search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோரிக்கை"

    • சாலையோரங்கள் சேறும் சகதியுமாக மாறியதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
    • பாதிக்கப்பட்ட பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    மதுரையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. 3 நாட்களாக மாலை நேரத்தில் பெய்து வரும் இந்த மழையால் மதுரை நகரின் பல பகுதிகளில் சாலை யோரம் மழை நீர் தேங்கி உள்ளது. பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் சாலையோரமும் மழை நீர் தேங்கி சேறு சகதியுமாக மாறிப்போய் உள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையோரம் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    காளவாசல்

    இதேபோல காளவாசல் சிக்னல்-தேனி பிரதான சாலையில் சிறிய மழைக்கே தண்ணீர் குளம்போல் தேங்கி சகதியாக கிடப்பதால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் கடைவீதிகளில் உள்ள சாலைகளிலும் பல இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் பக்தர்கள் ஓட்டல்க ளுக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் மதுரை நகரின் பல்வேறு இடங்களிலும் இதே நிலை காணப்படுகிறது. ஆனால் மாநகராட்சி எந்த வித நடவடிக்கையும் எடுக் காமல் இருந்து வருகிறது.

    சித்திரை திருவிழா நடந்து வரும் நிலையில் இது போன்ற பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். மெத்தனம் காட்டினால் விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    போக்குவரத்து நெருக்கடி

    மேலும் நகரின் குறுகிய சாலைகளில் கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களை அனுமதிப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனை யும் போலீசார் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் விரும்புகின்றனர்.

    மதுரை மாநகரில் மழை பெய்தால் தண்ணீர் வடிய முடியாத சூழ்நிலை பல இடங்க ளில் காணப்படுகிறது. எனவே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மஞ்சுகொண்டப்பள்ளி, பிலிக்கல் கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தர அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
    • அப்போது மஞ்சுகொண்டப்பள்ளி, பிலிக்கல் கிராமத்திற்கு சாலை வசதி செய்து தர அமைச்சர் உறுதி அளித்தார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம்,அஞ்செட்டி அருகே மஞ்சுகொண்டப்பள்ளி, பிலிக்கல் மலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதனையடுத்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ தலைமையில் தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, மஞ்சுகொண் டப்பள்ளி ஊராட்சி தலைவர் சிவனங்கிரி, ஒன்றிய கவுன்சிலர்கள் சிவா, சண்முகப்பா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உள்ளாட்சிதுறை அமைச்சர் பெரியசாமியை நேரில் சந்தித்து தளி சட்டமன்ற தொகுதியில் உள்ள மலை கிராமங்களுக்கு முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி சாலை வசதி செய்து தர கோரியும், குறிப்பாக அஞ்செட்டி அருகே மஞ்சுகொண்டப்பள்ளி, பிலிக்கல் கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தர அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    அப்போது மஞ்சுகொண்டப்பள்ளி, பிலிக்கல் கிராமத்திற்கு சாலை வசதி செய்து தர அமைச்சர் உறுதி அளித்தார்.

    • சட்டமன்றத்தில் எம்எல்ஏ வக்கீல் சின்னப்பா கோரிக்கை வைத்தார்
    • பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர ரகுபதி பதில்

    அரியலூர், அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்து கொடுக்க வேண்டும் - சட்டமன்றத்தில்வக்கில் கு.சின்னப்பா எம்எல்ஏ கோரிக்கை வைத்து பேசினார். அப்போது அவர் பேசும்போது,அரியலூரில் சுமார் 150 ஆண்டு காலமாக கோர்ட் செயல்பட்டு வருகின்றது. ஆங்கிலேயர் காலத்தில் இந்த நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டது. 2007ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதியால் அரியலூர் மாவட்டம்உ ருவாக்கப்பட்டது. அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் அமைத்து கொடுக்க வேண்டும் என்பதுநீண்ட நாள் கோரிக்கையா கும். அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்துகொடுக்க வேண்டும் என கேட்டுக்கொ ள்கிறேன் என எம்எல்ஏ வக்கில் கு.சின்னப்பா பேசினார்,இதற்கு பதிலளித்து அமைச்சர் ரகுபதி பேசும்போது, தொகுதி எம்எல்ஏவின் கோரிக்கை வரும் காலத்தில் பரிசிலிக்கப்படும் என பதிலளித்தார்.

    • மகப்பேறு மருத்துவமனை அருகே உள்ள ரேசன் கடைகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • சட்டசபையில் பூமிநாதன் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார்.

