search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏகாதசி"

    • ஒவ்வொரு மாதத்திலும் இரு ஏகாதசிகள் வருகின்றன.
    • வருடத்திற்கு 24 ஏகாதசிகள் உள்ளன.

    ஆனி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி நிர்ஜல ஏகாதசி என போற்றப்படுகிறது. பீமனே அனுஷ்டித்த விரதம் என்பதால் இந்த விரதம் 'பீம விரதம்' என்றும் பீம ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது.

    இன்று தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்கம் தானம் செய்த பலன் பெறுகிறார்கள். இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்பவர்கள் வைகுண்ட பதம் அடைவார்கள். மகத்துவம் நிறைந்த இந்த நாளில் ஒரு குடம் ஏன் ஒரு வாட்டர் பாட்டில் தண்ணீராவது தவித்த வாய்க்கு தானமாக கொடுத்து பாருங்கள் அப்புறம் உங்களுக்கு நடக்கும் நன்மைகளை நீங்கள் அறிவீர்கள்.

    நிர்ஜல ஏகாதசி விரதமிருப்போர் எமதர்மராஜாவை சந்தித்து அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்லி தண்டனை அனுபவிக்க வேண்டாம். வைகுண்டத்தின் தூதுவர்கள் இறப்பிற்கு பின் நேரடியாக வைகுண்டத்திற்கு அழைத்து செல்வார்கள். புனித நதிகளில் நீராடிய பலனும், பலவிதமான தானங்களை அளித்த பலனும் இந்த ஏகாதசி விரதத்தின் மூலம் கிடைக்கும்.

    நிர்ஜல ஏகாதசியின் மகிமையைப் பற்றி கேட்பவருக்கு சூரிய கிரகணத்தில் வரும் அமாவாசை திதியில் சிரார்த்தம் செய்த பலன் கிட்டும். ஒரு பிராமணனை கொன்ற பாபம், தொடர்ந்து பொய் சொன்ன பாபம், மது அருந்திய பாபம், தன் குருவை மதிக்காமல் ஏளனம் செய்த பாபம் இவற்றிலிருந்து விடுபடலாம்.

    இந்த ஏகாதசி விரதமிருப்போர் தங்கள் பாபத்திலிருந்து விடுபடுவார்கள்.அவர்களின் நூறு தலைமுறைக்கான மூதாதையர்களும் தங்கள் பாப சுமையிலிருந்து விடுபடுவார்கள். இன்று நீங்களும் பெருமாளை நினைத்து விரதம் இருந்து ஒரு குடம் தண்ணீர் யாருக்காவது தானமாக கொடுங்களேன்.

    • வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு நிர்ஜலா ஏகாதசி எனப்பெயர்.
    • அனைத்து பாவங்களும்-துன்பங்களும் விலகும்.

    வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு நிர்ஜலா ஏகாதசி எனப்பெயர். கலி தோஷத்தால் ஏற்படும் பாபங்களையும் துன்பங்களையும் போக்கும் சக்தி ஏகாதசி உபவாசத்துக்கு உண்டு. ஆகவே தான் 8 வயது முதல் 80 வயது வரையுள்ள ஆண்கள், பெண்கள் அனைவரும் ஏகாதசியன்று எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்த்திரம்.

    பஞ்சபாண்டவர்களுக்குள் பீமன் மிகவும் பலம் பொருந்தியவர். அதற்குத் தக்க பலமான ஆகாரம் சாப்பிட்டுப் பழக்கப்பட்டவர். ஒரு சமயம் பீமன் வேதவ்யாஸ் மகரிஷியிடம் சென்று 'எனது வீட்டில் சகோதரர்களும், தாயாரும், மனைவியும் ஏகாதசி உபவாசம் அனுஷ்டிக்கின்றனர். அவர்கள் என்னையும் அனுஷ்டிக்குமாறு கூறுகின்றார்கள். எனக்கும் ஏகாதசி உபவாசம் அனுஷ்டிக்க வேண்டும் என்று விருப்பம். ஆனால் என்னால் உணவு உண்ணாமல் உபவாசம் இருப்பது என்பது இயலாத காரியம் என்ன செய்வது? என்று கேட்டார் பீமன்.

    ஸ்ரீவேதவியாசரும் சிரித்துக்கொண்டே, பீமா! உன்னால் ஆண்டு முழுவதும் வரும் 25 ஏகாதசியிலும் உபவாசம் இருக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனி மாத சுக்லபட்ச (நிர்ஜலா) ஏகாதசியன்று மட்டும் தண்ணீர் கூட அருந்தாமல் உபவாசம் இரு. அதுவே ஆண்டு முழுவதும் அனைத்து ஏகாதசிகளிலும் உபவாசம் இருந்த பலனை உனக்குத்தரும் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறியதை பீமனிடம் கூறினார்.

