search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழ்வாதாரம்"

    • ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் வருமானத்தை இழந்து, வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்படுகின்றனர்.
    • ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களும் அவதியடைந்தனர்.

    கடலூர்:

    கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு 50 ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாதாரண ஆட்டோக்களை (அபே ஆட்டோ) இயக்குபவர்களும், ஷேர் ஆட்டோக்கள் செல்லும் வழித்தடங்களிலே தங்கள் ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றி செல்கி ன்றனர். இதனால் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் வருமானத்தை இழந்து, வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட ஷேர் ஆட்டோ டிரை வர்கள் இன்று தங்கள் ஆட்டோ க்களை இயக்காமல், பஸ் நிலையம் அருகில் சாலையோரம் ஆட்டோ க்களை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகள் சம்பந்தமாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் மனு அளித்தனர். ஷேர் ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களும் அவதியடைந்தனர். இந்த சம்பவத்தால் கடலூர் பஸ் நிலையப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வங்கிகளின் உதவியுடன் குழுவினருக்கு, சுயதொழில் துவங்குவதற்கான கடனுதவியும் வழங்கப்பட்டு வருகிறது.
    • மகளிர் குழுவினருக்கு, பல வழிகளிலும்,வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் உள்ளன.

    உடுமலை:

    தமிழ்நாட்டில் ஆதரவற்ற, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களின் வாழ்வாதாரத்துக்கான அடிப்படையை வழி நடத்த, மகளிர் குழுக்கள், அந்தந்த பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் திட்டத்தின் தொகுப்பு வழிநடத்துநர்கள் வாயிலாக, குழுவினருக்கு, அவர்களின் கல்வித்தகுதி அடிப்படையில், வேலைவாய்ப்பு பயிற்சிகளை வழங்குகின்றனர். மேலும் வங்கிகளின் உதவியுடன் குழுவினருக்கு, சுயதொழில் துவங்குவதற்கான கடனுதவியும் வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் குழுவினருக்கு, பல வழிகளிலும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் உள்ளன. இருப்பினும், அதில், 50 சதவீத பெண்கள் மட்டுமே பயன்பெறுகின்றனர். கல்வித்தகுதி இல்லாத பெண்களுக்கு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சிகளை திட்டம் வழங்குகிறது. மகளிர் குழுவினருக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், வருமானம் ஈட்டும் வகையில், அவர்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்தவும், மாவட்ட அளவில், அங்காடிகள் துவக்கப்பட்டுள்ளன. அங்காடிகளில், 10 சதவீதம் மட்டுமே இத்தகைய பொருட்கள் விற்பனை ஆகின்றன. கைவினைப் பொருட்கள் தயாரிப்பும், வெகுவாக குறைந்துவிட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாற்றுப்பொருளாக இருக்கும், பாக்குமட்டை, பனை ஓலை, மூங்கில் கூடைகள், உள்ளிட்ட பல்வேறு வகைகளிலிருந்து, பயன்பாட்டு பொருட்கள் தயாரிப்பதற்கு, மகளிர் குழுக்களை அரசு ஊக்குவிக்க எதிர்பார்க்கின்றனர். இதன் வாயிலாக, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கும், குழுவினரின் வாழ்வாரத்தை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மகளிர் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரார்த்தனையை தவிர வேறு எதுவும் விதியை மாற்றாது.
    • தங்களைப் படைத்த இறைவனிடமே துஆ செய்பவர்களாக இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மூன்று விஷயங்கள் நிம்மதி, மகிழ்ச்சியை தருகின்றன. அவை ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் குறைவில்லா வாழ்வாதாரம். இம்மூன்றும் ஒருவருக்கு அமைந்து விட்டால் அவரை விட பாக்கியசாலி வேறு எவரும் இல்லை.

    கரு, சதைத்துண்டாக கருவறையில் இருக்கும் நிலையில் அதன் தவணை (ஆயுள்), வாழ்வாதாரம், செயல்பாடுகள், நற்பேறு பெற்றவரா? அல்லது துர்பாக்கியசாலியா? ஆகிய நான்கு விஷயங்கள் அல்லாஹ்வின் ஆணைப்படி, வானவர் ஒருவரைக் கொண்டு எழுதப்படுகிறது. பின்னர், கருவில் உயிர் ஊதப்படுகிறது. மனிதன் மட்டுமல்லாமல் உலகில் உள்ள அத்தனை படைப்புகளுக்குமான அனைத்து விஷயங்களும் அவை பிறப்பதற்கு முன்பே நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டது.