    மதுரை

    தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் தொகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார். அவர் பேசியதாவது:-

    மதுரையில் கலைஞர் பெயரில் நூலகம் அமைத்து மதுரை மக்களுக்கு நல்வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மதுரை மண்ணின் மைந்தன் பத்மஸ்ரீ டி.எம். சவுந்தரராஜனுக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்ச ருக்கு எனது சார்பிலும், தெற்கு தொகுதி பொது மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    மதுரையில் சித்திரை திருவிழா காலங்களில் ஆழ்வார்புரம், தெப்பக்குளம் பகுதிகளில் லட்சக் கணக்கான மக்கள் கூடு வார்கள். எனவே இந்த பகுதிகளில் பொதுமக்களின் அசவுகரியத்தை குறைக்கும் வகையில் பூமிக்கு அடியில் புதைவட கம்பிகள் அமைத்து மின்விநியோகம் செய்திட வேண்டுமாறு கோரிக்கை வைக்கிறேன்.

    மதுரை தெற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 83 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 20 கடைகள் மட்டுமே சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே மற்ற 63 கடைகளையும் சொந்த இடத்துக்கு மாற்ற தேவையான நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு அரசை வேண்டுகிறேன்.

    மதுரை தெற்கு சட்ட சபை தொகுதிக்கு உட்பட்ட 44-வது வார்டில் பிரசவ மருத்துவமனை அமைந் துள்ளது. இந்த மருத்துவ மனை வளாகத்தில் 3 ரேஷன் கடைகள் உள்ளன. இதனால் மகப்பேறு சிகிச்சைக்கு வரும் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த 3 ரேஷன் கடைகளையும் உடனடியாக வேறு இடத்திற்கு இட மாற்றம் செய்து தர வேண்டும்.

    தெற்கு வாசல் பகுதியில் உள்ள திரவியம் பிள்ளை மகப்பேறு மருத்துவமனை, அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை மராமத்து செய்து மேம்படுத்த வேண்டும்.

    தமிழகத்தில் 2-வது பெரிய மருத்துவ மனையாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. அதன் சார்பு மருத்துவமனைகளான பாலரெங்காபுரம் மண்டல புற்றுநோய் மையம் மற்றும் தோப்பூர் மருத்துவ மனைகளுக்கு பராமரிப்பு செலவுக்காக ரூ. 75 லட்சம் வரை ஒதுக்கீடு செய்யப் படுகிறது. இந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டு மாறு கோரிக்கை வைக்கி றேன்.

    மதுரை சிந்தாமணி ரோட்டில் ஏராளமான அரிசி ஆலைகள் உள்ளன. மேலும் நான்கு வழிச் சாலையும் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் செல்லும் நிலையில் அங்கு அமைந்துள்ள ெரயில்வே கேட் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சிந்தாமணி பகுதியில் ெரயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டும். மதுரை, ராமநாதபுரம் ரோட்டில் காலியாக உள்ள இடங்களில் உழவர் சந்தை மற்றும் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும்.

    மதுரை தெற்கு தொகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் தெப்பக் குளத்துக்கு பனையூர் வாய்க்கால் வழியாக வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் நிரப்ப விட்டு வருகிறது. இதனால் அந்த தண்ணீர் பல இடங்களில் மாசுபடுகிறது. எனவே குருவிக்காரன் சாலை பகுதியில் வைகை ஆற்றில் புதிதாக தடுப்பணை அமைத்து அங்கிருந்து பனையூர் கால்வாய் வழியாக தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வர ஏற்பாடு செய்து தர வேண்டும்.

    இவ்வாறு பூமிநாதன் எம். எல்.ஏ. பேசினார்.

    • இரப்பனையில் இறந்தவர்களை தகனம் செய்யும் கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது
    • கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    கடையம்:

    கடையம் - தென்காசி சாலையில் இரப்பனையில் நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இறந்தவர்களை தகனம் செய்யும் கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் சேதமடைந்து பெயர்ந்த நிலையில் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. மிக பழமை வாய்ந்த இக்கட்டிடத்தால் தகனம் செய்யும் போது, இடிந்து விழுந்தால் பெரும் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இறந்தவர்களை தகனம் செய்யும் நேரத்தில் பலர் அப்பகுதி அருகே நிற்கின்றனர். இந்த நிலையில் கட்டிடம் இடிந்து விழுந்தால் பல உயிர்சேதத்தை ஏற்படுத்தக் கூடிய நிலை காணப்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி புது மயான கட்டிடம் கட்ட சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருச்சி மாவட்டத்தில் அதிக வருவாய் தரும் பகுதியாக உள்ளதால் வலியுறுத்தல்
    • முதல்வர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கோரிக்கை மனு