    பீமனும் அவ்வாறே நிர்ஜல ஏகாதசியன்று சுத்த உபவாசம் இருந்து துவாதசியன்று சாப்பிட்டார். அது முதல் இந்த நாளுக்கு பீம ஏகாதசி என்றும், நிர்ஜல ஏகாதசி என்றும் பெயர் ஏற்பட்டது. ஆகவே நாளை எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருப்பதால் ஓரு வருடம் முழுவதும் ஏகாதசியன்று உபவாசம் இருந்த பலன் கிட்டும். அனைத்து பாவங்களும்-துன்பங்களும் விலகும்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • சிவன், அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர், சன்னதி உள்ளது.
    • அம்பாள் சந்நிதிகளில் பீடத்திற்கு அடியில் அல்லது அம்பிகையின் பாதம் முன்பு ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம்.

    மூலவர் - சங்கரலிங்கம்

    அம்மன் - கோமதி அம்மன்

    தல விருட்சம் - புன்னை

    தீர்த்தம் - நாகசுனை தீர்த்தம்

    ஊர் - சங்கரன்கோவில்

    மாவட்டம் - திருநெல்வேலி

    அரியும் சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்க அம்பாள் பார்வதி, "கோமதி" என்னும் பெயரில் பூலோகம் வந்து தவமிருந்த இடமே சங்கரன்கோவில். சங்கன் என்னும் நாக அரசன் சிவன் மீதும், பதுமன் என்ற அரசன் திருமால் மீதும் பக்தி கொண்டிருந்தனர். இருவருக்கும் சிவன் பெரியவரா திருமால் பெரியவரா என்ற வாதம் எழுந்தது.

    தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர். இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு காட்ட, இருவரும் இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள். அவளுடன் தேவர்கள் பசுக்கள் வடிவில் வந்து வணங்கி வந்தனர். பசுவை ''கோ" என்பர். தவக்காலத்தில் அம்பாளின் முகம் "மதி" போல் பிரகாசித்தது. எனவே அவள் "கோமதி" எனப்பட்டாள். "ஆவுடையம்மாள்" என்றும் இவளை அழைத்தனர்.

    "ஆ" என்றால் "பசு". "பசுக்களை உடையவள்" என்று பொருள். இதையடுத்து, இருவரும் ஒன்றாக இணைந்து சங்கரநாராயணராக காட்சி தந்தனர். பின்னர், அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவன், சங்கரலிங்கமாகவும் எழுந்தருளினார். திங்கள் கிழமைகளில் கோமதி அம்பாளுக்கு மலர் பாவாடை, வெள்ளிக்கிழமையில் தங்கப்பாவாடை அணிவிப்பர்.

    திருமண, புத்திரதோஷம் உள்ளவர்கள் மாவிளக்கு ஏற்றுவர். அம்பாள் சந்நிதிகளில் பீடத்திற்கு அடியில் அல்லது அம்பிகையின் பாதம் முன்பு ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். ஆனால், இங்கு அம்பாள் சந்நிதி முன் மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை, ''ஆக்ஞா சக்ரம்" என்கின்றனர்.

    கோவில் அமைப்பு...

    சிவன், அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர், சன்னதி உள்ளது. சிவனுக்குரிய வலப்பாகத்தில் தலையில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடியும் உள்ளன. காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை இருக்கிறது. திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான்.

    திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி மற்றும் இலட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் இருக்கிறது. இவர் பக்கமுள்ள திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான். இச்சன்னதியில் காலை பூஜையில் மட்டும் துளசிதீர்த்தம் தரப்படும்.

    மற்ற நேரங்களில் விபூதி தருகின்றனர். பூஜையின் போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலைகளை அணிவிக்கிறார்கள். சிவன் அபிஷேகப்பிரியர். திருமால் அலங்காரப்பிரியர். எனவே திருமாலுக்கு உகந்த வகையில் மூலவர் சங்கரநாராயணர் எப்போதும் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது.

    இச்சன்னதியில் ஸ்படிகலிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவராத்திரி, ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு அபிஷேக, பூஜை நடக்கும். ஆடித்தபசு விழாவன்று மட்டும் அம்பாளுக்கு காட்சி தர இவர் வெளியேபுறப்பாடாகிறார். மனநோய், மனக்குழப்பம் உள்ளவர்கள் இதன் மேல் அமர்ந்து அம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள் ஆடித்தபசு விழா, 12 நாட்கள் நடக்கும்.

    அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் இவளுக்கு காட்சி தருவார்.

    கோவில் நடை திறக்கும் நேரம்: காலை 5 மணி முதல் - 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் - இரவு 9 மணி வரை. 

    • நாளை நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    • வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான ஒரு ஏகாதசி தினமாக வருதினி ஏகாதசி தினம் இருக்கிறது.

