search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கத்தி குத்து"

    • சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே ஈசாந்திமங்கலம் நாவல் காடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42). அ.தி.மு.க. பிரமுகர்.தோவாளை ஊராட்சி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் ஆவார்.

    தற்போது மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த செல்வின் பெர்னால்டு (35), பிரேம் (22), மனோசிங் (24) ஆகிய 3 பேரும் நாவல் காடு பகுதியில் இருந்து மது அருந்தினார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கினார்கள். கத்தியால் கழுத்து மற்றும் வயிற்றில் சரமாரியாக குத்தினர். இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.அவரை சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் செல்வின் பெர்னால்டு, பிரேம், மனோசிங் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். 3 பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து 3 பேரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் செல்வின் பெர்னால்டு, பிரேம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தலைமறைவாக உள்ள மனோசிங்கை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.தனிப்படை போலீசார் அவரை தேடி வருகிறார்கள். மணிகண்டனை தாக்கி யதற்கான காரணம் என்ன என்பது குறித்து கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    நான் காதலிக்கும் பெண்ணை நீ எப்படி நிச்சயம் செய்ய போவாய் என்று கூறி ஏழுமலையின்முதுகில் கத்தியால் குத்தி, உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்றார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே புத்தந்தூர் காட்டு க்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 26) இவர் சம்பவத்தன்று புத்தந்தூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (24), என்பவர் நான் காதலிக்கும் பெண்ணை நீ எப்படி நிச்சயம் செய்ய போவாய் என்று கூறி ஏழுமலையின் முதுகில் கத்தியால் குத்தி, உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று கூறியதாக தெரிகிறது.

    இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.

    • மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிவந்து, 2 பேர் மீதும் மோதுவது போல் நிறுத்தியுள்ளார்.
    • நான் அப்படிதான் செய்வேன். என கூறி, கையில் வைத்திருந்த கத்தியால், 2 பேரையும் குத்திவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே கோட்டுச்சேரி முத்துசாமி பிள்ளை வீதியைச்சேர்ந்தவர் லட்சுமணன். இவர், கோட்டுச்சேரி ஆர்த்தி நகரில் வசிக்கும் தனது தம்பி முருகராஜை, வீட்டு வாசலில் சந்தித்து பேசிகொண்டிருந்தார்.அப்போது , எதிர்வீட்டில் வசிக்கும் வாலிபர் தட்சிணாமூர்த்தி என்பவர், மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிவந்து, 2 பேர் மீதும் மோதுவது போல் நிறுத்தியுள்ளார். ஏன் இப்படி செய்கிறாய் என இருவரும் கேட்டபோது, நான் அப்படிதான் செய்வேன் என கூறினார்.. பின்னர். அண்ணன், தம்பி இருவர் வீட்டினுள் சென்றபிறகு, தட்சிணாமூர்த்தி முருகராஜ் வீட்டின் மீது கற்களை வீசினார்

    இதனை வெளியே வந்த அண்ணன், தம்பி இருவரும் ஏன் வீட்டு மீது கல்லை வீசினாய் என கேட்டபோது, நான் அப்படிதான் செய்வேன். என கூறி, கையில் வைத்திருந்த கத்தியால், 2 பேரையும் குத்திவிட்டு தலைமறைவாகிவிட்டார்.இது குறித்து, லட்சுமணன், கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, தட்சிணாமூர்த்தியை கைது செய்தனர். 

    • நில அளவையர் மீது வழக்கு
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருள். இவர் நெமிலியில் நில அளவையராக பணி செய்து வருகிறார்.

    நேற்று காலை இவருக்கும் எதிர் வீட்டில் இருக்கும் கருணாகரன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கருணாகரனை, அருள் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் பலத்த காயம் அடைந்த கருணாகரனை அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேலும், இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அருள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    இந்த தகராறை அங்கு இருந்தவர்கள் செல்போன் வீடியோ மூலம் பதிவு செய்துள்ளனர். இதனை சமூக வலைதளத்தில் பரப்பி உள்ளனர். தற்போது வீடியோ வைரலாகி வருகிறது.