    இதுகுறித்து திருக்குர்ஆன் (57:22) இவ்வாறு குறிப்பிடுகிறது. `பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்த சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை. நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதே ஆகும்'.

    அதற்காக, `என்னுடைய விதிதான் எழுதப்பட்டுவிட்டதே' என்று மனோ இச்சையின் படி நடந்து கொள்ளுதல் கூடாது. விதியின் மீது பழியைப் போடாமல், நம் உழைப்பு மற்றும் முயற்சியின் மூலமாகவும், பிரார்த்தனைகளின் மூலமாகவும் நம்முடைய வாழ்வாதாரத்தையும், ஆரோக்கியத்தையும் இறையருளால் மேம்படுத்தலாம்.

    `(நபியே) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும' என்று திருக்குர்ஆன் (2:186) விளக்குகிறது.

    `பிரார்த்தனையை தவிர வேறு எதுவும் விதியை மாற்றாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    ஒரு முறை சுலைமான் (அலை) அவர்களிடம் ஒருவர் வந்து, `அல்லாஹ் உங்களுக்கு பறவைகள் மற்றும் உயிரினங்களின் மொழிகளைக் கற்றுக்கொடுத்திருக்கிறான். எனக்கு அவற்றுள் ஏதாவது ஒரு உயிரினத்தின் மொழியைக் கற்றுக்கொடுங்கள்' என்று கேட்கிறார்.

    `எனக்கு அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை' என்று சுலைமான் (அலை) கூறியும், அந்த மனிதர் வற்புறுத்தவே, `சரி, எந்த உயிரினத்தின் மொழியைக் கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?' என்று கேட்கிறார்கள். `எங்கள் வீட்டில் இரண்டு பூனைகள் உள்ளன, எனவே பூனைகளின் மொழியை கற்றுக்கொள்ள விரும்புகிறேன்' என்று அந்த மனிதர் சொல்கிறார்.

    பூனைகளின் மொழியை கற்றுக்கொண்டு வீடு திரும்பும் அவர், அன்றிரவு இரு பூனைகளும் பேசிக்கொள்வதை கேட்கிறார். ஒரு பூனை, மற்றொரு பூனையிடம், `நான் பசியால் செத்து விடுவேன் போல் இருக்கிறது, உன்னிடம் ஏதாவது உணவு இருந்தால் கொடு' என்று கேட்கிறது. அதற்கு அந்த பூனை `கொஞ்சம் பொறு, நம் எஜமான் வளர்க்கும் சேவல் நாளை செத்து விடும், அதை உண்டு பிழைத்துக்கொள்ளலாம்' என்றது.

    இதைக்கேட்ட அந்த மனிதர், அதிகாலையிலேயே தன் சேவலை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்று விடுகிறார். சேவலை காணாமல் ஏமாற்றமடைந்த பூனை, மற்ற பூனையிடம், `நம் எஜமான், செத்த சேவலை ஏதோ ஒரு இடத்தில் புதைத்து விட்டார் போலும்' என்றது. அதற்கு மற்ற பூனை, எஜமான் சேவலை விற்று விட்டதைக் கூறுகிறது.

    மறுநாளும் அதே பூனை `பசிக்கிறது' என்று மற்ற பூனையிடம் கேட்கிறது. `கவலைப்படாதே, எஜமான் வளர்க்கும் ஆடு நாளை செத்து விடும், அதை உண்டு பிழைத்துக் கொள்ளலாம்' என்று மற்ற பூனை பதில் சொல்கிறது. அன்றும் பூனைகள் பேசுவதைக் கேட்ட அந்த மனிதர், அடுத்த நாள், அதிகாலையில் ஆட்டை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்று விடுகிறார். பூனைகளுக்கு இம்முறையும் ஏமாற்றமாகி விடுகிறது.

