search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டெருமை"

    • புத்தாநத்தம், துவரங்குறிச்சியில் காட்டெருமைகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்
    • இதுவரை ஒருவர் பலி, பலர் காயம், பஸ்சும் சேதம்

    மணப்பாறை,

    திருச்சி மாவட்டம் மணப் பாறையை அடுத்த புத்தா–நத்தம் அருகே உள்ள கருப்ப–ரெட்டியபட்டி வனப்பகுதி, கண்ணூத்து, பண்ணபட்டி, துவரங்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் தற்போது காட் டெருமைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.இந்த காட்டெருமைகள் வனப்பகுதியில் போதிய குடிநீரின்றி கிராமங்களை நோக்கி படையெடுத்து வரும் நிலை தொடர்ந்து அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது.

    காட்டெருமைகளால் பலரும் விவசாயத்தை விட்டு வெளியில் சென்று இருப்பதையும் மறுக்க முடி–யாது. விவசாயம் செய்த பலரும் காட்டெருமைகளின் அட்டகாசத்தால் விளை–நிலங்கள் நாசமாகி இன்னும் வாங்கிய கடனை கூட அடைக்க முடியாத பரிதாப நிலையில் உள்ளனர்.வனத்துறையினர் சார் பில் நடைபெறும் விவசாயி–கள் குறை தீர்க்கும் கூட்டத் தில் விவசாயிகள் சார்பில் வைக்கப்படுகின்ற முதல் கோரிக்கையே காட்டெருமை–களால் அடையும் சேதத்தை தவிர்க்க காட்டெருமைகள் கிராமப் பகுதிகளில் நோக்கி வருவதை தவிர்த்தி–டும் வகை–யில் நடவ–டிக்கை எடுக்க வேண்டும் என்பது–தான்.

    வனப்பகுதி–களில் தண் ணீர் தொட்டி அமைத்து காட்டெருமைகள் சாலை–களை நோக்கி வரு–வதை தடுத்திட வேண்டும் என்பதுதான். ஆனால் அவையெல்லாம் கிணற்றில் போட்ட கல்லாக மட்டுமே இருக்கிறது.இதற்கிடையேதான கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக தெத்தூர் மலையாண்டி கோவில் பட்டியை சேர்ந்த சிவஞா–னம் (வயது 46) என்பவர் தனது மோட்டார் சைக்கி–ளில் புதுக்கோட்டை கோர்ட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்டமாக சாலையை கடந்த காட்டெருமைகளில் ஒன்று அவரை முட்டியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடந்த இரண்டு நாட்க–ளுக்கு முன் காடபிச்சம்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது துவரங்குறிச்சியைச் சேர்ந்த முகமது அசாருதீன் என்பவரை காட்டெருமை முட்டியதில் காயம் அடைந்து திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதே–போல் மேலும் இருவர் இரு வேறு இடங்களில் காட்டெருமை முட்டியதில் சிலர் காயமடைந்தனர்.

    இப்படியாக வனப்பகு–தியை விட்டு காட்டெருமை–கள் சாலையை நோக்கி வருவதால் வாகனங்களில் செல்வோர் துயரத்தை சந் திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தான் நேற்று துவரங்குறிச்சி அருகே காட்டெருமை முட்டியதில் அரசு பஸ் ஒன்று சேதமடைந்தது. சுமார் 20-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கிராமப் பகுதிக்குள் வலம் வந்ததால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    கடந்த சில நாட்களில் இதுவரை இல்லாத அளவு காட்டெருமைகளால் பலரும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஒருபுறம், வாகனங்களும் சேதமடையும் சம்பவம் மறுபுறமும் அரங்கேறி வரு–கிறது. தொடர் பாதிப்பு–கள் எல்லாம் ஒருபுறம் இருந் தாலும் கூட தண்ணீர் தேடி வரும் காட்டெருமைகள் உயிரிழக்கும் சம்பவமும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.சமீபத்தில் கருமலை அருகே தண்ணீர் தேடி மக்கள் குடிநீரை பயன்ப–டுத்தும் குளத்திற்கு வந்த காட்டெருமை ஒன்று தண் ணீரில் இறந்து கிடந்தது. காட்டெருமையை பிரேத பரிசோதனை செய்தபோது அதன் வயிற்றில் கன்று குட்டியும் இருந்தது தெரிய வந்தது.

