search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்வாய்"

    • கழிவு நீர் கால்வாயின் மேல் மூடப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப் உடைந்து கார் கால்வாய்க்குள் சிக்கியது.
    • இதே போல கடந்த வாரத்திலும் ஒரு கார் கால்வாய்க்குள் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
    • மதுரையில் வைகை கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளர்.
    • ஒரேநாள் மழைக்கு மதுரை தத்தளித்துள்ளது.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    ஒரு நாள் மழைக்கே தாங்காத மதுரை தத்தளிக்கி றது . வடகிழக்கு பருவமழை தொடர்வதற்கு முன்பாகவே நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக கார், இருசக்கர வாகனங்களை மூழ்கடிக்கும் அளவிலே சாலைகளில் தண்ணீர் ஓடியதால், பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் திரும்ப முடியாமல் பலரது வாக னங்கள் தண்ணீரிலே மூழ்கி செயலிழந்தது. அதற்கு சாட்சியாக சிலர் வாக னத்துடன் கீழே விழுந்து படுகாயம் அடைந்த நிகழ்வு களும் ஆங்காங்கே நடை பெற்றது.

    சாலைகளை எல்லாம் சீர் செய்ய வேண்டும். அதே போல் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் மற்றும் மதுரை மாவட்ட அமைச்சர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    ஒரே நாள் மழைக்கு மதுரை தத்தளித்துள்ளது.இந்த ஆண்டு அதிகமாக வடகிழக்கு பருவமழை இருப்பதாக கூட வானிலை ஆய்வு மையங்களுடைய கருத்துக்கள் சொல்லப்படு கிறது. வானிலை ஆராய்ச்சி மையத்தியின் எச்ச ரிக்கையை நாம் கவனிக்க வேண்டும். ஆகவே வைகை ஆற்று வரத்து கால்வாய் களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முதலமைச்சர் இன்றைக்கு, ஒரு நாள் மழைக்கு சாலையில் ஆறுகள் போல ஓடும் தண்ணீரை சரி செய்ய உரிய முன் எச்சரிக்கை நட வடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மாவட்ட அமைச்சர்கள் போர்க்கால நடவடிக்கை எடுத்திட ஆய்வு கூட்டத்தை நடத்த முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    • பிரச்சினையை தீர்ப்பதற்கு பேரூராட்சி உதவி இயக்குநர் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தோவாளை அருகே திடல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் புதுக்குளம்- கடம்பாடி விளாகம் காலனி சாலை உள்ளது. இச்சாலையானது மிகவும் குறுகலாகவும், மிகவும் பழுதடைந்தும் காணப்பட்டு வருகிறது. இந்த சாலையானது நெடுஞ் சாலைத்துறையின் கிராம சாலை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில் சரி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதி நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு புதுக்குளம்- கடம்பாடி விளாகம் காலனி சாலை யினை சரி செய்வதற்கு உரிய நடவடிக்கையினை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

    இதேபோல் சிறமடம்-அனந்தனார் கால்வாய் சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.6 கோடியே 98 லட்சத்திற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, இந்த சாலை ஊராட்சி சாலையாக ஆக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதற்கான நிதி யினை அரசு ஒதுக்கி பணி யினை தொடங்கிட வேண்டும்.முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.3 கோடி ஒதுக்கப்படும் என்றும் இதன்பேரில் ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை நிறைவேற்றும் பொருட்டு மாவட்ட கலெக்டரிடம் விவரங்கள் தெரிவிக்க கூறப்பட்டிருந்தது. இதில் அரசு தனி கவனம் செலுத்தி நிதி ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு ஆண்டுகள் கடந்தும் இத்திட்டம் கொண்டு வரப்பட வில்லை. அஞ்சுகிராமம், பால்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட் டுள்ளது. இப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடி தண்ணீர் வசதி கிடைக்கப் பெறவில்லை. இப்பிரச்சினையை தீர்ப்ப தற்கு பேரூராட்சி உதவி இயக்குநர் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

    இதேபோன்று ஈசாந்தி மங்கலம் பகுதியில் தற்போது குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு வரு கின்ற வீடுகளுக்கு குடி தண்ணீர் வசதி முறையாக செய்யப்பட வேண்டும். தோவாளையில் கட்டப்பட்டு வருகின்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணி மண்டப பணிகளை விரைந்து கட்டி முடிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாக்களின் முக்கிய பாசன நீராதாரமாக அமராவதி பிரதான கால்வாய் உள்ளது.
    • மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவமழை கைகொடுக்காத நிலையில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது.

