search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்ச்சல்"

    • காய்ச்சல்களில் பல வகைகள் இருக்கின்றன.
    • காய்ச்சலை கையாளும் முறையில் மாற்றம் வேண்டும்.

    காய்ச்சலை நாம் அணுகும் முறையால்தான் உணவுரீதியாகவும் நாம் தடுமாற்றம் அடைகிறோம். எனவே, காய்ச்சலை கையாளும் முறையில் மாற்றம் வேண்டும். காய்ச்சல்களில் பல வகைகள் இருக்கின்றன என்பது பலரும் அறிந்ததுதான். அது சாதாரண காய்ச்சலாக இருந்தாலும், தீவிரமான காய்ச்சலாக இருந்தாலும் நாம் பயப்படத் தேவையில்லை.

    காய்ச்சல் வந்தவுடன் நம்மில் பலர் அப்படியே படுத்துவிட்டு, சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருப்பார்கள். இதைத்தான் முதலில் தவிர்க்க வேண்டும். நமது உடலில் காய்ச்சல் ஏன், எதனால் ஏற்படுகிறது. அதை எப்படி சரிசெய்வது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

    நமது சுற்றுப்புறத்திலுள்ள வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற ஏதாவதொரு கிருமி நம் உடலுக்குள் சென்றுவிட்டால் அதை நமக்கு உணர்த்தக்கூடிய ஓர் அறிகுறிதான் காய்ச்சல். அப்படி உடலுக்குள் சென்ற கிருமியை எதிர்த்து உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு செயல்படுகிறபோது உடலின் வெப்பநிலை அதிகரிப்பதை காய்ச்சல் என்று சொல்கிறோம்.

    காய்ச்சலோடு தலைவலி, வாந்தி, குமட்டல், மூட்டுவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அது வைரஸ் காய்ச்சலாக இருக்கலாம். காய்ச்சலோடு சிறுநீர் கழிக்கையில் எரிச்சல் அல்லது ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அது சிறுநீரக நோய்த் தொற்றாக இருக்கலாம். காய்ச்சலோடு வாந்தி, குமட்டல், பேதி போன்ற அறிகுறிகள் இருந்தால் வயிற்றில் ஏதாவது தொற்று ஏற்பட்டிருக்கலாம். காய்ச்சலோடு கண் மஞ்சள் நிறமாக இருந்தால் கல்லீரலில் நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கலாம். காய்ச்சலோடு இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் நுரையீரலில் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம்.

    உடலில் அதிக களைப்பு ஏற்பட்டு, தண்ணீர் குடிக்காமல் வெயில் காலங்களில் வெளியே செல்கிறபோதும் உடல் வெப்பநிலை அதிகரித்து காய்ச்சல் வருவதை Heat Stroke என்று சொல்கிறோம். அதேபோல அம்மை நோய்கள் ஏற்படுகிறபோது உடலில் கொப்புளங்களோடு காய்ச்சலும் வரும். எனவே, என்ன காரணத்தால் அல்லது எந்தக் கிருமியினால் காய்ச்சல் வந்துள்ளது என்பதை சரியாக கண்டறிவதற்கே இரண்டு நாட்கள் வரை ஆகும்.

    மலேரியா, டைபாய்டு, டெங்கு, சிக்கன்குனியா என்று நூற்றுக்கணக்கான காய்ச்சல் இருக்கிறது. எனவே, உடல் வெப்பநிலை எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்பதை தெர்மாமீட்டர் மூலம் கண்டறிவதோடு என்ன காரணத்தினால் அந்த காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்பதை சரியாக கண்டறிந்த பிறகே அதற்குரிய சரியான மருத்துவத்தை மேற்கொள்ள முடியும்.