    • பொன்மலர்பாளையத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கும், இவரது தாய் ஜெயலட்சுமிக்கும் இடையே நேற்று குடும்பத் தகராறு ஏற்பட்டு உள்ளது.
    • இதில் ஆத்திரமடைந்த பாலச்சந்தர், பிரபுவை கத்தியால் குத்தி உள்ளார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொன்மலர்பாளையத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கும், இவரது தாய் ஜெயலட்சுமிக்கும் இடையே நேற்று குடும்பத் தகராறு ஏற்பட்டு உள்ளது.

    அப்போது பாலச்சந்தர், அவரது தாய் ஜெயலட்சுமியை அடித்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த அவர்களது வீட்டிற்கு அருகில் வசிக்கும் பிரபு (42) என்பவர், பாலச்சந்தரை தடுத்து தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாலச்சந்தர், பிரபுவை கத்தியால் குத்தி உள்ளார்.

    இதைப் பார்த்த அங்கிருந்த

    வர்கள் அதிர்ச்சியடைந்தனர். பாலச்சந்தரை தடுத்து, காயமடைந்த பிரபுவை மீட்டு ஆம்புலென்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேலும் இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் இந்திராணி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பிரபுவை கத்தியால் குத்திய பாலச்சந்தரை கைது செய்தனர். பின்னர் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். 

    • ஆனந்திற்கும் ரமேசிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • ஆத்திரமடைந்த ரமேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஆனந்தை சரமாரியாக குத்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராதா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வி என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனை அடுத்து இருவரையும் சமாதானம் செய்ய புதுப்பட்டு பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 37) அங்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஆனந்த் அண்ணன் ரமேஷ், ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டுள்ளார். இதனால் ஆனந்திற்கும் ரமேசிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஆனந்தை சரமாரியாக குத்தினார். அப்போது இதை தடுக்க வந்த தாய் மீனாவிற்கும் காயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் ஆனந்தையும் மீனாவையும் மீட்டு அதே பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குமாரபாளையத்தில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார்கள்.
    • அதிகம் மது குடித்து விட்டு, மற்ற இருவரிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பெராந்தார் காடு பகுதி யில் வசிப்பவர்கள் அழகன்

    (வயது 58), கபீர் (48),

    பெம்மன்கவுடா (40). இவர்கள்

    குமாரபாளையத்தில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார்கள்.

    கடந்த மாதம் 3-ம் தேதி இரவு, பெம்மன்கவுடா அதிகம் மது குடித்து விட்டு, மற்ற இருவரிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவரும் நிறுவனத்திற்கு சென்று தூங்கி விட்டு, மறுநாள் காலை அறைக்கு வந்து கதவை தட்ட, பெம்மன்கவுடா, இவர்களை தகாத வார்த்தையால் திட்டி கதவை திறந்துள்ளார்.

    அங்கு பொருட்கள் அனைத்தும் சிதறி கிடப்பதை கண்டு, இப்படி செய்யலாமா? என்று அழகன், கேட்க அவரை தாக்கி பெம்மன்கவுடா கத்தியால் குத்தினார். இதனால் பயந்து கபீர் வெளியே வந்து சத்தம் போட, பெம்மன்கவுடா அங்கிருந்து தப்பி ஓடினார்.

    பலத்த காயமடைந்த அழகன் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் பெம்மன்கவு டாவை கைது செய்தனர்.

    • நிலத்தகராறில் பயங்கரம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த மராட் டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் நாயுடு. இவரது மகன்கள் தட்சணா மூர்த்தி (வயது 49), சுந்தர மூர்த்தி, சரவணன் (41). அண்ணன் - தம்பிகளான இவர்களுக்கு சொந்தமாக அந்தப் பகுதியில் சுமார் 3 ஏக்கர் 88 சென்ட் விவசாய நிலம் உள்ளது.