    அதற்கு அடுத்த நாள், பசிக்கிறது என்று சொன்ன பூனையிடம், `நாளை நம் எஜமான் செத்து விடுவார், அதை உண்டு பிழைத்துக்கொள்ளலாம்' என்று மற்ற பூனை ஆறுதல் சொல்கிறது.

    இதைக்கேட்ட அந்த மனிதர் பதறிப்போய் சுலைமான் (அலை) அவர்களிடம் வந்து நடந்ததைச் சொல்லி `எப்படியாவது நீங்கள் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்' என்று கெஞ்சுகிறார். சுலைமான் (அலை) அவரிடம் `சேவல் விஷயத்திலும், ஆட்டுக் குட்டி விஷயத்திலும் நீ எப்படி புத்திசாலித்தனமாக நடந்து கொண்டாயோ, அவ்வாறே இப்பொழுதும் நடந்து கொள்' என்று கூறி, `வீட்டிற்குச் சென்று உன் மரண சாசனத்தையும், கஃபன் துணியையும் தயார் செய்து கொள்' என்று கூறி அனுப்பி விடுகிறார்கள்.

    இந்த சம்பவத்தின் மூலம் அல்லாஹ் மற்றவர்களுக்கு அளித்துள்ள அருட்கொடைகள் பற்றி பேராசை கொள்வதால் ஏற்படும் விபரீதத்தை நாம் புரிந்து கொள்ளலாம். "மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை, வேறு சிலரைவிட மேன்மையாக்கி இருக்கின்றானோ, அதனை அடைய வேண்டும் என்று பேராசை கொள்ளாதீர்கள்". (திருக்குர்ஆன் 4:32)

    எனவே, அருட்கொடைகளை விரும்புபவர்கள், தங்களை படைத்த இறைவனிடமே துஆ செய்பவர்களாக இருக்க வேண்டும்.

    • அவிநாசி அருகே தத்தனூர் ஊராட்சி, சாவக்காட்டுப்பாளையத்தில் கைத்தறி நெசவு தொழிலில் 3,000 குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கூட்டுறவு சங்கம் வாயிலாகவே வாங்கிக்கொடுத்து, தயாரிப்பு சேலைகளை கோ- ஆப்டெக்ஸ் வாயிலாகவே விற்பனை செய்வதற்குரிய வாய்ப்பு கிடைக்கும்.

    அவினாசி:

    அவிநாசி அருகே தத்தனூர் ஊராட்சி, சாவக்காட்டுப்பாளையத்தில் கைத்தறி நெசவு தொழிலில் 3,000 குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு சிறுமுகை, புளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பட்டு சேலை வியாபாரிகள் ஆர்டர் வழங்குவர்.தங்கள் தேவையின் அளவு பொருத்து, பாவு நூல் வழங்கி சேலையை நெய்து வாங்கிக் கொள்வர். அதற்கான கூலியை, நெசவாளர்களுக்கு வழங்குவர். சமீப காலமாக ஆர்டர் இல்லாததால் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து கைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது:- ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன், மனைவி, பிள்ளைகள் என ஒரு குடும்பமே நெசவு தொழிலில் ஈடுபட்டால் தான் ஒன்றரை நாளில் ஒரு சேலையை நெய்து முடிக்க முடியும். வாரத்துக்கு 3,4 சேலைகள் ஆர்டர் கிடைக்கும். ஒரு சேலைக்கு 1,000 முதல் 1,200 ரூபாய் வரை வருமானம் கிடைத்தது. தற்போது வாரத்துக்கு ஒரு சேலை மட்டுமே ஆர்டர் கிடைக்கிறது. வருமான பற்றாக்குறையால் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறோம். ஆர்டர் வழங்கும் வியாபாரிகள் தங்களுக்கு வியாபாரம் இல்லை என்ற காரணத்தை கூறுகின்றனர்.எனவே அரசின் சார்பில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை அங்காடிகளுக்கு தேவையான சேலையை, எங்களிடம் கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.

