search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறை தீர்க்கும் முகாம்
    X

    கருமாணிக்கம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட போது எடுத்த படம்.

    குறை தீர்க்கும் முகாம்

    • குறை தீர்க்கும் முகாமில் கருமாணிக்கம் எம்.எல்.ஏ. கோரிக்கை மனுக்களை பெற்றார்.
    • ஜமாத் தலைவர்கள், கிராமத் தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மனுகளை அளித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம், பனைக்குளம், புதுவலசை, தேர்போகி ஆகிய ஊராட்சிகளில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் திருவாடானை சட்ட மன்ற உறுப்பினர் கருமாணிக்கம் தலைமையில் நடந்தது. தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    பெறப்பட்ட மனுக்களை விரைவாக பரிசீலனை செய்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் நான்கு ஊராட்சிகளை சேர்ந்த ஜமாத் தலைவர்கள், கிராமத் தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மனுகளை அளித்தனர். காங்கிரஸ் கட்சி பொறுப்பு குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன், தி.மு.க. மத்தியமண்டபம் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், துணைச் செயலாளர் பவுசியா பானு, காங்கிரஸ் கட்சி சிறு பான்மை மாவட்ட தலைவர் வாணி இப்ராஹிம், துணைத் தலைவர் கணிப் கான், மகிலா காங்கிரஸ் தலைவி ராமலட்சுமி.

    திருவாடானை சட்ட மன்றத் தொகுதி மகிலா காங்கிரஸ் தலைவி ஜீனத்து நிஷா, மாவட்ட மனித உரிமை துறை தலைவர் அபு தாஹீர். காங்கிரஸ் வட்டார தலைவர்கள் காருகுடி சேகர், அன்வர் அலி நத்தர், சேது பாண்டி, நகர் தலைவர் கோபி, மாவட்ட நிர்வாகிகள் கருப்பையா, சேதுபதி, ஆறுமுகம், இளைஞர் அணி நவாஸ், அல் அமீன், முகமது பயாஸ், தாஜுதீன், சந்தானம், சேகு சபியுல்லா, முருகேசன், அன்வர் அலி, முஜீப் ரகுமான், ரவி, பஞ்சாட்சரம், மண்டப ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×