    திருச்சி,

    தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில். இந்த கோயிலுக்கு வருடம் முழுவதும் தமி ழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் இருந்த ஏராள மான பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பர். இந்த சமயபுரமானது திருச்சி மாவட்டம், மண்ண ச்சநல்லூர் தாலுகா, எஸ்.கண்ண ணூர் பேரூராட்சியின் கீழ் அமைந்துள்ளது. பொது வாக தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள் அமைய பெற்ற ஊர்கள் தனி தாலுக்காவாக இருக்கும்.திண்டுக்கல் மாவட்ட த்தில் முருகன் கோயில் அமைய பெற்றபழனி, திருவள்ளூர் மாவட்டத்தி லுள்ள முருகன் கோவில் இருக்கும் திருத்தணி, மதுரை மாவட்டத்தில் முருகன் கோவில் உள்ள திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் மாவட்டத்தில் மகாலிங்கம் சுவாமி அமைந்துள்ள திருவிடை மருதூர், அதே தஞ்சாவூர் மாவட்டத்தில் ஐயாரப்பன் கோவில் உள்ள திருவையாறு, கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூர் புகழ்பெற்ற பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், சேலம் மாவட்டத்தில் சங்ககிரி தாலுகா சங்ககிரி கோட்டை, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில், அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிவன் தாண்டேஸ்வரர்திருக்கோ வில் செந்துறை,கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்ச லம் சிதம்பரம் ஆகிய இடங்களில் ஆகிய வற்றை உதாரணமாக கூறலாம்.

    ஆனால் இந்து அறநிலையத்துறைக்கு அதிகளவு வருமானத்தை அள்ளித்தரும் மாரியம்மன் கோயில் அமைந்துள்ள சமயபுரம் இன்னும் தாலுகா அந்தஸ்துக்கு உயர்த்தப்படவில்லை என்பது அப்பகுதி பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது.சமயபுரம் அருகே மண்ணச்சநல்லூர் தாலுகா வில் உள்ள இருங்களூர், கொணலை, சிறுகனூர், சணமங்கலம், வாழையூர், வெங்கங்குடி, சீதேவிமங்கலம், தெற்கு சீதேவி மங்கலம், வடக்கு ச கண்ணனூர், கி ச கண்ணனூர், மே.சமயபுரம், திருப்பட்டூர், ஆவாரவல்லி, கூத்தூர், ஆய்குடி, பெரகம்பி, எதுமலை, லால்குடி தாலுகாவில் உள்ள ஊட்டத்தூர், மாடக்குடி, மருதூர், வி.துறையூர், தச்சங்குறிச்சி, மகிழம்பாடி, குமுளூர், புஞ்சை சங்கேந்தி, வந்தலை கூடலூர், கண்ணாகுடி, ரெட்டி மாங்குடி, நெய்க்குப்பை, பெருவளப்பூர் ஆகிய கிராமங்களை ஒன்றிணைத்து சமயபுரத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைத்திட அப்பகுதியினர் கோரிக்கை விடுப்பதோடு, இதனை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர், வருவாய் துறை அமைச்சர், முதல்வர் தனிப்பிரிவிற்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • எந்நேரமும் விழக்கூடிய அபாயத்தில் சாய்ந்து நிற்கும் மின் கம்பத்தால் பொதுமக்கள் அச்சம்
    • அகற்ற போரி பொதுமக்கள் வேண்டுகோள்

    அறந்தாங்கி, 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையா ர்கோவில் தாலுகா பில்லுவலசை கிராமத்தைச் சேர்ந்த கண்மாய் பில்லு வலசை, காசாங்குடி, ஏந்தல் உள்ளிட்ட கிராம மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இந்த கண்மாய் தண்ணீரை விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வகையில் பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.ஆவுடையார்கோவிலி ருந்து மீமிசல் வரைஉயர் மின்னழுத்த மின் கம்ப க்காக, நடப்பட்டுள்ள மின் கம்பங்களில், 8 உயர் மின்னழுத்த மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளது. இதில் ஒரு மின் கம்பத்தின் அடிப்பகுதி அரிக்கப்பட்டு, சாய்ந்த நிலையில் எந்த நேரத்தில் விழுமோ என்ற அபாய கட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. உயிர் அழுத்த மின் கம்பம் சாய்ந்தால், தண்ணீர் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து பல உயிர்கள் காவு வாங்கி விடும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவேஅசம்பாவிதம் ஏதும் நிகழ்வதற்குள் உடனடியாக மின் கம்பத்தை சரி செய்ய வேண்டும், அல்லது கண்மாய் வழி யாக செல்லக்கூடியமின்க ம்பங்களை அகற்றி,பாப்ப னேந்தல் வழியாக செல்ல க்கூடியஉயர் மின்னழுத்த மின்கம்பங்க ளிலிருந்து மின்பாதை அமைத்திட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சட்டசபையில் மானியக்கோரிக்கையின்போது அறிவிக்க வேண்டும்
    • மாநில ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

