக்காதபோது, முதலில் கிடைத்த பாடப்பிரிவில் சேர்ந்துள்ளனர்.

    இதன் பின்னர் அடுத்தடுத்த கலந்தாய்வுகளின்போது அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் காலியிடம் இருந்ததால் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டு அந்த பாடப்பிரிவிற்கு மாறி உள்ளனர்.

    இவ்வாறு ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு மாறுவதற்காக தாவரவியல் துறை பேராசிரியர் ரவி, மாணவர்களிடம் கூகுள்பே மூலமும், ரொக்கமாகவும் பணம் வாங்கியதாக கடந்த 14-ந்தேதி குற்றச்சாட்டு எழுந்தது.

    இதைத் தொடர்ந்து கூகுள் பே மூலம் பணம் அனுப்பிய செல்போன் ஸ்க்ரீன் ஷாட்டுகள் மூலம் முதலமைச்சரின் தனிப்பிரிவு, கல்லூரி கல்வி இயக்குனரகம், தமிழக டி.ஜி.பி ஆகியோருக்கு ஆன்லைன் மூலம் மாணவ-மாணவிகள் புகார் பதிவு செய்து உள்ளனர்.

    மேலும் பேராசிரியர் மற்றும் மாணவர்கள் பேசிய ஆடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    இதையடுத்து கோவை மண்டல கல்லூரி கல்வியியல் இணை இயக்குனர் கலைச்செல்வி கடந்த வாரம் ஊட்டி அரசு கலைக் கல்லூரிக்கு நேரில் வந்து 30 மாணவ-மாணவிகள், 4 பேராசிரியர்கள், மற்றும் கல்லூரி முதல்வரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

    இதன்பின்னர் விசாரணை அறிக்கையை உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் கல்லூரி கல்வியியல் துறை இயக்குனருக்கு அனுப்பி வைத்தார்.

    இதற்கிடையே ஊட்டி அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதியில் இடம் கிடைக்க கல்லூரி முதல்வர் பணம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனியிடம் ஒரு மாணவர் பிரவுன் கவரை வழங்குகிறார். அந்த கவரில் ரூ.10 ஆயிரம் பணம் இருந்ததாக சொல்லப்படுகிறது. மாணவரை பார்த்து சீக்கிரம் கொடுத்து விடுங்கள். அப்போது தான் இடம் கிடைக்கும் என கல்லூரி முதல்வர் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர் அருள் அந்தோணி மற்றும் தாவரவியல் துறை பேராசிரியர் ரவி ஆகிய 2 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

    இதற்கான நடவடிக்கையை உயர்கல்வித்துறை எடுத்துள்ளது.

    • மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்வு தொடங்கும் முன் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் உள்பட அரசியில் கட்சியினர் போட்டி போட்டு மேடை மீது ஏறினர்.
    • பா.ம.க. ஒன்றிய செயலாளர் அறிவழகன் லேசான காயத்துடன் தப்பினார்.

    சேலம்:

    சேலம் சித்தர்கோவில் அருகே உள்ள முருங்கப்பட்டியில் மக்கள் சந்திப்பு முகாம் நேற்று முன்தினம் நடந்தது.

    இந்த முகாமில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற நல உதவிகள் வழங்க 2 அடி உயரத்தில் மேடை அமைக்கப்பட்டது. கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்த விழாவில் எம்.பி. பார்த்திபன், வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராஜமுத்து, டி.ஆர்.ஓ. மேனகா மற்றும் அதிகாரிகள் மேடையில் இருந்தனர்.

    மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்வு தொடங்கும் முன் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் உள்பட அரசியில் கட்சியினர் போட்டி போட்டு மேடை மீது ஏறினர். இதில் பாரம் தாங்காமல் மேடை சரிந்தது. நிலைகுலைந்த கலெக்டர் கார்மேகம் மேடையில் அப்படியே அமர்ந்து விட்டார்.

