search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டெருமை
    X

    குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டெருமை

    • குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • ஊருக்குள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர், பாடந்துறை மற்றும் தேவர் சோலை பேரூராட்சி கிராமங்களில் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆனால் இதுவரை இந்த காட்டெருமைகளை வனத்திற்குள் விரட்டுவதற்கு வனத்துறை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை ஒற்றை காட்டெருமை மட்டுமே கிராமங்களில் உலாவந்த நிலையில் தற்போது காட்டெருமைகள் கூட்டமாக சுற்றி திரிவது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே, வனத்துறையினர் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×