    மடத்துக்குளம்

    உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாக்களின் முக்கிய பாசன நீராதாரமாக அமராவதி பிரதான கால்வாய் உள்ளது. அமராவதி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் 63 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த கால்வாய் மூலம் 25 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு நேரடியாக பலனளித்து வருகிறது. இதுதவிர நிலத்தடி நீராதாரத்தை உயர்த்துவதற்கு உதவுவதன் மூலம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களின் பாசனத்துக்கு கைகொடுக்கிறது.

    இந்தநிலையில் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் பிரதான கால்வாயில் பல இடங்களில் சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் கால்வாயின் கரையில் மட்டுமல்லாமல் கால்வாயின் உள்ளேயும் குப்பைகளை கொட்டும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் கால்வாயில் தேங்கும் குப்பைகள் மற்றும் பாலிதீன் கழிவுகள் நீர் திறப்பின்போது மடைகளில் அடைப்பை ஏற்படுத்துவதால் பெருமளவு நீர் வீணாகிறது. அத்துடன் கழிவுகளால் விளைநிலங்களும் வீணாகும் நிலை உள்ளது.மேலும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் மண் குவியல் நிறைந்து பாசன நீர் செல்வதில் தடைகளை ஏற்படுத்துகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் மடத்துக்குளம் பகுதியில் பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் அமராவதி பிரதான கால்வாயை தூர் வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவமழை கைகொடுக்காத நிலையில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைப்பயிர்களை காப்பாற்ற போராடும் நிலை உள்ளது.எனவே அமராவதி அணையிலிருந்து உயிர்த்தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். அமராவதி அணையில் மொத்தமுள்ள 90 அடியில் தற்போது 64.87 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது குறைந்த அளவான இருப்பேயாகும்.

    பிரதான கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் வீணாகாமல் கடைமடை வரை உள்ள விவசாயிகளுக்கும் முழுமையாக போய் சேர வேண்டியது அவசியமாகும். இதனைக் கருத்தில் கொண்டு கால்வாய் தூர்வாரப்படுவது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.ஆனால் கிருஷ்ணாபுரம் முதல் துங்காவி வரையிலான குறைந்த தூரத்துக்கு மட்டுமே தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது. எனவே கால்வாயை முழுமையாக தூர்வாரவும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மர்மமாக இறந்துகிடந்தது குறித்து போலீசார் விசாரணை
    • போதையில் கால்வாயில் தவறி விழுந்ததால் இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தக்கலை :

    தக்கலை அருகே உள்ள குமாரபுரம் படப்பகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45), கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி பிரேமலதா மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

    சுரேசுக்கு மது பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி மது அருந்தி வந்ததால் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக பிரேமலதா தனது குழந்தைகளுடன் கணவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் சுரேஷ் தனியாக வசித்து வந்தார்.

    தினமும் காலையில் வேலைக்கு செல்லும் அவர், மாலையில் மது அருந்தியபடி வருவாராம். நேற்று மாலையும் சுரேஷ் மது அருந்திய நிலையில் வீட்டுக்கு வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை வீட்டின் அருகே உள்ள கால்வாயில் அவர் பிணமாக கிடந்துள்ளார்.

    இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கொற்றிகோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.

    அவர்கள் கால்வாயில் பிணமாக கிடந்த சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது மனைவிக்கும் தகவல் கொடுத்தனர்.