    பா.ம.க. ஒன்றிய செயலாளர் அறிவழகன் லேசான காயத்துடன் தப்பினார். மேடை 2 அடி உயரம் என்பதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆனாலும் அந்த மேடையிலையே விழா நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் மேடை சரிவு எதிரொலியாக முருங்கப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கண்ணனை சஸ்பெண்டு செய்து சேலம் ஆர்.டி.ஓ. அம்பாயிரநாதன் உத்தரவிட்டார்.

    இதுகுறித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க சேலம் மாவட்ட நிர்வாகிகள் கூறுகையில், கலெக்டர் உத்தரவு படி கண்ணனை சஸ்பெண்டு செய்தது ஏற்புடையது அல்ல, வருகிற 30-ந் தேதிக்குள் சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்யாவிட்டால் கலெக்டரை சந்தித்து முறையிடுவோம், அதன்பிறகும் இசைவு தெரிவிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

    • பிறந்து 75 நாட்கள் ஆன தனது மகள் ஸ்ரீனிகாவுக்கு தடுப்பூசி போடுவதற்கு கொண்டு வந்தார்.
    • காலி சிரிஞ்சை குழந்தை உடலில் ஏற்றிய சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பெரிநாடு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இளநிலை பொது சுகாதார செவிலியர்களாக ஷீபா, லுர்த் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.

    சம்பவத்தன்று இவர்கள் இருவரும் வழக்கம்போல் பணியில் இருந்தனர். அப்போது அந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு விஷ்ணு பிரசாத் என்பவரின் மனைவி ஸ்ரீலட்சுமி, பிறந்து 75 நாட்கள் ஆன தனது மகள் ஸ்ரீனிகாவுக்கு தடுப்பூசி போடுவதற்கு கொண்டு வந்தார்.

    தாய்-மகள் இருவரையும் தடுப்பூசி போடும் அறைக்கு செவிலியர்கள் அழைத்துச்சென்றனர். பின்பு செவிலியர் ஷீபா குழந்தைக்கு ஊசி போட்டிருக்கிறார். அப்போது குழந்தைக்கு போடப்பட்ட ஊசி சிரிஞ்சில் மருந்து இல்லாததை குழந்தையின் தாய் பார்த்து, அதுபற்றி ஷீபாவிடம் கேட்டிருக்கிறார்.

    ஆனால் அதற்குள் குழந்தைக்கு நர்சு ஊசி போட்டுவிட்டார். இதனால் குழந்தையின் உடலில் காற்று செலுத்தப்பட்டது. இதையடுத்து நர்சு ஷீபா, மருந்து நிரப்ப மறந்துவிட்டேன் என்று கூறிவிட்டு அந்த அறையில் இருந்துவெளியே சென்றுவிட்டார். காலி சிரிஞ்சை உடலில் செலுத்தியதால் ஸ்ரீலட்சுமியின் குழந்தை அழுதபடி இருந்தது.

    இந்த விவகாரம் ஆஸ்பத்திரி முழுவதும் பரவியது. ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்கு செவிலியர் மீண்டும் வருவார் என்று ஸ்ரீலட்சுமியிடம் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் அவரோ குழந்தைக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்துவிட்டார். மேலும் தனது குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றார். சிரிஞ்சில் மருந்து இல்லாமல், காலி சிரிஞ்சை குழந்தை உடலில் ஏற்றிய சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அதன்பேரில் சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் பணியில் இருந்த நர்சுகளான ஷீபா, லுர்த் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு நடந்ததும், அப்போது நர்சு ஷீபா கவனக்குறைவாக குழந்தைக்கு சிரிஞ்சில் மருந்து எடுக்காமல் உடலில் செலுத்தியதும் உறுதி செய்யப்பட்டது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. அதன்பேரில் நர்சுகள் ஷீபா, லுர்த் ஆகிய இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். ஆரம்ப சுகாதார நிலைய நர்சுகள் பணியின் போது சண்டையிட்டது மட்டுமின்றி, கவனக்குறைவாக பணிபுரிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குழந்தையின் உடலுக்குள் மிகக்குறைந்த அளவே காற்று நுழைந்திருப்பதாகவும், அதனால் குழந்தைக்கு உடல்நல பிரச்சினை எதுவும் ஏற்படாது எனவும் குழந்தையின் பெற்றோரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

    • போதை பொருள் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தப்பவிட்டதாக புகார் எழுந்தது.
    • கலால் ஊழியர்கள் லஞ்சம் வாங்கியது உறுதியானது.