    இந்த நிலத்தை பாகப்பிரிவினை செய்வதில் இவர்கள் 3 பேருக்கும் இடையே பிரச்சினை வந்ததால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பின் ஊர் பெரியவர் கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் வழக்கை வாபஸ் பெறுவதாக தட்சணா மூர்த்தி தெரிவித்தார். அதன் படி வழக்கை வாபஸ் பெற் றார்.இந்த நிலையில் தட்ச ணாமூர்த்தி நேற்று காலை அவருக்குரிய இடத்தில் டிராக்டர் மூலம் உழவு செய்து கொண்டு இருந்தார். அப் போது அங்கு வந்த தட்சணா மூர்த்தியின் கடைசி தம்பி சரவணன், கோர்ட்டில் வழக்கு இருக்கும்போது ஏன் ஏர் ஓட்டுகிறாய் என்று கேட் டுள்ளார்.

    இதனால் தட்சணாமூர்த் திக்கும் சரவணனுக்கும் தக ராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த சரவணன் நிலத்தில் இருந்த கல்லால் தட்சணா மூர்த்தியை தாக்கியுள்ளார். இதைப்பார்த்த அவரது தம்பி

    சுந்தரமூர்த்தி, அண்ணனை இப்படி கல்லால் அடித்து இருக்கின்றாயே என்று கேட் டுள்ளார். அதற்கு சரவணன் ஒன்று சேர்ந்து என் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கி றாய் என்று கூறி மறைத்து வைத்திருந்த கத்தியால் சுந்தர மூர்த்தியை சரமாரியாக குத்தி உள்ளார். படுகாயம் அடைந்தநிலையிலும் தடுக்க வந்த தட்சணாமூர்த்தியையும் கத்தியால் குத்திய சரவணன்தப்பி சென்று விட்டார். நிலைகுலைந்து மயங்கி விழுந்த தட்சணாமூர்த்தி மற் றும் சுந்தரமூர்த்தியை அரு கில் இருந்தவர்கள் மீட்டு ஒடு கத்தூர் அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் சிகிச்சைக் காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத் துவமனைக்கு கொண்டு செல் லப்பட்டனர். இது குறித்து சுந்தரமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரவடி உள்பட 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு
    • போலீசார் தொடர்ந்து விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இவரது 2-வது மகன் அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் மணி கண்டனுடன் சுற்றித்திரிவதை பெற்றோர் கண்டித்தனர்.

    இதனால் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் குடும்பத்திற்கும் நடராஜன் மகன் மணிகண்டனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் மணிகண்டனின் மூத்த மகன் ஆகாஷ் நேற்று எம்ஜிஆர் நகர் பகுதியில் சென்ற போது நடராஜன் மகன் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ஆகாஷை சரமாரியாக தாக்கியதுடன் கத்தியால் குத்தினார்கள்.

    இதையடுத்து படு காயம் அடைந்த ஆகாஷ் சிகிச்சைக்காக ஆசாரிப்ப ள்ளம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் ஆகாஷ் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.அவருடன் அவரது தந்தை மணிகண்டனும் வந்தார்.

    சி.பி.எச்.ரோடு சிவன் கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது ஆகாஷையும் அவரது தந்தை மணிகண்டனையும் தடுத்து நிறுத்தி நடராஜன் மகன் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் ஈசாக், ராஜா,வெற்றிவேல், ராஜராஜன் ஆகியோர் தகராறு செய்தனர்.

    பின்னர் ஆகாஷையும், அவரது தந்தை மணிகண்டனையும் கத்தியால் குத்தினார்கள். இதையடுத்து அவர்கள் கூச்சலிட்டனர்.அங்கு பொதுமக்கள் திரண்டனர்.

    அவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். படுகாயம் அடைந்த மணிகண்டன் மற்றும் அவரது மகன் ஆகாஷ் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவ ருக்கும் சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது.

