என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
2 அண்ணன்களை கத்தியால் குத்திய தம்பி கைது
அணைக்கட்டு:
அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த மராட் டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் நாயுடு. இவரது மகன்கள் தட்சணா மூர்த்தி (வயது 49), சுந்தர மூர்த்தி, சரவணன் (41). அண்ணன் - தம்பிகளான இவர்களுக்கு சொந்தமாக அந்தப் பகுதியில் சுமார் 3 ஏக்கர் 88 சென்ட் விவசாய நிலம் உள்ளது.
இந்த நிலத்தை பாகப்பிரிவினை செய்வதில் இவர்கள் 3 பேருக்கும் இடையே பிரச்சினை வந்ததால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பின் ஊர் பெரியவர் கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் வழக்கை வாபஸ் பெறுவதாக தட்சணா மூர்த்தி தெரிவித்தார். அதன் படி வழக்கை வாபஸ் பெற் றார்.இந்த நிலையில் தட்ச ணாமூர்த்தி நேற்று காலை அவருக்குரிய இடத்தில் டிராக்டர் மூலம் உழவு செய்து கொண்டு இருந்தார். அப் போது அங்கு வந்த தட்சணா மூர்த்தியின் கடைசி தம்பி சரவணன், கோர்ட்டில் வழக்கு இருக்கும்போது ஏன் ஏர் ஓட்டுகிறாய் என்று கேட் டுள்ளார்.
இதனால் தட்சணாமூர்த் திக்கும் சரவணனுக்கும் தக ராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த சரவணன் நிலத்தில் இருந்த கல்லால் தட்சணா மூர்த்தியை தாக்கியுள்ளார். இதைப்பார்த்த அவரது தம்பி
சுந்தரமூர்த்தி, அண்ணனை இப்படி கல்லால் அடித்து இருக்கின்றாயே என்று கேட் டுள்ளார். அதற்கு சரவணன் ஒன்று சேர்ந்து என் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கி றாய் என்று கூறி மறைத்து வைத்திருந்த கத்தியால் சுந்தர மூர்த்தியை சரமாரியாக குத்தி உள்ளார். படுகாயம் அடைந்தநிலையிலும் தடுக்க வந்த தட்சணாமூர்த்தியையும் கத்தியால் குத்திய சரவணன்தப்பி சென்று விட்டார். நிலைகுலைந்து மயங்கி விழுந்த தட்சணாமூர்த்தி மற் றும் சுந்தரமூர்த்தியை அரு கில் இருந்தவர்கள் மீட்டு ஒடு கத்தூர் அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் சிகிச்சைக் காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத் துவமனைக்கு கொண்டு செல் லப்பட்டனர். இது குறித்து சுந்தரமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்