    தத்தனூர் ஊராட்சி தலைவர் விஜயகுமார் கூறியதாவது:-

    சாவக்கட்டுப்பாளையத்தில் நெசவாளர்களை உள்ளடக்கி 4 கூட்டுறவு சங்கங்கள் இருந்தன. நிர்வாக குளறுபடியால் அவை செயல்படாமல் போயின. தற்போது நெசவாளர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு 100 நெசவாளர்களை உள்ளடக்கி புதிதாக கூட்டுறவு சங்கம் அமைக்க திட்டமிட்டு அதற்கான அனுமதி கேட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். நிர்வாக அனுமதிக்காக காத்துள்ளோம். கூட்டுறவு சங்கம் அமைக்க அனுமதி கிடைக்கும் பட்சத்தில் சேலை நெய்வதற்குரிய பாவு, நூல் உள்ளிட்டவற்றை கூட்டுறவு சங்கம் வாயிலாகவே வாங்கிக்கொடுத்து, தயாரிப்பு சேலைகளை கோ- ஆப்டெக்ஸ் வாயிலாகவே விற்பனை செய்வதற்குரிய வாய்ப்பு கிடைக்கும்.

    இதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.

    • காலையிலிருந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வந்தனர்.
    • ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலையிலிருந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வந்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சுருக்கு வலை மீன்பிடி தொழிலாளர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டன. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: -

    கடலூர் மாவட்டத்தில் சுருக்கு வலை பயன்படுத்தி மீன் பிடிக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அனுமதி அளிக்க வேண்டி மாவட்ட நிர்வாகம், மீன்வளத்துறை அதிகாரிகள், முதல்-அமைச்சர் தனிப்பிரிவிற்கு தொடர்ந்து மனு அளித்து வந்துள்ளோம். ஆனால் இதுவரை எங்களுக்கு எந்த விதமான தீர்வும் ஏற்படவில்லை. ஆகையால் எங்களுடைய வல்லம் மற்றும் விசைப்படகுகளை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மீன்பிடி தடைக்காலம் முடிந்து தொழில் செய்வதற்கு அனுமதி வழங்கி ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • பல போராட்டங்கள் மூலமாக அவர்கள் பெற்ற உரிமைகளையும் கொண்டாடுகின்ற தினம்
    • வெயில், மழை என்றும் ஒதுங்காமல்,இரவென்றும், பகலென்றும் பாராமல் வியர்வை சிந்தி உழைப்பவர்கள்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி நாடாளு மன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    மே 1-ந்தேதி தொழிலாளர்கள் தினம். தொழிலாளர்களின் தியாகங்களையும், பல போராட்டங்கள் மூலமாக அவர்கள் பெற்ற உரிமைகளையும் கொண்டாடுகின்ற தினம். தொழி லாளர்கள் அனைவரது உழைப்பையும் போற்றி அவர்களுக்கு இந்த நாளில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    வெயில், மழை என்றும் ஒதுங்காமல்,இரவென்றும், பகலென்றும் பாராமல் வியர்வை சிந்தி உழைத்து சமூகத்திற்கு அன்றாடம் உதவி செய்பவர்கள் நமது தொழிலாளர்கள். உழைப்பால் நாட்டிற்கு பெருமை சேர்த்து பொருளாதாரம் மேம்பட பெரும் பங்களிப்பவர்கள் தொழிலாளர்கள். எனவே, தொழிலாளர்கள் வாழ்வும், வாழ்வாதாரமும் மேம்பட நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம். அவர்கள் உழைப்பை சுரண்ட நினைப்பவர்களிடம் இருந்து அவர்களை காக்க வேண்டியது நமது கடமை. உழைப்பாளர் களை போற்றுவோம், அவர்கள் உழைப்பை போற்றுவோம். உழைப்பே உயர்வு தரும். அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தற்போது அரசு நெல்லிற்கு பிறகு பருத்தி, காய்கறி மற்றும் தானிய பயிர்களை சாகுபடி செய்ய கூறி வருகிறது.
    • விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கால்நடைகளை கட்டுப்படுத்துவது தான் ஒரே வழி.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி மட்டுமே பிரதானமாக உள்ளது. நெல்லுக்கு பிறகு உளுந்து, பச்சைபயிறு, பசலி, துவரம்பருப்பு போன்ற பணப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. காலப்போக்கில் இந்த சாகுபடி குறைந்துவிட்டது.