    வீட்டுக்கு சென்ற சுரேஷ் கால்வாயில் பிணமாக கிடந்தது எப்படி? என்பது மர்மமாக உள்ளது. அவரை யாராவது அழைத்துச் சென்று தாக்கி இருக்கலாமா? அல்லது போதையில் கால்வாயில் தவறி விழுந்ததால் இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஜய்வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தனர்
    • காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    மார்த்தாண்டம் :

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்தூர் ஊராட்சியில் உள்ள இரவிபுத்தன்துறை கிராம மக்கள் தங்களது பகுதியிலிருந்து பல்வேறு இடங்களுக்கு செல்ல பாலம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    இதனால் இந்த கிராம மக்கள் விஜய் வசந்த் எம்.பி. மற்றும் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஆகியோரிடம் இந்த பகுதியில் ஏ.வி.எம். சானலின் குறுக்கே புதிய பாலம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று ஏ.வி.எம். கால்வாயின் குறுக்கே பாலம் கட்ட விஜய்வசந்த் எம்.பி. தனது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சமும், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.7.50 லட்சமும் ஒதுக்கீடு செய்தனர்.

    மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டங்களின் கீழ் ரூ.31 லட்சத்து 9 ஆயிரத்து 500 என மொத்தம் ரூ.48½ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து புதிய பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்ததையடுத்து விஜய்வசந்த் எம்.பி., ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் இணைந்து புதிய பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார், இரவிபுத்தன்துறை பங்கு தந்தை ரதீஷ், மாவட்ட நிர்வாகிகள் அந்தோணிபிச்சை, ராஜூ மற்றும் மகேஷ், காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • வண்டியூர் கண்மாய் பிரதான கால்வாயில் தண்ணீர் சிவப்பு நிறமாக மாறியது.
    • ஒருவித ரசாயன நெடி வீசுகிறது.

    மதுரை

    மதுரை நகரில் குடிநீர் ஆதாரமாக மாடக்குளம், வண்டியூர், செல்லூர் கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாயை பாதுகாக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஆனாலும் ஆக்கிரமிப்புகள், கழிவுநீர் கலப்பு என தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதனால் கண்மாய் நீர் மாசுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. வண்டியூர் கண்மாயில் இருந்து வைகையாற்றுக்கு பிரதான நீர்வரத்து கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் செல்லும் தண்ணீர் சிவப்பு நிறமாக மாறியுள்ளது.

    மேலும் ஒருவித ரசாயன நெடியும் வீசுகிறது. சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தும் வகையில் பிரதான கால்வா யில் சாயப்பட்டறைகள் மற்றும் பெயிண்ட் நிறுவ னங்கள் கழிவுநீரை கலந்ததா? என தெரிய வில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். 

    • நீண்ட இழுபறிக்கு பின் தளி எத்தலப்ப நாயக்கருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது
    • பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று பொக்கிஷமாக உள்ள தளி எத்தலப்ப நாயக்கர் சிலைகள் காண்டூர் கால்வாய் அருகே திறந்த வெளியில் வைக்கப்பட்டு உள்ளது.

    உடுமலை: 

    உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலை காண்டூர் கால்வாய் அருகே சுதந்திர போராட்ட வீரர் தளி பாளையக்காரர் எத்தலப்ப நாயக்கருக்கு மணிமண்டபம் கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.நீண்ட இழுபறிக்கு பின் தளி எத்தலப்ப நாயக்கருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    அதைத் தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மணிமண்டபம் மற்றும் உருவச்சிலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் மணிமண்டபம் கட்டுவதற்கு திருமூர்த்தி நகரில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு ஏக்கர் புறம்போக்கு நிலமும் தேர்வு செய்யப்பட்டது.அறிவிப்பு வந்து நீண்ட நாட்கள் ஆகியும் மணிமண்டபம் கட்டும் பணி துவங்கப்படாதது அனைத்து தரப்பினரையும் வேதனை அடைய செய்து உள்ளது.

    அதுமட்டுமின்றி பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று பொக்கிஷமாக உள்ள தளி எத்தலப்ப நாயக்கர் சிலைகள் காண்டூர் கால்வாய் அருகே திறந்த வெளியில் வைக்கப்பட்டு உள்ளது.எனவே மணிமண்டபம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் மற்றும் திறந்த வெளியில் உள்ள பழங்கால சிலைகள் பாதிப்பு அடையாமல் இருக்க மேற்கூரை அமைத்து பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பாலவாக்கம், கொட்டிவாக்கம், சோழிங்கநல்லூர், அக்கரை பகுதியில் நிலம் கையயகப்படுத்தப்படுகிறது.
    • .8 மாதங்களில் சாலை விரிவாக்கம் முடிந்து விடும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை மிகவும் முக்கிய பாதையாகும். புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், வேளாங்கன்னி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல இந்த சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த சாலை திருவான்மியூர் முதல் அக்கரை வரை 10.5 கி.மீ. நீளமுள்ள 60 முதல் 70 அடி வரை அகலத்தில் நான்கு வழி சாலையாக உள்ளது.

