search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோரிக்கை மனு"

    • குறை தீர்க்கும் முகாமில் கருமாணிக்கம் எம்.எல்.ஏ. கோரிக்கை மனுக்களை பெற்றார்.
    • ஜமாத் தலைவர்கள், கிராமத் தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மனுகளை அளித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம், பனைக்குளம், புதுவலசை, தேர்போகி ஆகிய ஊராட்சிகளில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் திருவாடானை சட்ட மன்ற உறுப்பினர் கருமாணிக்கம் தலைமையில் நடந்தது. தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    பெறப்பட்ட மனுக்களை விரைவாக பரிசீலனை செய்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் நான்கு ஊராட்சிகளை சேர்ந்த ஜமாத் தலைவர்கள், கிராமத் தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மனுகளை அளித்தனர். காங்கிரஸ் கட்சி பொறுப்பு குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன், தி.மு.க. மத்தியமண்டபம் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், துணைச் செயலாளர் பவுசியா பானு, காங்கிரஸ் கட்சி சிறு பான்மை மாவட்ட தலைவர் வாணி இப்ராஹிம், துணைத் தலைவர் கணிப் கான், மகிலா காங்கிரஸ் தலைவி ராமலட்சுமி.

    திருவாடானை சட்ட மன்றத் தொகுதி மகிலா காங்கிரஸ் தலைவி ஜீனத்து நிஷா, மாவட்ட மனித உரிமை துறை தலைவர் அபு தாஹீர். காங்கிரஸ் வட்டார தலைவர்கள் காருகுடி சேகர், அன்வர் அலி நத்தர், சேது பாண்டி, நகர் தலைவர் கோபி, மாவட்ட நிர்வாகிகள் கருப்பையா, சேதுபதி, ஆறுமுகம், இளைஞர் அணி நவாஸ், அல் அமீன், முகமது பயாஸ், தாஜுதீன், சந்தானம், சேகு சபியுல்லா, முருகேசன், அன்வர் அலி, முஜீப் ரகுமான், ரவி, பஞ்சாட்சரம், மண்டப ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மதுரை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும்.
    • கமிஷனரிடம், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ., கமிஷனர் பிரவீன்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாநகராட்சி 62-வது வார்டு முதல் 69-வது வார்டு வரை கழிவுநீர் பிரச்சினை உள்ளது. முறையாக பராமரிக்கா ததால் மேற்கண்ட வார்டுகளில் உள்ள சாலை மற்றும் தெருக்களில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதே போல் 72-வது வார்டான பைக்காரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.

    எனவே முத்துப்பட்டியில் உள்ள கழிவுநீரேற்று நிலையத்தை மேம்படுத்தி புனரமைக்க வேண்டும். அதிக விசைத்திறன் கொண்ட மோட்டார்களை பயன்படுத்தி புதிய பம்பிங் ஸ்டேசன் அமைக்க வேண்டும்.

    காளவாசல் முதல் சம்மட்டிபுரம் பகுதிகளில் கழிவுநீர் பிரச்சினையை சரிசெய்ய வேண்டும். மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களுக்கும் நவீன கழிவுநீர் அகற்றும் வாகனத்தை வாங்க வேண்டும். இதனால் பாதாள சாக்கடை அடைப்பு பிரச்சினை குறையும்.

    கடந்த 2 ஆண்டுகளில் மதுரை மாநகராட்சியில் ரூ.717.10 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப் பட்டு உள்ளதாக நகராட்சி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் விபரங்களை வழங்க வேண்டும். மதுரை மாநகராட்சியில் சாலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சாலைகளை செப்பனிட வேண்டும்.

    மாநகராட்சியில் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இருளில் மூழ்கும் நிலை உள்ளது. எனவே தெரு விளக்குகளை பராமரித்து உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறையால் குப்பைகள் மலைபோல் தேங்குகிறது. எனவே உரிய பணியாளர்களை நியமித்து குப்பையில்லா நகரமாக மாற்ற வேண்டும்.