    இதனால் விவசாயத்தில் கிடைக்கும் உபரி வருமா னங்களும் குறைந்துவிட்டது.

    இதற்கு காரணம் கட்டுப்பாடு இல்லாமல் ஆடு, மாடுகள் சாகுபடி நிலங்களில் மேய்வது தான். தற்போது அரசு நெல்லிற்கு பிறகு பருத்தி, காய்கறி மற்றும் தானிய பயிர்களை சாகுபடி செய்ய கூறி வருகிறது.

    இதுபோன்ற நல்ல வேளாண் திட்டங்களை செயல்படுத்தி விவசாயி களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கால்நடைகளை கட்டுப்படுத்துவது தான் ஒரே வழி. எனவே அரசு முன்பு செயல்படுத்திய கால்நடை பட்டிகளை மீண்டும் வருவாய்துறை கட்டுப்பாட்டில் தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மீனவர்கள் வாழ்வாதார பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு காணவில்லை என நவாஸ்கனி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
    • கடந்த 8 ஆண்டுகளில் அந்த பன்முக தன்மைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் எம்.பி.யும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத்தலைவருமான நவாஸ்கனி பேசியதாவது:-

    பா.ஜனதா ஆட்சி நடைபெறாத தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் கவர்னர்களின் மூலம் மத்திய அரசு ஒருவித அழுத்தத்தை மாநில அரசுகளுக்கு கொடுக்க முயற்சிக்கிறது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது.

    இதனை கருத்தில் கொண்டு ஜனாதிபதி தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களின் கவர்னர்களுக்கு வலியுறுத்தல்களை வழங்க வேண்டும். நாம் காலம் காலமாக வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாக நம்முடைய நாட்டை உலக அரங்கில் உயர்த்தி வைத்துள்ளோம்.

    ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் அந்த பன்முக தன்மைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு மத்திய அரசு 'ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம்' என்று பன்முகத்தன்மைக்கு எதிரான மிகப்பெரிய விவாதத்தை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது.

    பன்முகத்தன்மை உள்ள இறையாண்மை மிக்கது நம்முடைய தேசம். இது சுதந்திரநாடு ஜனநாயக நாடு. இங்கு மக்கள்தான் எஜமானர்கள் அவர்கள் மீது எதையும் எவரும் திணிக்கவோ, வற்புறுத்தவோ முடியாது.

    எங்களுக்கு ஒன்றை வேண்டாம் என்று கூறும்போது, அதனை திணிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை. அதுதான் சுதந்திர தேசத்தின் அடிப்படை உரிமை.

    ஒருவர் இந்த மொழியில் தான் பேசவேண்டும், இந்த உணவைத்தான் உண்ண வேண்டும், இந்த உடைதான் உடுத்த வேண்டும் என்று திணிப்பது சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் ஆபத்து என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

    உலக நாடுகளுக்கு மத்தியில் நம்முடைய நாடு பெருமிதத்தோடு உயர்ந்து நிற்பது நமக்கு மிகப்பெரிய மகிழ்ச்சிதான். ஆனால் அண்டையில் இருக்கும் நம்மை விட மிக மிக சிறிய நாடு இலங்கையிடம் இருந்து நம்முடைய மீனவர்களை காப்பதற்கு இன்னாள் வரை ஒரு நிரந்தர தீர்வை காண முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம் என்ற உண்மையையும் இந்த அரசு ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். பலமுறை இதே அவையில் பேசியிருக்கிறேன். தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன். எங்களுடைய பகுதிகளின் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையி னரால் தாக்கப்பட்டு வருகி றார்கள். அவர்களின் படகுகள் பறிக்கப்பட்டு, வாழ்வாதாரம் இழந்து நிற்கும் சூழலுக்கு தள்ளப்படு கிறார்கள். இன்று நீங்கள் எங்களுக்கு பதில் உரைக்க மறுத்தாலும் இன்னும் 1½ ஆண்டு காலத்தில் மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். தொடர்ந்து 2முறை உங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கிய மக்களை மீண்டும் ஒருமுறை நீங்கள் சந்திக்க வேண்டும். அப்போது அவர்கள் உங்களுக்கு தகுந்த பதிலை வழங்குவார்கள்.

