search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டெருமை"

    • 6 வயது ஆண் காட்டெருமை பாறையில் இருந்து சறுக்கி விழுந்தது.
    • கால்நடை மருத்துவர் நந்தினி இறந்த காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    இதனிடையே கிராம பகுதிகளில் மட்டுமல்லாமல் நகர பகுதிகளிலும், பகல் நேரங்களிலும் காட்டெருமைகள் சர்வ சாதராணமாக உலா வருகின்றன.

    சாலைகளின் நடுவிலும், ஒரத்திலும் நடந்து செல்வதால், வாகன ஓட்டிகளும், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடனேயே அந்த வழியாக பயணித்து வருகின்றனர்.

    குன்னூர் அருகே உள்ள சேலாஸ் சோல்ராக் செல்லும் சாலையில் நீர்மம்பட்டி என்ற இ்டத்தில் மலைச்சரிவில் 2 காட்டெருமைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டிருந்தது.

    இதில் 6 வயது ஆண் காட்டெருமை பாறையில் இருந்து சறுக்கி விழுந்தது. இதில் காட்டெருமை காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் குன்னூர் வனச்சரகர் ரவீந்திரன் மற்றும் வன பாதுகாவலர் ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய வனக்குழுவினர் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் கால்நடை மருத்துவர் நந்தினி இறந்த காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். இதனையடுத்து காட்டெருமையின் உடலை அங்கேயே புதைக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குடியிருப்பு பகுதிகளில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், காட்டெருமைகளை விரட்ட வனக்குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆங்காங்கே நின்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • சாலையின் குறுக்கே ஓடிவந்ததால் விபத்து
    • திருமணம் ஆகி 10 மாதமே ஆவதால் குடும்பத்தினர் வேதனை

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் புரூக்லேன்ஸ் பகுதியில் வசித்து வருபவர் ராம் பகதூர். இவரது மகன் பிரேம்குமார் (வயது 28). இவருக்கு திருமணம் ஆகி 10 மாதங்களே ஆகிறது.

    இவர் பெட்போர்ட் பகுதியில் உள்ள ஓட்டலில் பணியாற்றி வந்தார். இரவில் ஓட்டலில் இருந்து உணவுப் பொருட்களை டெலிவரி செய்வதற்காக இருசக்கர வாகனம் மூலம் பித்தாப்பூர் பகுதியை ஒட்டி உள்ள கோத்தகிரி சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென சாலையின் குறுக்கே காட்டெருமை ஒன்று ஓடி வந்தது. அதனை பார்த்த பிரேம்குமார் உடனடியாக பிரேக் பிடித்ததால் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.

    இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு அவரது உடலை பரிசோ தித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து மேல்குன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமணம் ஆகி 10 மாதமே ஆன பிரேம்குமார் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நாளுக்குள் நாள் வனவிலங்கு நடமாட்டம் அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம்
    • வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட பொதுமக்கள் கோரிக்கை

     கோவை,

    கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளையொட்டி வனப்பகுதிகள் உள்ளன.

    இந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள், காட்டெருமை, சிறுத்தை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து வருகிறது.

    அண்மைக்காலங்களாக வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக காட்டு யானைகள், காட்டெருமை போன்றவை அடிக்கடி ஊருக்குள் வந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் சர்வசாதாரணமாக சுற்றி திரிந்து வருகின்றன. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள முடிஸ் எஸ்டேட் பஜார் பகுதியில் பொதுமக்கள் வழக்கம் போல் தங்கள் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

    அப்போது வனத்தை விட்டு வெளியேறிய காட்டெருைம ஒன்று நகர பகுதிக்குள் புகுந்தது. முடிஸ் பஜார் பகுதியில் சிறிது நேரம் அந்த காட்டெருமை சுற்றி திரிந்தது. காட்டெருமை வருவதை பார்த்ததும் பொதுமக்கள் வீடுகளுக்குள் சென்று விட்டனர். சிலர் அங்கிருந்த கடைகளுக்கு சென்று தஞ்சம் அடைந்து கொண்டனர்.

    சில மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே சுற்றி திரிந்த காட்டெருமை பின்னர் அங்கிருந்து வனத்திற்குள் சென்று விட்டது. அதன்பிறகே பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, கடந்த சில காலங்களாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பகல் நேரங்களிலேயே ஊருக்குள் புகுந்து சுற்றி திரிந்து வருகிறது.