    திருவனந்தபுரம்:

    கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு போதை பொருட்களை சிலர் கடத்தி வந்தனர். அவர்களை வயநாடு முத்தங்கா சோதனை சாவடியில் பணியில் இருந்த கலால் ஊழியர்கள் பிரபாகரன், அஜிஸ், பாலகிருஷ்ணன், சுதீஷ் ஆகியோர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கொண்டு போதை பொருள் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தப்பவிட்டதாக புகார் எழுந்தது.

    அதன்பேரில் கலால் துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரி விசாரணை நடத்தினார். அதில், கலால் ஊழியர்கள் லஞ்சம் வாங்கியது உறுதியானது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் சஸ்பெண்டு செய்து கலால் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

    • பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய ஜெகநாதனிடம் கிராம நிர்வாக அலுவலர் தீபா ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
    • துறை ரீதியான நடவடிக்கை எடுத்த திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி தீபாவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி தீபா (43) கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கொந்தளம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஜெகநாதன் (45) என்பவர் பட்டாவில் உள்ள பூர்வீக சொத்தில் இருந்து பெயர் நீக்கம் செய்ய ஊராட்சி நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய ஜெகநாதனிடம் கிராம நிர்வாக அலுவலர் தீபா ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

    இதுகுறித்து ஜெகநாதன் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் தீபாவை நேற்று முன்தினம் கைது செய்து சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர்.

    தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்த திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி தீபாவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    • போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • காளிமுத்து என்பவர் குட்கா வியாபாரிகளிடம் தொடர்பு வைத்துள்ளதாக புகார் எழுந்தது.

    திருச்சி:

    திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக காமினி பொறுப்பேற்றது முதல் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சமூக விரோத செயல்களை தடுக்கவும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் காளிமுத்து என்பவர் குட்கா வியாபாரிகளிடம் தொடர்பு வைத்துள்ளதாக புகார் எழுந்தது.

    அதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி போலீஸ்காரர் காளி முத்துவை அதிரடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • லிபிய யூதர்களின் பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விவாதித்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.
    • நீதி மந்திரி தலைமையிலான ஆணையத்தின் நிர்வாக விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

    லிபியா நாட்டின் வெளியுறவுத் துறையின் பெண் மந்திரியாக இருப்பவர் நஜ்லா அல்-மங்குஷ். இவர் சமீபத்தில் இத்தாலியின் ரோம் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, இஸ்ரேலின் வெளியுறவுத் துறை மந்திரி கோஹனை சந்தித்து பேசினார். இது அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பாகும். இதில் லிபிய யூதர்களின் பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விவாதித்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.

    இதற்கு லிபியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் பெண் மந்திரி நஜ்லாவை சஸ்பெண்டு செய்து பிரதமர் அப்துல் ஹமித உத்தரவிட்டுள்ளார். நீதி மந்திரி தலைமையிலான ஆணையத்தின் நிர்வாக விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான லிபிய வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, ரோமில் நடந்தது ஒரு அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பாகும். பாலஸ்தீன விவகாரம் தொடர்பாக லிபியாவின் நிலைப்பாட்டை மந்திரி மீண்டும் வலியுறுத்தினார். இந்த சந்திப்பை ஒரு பேச்சுவார்த்தைக்காக முன்வைக்க இஸ்ரேல் முயற்சிக்கிறது என்று கூறியுள்ளது.

    ×