    வார்த்தையில் மட்டுமல்ல செயலிலும் உங்களுடைய வளர்ச்சியை காட்டுங்கள் என்பதை வலியுறுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நெல் சாகுபடி செய்வதற்கும், சிறு, குறு தொழில்கள் தொடங்குவதற்கும் கடன் தொகையை பயன்படுத்தவேண்டும்.
    • குடும்ப வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 30 மகளிர் சுய உதவிக் குழுகளுக்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்க தலைவர் எம் சிவசண்முகம் தலைமை தாங்கினார்.

    சங்க செயலாளர் (பொ) எஸ்மணிமாறன் வரவேற்று பேசினார். திருத்துறைப்பூண்டி க.மாரிமுத்து எம்.எல்.ஏ., கோட்டூர் ஒன்றியகுழு தலைவர் மணிமேகலை முருகேசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாலஞானவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருவாரூர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மிக சாதாரண ஏழை எளிய மக்கள் கந்துவட்டி கொடுமையில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி மகளிர் சுய உதவிக் குழு அமைத்து அரசு மூலம் கடன் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.

    இதன் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயனடைந்துள்ளனர் நமது முதல்வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கூடுதலாக கடன் வழங்கும் திட்டதை செயல் படுதி வருகிறார் ஆனால் சில மகளிர் குழு உறுப்பினர்கள் அரசு வழங்கும் கடன் தொகையை கூடுதல் வட்டிக்கு தனி நபர்களிடம் கடன்கொடுக் கிறார்கள்.

    பின்னர் அதை வசூல் செய்ய முடியாமல் ஏமாந்து போகிறார்கள் இந்த மகளிர் குழு உறுப்பினர்களை நான் கேட்டுக் கொள்வது இந்த கடன் சங்கத்தில் வழங்கப்படுகிற கடன் தொகையை ஆடு மாடு போன்ற கால்நடைகளை வளர்க்கவும் நெல் சாகுபடி செய்வதற்கும் சிறு குறு தொழில்கள் தொடங்குவதற்கும் பயன்படுத்தவேண்டும்.

    இதன் மூலம் குடும்ப வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் எம் செந்தில்நாதன் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சுளா கள மேலாளர் ஆர் வீரசேகரன் உதவி கள மேற்பார்வையாளர் வி.முத்துக்குமார் எழுத்தர் சித்ரா அலுவலக பணியாளர்கள் வேம்பையன் சதீஷ் பாண்டியன் ராஜசேகரன் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் முதுநிலை எழுத்தர் டி.சத்யநாராயணன் நன்றி கூறினார்.

    • தோட்டக்கலைத்துறை பூந்தோட்டத்தில் நாற்றங்காலுக்காக ஒரு பகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • உரிய லாபம் ஈட்டி வாழ்வாதாரங்களைப் பெருக்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் ஆட்சியரக வளாகத்தில் தூய்மைப் பணியாளா்களைத் தொழில்முனைவோா்களாக மாற்றும் வகையில் 'தஞ்சை தாரகைகள் பசுமையகம்' தொடங்கப்பட்டது.

