search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூண்டில் வளைவு"

    • கடல் உள்பகுதியிலிருந்து 90 மீட்டருக்கு ஸ்டார் கற்கள் போடும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது
    • 190 மீட்டர் நீளத்திற்கு பாறைகல் போட்டு நிரப்பப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    ராஜாக்கமங்கலம் ஒன்றியம், பொழிக்கரையில் கடல் அரிப்பை தடுப்பதற்காக கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தூண்டில் வளைவுகள் அமைப்பதற்காக அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ. 9 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.

    இதனைத்தொடர்ந்து இப்பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் பொருட்டு 190 மீட்டருக்கு தூண்டில் வளைவுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 190 மீட்டர் நீளத்திற்கு பாறைகல் போட்டு நிரப்பப்பட்டுள்ளது.

    கடல் உள்பகுதியிலிருந்து 90 மீட்டருக்கு ஸ்டார் கற்கள் போடும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மீனவர்களின் நலன் காக்கின்ற வகையில் அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கடல் அரிப்பை தடுப்பதற்காக தூண்டில் வளைவுகள் அமைக்க ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 190 மீட்டர் நீளத்திற்கு பாறைகல் போட்டு நிரப்பப்பட்டுள்ளது.

    மேலும் தற்போது 90 மீட்டருக்கு ஸ்டார் கற்கள் போடும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக வந்துள்ளேன். மீனவர்கள் நலனில் அக்கறை கொண்ட அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மீனவர்களுக்கான திட்டங்கள் பார்த்து பார்த்து நிறைவேற்றப்பட்டது. இந்த தூண்டில் வளைவு இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பாக அமையும். இத்திட்டத்தை இப்பகுதி மக்களுக்கு தந்த எடப்பாடி பழனிசாமிக்கு மீனவ மக்களின் சார்பிலும், நன்றியினை தெரிவித்து க்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

    இதில் மாநில மீன்வள கூட்டுறவு இணைய பெருந்தலைவர் சேவியர் மனோகரன், பொழிக்கரை பங்குத்தந்தை ரெ ஞ்சித்குமார், கேசவ ன்புத்தன்துறை ஊராட்சி மன்ற தலைவர் கெபின்ஷா ஆரோக், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • நெம்மேலியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • தூண்டில் வளைவு மீன் இறங்கு தளம், வலை பின்னும் கூடம் அமைக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அருகே உள்ளது நெம்மேலி மீனவ கிராமம். இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் கடல் அரிப்பால் மீனவர்கள் கடற்கரையில் மீன்பிடி படகுகளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    மேலும் கடல் அரிப்பு காரணமாக கரையில் அமைக்கப்பட்டு இருந்த சாலை முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் மீனவர்களின் போக்குவரத்து பாதிக்கப் பட்டு மீன்பிடி தொழில் செய்ய சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    இதையடுத்து நெம்மேலியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்.

    இதற்கிடையே சட்டசபையில் நடைபெற்ற மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மானிய கோரிக்கையின் போது நெம்மேலி மீனவ குப்பத்தில் தூண்டில் வளைவு மீன் இறங்கு தளம், வலை பின்னும் கூடம் அமைக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

    இதன்காரணமாக நெம்மேலி மீனவ கிராம மக்களின் நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து உள்ளது. இதனை மீனவர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
    • முதல் இரண்டு கட்டங்களாக முறையே ரூ.60 கோடி, ரூ.77 கோடி என அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை, கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின் கட்டமைப்பு முறையாக அமைக்கப்படாததால் ஏற்பட்ட மணல் திட்டுக்களாலும் கடல் அலை சீற்றத்தினாலும் துறைமுக வாயிலில் பல மீனவர்கள் உயிரிழந்தனர்.

    இதன் காரணமாக நான் பல முறை சட்டமன்றத்திலும், தமிழ்நாடு முதல்-அமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் முதல் இரண்டு கட்டங்களாக முறையே ரூ.60 கோடி, ரூ.77 கோடி என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பணிகள் தொடங்குவதில் தொய்வு ஏற்பட்டு மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

    இதனால் விஜய்வசந்த் எம்.பி. கோட்டார் மறை மாவட்ட ஆயர். நசரேன் சூசை, தூத்தூர் மண்டலம் பெபின்சன், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழுமம் இயக்குனர் டனிஸ்டன், கோட்டாறு மறைமாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன், கிளீட்டஸ், அம்புறோஸ் ஆகியோரும் தமிழ்நாடு முதல்-அமைச்சரை சந்தித்து தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக மறு கட்டமைப்பு பணிகளை துரிதப்படுத்தவும், இரையு மன்துறை கிராமத்தை பாதுகாக்கவும் கோரிக்கை வைத்தோம்.