    வைகை ஆற்றில் ஆகாய தாமரையை அகற்ற வேண்டும். பனையூர் வாய்க்காலை சீரமைக்க வேண்டும். மாரியம்மன் தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலக்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும். தமுக்கத்தில் உள்ள வளாக கட்டிடத்திற்கு வாடகை பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே அதனை குறைக்க வேண்டும். மதுரை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை போக்கால அடிப்படையில் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • குப்பன்குளம் பகுதி யில் சாலை ஓரத்தில் வீடு கட்டி 7 குடும்பத்தினர்கள் வசித்து வந்தனர்.
    • தற்போது வீடு கள் இடித்த பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப் புலியூர் குப்பன்குளம் பகுதி யில் சாலை ஓரத்தில் வீடு கட்டி 7 குடும்பத்தினர்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில் ஆக்கிர மித்து வீடு கட்டி இருப்பதை அகற்ற வேண்டும் என நீதி மன்ற உத்தரவின் பேரில் மாநகராட்சி நிர்வாகம் நேற்று முன்தினம் பொக் லைன் எந்திரம் மூலம் வீடு களை இடித்து காலி செய்த னர். இந்த நிலை யில் இன்று காலை பாதிக்கப் பட்ட மக்கள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் தஷ்ணா, விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி வக்கீல் அறிவுடை நம்பி, அ.தி.மு.க. நாக ராஜன் ஆகியோர் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த னர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் திருப்பாதிரிப் புலியூர் குப்பன்குளம் சாலை ஓரத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தோம். தற்போது மாநகராட்சி சார்பில் நாங்கள் இருந்து வந்த வீடுகளை இடித்து காலி செய்தனர். இந்த நிலையில் எங்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பில் மாற்று இடம் வழங்கப்படும் என மாநகராட்சி சார்பில் உத்தரவாதம் அளிக்கப் பட்டது. தற்போது வீடு கள் இடித்த பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் எங்களுக்கு வேறு எங்கும் இடம் இல்லாததால் அதே பகுதியில் வசித்து வரக்கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். ஆகையால் எங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • நூற்றுக்கணக்கான பயணிகள் பல ஊர்களில் இருந்து வந்து செல்கின்றனர்.
    • சுமார் 200 ஏக்கர் நிலம் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


    நாகர்கோவில், ஜூலை.3-

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கி ழமையான இன்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. கலெக்டர் ஸ்ரீதர் மனுக்களை பெற்றுக்கொண்டார். பூதப்பாண்டி பேரூராட்சி பகுதியை சேர்ந்த பொது மக்கள் சிலர் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திட்டுவிளை பஸ் நிலையத்தில் தினமும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், முதியவர்கள், வியாபாரிகள் நூற்றுக்கணக்கான பயணிகள் பல ஊர்களில் இருந்து வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் பஸ் வந்து நிற்கும் இடத்தின் அருகே பயணிகள் நிழற்கூடை இல்லாமல் தூரத்தில் இருப்பதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

    எனவே மக்களின் நலன் கருதி பஸ் நிறுத்தம் இடத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைத்து தர வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க குமரி மாவட்ட கிளை துணை தலைவர் நாகராஜன் தலைமையில் விவசாயிகள் ரவி, அழகேசன் உள்பட பலர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கன்னி பூ சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதியன்று அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் கால்வாய்கள் தூர்வாரப்படாததால், தோவாளை சானல் கடைமடை நிலப்பாறை கால்வாய் வாலசவுந்தரி குளத்திற்கு போதுமான அளவு தண்ணீர் வந்து சேரவில்லை. இந்த குளம் நிரம்பினால் தான் அருகே உள்ள மற்ற குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும். தற்போது வாலசவுந்தரி குளத்திற்கு போதுமான தண்ணீர் இல்லாததினால் சுமார் 200 ஏக்கர் நிலம் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே தோவாளை கால்வாயில் அதிக தண்ணீர் விட்டு மற்ற குளங்களை நிரப்பி விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தது. கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தவர்களை போலீசார் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதித்தனர். அவர்களின் உடமைகள் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. காரில் வந்தவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    • சட்டமன்ற உறுதிமொழி குழுவிடம் பா.ம.க. கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
    • முன்னதாக எம்.எல்.ஏ. அருளுக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் வருகை தந்துள்ளனர். அந்தக் குழுவில் உள்ள சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளிடம் ராமநாதபுரம் மாவட்ட பா.ம.க. மாவட்ட செயலாளர் தேனிசை. அக்கீம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் ராமநாதபுரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை எளிதாக்க வேண்டும்.