    காய்ச்சலின்போது நீர்ச்சத்து தொடர்பான எல்லா உணவுகளையுமே நாம் புறக்கணிக்கிறோம். உடல் மேலும் குளிர்ச்சியடைந்து காய்ச்சல் அதிகமாகிவிடும் என்றும் தவறாக நம்புகிறோம். காய்ச்சலின்போது உடல் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் உடலில் நீர்வறட்சி ஏற்படுகிறது. இந்த நீர்வறட்சியினால் ஏற்படுகிற பாதிப்புகள்தான் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துகிற நிலைக்குக் கொண்டுபோய் விடுகிறது. எனவே, அதிகளவு நீர் அருந்துவதோடு நீராகாரங்களையும் எடுத்துக்கொள்வது நல்லது.

    இந்த நீராகாரங்கள் நமது உடலில் உள்ள எலக்ட்ரோலைட்களின்(Electrolyte) அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. தண்ணீரின் சுகாதாரம் தொடர்பாக பல சந்தேகங்கள் இருப்பதால், கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடித்துக் கொள்ளலாம். முக்கியமாக, காய்ச்சல் வந்த பிறகு இரண்டு நாட்கள் வரை உடலுக்கு போதுமான ஓய்வு கொடுக்க வேண்டும்.

    காய்ச்சல் வந்துவிட்டால் இதைத்தான் சாப்பிட வேண்டும். இதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதே தவறான புரிதல். இதுபோன்ற நேரங்களில் நாம் இவற்றை எல்லாம் சாப்பிடக்கூடாது என்று நாமாகவே நினைத்துக்கொண்டு, சாப்பிடாமலேயே இருப்பதுதான் உடல் பிரச்னைகளை இன்னும் அதிகமாக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

    காய்ச்சலின்போது மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகளை சாப்பிடுவதோடு தண்ணீர், இளநீர், மோர், பழச்சாறுகள், சூப் போன்ற நீராகாரங்களை அதிகளவில் எடுத்துக்கொள்வது அவசியம். உடலுக்குள் புகுந்திருக்கிற கிருமிக்கு எதிராக செயல்படுகிறபோது, அதற்கு உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைப்பதற்கு நாம் எப்போதும்போல உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் இருக்கையில் நமது வாய்க்கு எதை சாப்பிடப் பிடிக்கிறதோ அதை சாப்பிடலாம்.

    நாம் வழக்கமாக சாப்பிடுகிற எல்லா விதமான உணவுகளையும் சாப்பிடலாம். நாம் சரியாக சாப்பிட்டால்தான் காய்ச்சலில் இருந்து விரைவாக குணமடைய முடியும். ஆனால், நமக்குப் பிடிக்கும் என்பதற்காக குளிர்பானங்கள், துரித உணவுகள் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்ற ஆரோக்கியக் கேடான உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வயிறு சம்பந்தமான பிரச்னைகள் இருந்தால் அதிகக் காரமான உணவுகளைத் தவிர்ப்பது முக்கியம்.

    • அனைத்து வயதினருக்கும் தொண்டை வலி, உடல் சோர்வு மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.
    • எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவா்களுக்கு தீவிர தொண்டை வலி மற்றும் காய்ச்சல் ஏற்படுகிறது.

    சென்னை:

    தொண்டை வலியுடன் கூடிய காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    பருவ காலத்தில் பரவும் வழக்கமான வைரஸ் பாதிப்புதான் இது என்றாலும், முன் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம் என்று அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    பகல் வேளைகளில் அதீத வெப்பம் மற்றும் மாலை வேளைகளில் மழைப்பொழிவு என தமிழகத்தின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக பருவ நிலையில் மாற்றங்கள் காணப்படுகின்றன. இதன் எதிர்விளைவாக குழந்தைகள், முதியவர்கள், பெண்களுக்கு கடுமையான தொண்டை வலி, உடல் அசதி, காய்ச்சல் மற்றும் சளி பாதிப்புகள் ஏற்படுவதாகத் தெரிகிறது.

