search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் அருகே   தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது
    X

    சங்கராபுரம் அருகே தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது

    • ஆனந்திற்கும் ரமேசிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • ஆத்திரமடைந்த ரமேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஆனந்தை சரமாரியாக குத்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராதா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வி என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனை அடுத்து இருவரையும் சமாதானம் செய்ய புதுப்பட்டு பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 37) அங்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஆனந்த் அண்ணன் ரமேஷ், ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டுள்ளார். இதனால் ஆனந்திற்கும் ரமேசிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஆனந்தை சரமாரியாக குத்தினார். அப்போது இதை தடுக்க வந்த தாய் மீனாவிற்கும் காயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் ஆனந்தையும் மீனாவையும் மீட்டு அதே பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×