search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டசபை"

    • நான் ஒரு தாய், மக்களின் பிரதிநிதியாகவும் இருக்கிறேன்.
    • எனக்கு வாக்களித்தவர்களுக்காக கேள்விகளை எழுப்பி பதில்களை பெறுவதற்காக நான் அவைக்கு வந்துள்ளேன்.

    நாக்பூர்:

    மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில், உறுப்பினர்களுக்காக புதிய செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நாசிக் மாவட்ட பகுதியை சேர்ந்தவரான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.எல்.ஏ. சரோஜ் ஆஹிர் என்பவர், பிறந்து இரண்டரை மாதமே ஆன தனது கைக்குழந்தையுடன் அவைக்கு வருகை தந்துள்ளார்.

    இதுபற்றி ஆஹிர் கூறும்போது, நான் ஒரு தாய். மக்களின் பிரதிநிதியாகவும் இருக்கிறேன். கொரோனா பெருந்தொற்றால் இரண்டரை ஆண்டுகளாக நாக்பூரில் சட்டசபை கூட்டத்தொடர் எதுவும் நடைபெறவில்லை.

    நான் தற்போது தாயாகி இருக்கிறேன். ஆனால், எனக்கு வாக்களித்தவர்களுக்காக கேள்விகளை எழுப்பி பதில்களை பெறுவதற்காக நான் அவைக்கு வந்துள்ளேன் என அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்வதன் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தி பேசினார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.எல்.ஏ.வான சரோஜ் ஆஹிருக்கு கடந்த செப்டம்பர் 30-ந்தேதி குழந்தை பிறந்தது. அவையில் பங்கேற்பதற்கு முன்பு,  முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை அவர் நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார்.

    • ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், முதல்-மந்திரியுமான ஹேமந்த் சோரன் தனது பதவியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு
    • ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா தனது பக்கம் இழுத்து ஆட்சியை கவிழ்க்க கூடும் என தகவல் வெளியானது.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், முதல்-மந்திரியுமான ஹேமந்த் சோரன் தனது பதவியை முறைகேடாக பயன்படுத்தி ராஞ்சியில் உள்ள சுரங்கத்தை சட்டவிரோதமாக குத்தகைக்கு எடுத்து ஆதாயம் அடைந்ததாக பா.ஜனதா குற்றம் சாட்டியது. அதோடு அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டது.

    எனவே ஹேமந்த் சோரன் எம்.எல்.ஏ. பதவியை தகுதி நீக்கம் செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா முறையிட்து. இதையேற்று முதல்-மந்திரியின் எம்.எல்.ஏ. பதவியை தகுதி நீக்கம் செய்யுமாறு ஜார்க்கண்ட் கவர்னர் ரமேஷ் பைசுக்கு தேர்தல் கமிஷன் கடந்த மாதம் 25-ந்தேதி பரிந்துரை செய்தது. ஆனால் கவர்னர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

    இந்த சூழ்நிலையில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா தனது பக்கம் இழுத்து ஆட்சியை கவிழ்க்க கூடும் என தகவல் வெளியானது.

    இதனால் ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் சுமார் 30 பேர் காங்கிரஸ் ஆளும் சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு தனி விமானத்தில் கடந்த 30-ந்தேதி அழைத்து செல்லப்பட்டனர். அங்குள்ள நவ ராய்ப்பூர் சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே ஜார்க் கண்ட் சட்டசபையில் சிறப்பு கூட்டத்தை இன்று கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டுவர இருப்பதாக முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தெரிவித்து இருந்தார்.

    நம்பிக்கை வாக்கெடுப்பை யொட்டி சத்தீஷ்கரில் முகாமிட்டு இருந்த 30 எம்.எல்.ஏ.க்கள் ராய்ப்பூரில் இருந்து நேற்று மாலை தனி விமானத்தில் ராஞ்சி வந்தடைந்தனர்.

    இந்த நிலையில் ஜார்க்காண்ட் சட்டசபையில் சிறப்பு கூட்டம் இன்று காலை தொடங்கியது. முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார்.

    தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டினார். தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. அதன்பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையில் தீர்மானத்திற்கு ஆதரவாக 48 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர். பாஜக வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் சோரன் அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

    • துறைமுக எதிர்ப்பு மக்கள் இயக்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
    • மக்கள் ஒன்றிணைந்து சரக்கு பெட்டக மாற்றுமுனைய எதிர்ப்பு மக்கள் இயக்கம் தொடங்கினர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட் டத்தில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைப்பதற்கான முதல் கட்ட ஆய்வுப் பணிகள் கடந்த 2017-ம்ஆண்டில் தொடங்கப்பட்டது. இதை யடுத்து கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஒன்றி ணைந்து சரக்கு பெட்டக மாற்றுமுனைய எதிர்ப்பு மக்கள் இயக்கம் தொடங் கினர். இந்த இயக்கம் மூலம் துறைமுகத்திற்கு என நியமிக்கப்பட்ட அதிகாரி களோடு பலகட்டப் பேச்சு வார்த்தை, போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடைபெற்றது. பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் சரக்குப்பெட்டக மாற்று முனைய திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த பகுதியில் மீண்டும் இந்த திட்டத்துக்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோவளம், கீழமணக்குடி, வடக்குத்தாமரைகுளம் சரக்குப் பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு இயக்கம் மற்றும் இனையம் துறைமுக எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் கன்னியாகுமரி பெரியார் நகரில் அமைந்து உள்ள வட்டார முதல்வர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்தில் ஒருங்கிணைப் பாளர் பிரபா, துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, ஜனாப்மஸ்கலாம், ஸ்ரீதரன் மற்றும் நிர்வாகிகள் தாமஸ் பிராங்கோ, பெர்லின், காஸ்மிக், சுந்தர், சிலுவை இருதயம், வட்டார முதல்வர் ஜான்சன், அருட் பணியாளர்கள் கில்டஸ், கிஷோர், அன்பரசன், ஆன்டனி பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், சாகர்மாலா திட்டத்தின் மூலம் கன்னியா குமரி மாவட்டத்தில் கொண்டு வர முயன்ற சர்வ தேச சரக்குப்பெட்டக மாற்று முனையம் திட்டம் இல்லை என்னும் தீர்மானத்தை வருகிற சட்டமன்ற கூட்டம் தொடரில் நிறைவேற்ற வேண்டும், மக்களின் தொழில் வளங்களுக்கும், குடியிருப்புகளுக்கும், மக்களின் உரிமைக் கும், கன்னியா குமரி மாவட்டத்தின் வரலாற்று பாரம்பரியங்களுக்கும் பெரும் பாதிப்பு நேரிடும் என 2015 முதல் 2020 வரை மேற்கொண்ட துறைமுக எதிர்ப்பு போராட்டங்களில் போடப்பட்ட வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும். மேலும் ஒக்கிப்புயல் பேரிடர் காலத்தில் மக்களின் வாழ் வுரிமைக்காக போராடிய போராட்டங்களில் போடப் பட்ட வழக்குகளை ரத்து செய்யவேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக சரக்குப்பெட்டக மாற்றுமுனைய எதிர்ப்பு இயக்க செயலாளர் ஜே.பி.வெனிஸ் வரவேற்று பேசி னார்.

    • அரிசி, பருப்பு ஆகியவற்றின் விலை கணிசமாக உயர்ந்தது.
    • ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு நேரிலும், கடிதம் மூலமும் தகவல் தெரிவித்துள்ளோம்.

    திருவனந்தபுரம்:

    மத்திய அரசு சமீபத்தில் நடத்திய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அரிசி, பருப்பு மற்றும் உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்க முடிவு செய்தது.

    அதன்படி கடந்த 18-ந் தேதி முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்தது. இதன் காரணமாக அரிசி, பருப்பு ஆகியவற்றின் விலை கணிசமாக உயர்ந்தது.

    இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வராதநிலையில் இந்த விலை உயர்வு அவர்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும், எனவே இந்த வரி உயர்வை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் கேரள சட்டசபையில் நேற்று நிதி மந்திரி பாலகோபால் இது தொடர்பாக கூறியதாவது:-

    சாமானியர்களை பாதிக்கும் வரி உயர்வை மாநில அரசு எதிர்க்கிறது. இது தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு நேரிலும், கடிதம் மூலமும் தகவல் தெரிவித்துள்ளோம். முதல் மந்திரியும் இதுபற்றி பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    பொதுமக்களை பாதிக்கும் உணவு தானியங்களுக்கான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி உயர்வை கேரளாவில் அமல் படுத்தமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் பல ஊராட்சிகளில் போதிய நிதி ஆதாரம் வருவாய் இல்லாத காரணத்தால் ஊராட்சி அமைப்புகள் செயலற்று முடங்கி இருப்பதாக சட்டசபையில் முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் குற்றம் சாட்டி உள்ளார். #TNAssembly #TMAnbarasan
    சென்னை:

    சட்டசபையில் உள்ளாட்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியதாவது:-

    இட ஒதுக்கீட்டு முறையை சட்டப்படி கையாளாமல் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சித் தேர்தலை அவசரக் கோலத்தில் நடத்த அரசு முடிவு செய்தது. இதனை ஒழுங்குப்படுத்த தி.மு.க. நீதிமன்றத்தை அணுகியது.

    இட ஒதுக்கீட்டை மேற்கொண்டு உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்திட நீதிமன்றம் உத்தரவிட்டும் 1½ ஆண்டாக தமிழக அரசு தேர்தலை நடத்தாமல் காலந்தாழ்த்தி வருவதால் மத்திய அரசிடம் இருந்து ரூ. 4 ஆயிரம் கோடிக்கு மேல் நிதியை தமிழகம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அரசு தள்ளிப்போட்டு வருகிறது. எனவே இந்த தேர்தலை உடனே நடத்த வேண்டும்.

    உள்ளாட்சி மன்றங்களில் பொது சுகாதாரம், குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர தேவையான குறைந்தபட்ச பணியாளர்கள் கூட இல்லாத நிலை உள்ளது. இதனால் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் தவிக்கின்றன.

    உள்ளாட்சிகளில் 100-க்கும் மேற்பட்ட உதவி இயக்குனர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் ஒன்றிய அளவில் சிறப்பு அலுவலர்களின் பணியிடங்களும் காலியாக உள்ளன.

    மொத்தத்தில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத உள்ளாட்சி நிர்வாகம் தலையில்லா உடம்பாக காட்சி அளிக்கிறது.

    தமிழகத்தில் பல ஊராட்சிகளில் போதிய நிதி ஆதாரம் வருவாய் இல்லாத காரணத்தால் ஊராட்சி அமைப்புகள் செயலற்று முடங்கி உள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல், மின்சார கட்டணம் கட்ட முடியாமல் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க முடியாமலும் தத்தளிக்கிறது.

    சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நெம்மேலி, மீஞ்சூரில் தலா 100 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்டன.

    இப்போது நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர், போரூரில் 400 மில்லியன் லிட்டர் கொண்ட நிலையங்கள் அமைக்கப்படுவதாகவும், இது முடிவடைந்தால் அடுத்த 45 ஆண்டுக்கு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது என்று அமைச்சர் கூறி இருக்கிறார்.

    இது எப்போது தொடங்கப்படும்? டெண்டர் வைத்து விட்டீர்களா? இது எப்போது செயல்படும்?

    தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்த போது ஒரு ஊர் சிறக்க நூலகம் வேண்டும் என 12,524 கிராமங்களில் நூலகம் உருவாக்கினார். ஆனால் இப்போது அந்த நூலகங்கள் பாழ்பட்டு பழைய பொருட்கள் போடும் சேமிப்பு கிடங்காக காட்சி அளிக்கிறது. எனவே நூலகங்கள் மீண்டும் இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குன்றத்தூர், கூடுவாஞ்சேரி, மாங்காடு, சிட்லபாக்கம், மாடம்பாக்கம், திருநீர்மலை, பெருங்களத்தூர், பீர்க்கன் கரணை ஆகிய 8 பேரூராட்சிகளில் தினசரி சேரும் குப்பைகளை கொட்டுவதற்காக 2012-ல் கீரப்பாக்கத்தில் 20 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அங்குள்ள மக்கள் பாதுகாப்பு மதில் சுற்றுச்சுவர் அமைத்த பிறகே பணிகளை தொடங்க வேண்டும் என்றதால் இன்னும் அங்கு குப்பை சேகரிக்க முடியவில்லை.

