search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "age limit"

    • விழுப்புரத்தில் 25-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு இரத்து செய்யப்படமாட்டாது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 25.08.2022 வியாழக்கிழமை அன்று சிறிய அளவிலான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடை பெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் டாடா எலக்ட்ரானிக்ஸ் எனும் தனியார்துறை வேலைவாய்ப்பு நிறுவனம் கலந்து கொண்டு 3,000-ற்கும் மேற்பட்ட பணி காலியிடங்களை நிரப்ப உள்ளார்கள். 2021 மற்றும் 2022 ஆம் கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண் வேலைநாடுநர்கள். வேலைநாடுநர்களின் வயது வரம்பு 18 முதல் 20 -க்குள் இருக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத் தைச் சார்ந்த மேற்குறிப்பி ட்ட தகுதிகளையுடைய பெண் வேலைநாடுநர்கள் 25.08.2022 அன்று காலை 9.00 மணியளவில் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெறலாம்.

    முகாமில் தேர்வு செய்யப்படும் வேலைநாடு நர்களுக்கு 3 மாதகால பயிற்சி, மாத சம்பளமாக ரூ.15,000/-, உணவு, தங்குமிடம், போக்குவரத்து வசதி மற்றும் உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் இந்நிறுவனத்தால் செய்து தரப்படும். இதற்காக எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படமாட்டது. இம்முகாமில் பணியாணை பெறும் எந்தவொரு மனுதாரருக்கும் அவரது வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு இரத்து செய்யப் படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தனியார்துறையில் பணிவாய்ப்பினை பெற விரும்பும் வேலைநாடு நர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள் மற்றும் சுயவிவர குறிப்புகளுடன் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்து உள்ளார்.

    டி.என்.பி.எஸ்.சி. முதல்தொகுதி தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக அரசு உயர்த்தவேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். #TNPSC
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் முதல் தொகுதித் தேர்வுக்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 30 வயதிலிருந்து 32 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 35 வயதிலிருந்து 37 வயதாகவும் உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. இது ஓரளவு வரவேற்கத்தக்க நடவடிக்கை தான் என்றாலும் கூட போட்டித்தேர்வர்களுக்கு முழுமையான பயனை அளிக்காத நடவடிக்கையாகும். தமிழகத்தில் முதல் தொகுதி தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40-லிருந்து 35 ஆக குறைக்கப்பட்ட நிலையில் அதை 37 ஆக மட்டும் உயர்த்துவதால் எந்த பயனும் ஏற்படாது. எனவே முதல்தொகுதி தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக அரசு உயர்த்தவேண்டும்.

    தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்துக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரை சூட்டப்போவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரின் பெயரை கல்வி நிலையத்துக்கு சூட்டுவது ஏற்கத்தக்கதல்ல. எனவே மீன்வள பல்கலைக்கழகத்துக்கு இப்போதுள்ள பெயரே நீடிக்கும் என தமிழக அரசு அறிவிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதேபோல இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குரூப்-1 தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வயது வரம்பை உயர்த்தியிருப்பதாக முதல்-அமைச்சர் அறிவித்திருக்கிறார். இடஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு 35-ல் இருந்து 37 ஆகவும், இதர பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 30-லிருந்து 32 ஆகவும் வயது உச்சவரம்பினை உயர்த்தியுள்ள தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.  #TNPSC #tamilnews 
    டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்காக விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச வயது வரம்பை உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். #TNAssembly #TNPSC
    சென்னை:

    சென்னையில் சட்டசபை கூட்டத்தின் போது, 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிக்கையில்.,

    தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில்:-

    டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, 1-ஏ மற்றும் 1-பி ஆகிய தேர்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வயது உச்சவரம்பை 35-லிருந்து 37 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி., பி.சி ஆகிய பிரிவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வயது உச்சவரம்பு 35-லிருந்து 37 ஆகவும் இட ஒதுக்கீடு இல்லாத பிற பிரிவினருக்கு 30-லிருந்து 32 ஆகவும் வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

    41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்படும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மேலும் 264 பாடப்பிரிவுகள் புதிதாக உருவாக்கப்படும். ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

    ஆகிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
    ×