    வைகாசி மாதத்தில் முருகப் பெருமான் மற்றும் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள், உற்சவங்கள் நடைபெறும். மற்ற எல்லா மாதங்களில் வரும் ஏகாதேசி தினங்களைப் போலவே, வைகாசி மாதத்தில் வருகின்ற ஏகாதசி தினங்களும் பல சிறப்புகளைக் கொண்டதாக இருக்கின்றன. அப்படி இந்த வைகாசி மாதத்தில் வருகின்ற வைகாசி தேய்பிறை ஏகாதசி தினத்தின் மகிமையை குறித்தும், அந்த தினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான ஒரு ஏகாதசி தினமாக இந்த வருதினி ஏகாதசி தினம் இருக்கிறது. மற்ற எந்த ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும் இந்த வருதினி ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானது என வைணவ பிரிவு பெரியோர்கள் கூறுகின்றனர். முற்காலத்தில் மந்தத்தன் என்கிற அரசன் இந்த வருதினி ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து மிகச் சிறப்பான பலன்களை தன் வாழ்வில் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

    இந்த வருதினி ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு வீட்டின் பூஜை அறையில் இருக்கும் பெருமாள் மற்றும் லட்சுமி படத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டிட்டு, தாமரை பூ சமர்ப்பித்து, கிருஷ்ண துளசி இலைகள் மற்றும் பசும் தயிர் நைவேத்தியம் வைத்து, தூபங்கள் கொளுத்தி, தீபமேற்றி பெருமாள் லட்சுமி ஸ்தோத்திரங்கள், மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.

    பொதுவாக எந்த ஒரு ஏகாதசி விரத தினத்தன்றும் காலை முதல் இரவு வரை உணவு ஏதும் உண்ணாமல் இருப்பது மிகுந்த பலன்களை தரும். எனினும் தற்காலத்தில் பலருக்கும் வேலை நிமித்தம் மற்றும் உடல்நிலை காரணமாக உணவு ஏதும் உண்ணாமல் இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. எனவே அப்படிப்பட்டவர்கள் உப்பு சேர்க்காத எளிமையான உணவுகள் மற்றும் பால், பழங்கள் போன்றவற்றை சாப்பிட்டு இது ஏகாதசி விரதம் மேற்கொள்ளலாம். ஏகாதசி விரத தினத்தன்று நீங்கள் மற்றும் உங்கள் வீட்டிலிருப்பவர்கள் போதை பொருட்கள் உபயோகித்தல், புலால் உணவுகள் சாப்பிடுதல் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் சிறப்பான பலன்களை தரும்.

    மாலையில் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, தீபமேற்றி வழிபட வேண்டும். பின்பு வீட்டுக்கு திரும்பியதும் பூஜையறையில் பெருமாளுக்கு நைவேத்தியம் வைக்கப்பட்ட துளசி இலைகள் மற்றும் தயிரை குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் சிறிதளவு பிரசாதமாக தந்து, விரதம் மேற்கொண்டவர்களும் அப்பிரசாதத்தை சிறிது சாப்பிட்டு, பெருமாளுக்கான ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும்.

    வைகாசி மாத தேய்பிறை ஏகாதசி விரதம் அல்லது வருதினி ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்களுக்கு உடல் மற்றும் மன நலம் சிறக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலை எப்போதும் இருக்கும் தம்பதிகளிடையே அன்பு ஒற்றுமை மேலோங்கும் எதிர்பாராத விபத்துக்கள் ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும் தொழில் வியாபாரங்களில் நஷ்டமடைந்தவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால் மீண்டும் லாபங்களை பெறலாம் மகாவிஷ்ணுவின் அருளால் நினைத்த காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கும்

    • சுவாமிக்கு துளசி சாத்தி பழங்கள் முதலியன நிவேதனம் செய்ய வேண்டும்.
    • நாள் முழுவதும் நாராயணனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும்.

    சகல பாவங்களையும் நீக்கி நம்பிக்கை ஒளியை ஏற்ற வல்ல அற்புத தினமே ஏகாதசி விரதம். சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் ஏகாதசி "காமதா ஏகாதசி" எனப்படுகிறது. இந்த ஏகாதசி அன்று விரதத்தைக் கடைப்பிடித்தால் அது ஏழு ஜன்மப் பாவங்களையும் போக்கிவிடும் என்று கூறுகிறது புராணம்.

    புராணங்களின் படி லலிதன் என்ற கந்தர்வன், ஒரு சாபத்தின் காரணமாக ராட்சஸனாக மாறினான். அவனது மனைவியான லலிதை சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் இந்த காமதா ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து, பெருமாளின் அருளால் கணவனின் சாபம் நீங்க செய்தாள். நீங்கள் விரும்பியதை எல்லாம் நிறைவேற்றும் விரதம் இது. எனவே மிகுந்த நம்பிக்கையோடு இந்த விரதம் இருப்பவர்களுக்கு நன்மைகள் பல ஏற்படும் என்பது பெரியோர்களின் வாக்காகும்.

