search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்தம்"

    • தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கி பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்து வந்துள்ளார்.
    • தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    விழுப்புரம்:

    டெல்லியை சேர்ந்தவர் சித்ரஞ்சன் நாயக். இவர் தனது மனைவி பக்கிரா, மகள் தாரா நாயக் (வயது 12) ஆகியோருடன் புதுவை மாநிலத்திற்கு சுற்றுலா வந்தார். இவர் ஆரோவிலில் உள்ள தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கி பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தங்கும் விடுதியின் 5-வது மாடியில் உள்ள அறையில் சித்ரஞ்சன் நாயக் தங்கினார். அப்போது அறையை விட்டு வெளியில் வந்த தாரா நாயக்கின் அலறல் சத்தம் கேட்டு அலறியடித்து வெளியில் வந்தனர்.

    அப்போது தாரா நாயக் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தார். அவரை மீட்ட பெற்றோர், 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார், சிறுமி மாடியில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது யாரேணும் தள்ளி கொலை செய்தனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விடுமுறை தினங்களில் ஏரியை சுற்றியுள்ள சிறுவர்கள் இங்கு சென்று குளிப்பதும், மீன் பிடிப்பதும் வழக்கம்.
    • இதையடுத்து சத்தம் வந்த புதருக்கு அருகே சிறுவர்கள் சென்று பார்த்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பகண்டை கூட்ரோட்டில் பெரிய ஏரி உள்ளது. கடந்த மாதம் பெய்த மழையினால் ஏரி நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது. விடு முறை தினங்களில் ஏரியை சுற்றியுள்ள சிறுவர்கள் இங்கு சென்று குளிப்பதும், மீன் பிடிப்பதும் வழக்கம். அதன்படி இன்று காலை 7 மணிக்கு அப்பகுதி சிறுவர்கள் கையில் தூண்டி லுடன் மீன் பிடிக்க பெரிய ஏரிக்கு சென்றனர். ஏரியின் கரையின் மீது நடந்து சென்ற போது, பாம்பு மூச்சுவிடும் சத்தம் கேட்டுள்ளது. இதை யடுத்து சத்தம் வந்த புதருக்கு அருகே சிறுவர்கள் சென்று பார்த்தனர். அங்கு அதிக தடிமன் கொண்ட நீளமான பாம்பு ஒன்று படுத்துக் கிடந்த தை பார்த்து பயத்தில் வீடு திரும்பினர். அங்கிருந்த வர்களிடம் நடந்த சம்பவத் தை சிறுவர்கள் கூறினர். இதையடுத்து ஏரிக்கரைக்கு சென்ற பொதுமக்கள், அங்கிருப்பது மலைப் பாம்பு என்பதை உறுதி செய்தனர்.

    இதையடுத்து சங்கராபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் பகண்டை கூட்ரோடு பெரிய ஏரிக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். புதருக்கு அருகில் ஏரியில் கரையில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு உலாவிக் கொண்டிருந்தது. அதனை லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள், அதனை எடுத்துச் சென்று சங்கராபும் வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காரைக்கால் பொது இடத்தில் மது அருந்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இதனைக்கண்ட ரோந்துப்போலீசார், 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர ரோந்துப்போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழைய ெரயில் நிலையம் அருகே உள்ள காட்டுநாயக்கன் தெரு சந்திப்பில், 3 பேர், பொது மக்களின் அமைதிக்கு இடையூறாக, பொது இடத்தில் சத்தம் போட்டு மது அருந்திகொண்டிருந்தனர். இதனைக்கண்ட ரோந்துப்போலீசார், 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் புதுச்சேரி நெட்டப்பாக்கம் நெசவாளர் குடியிருப்பைச்சேர்ந்த ஜோதிமணி (வயது 35), அவரது நண்பர் தஞ்சாவூர் ஒரத்தநாடு கண்டபிள்ளைத் தெருவைச்சேர்ந்த ஜான்பாஸ்கோ (36), காரைக்காலை அடுத்த திருநள்ளாறு கீழசுப்புராய புரத்தைச்சேர்ந்த அருளானந்தமேனன் (30) என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • பிரியா நேற்று முன்தினம் இரவு தனது பெற்றோருடன் தூங்கி கொண்டு இருந்தாள்.
    • இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள சாராய மேடு கிராமத்ைத சேர்ந்தவர் அரவிந்த். விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் பிரியா (5). இவள் அதே பகுதியில் உள்ள ஊட்டச்சத்து மையத்தில் படித்து வந்தாள். பிரியா நேற்று முன்தினம் இரவு தனது பெற்றோருடன் தூங்கி கொண்டு இருந்தாள். அதிகாலையில் அவளை பாம்பு கடித்தது. கன்னத்தில் கடித்ததால் சிறுமி கதறினாள்.சத்தம் கேட்டு பெற்றோர் எழுந்தனர். அப்போது சிறுமியை கடித்த பாம்பு அங்கு மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு சத்தம் போட்டனர்.

    இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சிறுமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.30 மணிக்கு இறந்தாள். இது குறித்து திருவெண்ணை நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருநள்ளாறில் தூக்கு போட்டு கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • புஷ்பராஜிக்கு மது பழக்கம் இருந்தமையால், தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்குச் செல்வது வழக்கம்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு செருமா விளங்கை மாதாகோவில் தெருவைச்சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது48). இவரது மனைவி சந்தா னமேரி. இவர்களுக்கு, லிட் லார்ட் ஆப் குயின் (கூயது 20), சன் சால்ட் கிங் (17) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். புஷ்பராஜ் கூலி வேலை செய்து வந்தார். புஷ்பராஜிக்கு மதுபழக்கம் இருந்தமையால், தினமும் மது குடிவுவிட்டு வீட்டுக்குச் செல்வது வழக்கம். சம்பவத்தன்று பகல் வழக்கம் போல், மது அருந்தி விட்டு புஷ்பராஜ் வீட்டுக்குசென்றுள்ளார். அப்போது சில வீட்டு பொருட்கள் வீட்டின் சில பகுதிகளில் கிடந்ததாக கூறப்படுகிறது. ஏன் இப்படி கிடக்கிறது. என மனைவி சந்தான மேரியையும், மகள் லிட் லார்ட் ஆப் குயினை வீட்டை விட்டு வெளியே போகுமாறு புஷ்பராஜ் சத்தம் போட்டதாக தெரிகிறது.

    தொடர்ந்து, சந்தானமேரி தனது மகளுடன், பக்கத்து தெருவான சிவன்கோவில் தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். மாலை அதே தெருவைச்சேர்ந்த ஜான்பிட்டர் என்பவர், ஊர் கூட்டத்திற்கு புஷ்ப ராஜை அழைக்க சென்று ள்ளார். பலமுறை சத்தம் போட்டும் புஷ்பராஜ் வராததால், திறந்திருந்த கதவின் வழியே ஜான்பீட்டர் எட்டி பார்த்தார். அப்போது, புஷ்பராஜ் தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது. இது குறித்து, சந்தானமேரிக்கு தகவல் கொடுத்து, உடலை இறக்கி, திருநள்ளாறு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார், உடலை கைபற்றி, காரை க்கால் அரசு ஆஸ்பத்தி ரியில் பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×