    அதன் தொடா்ச்சியாக மருத்துவமனைகளில் புறநோயாளிகளாக வரு ரின் எண்ணிக்கையும் உயா்ந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படத் தொடங்கி 3 வாரங்கள் மட்டுமே ஆன நிலையில், தற்போது காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்று பரவி வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடா்பாக நோய்த் தொற்றியல் சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டா் அப்துல் கபூா் கூறியதாவது:-

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அதேவேளையில், சூழலியல் மாற்றங்களால் பரவும் வைரஸ் தொற்றுகள் ஆங்காங்கே பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

    அனைத்து வயதினருக்கும் தொண்டை வலி, உடல் சோர்வு மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. பெரும்பாலானோர் அதற்கு டாக்டர்களை நாடுவதில்லை. 3-ல் இருந்து 5 நாட்களுக்குள் அந்த பாதிப்புகள் குணமாகிவிடுவதே அதற்கு காரணம்.

    எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவா்களுக்கு தீவிர தொண்டை வலி மற்றும் காய்ச்சல் ஏற்படுகிறது. அவா்களுக்கு பாராசிட்டமால் மற்றும் வைட்டமின் மருந்துகளையே பெரும்பாலும் பரிந்துரைக்கிறோம். வழக்கமான வைரஸ் தொற்று இது என்பதால் ஆன்டிபயோடிக், ஆன்டி வைரல் மருந்துகள் இதற்கு தேவையில்லை. வெது வெதுப்பான நீரில் உப்பு அல்லது கிருமித் தொற்று நீக்க மருந்துகளைக் கலந்து கொப்பளித்தால் போதுமானது.

    காய்ச்சிய தண்ணீரைப் குடிப்பதும், கைகளை சோப்பால் அடிக்கடி கழுவுவதும் நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த மாதம் பெய்த மழையின்போது டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏ.டி.எஸ். கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.
    • ஈக்கள் மூலம் 600 வகையான பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுகின்றன.

    சென்னை:

    சென்னையில் கடந்த மாதம் வெயில் சுட்டெரித்த நிலையில், திடீரென்று பலத்த மழையும் பெய்தது. இந்த திடீர் தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் சென்னையில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.

    பலருக்கு காய்ச்சலுடன் தொண்டைவலி, சளி, இருமல் உள்ளிட்ட உடல்நிலை பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் மர்ம காய்ச்சல் பரவுவதால் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் புற நோயாளிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்து வருகிறது.

    இது பெரும்பாலும் சாதாரண பாதிப்புகள் என்றாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு பலவித உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

    மேலும் கடந்த மாதம் பெய்த மழையின்போது டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏ.டி.எஸ். கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.

    மேலும் சென்னையில் ஈக்களின் பெருக்கமும் அதிகரித்து விட்டது. ஈக்கள் அதிக அளவில் பெருகியதால் அதன்மூலம் வாந்தி, பேதி, காலரா, டைபாய்டு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பழங்கள், மீன், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களை ஈக்கள் மொய்ப்பதால், அந்த உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஈக்கள் மூலம் 600 வகையான பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுகின்றன. இந்த தொற்றுக்களே வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றன.

    சென்னையில் அதிகரித்து வரும் மர்ம காய்ச்சலால் ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சை பெறவருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ஈக்கள் மூலமே அதிக நோய் பரவுகிறது.

