search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போனில் பரவும் கத்தி குத்து வீடியோ
    X

    செல்போனில் பரவும் கத்தி குத்து வீடியோ

    • நில அளவையர் மீது வழக்கு
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருள். இவர் நெமிலியில் நில அளவையராக பணி செய்து வருகிறார்.

    நேற்று காலை இவருக்கும் எதிர் வீட்டில் இருக்கும் கருணாகரன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கருணாகரனை, அருள் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் பலத்த காயம் அடைந்த கருணாகரனை அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேலும், இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அருள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    இந்த தகராறை அங்கு இருந்தவர்கள் செல்போன் வீடியோ மூலம் பதிவு செய்துள்ளனர். இதனை சமூக வலைதளத்தில் பரப்பி உள்ளனர். தற்போது வீடியோ வைரலாகி வருகிறது.

    Next Story
    ×