என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மேம்பட தொடர்ந்து குரல் கொடுப்போம் - விஜய்வசந்த் எம்.பி. மே தின வாழ்த்து
    X

    தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மேம்பட தொடர்ந்து குரல் கொடுப்போம் - விஜய்வசந்த் எம்.பி. மே தின வாழ்த்து

    • பல போராட்டங்கள் மூலமாக அவர்கள் பெற்ற உரிமைகளையும் கொண்டாடுகின்ற தினம்
    • வெயில், மழை என்றும் ஒதுங்காமல்,இரவென்றும், பகலென்றும் பாராமல் வியர்வை சிந்தி உழைப்பவர்கள்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி நாடாளு மன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    மே 1-ந்தேதி தொழிலாளர்கள் தினம். தொழிலாளர்களின் தியாகங்களையும், பல போராட்டங்கள் மூலமாக அவர்கள் பெற்ற உரிமைகளையும் கொண்டாடுகின்ற தினம். தொழி லாளர்கள் அனைவரது உழைப்பையும் போற்றி அவர்களுக்கு இந்த நாளில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    வெயில், மழை என்றும் ஒதுங்காமல்,இரவென்றும், பகலென்றும் பாராமல் வியர்வை சிந்தி உழைத்து சமூகத்திற்கு அன்றாடம் உதவி செய்பவர்கள் நமது தொழிலாளர்கள். உழைப்பால் நாட்டிற்கு பெருமை சேர்த்து பொருளாதாரம் மேம்பட பெரும் பங்களிப்பவர்கள் தொழிலாளர்கள். எனவே, தொழிலாளர்கள் வாழ்வும், வாழ்வாதாரமும் மேம்பட நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம். அவர்கள் உழைப்பை சுரண்ட நினைப்பவர்களிடம் இருந்து அவர்களை காக்க வேண்டியது நமது கடமை. உழைப்பாளர் களை போற்றுவோம், அவர்கள் உழைப்பை போற்றுவோம். உழைப்பே உயர்வு தரும். அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×