    இந்தப் பசுமையகத்தைத் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது ;-

    இத்திட்டத்தில் பசுமைக் குழுவில் பகுதி நேர தூய்மை பணியாளா்களாகப் பணிபுரியும் பிள்ளையாா்பட்டி ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்பில் உள்ள மகளிா் சுய உதவிக் குழுக்களிலிருந்து குழு உறுப்பினா்களுக்கு அவா்களின் வாழ்வாதாரத்தை மென்மேலும் உயா்த்துவதற்காக, அவா்களை தொழில் முனை வோா்களாக மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, இக்குழுவி–னருக்கு விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் ஆட்சியரக வளாகத்தில் தோட்டக்கலைத் துறை பூந்தோட்டத்தில் நாற்றங்காலுக்காக ஒரு பகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்தப் பூந்தோட்ட நாற்றங்காலை பராமரிப்பதற்காகத் தோட்டக்கலைத் துறை மூலம் மருங்குளம் அரசு தோட்டக்கலைத் துறைப் பண்ணையில் உரிய பயிற்சிகள் அளிக்கப்படும். பின்னர் அவா்களை ஒருங்கிணைத்து பூந்தோட்ட நாற்றங்கால் உற்பத்தியாளா் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் அவா்கள் வேலை நேரம் போக மீதமுள்ள நேரத்தில் இப்பூந்தோட்ட நாற்றங்காலை பராமரித்து, பூச்செடிகளை விற்பனை செய்து, உரிய லாபம் ஈட்டி வாழ்வாதாரங்களைப் பெருக்குவதற்கான வழிவகை செய்யப்பட்டு–ள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, மகளிா் திட்ட இயக்குநா் லோகேஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரங்கராஜன், வேளாண் துணை இயக்குநா் ஈஸ்வா் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • தனியாக தொழில் முனைய விரும்புவோர், குழுவாக தொழில் செய்ய விரும்புவோர், பயிற்சி பெற்று வேலைவாய்ப்பை விரும்புவோர் என 3 பிரிவுகளாக பயிற்சி

    கன்னியாகுமரி:

    பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி யிலிருந்து விதவைகள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், மற்றும் முதிர்கன்னிகள் ஆகியோருக்கான பட்டியல் தயார்படுத்தப்பட்டு அவர்களில் ஆர்வமுடை யோருக்கு அழகிய மண்ட பத்தில் வாழ்வாதார பயிற்சி வழங்கப்பட்டது.

    இதனை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். மனோஜ்குமார் வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோதங்கராஜ், மாவட்ட அவை தலைவர் மரிய சிசு குமார், மாவட்ட துணைசெயலாளர் ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரசம் ஜெயராஜ் தொடக்க உரையாற்றினார். மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி சிறப்புரை ஆற்றினார்.

    தனியாக தொழில் முனைய விரும்புவோர், குழுவாக தொழில் செய்ய விரும்புவோர், பயிற்சி பெற்று வேலைவாய்ப்பை விரும்புவோர் என 3 பிரிவுகளாக பயிற்சியில் பங்கேற்றவர்கள் பிரிக்கப்பட்டு சென்னை றிவர் பெண்கள் முன்னேற்ற அமைப்பின் இயக்குனர் மதுசரண் தலைமையில் பயிற்சிகள் நடத்தப்பட்டது.

    பேரூராட்சி தலைவர்கள், ஹாருன் ரசீத், கிறிஸ்டல் பிறேமகுமாரி, பெனிலா ரமேஷ், ஊராட்சி தலைவி ரெஜினி விஜிலா பாய், ஆகியோர் பயிற்சியின் தேவைகள் குறித்து பேசினர். ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த கூட்ட ஒழுங்குகளை பேரூராட்சி கவுன்சிலர் விக்னேஷ் செய்தார். சுமிதா நன்றி கூறினார்.

    • இடுபொருட்கள் கிடைக்காததால் சில சிறு தானிய சாகுபடியை மலைவாழ் மக்கள் கைவிட்டனர்.
    • ரசாயன உரங்கள் இல்லாமல் முழுவதும் இயற்கை முறையில், சிறுதானியங்கள் விளைவித்து வருகின்றனர்.

    உடுமலை : 

    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், இரு மலைத்தொடர்களுக்கு இடையிலுள்ள சமவெளிப்பகுதியில் அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் உணவிற்காக பல்வேறு சாகுபடிகளை மேற்கொள்கின்றனர்.குறிப்பாக நெல், சிறு தானியங்கள் மற்றும் மொச்சை ஆகிய சாகுபடி மலைவாழ் மக்களால் பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. விளைபொருட்களை பிற பகுதிகளுக்கு கொண்டு வந்தும் விற்பனை செய்து வந்தனர்.தொழில்நுட்ப விழிப்புணர்வு இல்லாதது மற்றும் விதை உட்பட இடுபொருட்கள் கிடைக்காததால் சில சிறு தானிய சாகுபடியை மலைவாழ் மக்கள் கைவிட்டனர்.

    குறிப்பாக குழிப்பட்டி, மாவடப்பு, கோடந்தூர்போன்ற மலைவாழ் குடியிருப்புகளில் சாமை, ராகி போன்ற சிறு தானிய சாகுபடிகள் முற்றிலுமாக காணாமல் போனது.