    மக்களுக்கான பாதிப்பு ஒருபுறம், காட்டெருமை–களின் இறப்பு மறுபுறம் என நீடித்து வரும் இந்த நிலையில் வனப்பகுதிகளில் வனவிலங்குகளுக்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து தந்திட வேண்டும், அதன் மூலம் வனத்தை விட்டு நகர் பகுதிக்கு வரும் நிலையை தடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பு மக்க–ளின் ஒட்டுமொத்த கோரிக் கையாக உள்ளது.


    • குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • ஊருக்குள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர், பாடந்துறை மற்றும் தேவர் சோலை பேரூராட்சி கிராமங்களில் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆனால் இதுவரை இந்த காட்டெருமைகளை வனத்திற்குள் விரட்டுவதற்கு வனத்துறை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை ஒற்றை காட்டெருமை மட்டுமே கிராமங்களில் உலாவந்த நிலையில் தற்போது காட்டெருமைகள் கூட்டமாக சுற்றி திரிவது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே, வனத்துறையினர் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மணியக்காவை காட்டெருமை ஒன்று திடீரென முட்டி தள்ளியது
    • வனவிலங்குகள் தாக்குதலில் பாதிக்கபட்டவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

    அரவேணு,

    கோத்தகிரி அருகே உள்ள உல்லத்தட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணியக்கா (வயது50). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் தனியாக வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் மணியக்கா நேற்று காலை தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அருகில் உள்ள புதர் மறைவில் இருந்து வெளியே வந்த காட்டெருமை ஒன்று திடீரென அவரை தனது கொம்புகளால் முட்டி தள்ளியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் ஓடி வந்தனர். தொடர்ந்து காட்டெருமையை விரட்டிவிட்டு காயமடைந்த மணியக்காவை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் காட்டெருமை தாக்குதலில் படுகாயமடைந்த மணியக்காவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் வனவிலங்குகள் தாக்குதலில் பாதிக்கபட்டவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    • கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றனர்.
    • தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்களும் பணிக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.

    மஞ்சூர்,

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மெரிலேண்டு, மைனலாமட்டம், பெங்கால்மட்டம், கிட்டட்டிமட்டம், தேனாடு, கோத்திபென், சாம்ராஜ் எஸ்டேட் மற்றும் ராக்லேண்டு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமங்களை சுற்றிலும் தேயிலை தோட்டங்களுடன் அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக இப்பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டெருமைகள் அதிகளவில் நடமாடி வருகின்றன. இந்த கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், பட்டாணி, அவரை, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பல வகையிலான மலைகாய்கறிகளை பயிரிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் விளை நிலங்களில் காட்டெருமைகள் கூட்டம், கூட்டமாக புகுந்து பயிர்களை சூறையடுவதுடன் தோட்டங்களையும் கால்களால் மிதித்து நாசம் செய்து வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் மலைகாய்கறி விவசாயம் மேற்கொள்வதை விட்டு விட்டனர்.

    மேலும் இப்பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் கூட்டமாக மேய்ச்சலில் ஈடுபடும் காட்டெருமைகளால் தேயிலை தோட்டங்களுக்கு தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்களும் பணிக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.

    சம்பவத்தன்று மஞ்சூர் அருகே மேல்குந்தா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் தேயிலை பறித்து கொண்டிருந்தனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது.

    இதை கண்ட தொழிலாளர்கள் தேயிலை பறிப்பதை விட்டு விட்டு தோட்டத்தில் இருந்து வெளியேறினார்கள். இதேபோல் நேற்று மஞ்சூர் ஊட்டி சாலையில் நுந்தளா மட்டம் பகுதியில் 3 காட்டெருமைகள் சாலையோரத்தில் நீண்ட நேரம் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இதனால் அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மிகுந்த அச்சத்துடனேயே பயணித்தனர்.

    மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் சமீபகாலமாக காட்டெருமைகள் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் இவற்றின் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

    • சுவரை உடைத்து வனத் துறையினா் பத்திரமாக மீட்டனா்.
    • தேயிலைத் தோட்டத்தில் காட்டெருமை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.

    ஊட்டி,

    கோத்தகிரி அருகே உள்ள கட்டப்பெட்டு வன சரக்கத்துக்கு உள்பட்ட நடுஹட்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மேல்புறத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் காட்டெருமை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது நிலைதடுமாறி வீட்டின் பின்புறத்தில் உள்ள தடுப்புச் சுவருக்குள் விழுந்தது. அங்கிருந்து வெளியேற முடியாமல் நீண்ட நேரமாக தவித்தது.

    இது குறித்து தகவலறித்து வந்த வனத் துறையினா், வீட்டின் தடுப்புச் சுவரை உடைத்து காட்டெருமையை பத்திரமாக மீட்டனா். பின்னா் அதை பத்திரமாக வனப் பகுதிக்குள் விரட்டினா். தடுப்புச் சுவா் உடைக்கப்பட்டதால் வீட்டின் உரிமையாளருக்கு நஷ்டஈடு வழங்க வனத் துறை சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    • மஞ்சூர் பகுதியில் கடந்த சில தினங்களாக ஒற்றை காட்டெருமை ஒன்று சுற்றி வருகிறது.
    • சுமார் அரைமணி நேரம் அங்கேயே முகாமிட்ட காட்டெருமை மெதுவாக நகர்ந்து தேயிலை தோட்டத்திற்குள் சென்றது.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மெரிலேண்டு, மைனலாமட்டம், பெங்கால்மட்டம், கிட்டட்டிமட்டம், தேனாடு, கோத்திபென், சாம்ராஜ் எஸ்டேட் மற்றும் ராக்லேண்டு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது.

    நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வரும் இந்த கிராமங்களை சுற்றிலும் தேயிலை தோட்டங்களுடன் அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ளது.

    சமீபகாலமாக இப்பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டெருமைகள் அதிகளவில் நடமாடி வருகின்றன. காட்டெருமைகள் கூட்டமாக விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சூறையடுவதுடன் தோட்டங்களையும் நாசம் செய்து வருகின்றன.

    மஞ்சூர் பகுதியில் கடந்த சில தினங்களாக ஒற்றை காட்டெருமை ஒன்று சுற்றி வருகிறது. கூட்டத்தில் இருந்து தனியாக பிரிந்து நடமாடி வரும் காட்டெருமை தேயிலை தோட்டங்களில் இலை பறிக்கும் தொழிலாளர்களை விரட்டுவதாக கூறுகின்றனர்.

    இதனால் தேயிலை தோட்டங்களுக்கு இலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் தேயிலை தோட்டங்களில் இருந்து வெளியேறி கடைவீதியில் உலா வருகிறது. இதனால் பொதுமக்கள் நடமாட்டத்திற்கும், வாகன போக்குவரத்தும் பாதிப்பு ஏற்படுகிறது.

    கடந்த இருதினங்களுக்கு முன் மணிக்கல்மட்டம் பகுதியில் தொழிலாளர்கள் இருவர் தேயிலை பறித்து கொண்டிருந்தனர். அப்போது தோட்டத்திற்குள் புகுந்த காட்டுமாடு திடீரென தொழிலாளர்களை விரட்ட துவங்கியது. இதை கண்ட தொழிலாளர்கள் பீதி அடைந்து தேயிலை தோட்டத்தில் இருந்து தலைதெறிக்க தப்பியோடி உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மணிக்கல் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. திடீரென காட்டெருமை வருவதை கண்ட அப்பகுதியினர் உடனடியாக தங்களது வீடுகளை அடைத்து தாழிட்டு கொண்டார்கள்.

    சுமார் அரைமணி நேரம் அங்கேயே முகாமிட்ட காட்டெருமை மெதுவாக நகர்ந்து தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. இதன் பிறகே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வந்தார்கள்.