    கிழக்கு கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருப்பதை ஆய்வு செய்து 2008-ம் ஆண்டில் அணுகு சாலை, வடிகால் நடைபாதையுடன் ஆறுவழி சாலையாக மாற்றும் பணி தொடங்கியது. இந்த பகுதியில் 6 வருவாய் கிராமங்கள் உள்ளன.

    கொட்டிவாக்கம், பாலவாக்கம் கிராமத்தில் பெரும்பாலானவருக்கு இழப்பீடு வழங்கி நிலம் கையகப்படுத்தி சாலை விரிவாக்கம் பணி கடந்த ஆண்டு தொடங்கியது.

    இந்த நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணி மீண்டும் வேகமாக நடக்கிறது. பாலவாக்கம், கொட்டிவாக்கம், சோழிங்கநல்லூர், அக்கரை பகுதியில் நிலம் கையயகப்படுத்தப்படுகிறது.

    5 அடி அகலம், 5 அடி ஆழத்தில் மழைநீர் வடிகால் கட்டப்படுகிறது. ஆங்காங்கே 200, 300, 500 மீட்டர் நீளம் என 4 கி.மீ. நீளத்தில் வடிகால் கட்டப்படுகிறது. ஒவ்வொரு 30 மீட்டர் இடைவெளியில் மழைநீர் வடிகாலுக்குள் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட உள்ளது.

    மேலும் கட்டப்படும் வடிகாலில் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் மழைநீர் சேரும் வகையில் சாலையின் குறுக்கே 9 இடங்களில் நீர்வழித் தரைப்பாலம் அமைக்கப்பட உள்ளது.

    இதே வேகத்தில் பணிகள் நடந்தால் நான்கு வழி சாலை அடுத்த ஆண்டு ஆறு வழி சாலையாக மாறும்.

    நிலம் கையகப்படுத்தும் இடங்களில் வடிகால் கட்டி வருகிறோம். இரு திசைகளில் வடிகால் பணி முடிந்ததும் சாலை விரிவாக்கம் செய்யப்படும். 8 மாதங்களில் சாலை விரிவாக்கம் முடிந்து விடும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • நீர்நிலை கால்வாய்களையும் சுத்தப்படுத்தும் பணி நடந்தது.

    அரவேணு,

    கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எனவே அங்கு உள்ள அனைத்து நீர்நிலை கால்வாய்களையும் சுத்தப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    கோத்தகிரி சிறப்பு பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, செயல் அலுவலர் மணிகண்டன் உத்தரவின்பேரில் துப்புரவு ஆய்வாளர் ரஞ்சித் தலைமையில் ஊழியர்கள் குமரன் காலனி, கன்னியாதேவி காலனி ஆகிய பகுதிகளில் உள்ள கால்வாய்கள் மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களை சுத்தம் செய்து வருகின்றனர்.

    • பொதுப்பணித்துறை அதிகாரியிடம் தக்கலை ஒன்றிய கவுன்சிலர் மனு
    • இன்னல்களை கொடுத்து வருகிற தென்னக ரெயில்வே துறையினர் மீது மாவட்ட கலெக்டருக்கு பல புகார்

    கன்னியாகுமரி : 