    ராமநாதபுரம் நகர் வெளியே புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, தலைவர் காளிமுத்து, துணைத்தலைவர் முனியசாமி, ராமநாதபுரம் நகர செயலாளர் பாலா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக எம்.எல்.ஏ. அருளுக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை முதல் ஜமாபந்தி தொடங்கி நடை பெற உள்ளது.
    • பொது மக்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய் தீர்வாய அலுவலரிடம் வழங்க அனுமதிக்கப்படுவார்கள்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களிலும் 1432-ம் பசலிக்கான ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் நாளை (புதன்கிழமை) தொடங்கி வருகிற 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது. வருவாய் தீர்வாயம் நடத்த அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற உள்ள வருவாய் தீர்வாயம் பற்றிய விவரம் வருமாறு:-

    தரங்கம்பாடி தாலுகாவில் வருவாய் தீர்வாய அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் நாளை முதல் 16-ந் தேதி வரை அங்கு ஜமாபந்தி நடத்துகிறார்.

    குத்தாலம் தாலுகாவிற்கு வருவாய் தீர்வாய அலுவலராக, மாவட்ட வழங்கல் அலுவலர் நாளை முதல் 15-ந் தேதி வரையும், மயிலாடுதுறை தாலுகாவிற்கு வருவாய் தீர்வாய அலுவலராக மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் நாளை முதல் 15-ந் தேதி வரையும், சீர்காழி தாலுகாவிற்கு வருவாய் தீர்வாய அலுவலராக சீர்காழி வருவாய் கோட்ட அலுவலர் நாளை முதல் 22-ந் தேதி வரையும் ஜமாபந்தி நடத்த உள்ளனர்.

    வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்த்து சமூக இடைவெளி விட்டு வரிசையில் சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய் தீர்வாய அலுவலரிடம் வழங்க அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலையிலிருந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வந்தனர்.
    • ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலையிலிருந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வந்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சுருக்கு வலை மீன்பிடி தொழிலாளர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டன. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: -

    கடலூர் மாவட்டத்தில் சுருக்கு வலை பயன்படுத்தி மீன் பிடிக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அனுமதி அளிக்க வேண்டி மாவட்ட நிர்வாகம், மீன்வளத்துறை அதிகாரிகள், முதல்-அமைச்சர் தனிப்பிரிவிற்கு தொடர்ந்து மனு அளித்து வந்துள்ளோம். ஆனால் இதுவரை எங்களுக்கு எந்த விதமான தீர்வும் ஏற்படவில்லை. ஆகையால் எங்களுடைய வல்லம் மற்றும் விசைப்படகுகளை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மீன்பிடி தடைக்காலம் முடிந்து தொழில் செய்வதற்கு அனுமதி வழங்கி ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • காமாட்சிபுரம், தம்மரெட்டி பாளையம் ஆகிய ஊராட்சி களின் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.
    • ஐகோர்ட்டு உத்தரவிட்ட தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்,

    சென்னிமலை, 

    கீழ்பவானி பாசன விவசாயிகள் கூட்டம் சென்னிமலை அடுத்துள்ள ஒரத்துப்பாளையம் அணை அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒரத்துப்பா ளையம் பழனிசாமி தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு இயற்கை வாழ்வுரிமை இயக்க அமைப்பாளர் மே.கு.பொடாரன் மற்றும் திருப்பூர் மாவட்டம், காங்கயம் ஒன்றியத்தை சேர்ந்த மறவபாளையம், காமாட்சிபுரம், தம்மரெட்டி பாளையம் ஆகிய ஊராட்சி களின் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், கீழ்பவானி விவசாயிகள் சங்க தலைவர் செ.நல்லசாமி, தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் செங்கோ ட்டையன், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மு.ரவி ஆகியோர் கலந்து கொண்டு கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக பேசினார்கள்.