    இதையடுத்து மஞ்சூர் பகுதியில் சுற்றிவரும் காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
    • காட்டெருமை உணவு தேடி வீட்டின் கதவுகளை வந்து தட்டுகின்றன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    காட்டெருமைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி தேயிலை தோட்டங்களில் சுற்றி திரிந்து வருகின்றன. சில நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் புகுந்து விடுகிறது. குடியிருப்பு பகுதிகளுக்குள் சர்வசாதராணமாக நடமாடி வருகின்றன. இதனால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே உள்ளனர்.

    இந்த நிலையில் காட்டெருமை ஒன்று வனத்தை விட்டு வெளியேறி உணவு தேடி குன்னூர் அருகே உள்ள சேலாஸ் பகுதிக்கு வந்தது. குடியிருப்பு பகுதிக்குள் சென்ற காட்டெருமை அங்குள்ள ஒரு வீட்டின் அருகே சென்றது.

    வீட்டின் அருகே சென்றதும், காட்டெருமை வீட்டின் கதவை தட்டியது. வீட்டில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது வாசலில் காட்டெருமை நிற்பதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர்.

    இருப்பினும் காட்டெருமைக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்காமல் வீட்டிற்குள்ளேயே இருந்தனர். சில நிமிடங்களில் காட்டெருமை அங்கிருந்து சென்று விட்டது.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,

    கடந்த சில நாட்களாக இங்கு ஒரு காட்டெருமை சுற்றி திரிகிறது. சில நேரங்களில் அந்த காட்டெருமை உணவு தேடி வீட்டின் கதவுகளை வந்து தட்டுகின்றன. உணவு கொடுத்தால் அதனை சாப்பிட்டு விட்டு சென்று விடுகின்றன.

    இது சாதாரணமாக தெரிந்தாலும், சில நேரங்களில் காட்டெருமையின் தாக்குதலுக்கு ஆளாகலாம். எனவே அந்த காட்டெருமையை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நீலகிரி மாவட்டம் கேத்தி பகுதியில் தங்கியிருந்து தேயிலை தோட்ட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
    • காட்டெருமை வருவதை பார்த்ததும் ரமேஷ் பகதூர் அதிர்ச்சியடைந்தார்.

    ஊட்டி  

    நேபாளத்தை சேர்ந்தவர் ரமேஷ் பகதூர். (வயது 42)/இவர் தற்போது நீலகிரி மாவட்டம் கேத்தி பகுதியில் தங்கியிருந்து தேயிலை தோட்ட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காலை அவர் வேலைக்கு செல்வதற்காக கிளிப் ஹவுஸ் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காட்டெருமை அவரை தாக்க முயன்றது. காட்டெருமை வருவதை பார்த்ததும் ரமேஷ் பகதூர் அதிர்ச்சியடைந்தார்.பின்னர் சுதாரித்து கொண்டு அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தார். ஆனாலும் காட்டெருமை அவரை விடாமல் துரத்திச் சென்று முட்டி வீசியது.

    இதில் அவர் மார்பு மற்றும் தோள்பட்டை பகுதிகளில் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதுகுறித்து கேத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குமாரபாளையம் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டெருமையை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.
    • காட்டெருமை நேற்று மாலை 6 மணியளவில் சமயசங்கிலி தடுப்பணை பகுதியில் உள்ளதாக தகவல் கிடைத்தது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் கத்தேரி பிரிவு அருகே காட்டெருமை மேய்ந்துள்ளது. இதை கண்ட பொதுமக்கள் சிலர் அச்சத்தில் அங்கிருந்து விலகி சென்றனர். இது குறித்து தீயணைப்பு படை யினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தரப்பட்டது.

    டீச்சர்ஸ் காலனி, சிவசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் எருமையை பார்த்ததாக பலர் கூறியதால் இந்த பகுதிகளில் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்ட வனத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் ஈரோடு மாவட்ட வன அலுவலர் கவுதம் தலைமையில் 40-க்கும் மேற்பட்டோர் தேடி வருகின்றனர்.


    இது குறித்து நாமக்கல் மாவட்ட வன சரக அலுவலர் பெருமாள் கூறுகையில், இந்த காட்டெருமை ஏற்காடு பகுதியில் இருந்து மெல்ல மெல்ல இந்த பகுதிக்கு வந்துள்ளது.