    நாளுக்குள் நாள் வனவிலங்கு நடமாட்டம் அதிகரிப்பதால், வெளியில் வரவே அச்சமாக உள்ளது. எனவே வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திடீரென வனப்பகுதியில் இருந்து 2 காட்டெருமைகள் வெளியேறின.
    • லாரி மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த போது திடீரென காட்டு மாடு கடந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை-கேரள எல்லைப்பகுதியான ஆனை கட்டி மலைப்பகுதியில் யானைகள், காட்டுமாடுகள், மான்கள், காட்டுபன்றிகள், உள்ளிட்ட பல்வேறு வனவி லங்குகளும், பல்வேறு பறவைகளும் உள்ளன.

    இவைகள் அவ்வப்போது மலைப்பகுதிக்குள் இருந்து வெளியேறி, மலைப்பாதையில் சுற்றி திரிவது வழக்கம்.

    எனவே அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் எச்சரிக்கை பலகையும் வைத்து உள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு ஆனைகட்டி மலைப்பாதையில் டிப்பர் லாரி சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீ ரென வனப்பகுதியில் இருந்து 2 காட்டெருமைகள் வெளியேறின.

    பின்னர் அந்த காட்டெருமைகள் வனப்பகுதியில் இருந்து வெளியில் வந்து, மற்றொரு பகுதிக்கு செல்வதற்காக அங்குள்ள சாலையை கடக்க முயன்றன.

    காட்டெருமைகள் சாலையை கடக்க முயற்சிப் பதை பார்த்த லாரி டிரைவர் லாரியை நிறுத்த முயன்றார்.

    ஆனால் அதற்குள்ளாகவே லாரி காட்டெருமைகள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஒரு காட்டெருமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மற்றொரு காட்டெருமை காயத்துடன் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.

    இந்த தகவல் கிடைத்ததும் தடாகம் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    இது குறித்து லாரி டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், லாரி மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த போது திடீரென காட்டு மாடு கடந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரணை முடிவடைந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • காப்பி தோட்டத்தில் உள்ள கிணற்றில் நேற்று மாலை காட்டெருமை ஒன்று தவறி விழுந்து விட்டது.
    • வனத்துறை ஊழியர்கள், காட்டெருமையை மேலே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம ஏற்காடு டவுன் பகுதிக்கு அருகில் உள்ள தனியா ருக்கு சொந்தமான காப்பி தோட்டத்தில் உள்ள கிணற்றில் நேற்று மாலை காட்டெ ருமை ஒன்று தவறி விழுந்து விட்டது. மேலே வர வழி யில்லாமல் தண்ணீரில் தத்தளித்து.இதை பார்த்த காப்பி தோட்ட பணியாளர்கள் வனத்துறை யினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள், காட்டெருமையை மேலே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் கிணற்றின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து, காட்டெருமை மேலே வர வழி ஏற்படுத்தினர். பின்னர் இதை பயன்படுத்தி காட்டெருமை மேலே வந்தது. வனத்துறையினர் அதனை வனப்பகுதிக்கு விரட்டினர்.

    • சத்தியமங்கலம் அருகே சாலையோரம் காட்டெருமைகள் உலா வருவதால் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
    • வாகன ஓட்டி கள் காட்டெருமைகளை கண்டால் அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தவோ, அதிக ஒளி எழுப்பி ஆரன்களை அடிக்கவோ கூடாது.

    சத்தியமங்கலம்,

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, மான், புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உட்பட ஏரா ளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இங்குள்ள வனவிலங்கு கள் குடிநீர், உணவை தேடி அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலை யோரம் வருவதும் ஊருக்குள் புகுந்து பயி ர்களை சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் சத்திய மங்கலம்- மைசூர் தேசிய நெடு ஞ்சாலையில் சாலை யோரம் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வந்தன. காட்டெருமைகள் கூட்டத்தைக் கண்ட சில வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு கீேழ இறங்கி ஆபத்தை உணராமல் தங்க ளது செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    இதை தொடர்ந்து ரோந்து வந்த வனத்துறை யினர் வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பி வைத்த னர். இதுகுறித்து வனத்துறை யினர் கூறும் போது, காட்டெருமைகள் மாலை வேளையில் தண்ணீர் அருந்து வதற்கு குட்டை களுக்கு வருவது வழக்கமான ஒன்று தான். வாகன ஓட்டி கள் காட்டெருமைகளை கண்டால் அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தவோ, அதிக ஒளி எழுப்பி ஆரன்களை அடிக்கவோ கூடாது. அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.
    • ஒற்றை காட்டு எருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    அரவேணு,

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் வனப்பகுதிகள் உண்டு. எனவே அங்கு கரடி, காட்டு எருமை, சிறுத்தை, போன்ற வன விலங்குகள் உள்ளன.

    அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில் கோத்தகிரி காம்பைக்கடையை சேர்ந்த மாணவர்கள் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது ஒற்றை காட்டு எருமை ஊருக்குள் புகுந்தது. இதனை தற்செயலாக பார்த்த மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இருந்தபோதிலும் அந்த காட்டு எருமை நள்ளிரவு வரை ஊருக்குள் முகாமிட்டு சுற்றிவந்து பயமுறுத்தியது. அதன்பிறகு காட்டுக்குள் சென்று மறைந்து விட்டது.

    கோத்தகிரி காம்பைக்கடை பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை காட்டு எருமையால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டில் இருந்து வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே வனத்துறையினர் இந்த விஷயத்தில் தலையிட்டு அந்த ஒற்றை காட்டு எருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • 10 நிமிட தாமதத்திற்கு பிறகு ஊட்டி புறப்பட்டு சென்றது.
    • 25-க்கும் மேற்பட்ட காட்டு எருமைகள் நின்று கொண்டு இருந்தன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தின் அடையாளமாக மலை ெரயில் சேவை திகழ்ந்து வருகிறது. இது அடா்ந்த வனப் பகுதி வழியாக குறைந்த வேகத்தில் செல்லும். எனவே மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.

    இந்த நிலையில் அந்த ரெயில் நேற்று காலை குன்னூரில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டது. அப்போது டிரைவர் கணேசன் ரெயிலை இயக்கினார். குன்னூரில் இருந்து புறப்பட்ட மலை ரெயில் வெலிங்டன் மேம்பாலப் பகுதி அருகே வந்தது. அப்போது, தண்டவாளத்தின் குறுக்கே 25-க்கும் மேற்பட்ட காட்டு எருமைகள் நின்று கொண்டு இருந்தன. இதனை தற்செயலாக பார்த்த டிரைவர் கணேசன் அதிர்ச்சி அடைந்தார். எனவே அவர் உடனடியாக பிரேக் போட்டு மலை ெரயிலை நிறுத்தினாா். அதன்பிறகு அவா் ரயிலில் இருந்து இறங்கி சென்று தண்டவாளத்தின் குறுக்கே நின்ற காட்டு எருமைகளை காட்டு ப்பகுதிக்குள் விரட்டி னாா். அதன்பிறகு குன்னூ ரில் இருந்து புறப்பட்ட மலை ரெயில், சுமார் 10 நிமிடம் தாமதமாக ஊட்டி க்கு புறப்பட்டு சென்றது.

    • குன்னூரை சுற்றிய வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
    • வாகனங்கள் சப்தத்தால் எருமை அங்குமிங்கும் ஓடியது.

    குன்னூர்

    நீலகிரி மாவட்டம், குன்னூரை சுற்றிய வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் உலவி வருவது வாடிக்கை.

    இந்நிலையில், வனத்தைவிட்டு வெளியேறிய காட்டெருமை குன்னூா் பேருந்து நிலையத்துக்குள் புதன்கிழமை காலை நுழைந்தது. வாகனங்கள் சப்தத்தால் எருமை அங்குமிங்கும் ஓடியது. இதனைக் கண்ட பொதுமக்கள் பஸ்களில் ஏறி அமா்ந்து கொண்டனா்.

    சிறிது நேரம் உலவிய காட்டெருமை பிறகு தானாகவே வனப் பகுதிக்குள் சென்றது.

    குடியிருப்பு பகுதிகளில் உலவி வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி வருகின்றன.
    • குடியிருப்பு பகுதியையொட்டிய பகுதிகளில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    அரவேணு,

    காடுகளும் மலைகளும் சூழ்ந்து வனவிலங்கு கூடாரமாக விளங்குவது தான் நீலகிரி மாவட்டம். மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி வருகின்றன.

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. குறிப்பாக கரடி, காட்டு யானைகள், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    அவ்வாறு வரும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியையொட்டிய பகுதிகளில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    தற்போது விடுமுறை காலம் என்பதால் சாலைகளில் ஏராளமான வாகனங்கள் சென்ற வண்ணம் உள்ளன. அவ்வாறு வரும் வாகனங்களை சில நேரங்களில் காட்டு யானைகள் வழிமறித்து வருகின்றன. அப்போது வாகனங்களை தாக்கும் சம்பவங்களும் நடக்கிறது.

    இந்த நிலையில் கோத்தகிரி பகுதிகளில் காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காட்டு மாடுகள் சாலையோரம் மேயந்து கொண்டிருக்கின்றன.

    சில நேரங்களில் சாலைகளிலும் ஒய்வெடுக்கின்றன.

    இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே சென்று வருகிறார்கள்.

    எனவே வனத்துறையினர் காட்டு மாடுகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    • 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்ெடருமை விடப்பட்டது
    • தேயிலை தோட்டத்தில் இருந்ததை அறிந்து காட்டெருமை கன்றை அங்கு விரட்டினர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் பெருமளவு காட்டெருமை, கரடி போன்ற வன விலங்குகள் அதிக அளவு காணப்படுகிறது.

    இந்த வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் உணவு தேடி அடிக்கடி வருவது தற்போது வாடிக்கையாகி விட்டது. கோத்தகிரி காம்பைக்கடை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் காட்டெருமை கூட்டம் ஒன்று மேய்ந்து கொண்டு இருந்தது.

    அப்போது அந்த கூட்டத்தில் இருந்த காட்டெருமை கன்று ஒன்று வழி தவறி வேறு ஒரு பகுதிக்கும் காட்டு எருமை கூட்டம் வேறு ஒரு பகுதிக்கும் சென்று விட்டது.

    மீண்டும் தாயுடன் சேர முடியாமல் இருந்த அந்த காட்டெருமை கன்று அங்கும், இங்குமாய் சுற்றி வந்தது.

    இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக கோத்தகிரி வன சரக வனக்கப்பாளர் சிவாவுக்கு தெரிவித்தனர்.

    உடனடியாக அவர் வனவர் விவேகானந்தன், வேட்டை தடுப்பு காவலர் பொன்னமலை, மனித விலங்கு மோதல் காவலர் இன்பரசு ஆகியோர் அந்த காட்டெருமை கன்று இருந்த பகுதிக்கு வந்தனர்.

    சுற்று வட்டாரத்தில் ஏதேனும் காட்டெருமை கூட்டம் உள்ளதா என்று ஆராய்ந்தனர். பின் 2 மணி நேரத்திற்கு பிறகு ஒற்றை காட்டெருமை ஒன்று சத்தத்துடன் அங்குள்ள மற்றொரு தேயிலை தோட்டத்தில் இருந்ததை அறிந்து காட்டெருமை கன்றை அங்கு விரட்டினர். கன்றும் துள்ளி குதித்து சென்று தாயுடன் சேர்ந்து கொண்டது.

    இதனை அங்கு குடியிருந்த மக்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்ததுடன், வனத்துறையினருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

    • ஊட்டி ஏரியில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது.
    • காட்டெருமைகள் வாகனங்கள் செல்லும் சாலையில் சர்வ சாதாரணமாக நடமாடியது.

    ஊட்டி:

    சுற்றுலா நகரமாக ஊட்டி திகழ்ந்து வருகிறது. ஊட்டி ஏரியில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏரியை சுற்றி தீட்டுக்கல், கேர்ன்ஹில் உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன.

    அங்கு காட்டெருமை, சிறுத்தைப்புலி, கடமான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த விலங்குகள் அவ்வப்போது நகருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.

    குறிப்பாக காட்டெருமைகள் நகருக்குள் வருவது வாடிக்கையாகவே இருக்கிறது. இந்த நிலையில் நேற்று இரவு ஊட்டி நகரின் மிக முக்கிய சாலையான மார்க்கெட் சாலையில் 5-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக சுற்றி திரிந்தன.

    இந்த காட்டெருமைகள் வாகனங்கள் செல்லும் சாலையில் சர்வ சாதாரணமாக நடமாடியது. காட்டெருமைகள் வருவதை பார்த்ததும், வாகன ஓட்டிகளும், அந்த பகுதி பொதுமக்களும் அச்சம் அடைந்தனர்.

    சில வாகன ஓட்டிகள் வாகனத்தை வேகமாக இயக்கியபடியும், சிலர், அலறி அடித்து தப்பித்தால் போதும் என ஓட்டமும் பிடித்தனர். சிறிது நேரம் சாலையில் சுற்றிதிரிந்த காட்டெருமை கூட்டம் பின்னர் அங்கிருந்து அடர்ந்த வனத்திற்குள் சென்றது.

    இதுவரை ஒற்றை காட்டெருமை மட்டுமே ஊட்டி நகரில் உலாவந்த நிலையில் தற்போது காட்டெருமைகள் கூட்டமாக சுற்றி திரிவது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே ஊட்டி, குன்னூர் போன்ற பகுதிகளில் காட்டெருமைகள் நகருக்குள் சாவகாசமாக உலா வருகின்றன. இந்த சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. நகரில் சுற்றி திரியும் காட்டெருமைகளால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளோம். எனவே, வனத்துறையினர் வனவிலங்குகள் நகருக்குள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×