என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியில்அண்ணன்- தம்பியை ஆபாசமாக திட்டி கத்தியால் குத்திய வாலிபர் கைது.
- மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிவந்து, 2 பேர் மீதும் மோதுவது போல் நிறுத்தியுள்ளார்.
- நான் அப்படிதான் செய்வேன். என கூறி, கையில் வைத்திருந்த கத்தியால், 2 பேரையும் குத்திவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே கோட்டுச்சேரி முத்துசாமி பிள்ளை வீதியைச்சேர்ந்தவர் லட்சுமணன். இவர், கோட்டுச்சேரி ஆர்த்தி நகரில் வசிக்கும் தனது தம்பி முருகராஜை, வீட்டு வாசலில் சந்தித்து பேசிகொண்டிருந்தார்.அப்போது , எதிர்வீட்டில் வசிக்கும் வாலிபர் தட்சிணாமூர்த்தி என்பவர், மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிவந்து, 2 பேர் மீதும் மோதுவது போல் நிறுத்தியுள்ளார். ஏன் இப்படி செய்கிறாய் என இருவரும் கேட்டபோது, நான் அப்படிதான் செய்வேன் என கூறினார்.. பின்னர். அண்ணன், தம்பி இருவர் வீட்டினுள் சென்றபிறகு, தட்சிணாமூர்த்தி முருகராஜ் வீட்டின் மீது கற்களை வீசினார்
இதனை வெளியே வந்த அண்ணன், தம்பி இருவரும் ஏன் வீட்டு மீது கல்லை வீசினாய் என கேட்டபோது, நான் அப்படிதான் செய்வேன். என கூறி, கையில் வைத்திருந்த கத்தியால், 2 பேரையும் குத்திவிட்டு தலைமறைவாகிவிட்டார்.இது குறித்து, லட்சுமணன், கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, தட்சிணாமூர்த்தியை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்