    ட்ரோன் கேமரா மூலமும் தேடி வருகிறோம். இப்பகுதியில் கரும்பு தோட்டங்கள் அதிகம் உள்ளதால் அதற்குள் புகுந்துள்ளது. விரைவில் பிடித்து விடுவோம் என்றார்.

    இதனிடையே காட்டெருமை நேற்று மாலை 6 மணியளவில் சமயசங்கிலி தடுப்பணை பகுதியில் உள்ளதாக தகவல் கிடைத்தது. வனத்துறையினர் அங்கு சென்று காட்டெருமையை மடக்கிப் பிடித்தனர். பின்னர் காட்டெருமை சக்திய மங்கலம் காட்டுப்பகுதியில் விடப்பட்டது.

    • ரெயில்வே உயா்அதிகாரிகளுடன் ஊட்டி வந்து கொண்டிருந்த சிறப்பு ரெயில் அரை மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது.
    • பா்லியாறு பகுதியின் மலைப் பாதையில் உள்ள ெரயில்வே தண்டவாளத்தில் காட்டெருமை விழுந்தது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ெரயில் பாதையில் யானை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.

    இந்நிலையில், பா்லியாறு பகுதியின் மலைப் பாதையில் உள்ள ெரயில்வே தண்டவாளத்தில் காட்டெருமை விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக ெரயில்வே துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அங்கு சென்ற வனத்துறை மற்றும் ெரயில்வே துறையினா், அந்த காட்டெருமையை மீட்டனா். பின்னர் காட்டெருமைக்கு கால்நடை டாக்டர்கள் உதவியுடன் சிகிச்சை அளித்து கொண்டிருந்தனர்.

    ஆனால் சிறிது நேரத்தில் காட்டெருமை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டது. இதையடுத்து காட்டெருமையை வனத் துறையினா் அங்கேயே குழி தோண்டி புதைத்தனா்.

    இந்தச் சம்பவத்தால், மேட்டுப்பாளையத்தில் இருந்து ெரயில்வே உயா்அதிகாரிகளுடன் ஊட்டி வந்து கொண்டிருந்த சிறப்பு ெரயில் அரை மணி நேரம் தாமதமாக ஊட்டிக்கு வந்து சேர்ந்தது.

    • சாலையோர புதரில் மறைந்திருந்த காட்டெருமை திடீரென வழிமறித்து தாக்கியது.
    • இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கெங்கரை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி(31). இவர் சம்பவத்தன்று கோவில்மட்டம் பகுதிக்கு மொபட்டில் சென்றார். பின்னர் அங்கு உறவினை சந்தித்து பேசி விட்டு மீண்டும், வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

    ஒன்னட்டி-கோவில்மட்டம் செல்லும் சாலையில் வந்த போது, அங்கு சாலையோர புதரில் மறைந்திருந்த காட்டெருமை திடீரென வழிமறித்து தாக்கியது.

    இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    • தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகே காட்டெருமை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.
    • தொட்டிக்குள் தவறி விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் மீட்டனர்.

    வால்பாறை

    வால்பாறை மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    அவை அவ்வப்போது தேயிலை தோட்டம் மற்றும் ெதாழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

    இந்த நிலையில் வால்பாறை அருகே வில்லோணி எஸ்டேட் மேல் பிரிவு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகே காட்டெருமை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.

    பின்னர் தண்ணீர் குடிப்பதற்காக அங்குள்ள தண்ணீர் தொட்டியின் அருகே சென்றது. அங்கு தண்ணீர் குடிக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக காட்டெருமை தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது.

    இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வால்பாறை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் ஆகியோரின் உத்தரவின் பேரில் வால்பாறை வனசரகர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த காட்டெருமையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காட்டெருமையை மீட்க முடியவில்லை.

    இதையடுத்து அந்த தொட்டியின் பக்கவாட்டு சுவரை உடைத்து காட்டெருமையை மீட்கும் பணி நடந்தது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு இரவு 8 மணியளவில் தொட்டிக்குள் தவறி விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் மீட்டனர். பின்னர் அதனை வனத்தில் விட்டனர்.

    ×