    கலைஞர் ஆட்சியில் மகளிர் சுயஉதவி குழுக்களை எங்கள் தளபதி தொடங்கி மகளிருக்கு சுழல்நிதியை வழங்கினார். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் இந்த குழுக்கள் செயல்படாமல் முடங்கி உள்ளது. புதுவாழ்வு திட்டம் என்ற மகளிர் மேம்பாட்டு திட்டங்கள் இழுத்து மூடப்பட்டு பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் திட்டத்தில் மொத்த பணமும் கொடுத்து ஸ்கூட்டர் வாங்கி அதிகாரிகளிடம் காண்பித்த பின்னரே அரசு மானியம் விடுவிக்கப்படுகிறது. கையில் பணம் இல்லாத ஏழை பெண்கள் பயன்பெற முடியவில்லை.

    சென்னை புறநகர் பகுதியான மணிமங்கலம், சோமங்கலம், ஊரப்பாக்கம், ஆதனூர், கூடுவாஞ்சேரி ஏரிகள் தூர் வாரப்படாததால் மழைக் காலத்தில் உபரிநீர் அடையாற்றில் கலப்பதால் சென்னை வெள்ளத்தில் மிதக்கும் நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஏரிகளை தூர்வார வேண்டும்.

    தாம்பரம் - பல்லாவரம் உள்ளிட்ட நகராட்சிகளை ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும். 72 ஊராட்சிகளுடன் இயங்கும் உத்திரமேரூர் ஒன்றியத்தை உத்திரமேரூர், சாலவாக்கம் என 2 ஒன்றியமாக பிரிக்க வேண்டும்.

    குன்றத்தூர், நந்திவரம், கூடுவாஞ்சேரி, மாங்காடு, திருநீர்மலை, சிட்லபாக்கம், அய்யப்பன்தாங்கல் பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.

    ஆலந்தூர் தொகுதியில் 70 சதவீத சாலைகள் சீரமைக்கப்படாததால் குண்டும் குழியுமாக உள்ளது. இங்குள்ள 10 ஊராட்சிகளில் உள்ள சாலைகளை அமைத்திட போதிய நிதி ஒதுக்கி சீரமைத்து தர வேண்டும். ஆலந்தூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. உள்ளாட்சித் துறை அமைச்சர் கடந்த 2016-ம் ஆண்டு அறிவித்த திட்ட பணிகளை உடனே செயல்படுத்த வேண்டும். வேளச்சேரி - பரங்கிமலை வரை பறக்கும் ரெயில் திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    தமிழக அரசு சார்பில் ஏழைகளுக்கு இலவசமாக ஆடு, மாடுகள் வழங்கியதை தொடர்ந்து தற்போது, நாட்டுக் கோழி திட்டத்தை சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNAssembly #EdappadiPalanisamy
    சென்னை:

    சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை படித்து சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

    விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் கால்நடைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், சமூகப் பொருளாதார மாற்றங்களை உருவாக்குவதிலும், வேலை வாய்ப்புகளை தோற்றுவிப்பதிலும் முக்கியப் பங்காற்றி வரும் சத்துள்ள உணவான பாலின் உற்பத்தியைப் பெருக்கவும், பால் உற்பத்தியாளர்களுக்கு ஆதாயமான விலை கிடைக்கவும், நுகர்வோருக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்கள் தங்கு தடையின்றி நியாயமான விலையில் கிடைக்கவும் தேவையான ஆக்கபூர்வான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

    எனவே தான், கால்நடை மேம்பாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அதற்கான திட்டங்கள் அம்மாவின் வழியிலேயே, அம்மாவின் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, இத்துறையின் சார்பாக பின்வரும் அறிவிப்புகளை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    அனைத்து கால்நடை நிலையங்களுக்கும் சிறந்த கால்நடை மருத்துவ சேவைகளை வழங்க ஏதுவாக, சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளை அம்மாவின் அரசு அமைத்து வருகின்றது. அதன் அடிப்படையில் இதுவரை, 1,895 கால்நடை நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. நடப்பாண்டில், 30 கால்நடை நிலையங்களுக்கு 10 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

