search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காய்ச்சல், சளி பாதிப்பு அதிகரிப்பால் பொதுஇடங்களில் கவனமுடன் இருக்க வேண்டும் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
    X

    கோப்புபடம்.

    காய்ச்சல், சளி பாதிப்பு அதிகரிப்பால் பொதுஇடங்களில் கவனமுடன் இருக்க வேண்டும் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

    • பொது இடங்களில், சளியுடன் தும்மல் போடுவதால், மற்றவர்களுக்கு காய்ச்சல் எளிதாக பரவுகிறது.
    • கொரோனா காலத்தில் இருந்தது போன்று மக்கள் முகக்கவசம் அணிய துவங்கியுள்ளனர்.

    மடத்துக்குளம் :

    தற்போது பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுஇடங்களில் கவனமுடன் இருக்க வேண்டுமென சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சளி, காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. காய்ச்சல் குணமடைந்தாலும், சளி, தொண்டை வலி குணமாக ஒரு வாரத்துக்கும் மேலாகிறது. வீட்டில் ஒருவருக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டால், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரவுகிறது.

    பொதுஇடங்களில், சளியுடன் தும்மல் போடுவதால், மற்றவர்களுக்கு காய்ச்சல் எளிதாக பரவுகிறது. இதனால், கொரோனா காலத்தில் இருந்தது போன்று மக்கள் முகக்கவசம் அணிய துவங்கியுள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது :- காய்ச்சல், சளி பரவுவது அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். கொதிக்க வைத்த குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும். பிரிட்ஜில் வைத்திருக்கும் குளிர்ச்சியான பானங்கள், குடிநீரை பருக வேண்டாம்.காய்ச்சல், சளி பாதிப்பு இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். டாக்டர் பரிந்துரைக்கும் மருந்தை உட்கொள்ள வேண்டும். மருந்துக்கடைகளில் தன்னிச்சையாக மாத்திரை வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். பொதுஇடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்றனர்.

    Next Story
    ×