search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கடைக்காரருக்கு மொத்தமாக பருப்பு விற்பனை செய்த ரேஷன் கடை ஊழியர் சஸ்பெண்டு
    X

    கடைக்காரருக்கு மொத்தமாக பருப்பு விற்பனை செய்த ரேஷன் கடை ஊழியர் சஸ்பெண்டு

    • விற்பனையாளர் பருப்பு இல்லை என்று சொல்பவர்கள் வரட்டும் , நான் பேசி கொள்கிறேன் என மெத்தனமாக பதில் அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
    • ஊழியரை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு சார்பதிவாளர் செல்வி உத்தரவிட்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் - 15வேலம்பாளையம் தொடக்க வேளாண்மைக்கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 59, வேலம்பாளையம் ரேசன் கடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேசன் கார்டு இல்லாமல் சுமார் 20 கிலோ பருப்பை வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற போது அங்கிருந்த பொதுமக்கள் ரேசன்கார்டு இல்லாமல் இவ்வளவு பருப்பை எப்படி மொத்தமாக கொண்டு செல்கிறீர்கள் என அந்த வாலிபரை பார்த்து கேட்டனர்.

    மேலும் கார்டுதாரர்கள் கேட்டால் பருப்பு இல்லை என திருப்பி அனுப்பிவிட்டு கடைக்காரர்களுக்கு மொத்தமாக விற்பனை செய்கிறீர்களா என விற்பனையாளரிடம் இது குறித்து கேள்வி எழுப்பினர்.

    அதற்கு விற்பனையாளர் பருப்பு இல்லை என்று சொல்பவர்கள் வரட்டும் , நான் பேசி கொள்கிறேன் என மெத்தனமாக பதில் அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்தநிலையில் 15வேலம்பாளையம் ரேசன் கடையில், ரேசன் கார்டு இல்லாமல் விற்பனையாளர் ராமாத்தாள் மொத்தமாக பருப்பை விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு சார்பதிவாளர் செல்வி இன்று உத்தரவிட்டார்.

    Next Story
    ×