    பின்னர், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பது குறித்து ஐகோர்ட்டு உத்தரவிட்ட தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும், அரசாணை எண் 276-ல் திருத்தம் செய்து சட்ட பாதுகாப்பு வழங்குவதுடன் பழைய கட்டுமான பணிகளை மட்டுமே செய்ய வேண்டும் என்றும், புதிய கட்டுமான பணிகளுக்கு எதிராக அறவழி போராட்டம் நடத்துவது என்றும்,

    பவானிசாகர் அணை முதல் கடைமடையான மங்களப்பட்டி வரை குடிநீரை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து கீழ் பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது என தனித்தனியே மனு எழுதி வருகிற 22-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று காலை 10 மணிக்கு ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    இந்தக் கூட்டத்தில் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாசனப்பகுதி விவசாயிகளான ஆண்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் சொக்கநாதபாளையம் கலைவாணி பாஸ்கர் நன்றி கூறினார். 

    • பத்திரப்பதிவு தடையை நீக்கிட வேண்டும் என வழியுறுத்தி கோரிக்கை மனு வழங்கினர்.
    • தாசில்தார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதார்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பை பேரூராட்சி பகுதி யில் பழைய புல எண்கள் பத்திரப்பதிவு தடை செய்யப்பட்டுள்ளதை நீக்க கோரி ஊர் பொது மக்கள் சார்பாக நில மீட்பு குழு அமைத்து 100-க்கும் மேற்பட்டோர் பவானி தாசில்தார் ரவிச்சந்திரனிடம் தங்கள் பகுதியில் வக்பு வாரியத்திற்கு சொந்தம் என பத்திர பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    இதனால் தங்கள் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜம்பையில் 20 ஏக்கர் நிலத்தில் 93 சென்ட் போக மீதி உள்ள நிலத்தின் பத்திரப்பதிவு தடையை நீக்கிட வேண்டும் என வழியுறுத்தி கோரிக்கை மனு வழங்கினர்.

    இதனையடுத்து கோரி க்கை மனு பெற்று க்கொ ண்ட தாசில்தார் 3 மாதத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து ள்ளதாக தெரிவித்தனர்.

    தொடர்ந்து பவானி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று சார் பதிவாளரிடம் கோரி க்கை மனு ஒன்று வழங்கினர்.

    • தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கவர்னரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
    • கவர்னர் ரவி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பரமக்குடி யில் உள்ள தியாகி இமானு வேல்சேகரன் நினைவிடத் தில் மலர் அஞ்சலி செலுத்த வருகை தந்தார். அவரை தேவேந்திர பண்பாட்டுக் கழக தலைவர் பரம்பை பாலா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    இதனை தொடர்ந்து இமானுவேல் சேகரின் மகள் சுந்தரி பிரபா ராணி பேரன்கள் ரமேஷ், கோம கன், சக்கரவர்த்தி, சந்துரு, பேத்தி லதா ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர்.