    தொடர் முயற்சியின் காரணமாக தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக மறுகட்டமைப்பு பணிகளுக்கு 3-ம் கட்டமாக ரூ.116 கோடிக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு மொத்தம் ரூ.253 கோடிக்கான ஒப்பந்தம் கோரப்பட்டு மீன்பிடி துறைமுக மறு கட்டமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.அப்போதிலிருந்தே இரையுமன்துறை கிராமத்தை பாதுகாப்பதற்காக தூண்டில் வழைவுகள் அமைக்கவும் கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

    ஒரு பக்கம் கடல் சீற்றமும் அடுத்த பக்கம் தாமிரபரணி ஆறு -ம் உள்ளதால் இயற்கை சீற்றத்தின்போது இரையுமன்துறை கிராமம் ஒட்டுமொத்தமாக அழியும் தருவாயில் உள்ளதால், அழிவிலிருந்து பாதுகாக்க வரும் ஜூன் மாத பருவகால சீற்றத்திற்கு முன் இரையுமன்துறை மீன் இறங்குதள பணியில் உள்ள தூண்டில் வளைவு பணியை உடனடியாக தொடங்கி முடித்து தரும்படியும், இந்த நிதியாண்டின் மீன்வளத்துறை மானிய கோரிக்கை நிதி நிலையில் ரூ.40 கோடி நபார்டு நிதியில் அறிவிக்கவும் கோரிக்கை வைத்தேன். ஆலோசித்து இது குறித்து முதல்-அமைச்சர் எனது கோரிக்கையை ஏற்று கொண்டார். அதன் அடிப்படையில் வருகிற 5-ந்தேதி அன்று நடைபெறும் மீன்வளம் மற்றும் மீனவர் நலன் மானிய கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிடப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் வாக்குறுதி அளித்தார்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறிஉள்ளார்.

    • நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
    • கடந்த 25 வருடங்களாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகிறோம்.

    திசையன்விளை:

    தமிழகத்தில் பாரம்பரியமாக நாட்டு படகு மூலம் மீன் பிடிக்கும் ஒரே மாவட்டம் நெல்லை மாவட்டம் தான். இங்கு ராதாபுரம் தாலுகாவில் கூட்டப்புளி, பெருமணல், பஞ்சல், இடிந்தகரை, தோமையார்புரம், கூத்தங்குழி, உவரி, கூட்டப்பனை, கூடுதாழை உள்ளிட்ட 10 மீனவ கிராமங்கள் உள்ளன.

    இதில் கூட்டப்புளி மற்றும் கூடுதாழை ஆகிய இரு மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு கிடையாது. இதனால் கடல் அலை இந்த கிராமங்களை பாதித்து வருகிறது. மீனவர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர் என்று புகார்கள் எழுந்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக கூடுதாழை மீனவ கிராமத்தில் கடல் அரிப்பின் வேகம் அதிகரித்து கடற்கரை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மீனவர்களின் மீன்பிடி வலைகள், மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி என்ஜீன்கள் ஆகியவை கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன.

    இந்த கிராமங்களில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் கூடுதாழையில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மீனவர்கள் கடந்த 11-ந்தேதியில் இருந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக இன்று 10-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உண்ணாவிரதத்திலும் இருக்க போவதாக அறிவித்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மாவட்டத்திலும் கூடுதாழை மீனவர்களுக்கு ஆதரவாக புன்னக்காயல், ஆலந்தழை, அமலிநகர், பெரியதாழை, குலசேகரபட்டினம், மணப்பாடு பகுதிகளில் வசிக்கும் நாட்டுப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் கூறுகையில், கடந்த 25 வருடங்களாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகிறோம். தற்பொழுது 100 அடி வரை கடல் ஊருக்குள் புகுந்து உள்ளதால் மணல்மேடுகள் மட்டுமே உள்ளது.

    இது இன்னும் ஓரிரு நாட்களில் சரிந்து விடும் என்றும் இதனால் பல வீடுகள் கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது என்றனர்.

    • கோட்டக்குப்பம் அருகே தூண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர்கள் மறியலில் ஈடுப்பட்டனர்.
    • பொம்மையார்பாளையம் மீனவ கிராமம் வரை தான் செயல்படுத்தப்பட்டு மீனவர்கள் பயனடைந்துள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தை சுற்றி பிள்ளைசாவடி, கோட்டக்குப்பம், நடுகுப்பம், தந்திரியான்குப்பம், பொம்மையார்பாளையம் உள்ளிட்ட 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த மீனவ கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக கடல் சீற்றத்தின் காரணமாக கடற்கரை ஓரத்தில் மண்ணரிப்பு ஏற்பட்டு கடற்கரை ஓரத்தில் வசிக்கக்கூடிய மீனவர்களின் வீடுகள் மற்றும் படகு நிறுத்தும் இடங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் அழிந்தது. இதனை கருத்தில் கொண்டு அந்த பகுதியில் உள்ள மீனவர்களின் நலனுக்காக அரசு சார்பில் தூண்டில் வளைவு திட்டம் மூலம் கடற்கரை ஓரங்களில் கருங்கற்களை கொட்டி மண்ணரிப்பை தடுத்தனர். இந்த திட்டம் பொம்மையார்பாளையம் மீனவ கிராமம் வரை தான் செயல்படுத்தப்பட்டு மீனவர்கள் பயனடைந்துள்ளனர். ஆனால் அதனை அடுத்துள்ள பிள்ளைசாவடி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மீனவர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் பிள்ளைசாவடி மீனவர்கள் இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு அளித்தும் 3 முறை சாலை மறியல் செய்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

