search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெல்டா மாவட்டங்களில் கால்நடை பட்டி அமைக்க கோரிக்கை
    X

    டெல்டா மாவட்டங்களில் கால்நடை பட்டி அமைக்க கோரிக்கை

    • தற்போது அரசு நெல்லிற்கு பிறகு பருத்தி, காய்கறி மற்றும் தானிய பயிர்களை சாகுபடி செய்ய கூறி வருகிறது.
    • விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கால்நடைகளை கட்டுப்படுத்துவது தான் ஒரே வழி.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி மட்டுமே பிரதானமாக உள்ளது. நெல்லுக்கு பிறகு உளுந்து, பச்சைபயிறு, பசலி, துவரம்பருப்பு போன்ற பணப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. காலப்போக்கில் இந்த சாகுபடி குறைந்துவிட்டது.

    இதனால் விவசாயத்தில் கிடைக்கும் உபரி வருமா னங்களும் குறைந்துவிட்டது.

    இதற்கு காரணம் கட்டுப்பாடு இல்லாமல் ஆடு, மாடுகள் சாகுபடி நிலங்களில் மேய்வது தான். தற்போது அரசு நெல்லிற்கு பிறகு பருத்தி, காய்கறி மற்றும் தானிய பயிர்களை சாகுபடி செய்ய கூறி வருகிறது.

    இதுபோன்ற நல்ல வேளாண் திட்டங்களை செயல்படுத்தி விவசாயி களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கால்நடைகளை கட்டுப்படுத்துவது தான் ஒரே வழி. எனவே அரசு முன்பு செயல்படுத்திய கால்நடை பட்டிகளை மீண்டும் வருவாய்துறை கட்டுப்பாட்டில் தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×