    இது குறித்து கடந்த 2018ல் மலைவாழ் மக்கள், விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் அளித்த மனுக்கள் அடிப்படையில் வேளாண்துறை நடவடிக்கை எடுத்தது.சிறப்பு திட்டத்தின் கீழ் குழிப்பட்டி, மாவடப்பு, பூச்சிக்கொட்டான்பாறை, ஆட்டுமலை, கோடந்தூர் ஆகிய மலைவாழ் குடியிருப்புகள் தேர்வு செய்யப்பட்டன.அங்குள்ள மக்களுக்கு, ராகி, சாமை ஆகிய விதைகள் மானியத்தில் வேளாண்துறையால் வழங்கப்பட்டன.

    பின்னர், நுண்ணுாட்டச்சத்து உட்பட இடுபொருட்களும் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வேளாண்துறையினர் வழங்கினர்.இத்திட்டம் ஓராண்டு மட்டும் செயல்படுத்தப்பட்டு கைவிடப்பட்டது. இதே போல் தேனீ வளர்ப்பு திட்டமும் சில மலைவாழ் கிராமங்களில் செயல்படுத்தப்பட்டது.தற்போது உடுமலை பகுதிகளிலுள்ள 15 மலைவாழ் குடியிருப்புகளில் வசிப்பவர்கள், விவசாய சாகுபடி மேற்கொள்ளும் வகையில் விவசாய நிலத்திற்கான தனிநபர் வன உரிமை ஆவணம் வழங்கப்பட்டுள்ளது.

    விடுபட்டவர்களுக்கு ஆவணம் வழங்கும் பணி தீவிரமடைந்துள்ளது. எனவே தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகளுக்கு பிறகு தங்கள் குடியிருப்பை ஒட்டிய விளைநிலங்களில் பல்வேறு சாகுபடி மேற்கொள்ள மலைவாழ் மக்கள் ஆர்வமாக உள்ளனர்.அங்குள்ள சிற்றாறுகளிலும் நிலையான நீர்வரத்து உள்ளது. எனவே சிறப்பு திட்டத்தை அனைத்து மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் செயல்படுத்தவும், இந்த சீசனில் சிறு தானிய சாகுபடிக்கு தேவையான விதைகள் மற்றும் இடுபொருட்களை மானியத்தில் வழங்க வேண்டும்.

    மேலும் அரசு வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் செயல்படுத்தும் திட்டங்களில் மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த மானியத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க ஆவணங்கள் இல்லாததால் மலைவாழ் கிராமங்களை இத்திட்டங்கள் எட்டவில்லை. தற்போது விளைநிலங்களுக்கான ஆவணம் வழங்கப்பட்டுள்ளதால், மானிய திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், நிதி ஒதுக்கீடு செய்யவும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஜல்லிபட்டி அருகே, ஈசல்திட்டு மலைவாழ் மக்கள் குடியிருப்பில் ராகி, மொச்சை என பல்வேறு சிறுதானிய சாகுபடியில் அம்மக்கள் ஈடுபட்டுள்ளனர். ரசாயன உரங்கள் இல்லாமல் முழுவதும் இயற்கை முறையில், சிறுதானியங்கள் விளைவித்து வருகின்றனர்.அவர்களுக்கு தேவையான விதை, இயற்கை வழி இடுபொருட்கள் மற்றும் ஸ்பிரேயர் உட்பட வேளாண்எந்திரங்கள் கிடைக்காமல் திணறி வருகின்றனர்.இதுகுறித்து கடந்த வாரம் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும், மனு அளித்துள்ளனர்.மலைப்பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப விளையும் சாகுபடிகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை வாயிலாக ஆய்வு செய்து, பரிந்துரைகள் வழங்க வேண்டும்.மலைவாழ் மக்கள், சிறுதானிய பயிர் உற்பத்திக்கு ஊக்குவித்தால் இயற்கை வழியில் உற்பத்தி செய்யப்படும் சிறுதானியங்கள் மக்களுக்கு கிடைக்கும் என்பதால் அரசுத்துறைகள் கவனம் செலுத்த வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×