    தக்கலை ஊராட்சி ஒன்றி யம் ஆத்திவிளை ஊராட்சி பகுதியில் உள்ள தென்னக ரெயில்வே துறையினரின் இரணியல் ரெயில் நிலைய விரிவாக்க பணி தொடங்கி 18 மாதங்களாகியும் மிகவும் மந்த நிலையில் பணிகள் நடை பெற்று வருகின்றன. இதனால் பெருமளவில் பொதுமக்கள் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    குறிப்பாக 18 மாதங்களாக திங்கள்நகர்-அழகிய மண்ட பம் சாலை போக்குவரத்து பாதிப்பு, இரணியல் கிளை கால்வாயில் பாலம் தாழ்வாக கட்டப்பட்டுள்ளதால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடினால் உள்ள மக்களின் பாதிப்பு, ஆத்திவிளை பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட பாலத்தை திறக்காததால் பரம்பை பகுதியில் துண்டிக்கப்பட்ட பாலத்திற்கு மாற்று பாதை இன்றி மக்களின் பெருமள விலான பாதிப்பு, மண்டைக் காடு, தக்கலை, குமார கோவிலுக்கு இரணியல் கோணம் வழியாக சென்று வந்த அரசு பேருந்து வழித்தடத்தில் இரணியல் கோணம் பகுதியில் உள்ள சாலையை எந்த முன்னறிவிப்பும் இன்றி துண்டித்து தொடர்ந்து மக்களுக்கு பல இன்னல்களை கொடுத்து வருகிற தென்னக ரெயில்வே துறையினர் மீது மாவட்ட கலெக்டருக்கு பல புகார் மனுக்கள் கொடுத்தும் நட வடிக்கை எடுக்கப்ப டவில்லை.

    அதனைத்தொடர்ந்து அதன் ஒரு பகுதியாக இரணியல் கிளை கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுத்திட வேண்டி நாகர்கோவில் பொதுப்பணி துறை அலு வலகத்தில் தக்கலை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கோல்டன் மெல்பா, திங்கள் நகர் பேரூராட்சி தலைவர் சுமன், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஹரிதாஸ், ஜேக்கப், பாச னத்துறை தலைவர் ஜேசுதாஸ் மற்றும் விவசாய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜான் சவுந்தர், துணை தலைவர் ஜேக்கப் அருள் பால் மற்றும் காங்கிரஸ் பிர முகர்கள், பொதுமக்கள் மனு அளித்தனர்.

    • பொது மக்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மீஞ்சூர்- வடசென்னை அனல் மின் நிலையம் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களது போராட்டம் தொடரும் என்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. வல்லூர், கொண்டக்கரை, குருவி மேடு, கவுண்டர்பாளையம், வெள்ளி வாயில் சாவடி உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து வெளிவரும் மழை நீர் அத்திப்பட்டுபுதுநகர், தாங்கல் வழியாக சென்று கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.

    அத்திப்பட்டு புதுநகர் தாழ்வான பகுதி என்பதால் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் வெள்ள நீர் குடியிருப்புக்குள் புகுந்து பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து தாங்கல் பகுதியில் கன மழையின் போது வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் இருக்க தடுப்பு கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு வல்லூர் தேசிய அனல் மின் நிலைய சமூக மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டு 50 அடி அகலத்திற்கு சுமார் 400 மீட்டர் தூரம் தடுப்பு கால்வாய் அமைக்கப்பட உள்ளது.

    ஆனால் அந்த பகுதி சுமார் 1½ கிலோ மீட்டர் இருப்பதாக தெரிகிறது. ஆனால் முழுவதும் அமைக்காமல் 400 மீட்டர் தூரத்துக்கு 50 அடி அகலத்திற்கு மட்டும் தடுப்பு கால்வாய் அமைப்பதால் எந்த பயனும் இல்லை எனவும் 100 அடி அகலத்திற்கு சுவர் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நீர் நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தடுப்பு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றதாக தெரிகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இடத்தை முறையாக அளவீடு செய்து தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்றுய கூறி அத்திப்பட்டு புதுநகர் மேற்கு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த இரண்டு வாரமாக கட்டுமான பணி நடை பெறும் இடத்தை முற்றுகை யிட்டு தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே பொது மக்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மீஞ்சூர்- வடசென்னை அனல் மின் நிலையம் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி தலைவர் சுகந்தி வடிவேல், துணைத் தலைவர் கதிர்வேல், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, முறையாக அளவீடு செய்து முழுவதும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் உள்ள தாங்கல் பகுதியில் 400 மீட்டர் தூரம் மட்டுமே தடுப்புச் சுவர் கட்டுவதால் மழைக் காலங்களில் சுவர் இடிந்து விழுந்து மீண்டும் அத்திப்பட்டு புதுநகர் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.

    மேலும் தாங்கல் பகுதியை தூர் வார வேண்டும். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களது போராட்டம் தொடரும் என்றனர்.

    ×