    இதனை தொடர்ந்து கவர்னர் ரவி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னார். பின்னர் தேவேந்திர பண்பாட்டுக் கழகம், இமானுவேல் சேகரன் குடும்பத்தினர் சார்பாக தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை பட்டியல் இனத்தில் இருந்து வெளி யேற்ற வேண்டும், இமானு வேல் சேகரன் நினை விடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும், அவரது பிறந்தநாளை அரசு விழா வாக அறிவிக்க வேண்டும், ஓட்டப்பாலம் ரவுண்டானா வில் இமானுவேல் சேகரன் திருவுருவச் சிலை அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து முதுகுளத்தூர் தாலுகா புல்வாய்குளம் கிராமம் சார்பாகவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்ட கவுரவ விரிவுரையாளர்கள் சார்பாக தமிழகத்தில் பணி யாற்றும் 6000-க்கும் மேற்பட்ட கவுரவ விரி வுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தேவேந்திர பண்பாட்டு கழக செயலாளர் புண்ணிய மூர்த்தி, பொருளாளர் முருகேசன், பா.ஜனதா நிர்வாகி குமார், வழக்கறிஞர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பல முறை மனு பல்வேறு அலுவலகங்களில் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
    • எங்கள் கோரிக்கை நிறை வேற்றப்படாவிட்டால், நாங்கள் சாலைமறியலில் ஈடுபடுவோம்

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா பழைய மத்திகிரி, 44-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில், 60-க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று ஓசூர் சப்- கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, சப்- கலெக்டர் சரண்யாவிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர்.

    அதில், ஏழைகளாகிய நாங்கள் வீடுகளில் வேலை செய்து ,நீண்ட காலமாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். தற்போது எங்கள் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

    ஆனால், இதனை வசதி படைத்தவர்களுக்கே வழங்கப்படுவதாக அறிந்தோம். ஏழைகளாகிய எங்களின் கோரிக்கையை பரிசீலித்து ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

    இவ்வாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    பின்னர், அங்கு வந்திருந்த பெண்களின் பிரதிநிதிகள் நிருபர்களிடம் கூறுகையில், இலவச வீட்டு மனை பட்டாவிற்காக, நாங்கள் பல முறை மனு பல்வேறு அலுவலகங்களில் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எங்கள் கோரிக்கை நிறை வேற்றப்படாவிட்டால், நாங்கள் சாலைமறியலில் ஈடுபடுவோம்". இவ்வாறு அவர்கள் நிருபர்களிடம் கூறினர்.

    இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு, சப்- கலெக்டர் அலுவலகத்திற்கு பெண்கள் திரண்டு வந்ததால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • திருச்சி மாநகரில் பாதாள சாக்கடை பணிகளால் பல இடங்களில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி மேயரிடம் காங்கிரசார் மனு அளித்தனர்
    • சிறு மழை பெய்தால் கூட பாதசாரிகள், வாகனங்கள் முற்றிலும் செல்ல முடியாத நிலைக்கு சாலைகள் பாழ்பட்டுள்ளன

    திருச்சி:

    திருச்சியில் புதை வடிகால் (பாதாள சாக்கடை) திட்டப்பணிகளுக்கு தோண்டப்பட்டு சீர் செய்யப்படாத சாலைகளை உடனை சீரமைக்கக் கோரி, காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட துணைத் தலைவர் சார்லஸ், மேயருக்கு அளித்துள்ள கோரிக்கை ம னு குறித்து அவர் மேலும் கூறியதாவது:

    திருச்சி, மாநகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக புதை வடிகால் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை ஒப்பந்த நிறுவனத்தினர் சரியாக மூடாததால் பல இடங்களில் சாலைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பள்ளம் மேடுகளாக காட்சியளிக்கின்றன.

    சிறு மழை பெய்தால் கூட பாதசாரிகள், வாகனங்கள் முற்றிலும் செல்ல முடியாத நிலைக்கு சாலைகள் பாழ்பட்டுள்ளன. விரைவில் அவை சரிசெய்யப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து வந்தாலும், பணிகளை மேற்கொண்டுள்ள ஒப்பந்த நிறுவனங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக தெரியவில்லை.

    எனவே, இனியாவது போர்க்கால அடிப்படையில், மழை காலம் தொடங்கும் முன்பாக சாலைகளை செப்பனிட வேண்டும்.

    மேலும் மாநகராட்சி முழுவதும் புதிதாக தார்ச்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு மேயரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

    உடன் மாவட்ட பொதுச்செயலாளர் பூக்கடை பன்னீர்செல்வம், வார்டு தலைவர்கள் மலர் வெங்கடேஷ், காமராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




    ×