search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காரைக்கால் பொது இடத்தில் மது அருந்திய 3 பேர் கைது
    X

    காரைக்கால் பொது இடத்தில் மது அருந்திய 3 பேர் கைது

    • காரைக்கால் பொது இடத்தில் மது அருந்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இதனைக்கண்ட ரோந்துப்போலீசார், 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர ரோந்துப்போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழைய ெரயில் நிலையம் அருகே உள்ள காட்டுநாயக்கன் தெரு சந்திப்பில், 3 பேர், பொது மக்களின் அமைதிக்கு இடையூறாக, பொது இடத்தில் சத்தம் போட்டு மது அருந்திகொண்டிருந்தனர். இதனைக்கண்ட ரோந்துப்போலீசார், 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் புதுச்சேரி நெட்டப்பாக்கம் நெசவாளர் குடியிருப்பைச்சேர்ந்த ஜோதிமணி (வயது 35), அவரது நண்பர் தஞ்சாவூர் ஒரத்தநாடு கண்டபிள்ளைத் தெருவைச்சேர்ந்த ஜான்பாஸ்கோ (36), காரைக்காலை அடுத்த திருநள்ளாறு கீழசுப்புராய புரத்தைச்சேர்ந்த அருளானந்தமேனன் (30) என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×