    கால்நடை வளர்ப்போருக்கும் விவசாயிகளுக்கும் மருத்துவம் மற்றும் ஈனியல் சம்பந்தமான நோய்களால் ஏற்படும் பொருளாதார இழப்பை தவிர்க்க, நவீன நோய் கண்டறியும் கருவிகளை கால்நடை நிலையங்களுக்கு வழங்குவது அவசியமாகும். அதனடிப்படையில், மாவட்டத்திற்கு ஒரு கால் நடை நிலையத்திற்கு என்ற அளவில், 32 கால்நடை நிலையங்களுக்கு தலா ஒரு நுண்ணலை நுண்ணாய்வுக் கருவியும், ஒரு கணினி மயமாக்கப்பட்ட ஊடுகதிர் கருவியும், 8 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

    தமிழ்நாட்டில் தற்போது 6 மாநகராட்சிகளில் கால்நடை பன்முக மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய நிலையங்களை பிற மாநகராட்சிகளிலும் ஏற்படுத்தும் நோக்கோடு திண்டுக்கல், தஞ்சாவூர், வேலூர், தூத்துக்குடி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாநகராட்சிகள் ஒவ்வொன்றிலும் ஒரு கால்நடை நிலையம் கால்நடை பன்முக மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். இந்த பன்முக மருத்துவமனைகளுக்கு அறுவை சிகிச்சைக் கூடம், உள்நோய் சிகிச்சை வசதி, நுண்ணலை நுண்ணாய்வுக் கருவி மற்றும் கணினி மயமாக்கப்பட்ட ஊடுகதிர் கருவி போன்ற வசதிகள் 6 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும். அவை 24 மணி நேரமும் செயல்படும்.

    தமிழ்நாட்டில் தற்போது 26 கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவுகள் 32 மாவட்டங்களை உள்ளடக்கி செயல்பட்டு வருகின்றன. மாநிலத்தில் நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக, மேலும் 2 புதிய கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவுகள், 2 கோடி ரூபாய் செலவில் நாமக்கல் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தோற்றுவிக்கப்படும்.

    கோமாரி நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் மூலம் மாநிலத்தின் 32 மாவட்டங்களில் 93.89 லட்சம் மாட்டினங்களுக்கு 15வது மற்றும் 16வது சுற்று தடுப்பூசிப்பணி முறையே செப்டம்பர், 2018 மற்றும் மார்ச், 2019 ஆகிய மாதங்களில் 24 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

    தமிழ்நாட்டில் நாட்டுக் கோழி முட்டை மற்றும் இறைச்சியின் தேவை அதிகரித்துள்ளதால், புழக்கடை கோழி வளர்ப்புத் தொழில் பெருமளவில் வெற்றியடைந்துள்ளது. எனவே, புழக்கடை கோழி வளர்ப்பை மேலும் ஊக்குவிக்க சென்னை நீங்கலாக, அனைத்து மாவட்டங்களிலும் 38,500 பெண் பயனாளிகளுக்கு, தலா 50 கோழிகள், 25 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

    திருநெல்வேலி மற்றும் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் தற்போது 280 மாணவர்கள் பயிலுகிறார்கள். இம்மாணவர்களுக்கு கூடுதல் கட்டமைப்பு வசதிகளாக கூடுதல் வகுப்பறைகள், தேர்வு அறைகள், விடுதி வசதிகள் மற்றும் எச்.டி. மின்சக்தி ஆகிய பணிகள் ஒவ்வொரு கல்லூரிக்கும், தலா 14 கோடி ரூபாய் வீதம் 28 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #TNAssembly  #EdappadiPalanisamy
    டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்காக விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச வயது வரம்பை உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். #TNAssembly #TNPSC
    சென்னை:

    சென்னையில் சட்டசபை கூட்டத்தின் போது, 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிக்கையில்.,

    தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில்:-

    டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, 1-ஏ மற்றும் 1-பி ஆகிய தேர்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வயது உச்சவரம்பை 35-லிருந்து 37 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி., பி.சி ஆகிய பிரிவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வயது உச்சவரம்பு 35-லிருந்து 37 ஆகவும் இட ஒதுக்கீடு இல்லாத பிற பிரிவினருக்கு 30-லிருந்து 32 ஆகவும் வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

    41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்படும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மேலும் 264 பாடப்பிரிவுகள் புதிதாக உருவாக்கப்படும். ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

    ஆகிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
    ×