    விராலிமலை,

    பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியதாவது:-கோரிக்கை வைத்தால் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை என் மீது மக்களுக்கு உள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மனுக்கள் என்பது வெறும் காகிதங்கள் அல்ல. மனுக்களை நிறைவேற்றுவது நம் கடமை என அவர் தெரிவித்துள்ளார். அவர் மீது நம்பிக்கை வைத்து ஒரு லட்சம் மனுக்களை பகுதிநேர ஆசிரியர்கள் அனுப்பி வருகிறோம்.மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து முதல்-அமைச்சர் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வார் என எதிர்பார்ப்போடு உள்ளார்கள். 10 ஆண்டு பணி என்பதையும் கடந்து 12-வது ஆண்டாக அரசு பள்ளிகளில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறோம். பெரும்பாலோர் 50 வயதை கடந்து விட்டார்கள்.பணி நிரந்தரம் செய்தால்கூட சிலகாலம் தான் பணியாற்ற முடியும். ரூ.10 ஆயிரம் என்ற குறைந்த சம்பளத்தில் பணி பாதுகாப்பு இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றோம். தி.மு.க. 181-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற, முதல்வர் தான் ஆணையிட வேண்டும்.பட்ஜெட்டில் எதிர்பார்த்திருந்த நிலையில், மானியக்கோரிக்கைலாவது பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய அறிவிப்பு வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
    • முதல் இரண்டு கட்டங்களாக முறையே ரூ.60 கோடி, ரூ.77 கோடி என அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை, கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின் கட்டமைப்பு முறையாக அமைக்கப்படாததால் ஏற்பட்ட மணல் திட்டுக்களாலும் கடல் அலை சீற்றத்தினாலும் துறைமுக வாயிலில் பல மீனவர்கள் உயிரிழந்தனர்.

    இதன் காரணமாக நான் பல முறை சட்டமன்றத்திலும், தமிழ்நாடு முதல்-அமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் முதல் இரண்டு கட்டங்களாக முறையே ரூ.60 கோடி, ரூ.77 கோடி என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பணிகள் தொடங்குவதில் தொய்வு ஏற்பட்டு மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

    இதனால் விஜய்வசந்த் எம்.பி. கோட்டார் மறை மாவட்ட ஆயர். நசரேன் சூசை, தூத்தூர் மண்டலம் பெபின்சன், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழுமம் இயக்குனர் டனிஸ்டன், கோட்டாறு மறைமாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன், கிளீட்டஸ், அம்புறோஸ் ஆகியோரும் தமிழ்நாடு முதல்-அமைச்சரை சந்தித்து தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக மறு கட்டமைப்பு பணிகளை துரிதப்படுத்தவும், இரையு மன்துறை கிராமத்தை பாதுகாக்கவும் கோரிக்கை வைத்தோம்.

    தொடர் முயற்சியின் காரணமாக தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக மறுகட்டமைப்பு பணிகளுக்கு 3-ம் கட்டமாக ரூ.116 கோடிக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு மொத்தம் ரூ.253 கோடிக்கான ஒப்பந்தம் கோரப்பட்டு மீன்பிடி துறைமுக மறு கட்டமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.அப்போதிலிருந்தே இரையுமன்துறை கிராமத்தை பாதுகாப்பதற்காக தூண்டில் வழைவுகள் அமைக்கவும் கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

    ஒரு பக்கம் கடல் சீற்றமும் அடுத்த பக்கம் தாமிரபரணி ஆறு -ம் உள்ளதால் இயற்கை சீற்றத்தின்போது இரையுமன்துறை கிராமம் ஒட்டுமொத்தமாக அழியும் தருவாயில் உள்ளதால், அழிவிலிருந்து பாதுகாக்க வரும் ஜூன் மாத பருவகால சீற்றத்திற்கு முன் இரையுமன்துறை மீன் இறங்குதள பணியில் உள்ள தூண்டில் வளைவு பணியை உடனடியாக தொடங்கி முடித்து தரும்படியும், இந்த நிதியாண்டின் மீன்வளத்துறை மானிய கோரிக்கை நிதி நிலையில் ரூ.40 கோடி நபார்டு நிதியில் அறிவிக்கவும் கோரிக்கை வைத்தேன். ஆலோசித்து இது குறித்து முதல்-அமைச்சர் எனது கோரிக்கையை ஏற்று கொண்டார். அதன் அடிப்படையில் வருகிற 5-ந்தேதி அன்று நடைபெறும் மீன்வளம் மற்றும் மீனவர் நலன் மானிய கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிடப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் வாக்குறுதி அளித்தார்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறிஉள்ளார்.

    • குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • நெல்லித்தோப்பு கிராமத்தில் அமைந்துள்ள அரசு மதுபான கடைக்கு செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது.

     அரியலூர்

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தில் அமைந்துள்ள அரசு மதுபான கடைக்கு செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. மதுபான கடைக்கு செல்லும் மதுபிரியர்கள் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிளில் செல்ல முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். உயிர் பலி ஏற்படும் முன் உடனடியாக அரசு மதுபான கடைக்கு செல்லும் சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருப்பரங்குன்றத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • 95-வது வார்டு சவுபாக்கியா நகர், முல்லை நகர், அமைதிச்சோலை பகுதிகளில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டல குறைதீர்க்கும் கூட்டம் திருப்பரங்குன்றத்தில் இன்று நடந்தது. மண்டல தலைவர் சுவிதா விமல் தலைமை தாங்கினார். மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

    கவுன்சிலர் உசிலை சிவா, 99-வது வார்டு பகுதியில் உள்ள அடிப்படை வசதி களை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    அதேபோன்று கவுன்சிலர் சிவ சக்தி ரமேஷ், திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதை சேதம டைந்துள்ளதாகவும் அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அந்த பகுதியை சீரமைத்து விரைவில் நடைபெற உள்ள பங்குனி திருவிழாவிற்கு தேரோட்டம் நடைபெற ஏதுவாக பணிகள் செய்யும்படி அதிகாரிகளுக்கு மேயர், கமிஷனர் உத்தரவிட்டனர்.

    94-வது வார்டு திருநகர் பகுதியில் கழிவு நீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். குப்பைகள் சரிவர அள்ளப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்படு கிறது என்று கவுன்சிலர் சுவேதா சத்யன் புகார் செய்தார்.அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அலுவலரை கண்டித்து தூய்மை பணியாளர்கள் சரிவர பணியாற்றுவதை உறுதிப்படுத்துமாறு தெரிவித்தார்.

    கவுன்சிலர் இந்திரா காந்தி 95-வது வார்டு சவுபாக்கியா நகர், முல்லை நகர், அமைதிச்சோலை பகுதிகளில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. அவற்றை சீர மைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இந்த முகாமில் துணை மேயர் நாகராஜன், உதவி ஆணையாளர் முகமது கமால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரிடம் வியாபாரிகள் சங்க பேரவையினர் மனு அளித்தனர்.
    • டெஸ்ட் பர்சேஸ் முறையை தடுக்க வேண்டும், கப்பலூர் சுங்க சாவடியை அகற்ற வேண்டும்.

    மதுரை

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டலம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அனீஷ்சேகரிடம் மனு வழங்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டலம் தலைவர் மைக்கேல் ராஜ், மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் ஆகியோர் கூறியதாவது:-

    உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். டெஸ்ட் பர்சேஸ் முறையை தடுக்க வேண்டும், கப்பலூர் சுங்க சாவடியை அகற்ற வேண்டும். சுங்க கட்டணத்தை குறைப்பதுடன் அதை 2 மாதத்திற்குள் அகற்றா விட்டால் முற்றுகை போராட்டம் நடத்துவது, வாகன விதிமீறல் என்ற பெயரில் நடைபெறும் அத்துமீறலை தவிர்க்க வேண்டும்.

    மின்கட்டணம், பெட்ரோல், டீசல், கியாஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும். வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு கடற்கரையில் சிலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

    இதில் சங்க நிர்வாகிகள் சூசை அந்தோணி, தங்கராஜ், ஜெயக்குமார், சில்வர் சிவா, குட்டி என்ற அந்தோணி ராஜ், தேனப்பன், கண்ணன், மரிய சுவீட் ராஜன், ஆனந்தன், சுருளிராஜன், பிச்சைபழம், சரவணன், கணேசன், வாசுதேவன் ஆகியோர் பங்கேற்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×