    ஆத்திரமடைந்த பிள்ளைசாவடி மீனவ பொதுமக்கள் ஆண் பெண் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை புதுவையில் இருந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலை பிள்ளை சாவடி மெயின் ரோட்டில் திடிரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கோட்டகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் மற்றும் வானூர் தாசில்தார் கோவத்தனன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து மீனவர்கள் கூறுகையில் எங்களது பகுதியில் கடல் சீற்றத்தால் மன்னரிப்பு ஏற்பட்டு கடற்கரை ஓரமிருந்த வீடுகள் படகு நிறுத்துமிடம் அனைத்தும் சேதம் ஆனது. அதனால் எங்களது பகுதியில் அரசு சார்பில் தூண்டில் வளைவு திட்டம் செயல்படுத்தப்பட்டு கடற்கரை ஓரங்களில் மண்ணரிப்பை தடுப்பதற்கு கற்களை கொட்டி மண்ணரிப்பை தடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் முன்னிலையில் வானூர் தாசில்தார் மற்றும் உரிய அதிகாரிகள் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என உத்தரவு அளித்ததின் பெயரில் மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. திடீரென்று 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த இடம் பரபரப்பாக இருந்தது. 

    • புதிதாக அமைக்கப்பட்ட தூண்டில் வளைவு நுழைவு வாயில் வழியாக மீன் பிடித்து வரக்கூடிய படகுகள் கரைக்கு திரும்புகின்றன.
    • மின் விளக்குகள் இல்லாத காரணத்தால் படகுகள் தூண்டில் வளைவில் மோதி சேதம் அடைவதாக அதில் கூறியுள்ளார்.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் சித்ராங்கதன், மத்திய இணை மந்திரி எல். முருகனிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தூண்டில் வளைவு நுழைவு வாயில் வழியாக மீன் பிடித்து வரக்கூடிய படகுகள் கரைக்கு திரும்புகின்றன. இதன் நுழைவு வாயில் பகுதியில் மின் விளக்குகள் இல்லாத காரணத்தாலும், இருட்டாக இருக்கின்ற காரணத்தாலும் படகுகள் தூண்டில் வளைவில் மோதி சேதம் அடைந்து வருகின்றன. இதனால் மீனவர்களுக்கு பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க தூண்டில் வளைவு நுழைவு வாயில் பகுதியில் 4 சோலார் மின்விளக்கு கோபுரங்கள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    • மீனவ மக்களின் குடியிருப்புகளை பாதுகாக்க நடவடிக்கை
    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தகவல்

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் தொகுதி தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட இரையுமன்துறை மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக அந்த பகுதியில் போடப்பட்ட கடலரிப்பு தடுப்புச்சுவர் அலையில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்ததால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் அந்த பகுதியில் அரசு பள்ளியில் அமைக்கப்ப ட்டுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதுபற்றி அறிந்த ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. நேரில் சென்று சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் முகாமில் தங்கியுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க ஏற்பாடு செய்தார்.

    தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்தூர் ஊராட்சி, இரயுமன்துறை மீனவ கிராமத்தில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் கடலரிப்பு தடுப்பு சுவர்கள் சேதமடைந்து குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பதிக்கப்பட்டுள்ளது. அந்த மக்கள் இரையுமன்துறை அரசு தொடக்கப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். மேலும், தற்போதுள்ள சூழ்நிலையில் மீனவர் குடியிருப்புகளை பாதுகாக்க தற்காலிக தடுப்பு சுவர் போர்க்கால அடிப்படையில் அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினேன்.

    அதுபோல, தொடர்ந்து ஏற்படுகின்ற கடல் சீற்றத்திலிருந்து இரையுமன்துறை மீனவ மக்களின் குடியிருப்புகளை நிரந்தரமாக பாதுகாப்பதற்கு தொடர்தூண்டில் வளைவுகள் மற்றும் கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்க மீன் வளத்துறையால் ரூ. 30 கோடி மதி ப்பீட்டில் நபார்டு திட்ட அலகு 28 - ன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.

    கூடிய விரைவில் அரசாணை வெளியிட்டு மீன் வளத்துறையின் மூலம் செயல்பாட்டிற்கு வரும். மேலும், இதே போல் சின்னத்துறை, இரவிபுத்தன் துறை கிராமங்களிலும் முறையே 35.50 கோடி, 19.50 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவுகள் அமைக்கவும் நாபார்டு திட்ட அலகு 28-ன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×