    எனவே மீன் மற்றும் இறைச்சிகளை நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும். பழங்கள், காய்கறிகளை நன்றாக அலசியபின் சாப்பிடலாம். ஈக்கள் மொய்க்கும் இடங்களில் உணவுப்பொருட்களை வைக்கக் கூடாது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சென்னையில் கொசு மற்றும் ஈக்களை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் மழைநீர் வடிகால் தொட்டி, வடிகால், நீர்நிலைகள், குப்பை தொட்டிகள் இருக்கும் பகுதிகளில் மருந்து தெளிக்கப்படுகிறது. கொசு புகையும் அடிக்கப்படுகிறது. பொதுமக்களும் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்" என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மர்மக் காய்ச்சலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மாவட்டங்களுக்கும் மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
    • மர்மக்காய்ச்சல் குறித்து மக்களிடம் எந்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ஒரு வகையான மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. மர்மக் காய்ச்சலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மாவட்டங்களுக்கும் மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆனால், மர்மக்காய்ச்சல் குறித்து மக்களிடம் எந்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படாதது மிகுந்த வருத்தமளிக்கிறது. பகல் நேரங்களில் கடுமையான வெயில் வாட்டுவதும், மாலை நேரங்களில் மழை பெய்வதுமான மாறுபட்ட காலநிலை தான் மர்மக் காய்ச்சலுக்குக் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    தமிழகத்தில் பரவி வரும் மர்மக் காய்ச்சல் குறித்து மக்களிடம் ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அனைத்து கிராமங்களிலும் அதிக எண்ணிக்கையில் மருத்துவ முகாம்களை நடத்தி, மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • குழந்தை அப்ரினுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டது.
    • மர்ம காய்ச்சல் பாதிப்பால் குழந்தை இறந்து இருப்பது தெரிந்தது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கத்தில் வசித்து வருபவர் நஜீபுத்தீன். இவரது மனைவி இம்ரான்பேகம். இவர்களுக்கு 11 மாதத்தில் அப்ரின் என்று பெண் குழந்தை இருந்தது.

    இவர்களது சொந்த ஊர் அசாம் மாநிலம் ஆகும். நஜீபுத்தீன் தேர்வாய் கண்டியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் குழந்தை அப்ரினுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டது. அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறைய வில்லை.

    இதையடுத்து குழந்தை அப்ரினை ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.

    மர்ம காய்ச்சல் பாதிப்பால் குழந்தை இறந்து இருப்பது தெரிந்தது. இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சுகாதார அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

    • நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    உடுமலை  : 

    கேரளாவில் டெங்கு, எலி காய்ச்சல், மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் வேகமாக பரவி வருவதால் தமிழக எல்லைகளில் தகுந்த பரிசோதனை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கேரளாவில் கடந்த சில மாதங்களாக டெங்கு, எலி காய்ச்சல், மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சைக்காக செல்கின்றனர். இதில் எலி காய்ச்சல், டெங்கு ஆகியவற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    தற்போது கேரளாவில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் வரும் நாட்களில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். எனவே உடுமலை, ஆனைகட்டி உட்பட தமிழக, கேரள எல்லையில் சுகாதாரத்துறை அலுவலர்கள் பணியில் ஈடுபட்டு கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் நபர்களை உரிய முறையில் மருத்துவ பரிசோதனை செய்து அனுமதிக்க வேண்டும்.

    எல்லைகளில் மருத்துவ முகாம்களை அமைத்து 24 மணி நேரமும் சுகாதாரத்துறை ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்த பலர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
    • பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

    பல்லடம் :

    தமிழ்நாட்டில் புதுவகை வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்த பலர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் சிறப்பு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூரில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி, ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன் துவக்கி வைத்தனர். இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

    தொடர்ந்து அந்தப் பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியும் நடைபெற்றது. இதில் சுகாதார மேற்பார்வை யாளர் தமிழ்ச்செல்வி, வார்டு உறுப்பினர் செல்வராஜ் மற்றும் சுகாதாரப் பணியா ளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கல்லாங்குளம் கிராமத்தை சேர்ந்த ராஜாமணி என்பவரின் பன்றி பண்ணையில் இருந்து கடந்த மார்ச் 9-ந் தேதி 2 பன்றிகள் இறந்தன.
    • கடந்த மார்ச் 23-ந தேதி அதன் முடிவு பெறப்பட்டது. அந்த ஆய்வில், இறந்த பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் வைரஸ் தாக்கம் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் ஒன்றியம், ஆர்.புதுப்பாளையம் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட கல்லாங்குளம் கிராமத்தை சேர்ந்த ராஜாமணி என்பவரின் பன்றி பண்ணையில் இருந்து கடந்த மார்ச் 9-ந் தேதி 2 பன்றிகள் இறந்தன. அதையடுத்து, இறந்த பன்றிகள், பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி நோய்க் குறியியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பன்றியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், சென்னையில் உள்ள மத்திய கால்நடை மருத்துவ கல்லூரி பல்கலை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டடது. கடந்த மார்ச் 23-ந தேதி அதன் முடிவு பெறப்பட்டது. அந்த ஆய்வில், இறந்த பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் வைரஸ் தாக்கம் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