    இது குறித்து மணி கண்டனின் மனைவி கீதா வடசேரி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெ க்டர் திருமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் ஈசாக், நடராஜன் மகன் மணிகண்டன்,ராஜா, வெற்றிவேல் ராஜராஜன் ஆகிய 5 பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் ஈசாக் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • ஏரியில் மீன் பிடித்ததால் ஆத்திரம்
    • 4 பேரிடம் போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனுார் கிராமம் புக்கா வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மணி மகன் பாண்டியன் (வயது25) இவர் பெங்களூரில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார்.

    2 நாட்களுக்கு முன் ஜோலார்பேட்டைக்கு வந்த அவர் நேற்று முன்தினம் சின்ன மூக்கனுார் ஏரி ஏரியில் மீன் பிடித்து கொண்டு இருந்தார்.

    அப்போது திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை நாராயணபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் (வயது 45) மற்றும் சின்னமோட்டூர் பகுதியைச் சேர்ந்த நாகேஷ், முருகன், மற்றும் அன்பழகன் மனைவி விஜயா ஆகியோர் சேர்ந்து பாண்டியன் ஏரியில் மீன் பிடித்தது பார்த்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர்.

    இதில் நிலை குலைந்து மயங்கி விழுந்த பாண்டியனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்துார் அரசு மருத்துவக் மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இது குறித்து பாண்டியன் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காதர் கான் பாண்டியனை தாக்கியதாக ஆனந்தன், அவரது சகோதரி விஜயா உறவினர்கள் நாகேஷ், முருகன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேகமாக பைக்கை ஓட்டி வந்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் வாணியம்பாடி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாபு இவரது மகன் விஜயபாபு (வயது 27) இவர் நேதாஜி ரோடு கட்டேரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது சக்கரகுப்பம் பகுதியைச் சேர்ந்த காந்தி ராஜான் என்பவர் தனது பைக்கில் வேகமாக ஓட்டி வந்தார்.

    இதைபார்த்த விஜயபாபு ஏன் இவ்வளவு வேகமாக பைக்கை ஓட்டி வருகிறாய் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காந்திராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது விஜயபாவுக்கு ஆதரவாக நண்பர் இளையராஜா ஏன் இவ்வளவு வேகமா ஓட்டி வந்தாய் எனக் கேட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த காந்தி ராஜன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் 2 பேரையும் குத்தினார். இதில் விஜயபாபு தலைமீதும் இளையராஜா கைமீதும் காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த விஜயபாபு இளையராஜா ஆகியோர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து விஜயபாபு கொடுத்த புகாரின்பேரில் ஜோலார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அரசு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து காந்திராஜனை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வீட்டில் ஸ்மைலா மட்டும் தனியாக இருந்தபோது மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து கத்தியால் ஸ்மைலாவை குத்தினார்.
    • ருபிஸ்டைன் வீட்டில் இருந்த 17 பவுன் நகை, பீரோவில் இருந்த ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம நபர் கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள கல்லாமொழியை சேர்ந்தவர் ருபிஸ்டைன். இவரது மனைவி ஸ்மைலா (வயது 36).

    கத்திக்குத்து

    ருபிஸ்டன் மீன்படி வேலை செய்து வருகிறார். அவர் நேற்று அதிகாலை வழக்கம் போல கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டார். வீட்டில் ஸ்மைலா மட்டும் தனியாக இருந்தார்.

    அப்போது மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்மைலா சத்தம் போட்டார். உடனே மர்மநபர் கத்தியால் ஸ்மைலாவை குத்தினார்.

    17 பவுன் நகை கொள்ளை

    இதில் அவரது உடலில் 3 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. பின்னர் மர்ம நபர் அங்கிருந்த 17 பவுன் நகை, பீரோவில் இருந்த ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளை யடித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.

    கொள்ளையன் கத்தியால் குத்தியதில் காயமடைந்த ஸ்மைலா திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீசார் விசாரணை

    இது தொடர்பாக அவர் குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்–ெபக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ரகுராஜன் விசாரணை நடத்தி வருகின்றார்.

    ×