    அதன் அடிப்படையில், கால்நடை பராமரிப்புத்துறை மூலம், கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையில், 4 குழுக்கள் அமைக்கப்பட்டு, பன்றி பண்ணையைச் சுற்றி, 1 கி.மீ. தூரத்துக்கு தீவிர கண்காணிப்பிலும், 9 கி.மீ. தூரத்துக்கு, நோய் பரவல் மற்றும் நோய்த் தன்மை பரவாமல் தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.

    பன்றி பண்ணையில் ஏற்பட்டுள்ள ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல், நோய் கிளர்ச்சி குறித்து சென்னை, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குனர் உத்தரவின்படி, அந்த பண்ணையில் இருந்த 18 பன்றி குட்டிகள், மனிதாபிமான முறையில் கால்நடை பராமரிப்புத் துறையினரால் அழிக்கப்பட்டது.

    தொடர்ந்து, ஒரு ஆண்டுக்கு, இந்த பன்றி காய்ச்சல் குறித்து கால்நடை பராமரிப்புத் துறையினரால் பன்றி பண்ணைகள் கண்காணிக்கப்படும்.

    இந்த பன்றிக் காய்ச்சல், பன்றிகளில் இருந்து, பன்றிகளுக்கு மட்டுமே பரவும் தன்மை கொண்டது. இது மற்ற விலங்குகளுக்கோ அல்லது மனிதர்களுக்கோ பரவாது. அதனால், பொதுமக்கள் யாரும் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
    • மருந்து மற்றும் மாத்திரைகள் உடனுக்குடன் வழங்கப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் நகராட்சி தலைவர் சூரிய பிரகாஷ் மற்றும் ஆணையாளர் வெங்கடேஷ்வரன் ஆகியோர்களின் அறிவுறுத்தலின்படி காங்கயம் நகராட்சி மற்றும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நேற்று காலை காங்கயம் நகரம், அண்ணா நகர் பகுதியில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமில் பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இதர மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்குண்டான மருந்து மற்றும் மாத்திரைகள் உடனுக்குடன் வழங்கப்பட்டது. இந்த முகாமில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், வட்டார சுகாதார ஆய்வாளர் ரகுபதி, நகராட்சி கவுன்சிலர் சிலம்பரசன், டாக்டர்கள் மோகன், கிருத்திகா மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். முகாமில் நகர பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • பொது இடங்களில், சளியுடன் தும்மல் போடுவதால், மற்றவர்களுக்கு காய்ச்சல் எளிதாக பரவுகிறது.
    • கொரோனா காலத்தில் இருந்தது போன்று மக்கள் முகக்கவசம் அணிய துவங்கியுள்ளனர்.

    மடத்துக்குளம் :

    தற்போது பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுஇடங்களில் கவனமுடன் இருக்க வேண்டுமென சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சளி, காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. காய்ச்சல் குணமடைந்தாலும், சளி, தொண்டை வலி குணமாக ஒரு வாரத்துக்கும் மேலாகிறது. வீட்டில் ஒருவருக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டால், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரவுகிறது.

    பொதுஇடங்களில், சளியுடன் தும்மல் போடுவதால், மற்றவர்களுக்கு காய்ச்சல் எளிதாக பரவுகிறது. இதனால், கொரோனா காலத்தில் இருந்தது போன்று மக்கள் முகக்கவசம் அணிய துவங்கியுள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது :- காய்ச்சல், சளி பரவுவது அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். கொதிக்க வைத்த குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும். பிரிட்ஜில் வைத்திருக்கும் குளிர்ச்சியான பானங்கள், குடிநீரை பருக வேண்டாம்.காய்ச்சல், சளி பாதிப்பு இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். டாக்டர் பரிந்துரைக்கும் மருந்தை உட்கொள்ள வேண்டும். மருந்துக்கடைகளில் தன்னிச்சையாக மாத்திரை வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். பொதுஇடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்றனர்.  

    • மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று காய்ச்சல் குறித்து கேட்டறிந்து மருந்து, மாத்திரைகள் வழங்கி வருகின்றனர்.
    • கிராமத்தில் நடந்து வரும் சுகாதார பணிகள் குறித்தும் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    திருத்தணி:

    திருத்தணி அருகே உள்ள காசிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவரது மகன் கவின் என்கிற தேவகுமார் (7) காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 10-ந் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதை தொடர்ந்து தேவகுமாரின் சகோதரி, எழில்இனியாவுக்கும் (2) காய்ச்சல் ஏற்பட்டது. அவர் சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் கோபிகிருஷ்ணன் தலைமையில் மருத்துவ குழுவினர், கொசு ஒழிப்பு பணியாளர்கள் காசிநாதபுரம் கிராமத்தில் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று காய்ச்சல் குறித்து கேட்டறிந்து மருந்து, மாத்திரைகள் வழங்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் மாவட்ட சுகாதார துறையின் துணை இயக்குனர் ஜவகர்லால், திருத்தணி தி.மு.க., எம்.எல்.ஏ., சந்திரன், பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் கோபிகிருஷ்ணன் மற்றும் மருத்துவ ஊழியர்கள் காசிநாதபுரம் கிராமத்திற்கு நேரில் சென்று வீடு வீடாக சென்று காய்ச்சல் குறித்து கேட்டறிந்தனர்.

    மேலும் கிராமத்தில் நடந்து வரும் சுகாதார பணிகள் குறித்தும் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • 98 பேரின் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது
    • சளி மற்றும் காய்ச்சல் பரிசோதனை பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலானோர் மாணவ-மாணவிகளாகவே உள்ளனர்

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் இன்புளூ யன்சா எனப்படும் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத் திலும் சுகாதாரத்துறை சார்பில் நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலமாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது

    பள்ளிகளிலும் சிறப்பு குழுக்கள் மூலம் மாண வர்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரு கிறார்கள். முதல் நாள் 2982 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 10 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதில் 3 பேர் பள்ளி மாண வர்கள் ஆவார்கள்.

    இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக சோதனை நடந்தது. மாவட்டம் முழுவ தும் 2501 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் 7 பேருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்துள்ளது. 98 பேரின் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 பேரில் 3 பேர் பள்ளி மாண வர்கள் ஆவார்கள்.சளி பரிசோதனைக்கு அனுப் பப்பட்டுள்ள 98 பேரில் 53 பேர் மாணவர்கள் ஆவார்கள்.

    சளி மற்றும் காய்ச்சல் பரிசோதனை பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலானோர் மாணவ-மாணவிகளாகவே உள்ளனர். எனவே மாணவ-மாணவி கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகா ரிகள் வேண்டுகோள் விடுத் துள்ளனர். இன்று 3-வது நாளாக அங்கன்வாடி மையங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர் மீனாட்சி கூறுகையில், இன் புளூயன்சா பாதிப்பு வராமல் தடுக்க கொரோனா காலத்தில் கடைபிடிக் கப்பட்டது போன்று முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இளநீர் பழங்கள் சாப்பிடலாம். காய்ச்சல் சளி பிரச்சனையில் இளநீர் சாப்பிட முடியவில்லை என்றால் அரிசி கஞ்சி வைத்து குடிக்க வேண்டும்.

    கஞ்சியை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை பருக வேண்டும். ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீட்டில் இருப்பவர்கள் கண்டிப்பாக நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண் டும். போதிய ஓய்வு அவசியம் தேவை. மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றார்.

    ×