    இந்த சித்திரை வளர்பிறை ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளை வழிபட்ட பின்பு, வீட்டிற்கு வந்து பெருமாள் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபமேற்ற வேண்டும். உடல் நிலை நன்கு உள்ளவர்கள் இத்தினத்தில் காலை முதல் மாலை வரை எதுவும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் அல்லது துளசி இலைகள் ஊறவைத்த தீர்த்த நீரை அருந்தி விரதம் இருக்கலாம்.

    சுவாமிக்கு துளசி சாத்தி பழங்கள் முதலியன நிவேதனம் செய்ய வேண்டும். அன்றைய நாள் முழுவதும் நாராயணனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும்.

    அன்றைய நாள் முழுவதும் பெருமாளுக்குரிய மந்திரங்கள், விஷ்ணு புராணம், விஷ்ணு சகஸ்கர நாமம் போன்றவற்றை பாராயணம் செய்வது நல்லது. மாலையிலும் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்பு வீட்டிற்கு திரும்பி பால், பழம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

    சாஸ்திரப்படி அன்று பகல் இரவு இருவேளையும் தூங்கக் கூடாது. கண்டிப்பாகப் பகலில் தூங்கவே கூடாது. நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் தவிப்பவர்களுக்கு திருமணம் சீக்கிரம் நடக்கும். குடும்ப பொருளாதார நிலை உயரும்.

    இன்று `ஜய ஜய ஸ்ரீ சுதர்ஸனா... ஜய ஜய ஸ்ரீ சுதர்ஸனா' என்று 108 முறை உச்சரிப்பது நல்லது. இதன் மூலம் தீமைகள் தீர்ந்து நன்மைகள் அதிகரிக்கும்.

    • வளர்பிறை ஏகாதசியை சுக்ல பட்ச ஏகாதசி என்பார்கள்.
    • தேய்பிறை ஏகாதசியை கிருஷ்ண பட்ச ஏகாதசி என்பார்கள்.

    மாதந்தோறும் அமாவாசையும் பெளர்ணமியும் வரும். அமாவாசையில் இருந்து பெளர்ணமியை நோக்கி வரும் நாட்களில், ஏகாதசி திதி வரும். இதை வளர்பிறை ஏகாதசி என்பார்கள். அதேபோல், பெளர்ணமியில் இருந்து அமாவாசை நோக்கி வருகின்ற நாட்களில் ஏகாதசி திதி வரும். இதனை தேய்பிறை ஏகாதசி என்பார்கள்.

    வளர்பிறை ஏகாதசியை சுக்ல பட்ச ஏகாதசி என்பார்கள். தேய்பிறை ஏகாதசியை கிருஷ்ண பட்ச ஏகாதசி என்பார்கள். மாதந்தோறும் ஏகாதசி வந்தாலும் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுகிறது. வணங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் விரதம் இருந்து பெருமாளை தரிசித்தாலும் மார்கழி வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருப்பதும் பெருமாளை ஸேவிப்பதும் மகா புண்ணியம் என்று போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

    இதேபோல், பங்குனி மாதத்தில் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் ஏகாதசியும் விசேஷமானவை. தேய்பிறையில் வரும் ஏகாதசியை விஜயா ஏகாதசி என்பார்கள். வளர்பிறையில் வரும் ஏகாதசியை ஆமலகீ ஏகாதசி என்பார்கள். பங்குனி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியான ஆமலகீ ஏகாதசி நன்னாளில், விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் ஏராளம். இந்தநாளில், விரதம் மேற்கொண்டு, வீட்டில் நெல்லிமரம் இருந்தால் சுத்தம் செய்து, நீர் தெளித்து, சந்தனம் குங்குமமிட்டு சுற்றி வந்து நமஸ்கரிக்க வேண்டும் என்றும் நெல்லி மரத்தடியில், தூய்மை செய்யப்பட்ட இடத்தில், ஸ்ரீபரசுராமரின் திருவடிவத்தை வரைந்து கலசப் பிரதிஷ்டை செய்து பிரார்த்தனை செய்பவர்களும் உண்டு.

    நெல்லி மரத்தை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும். நெல்லி மரம் இல்லாத நிலையில், வீட்டுப் பூஜையறையில், வணங்கி வழிபட்டுவிட்டு, சர்க்கரைப் பொங்கல் மற்றும் புளியோதரை நைவேத்தியம் செய்து வழிபடலாம். துளசிச் செடி வளர்த்து வந்தால், துளசிச் செடிக்கு சந்தனம் குங்குமமிடலாம். மூன்று முறை வலம் வந்து வேண்டிக்கொள்ளலாம். இதனால், கோ தானம் செய்த பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

    பங்குனி மாதத்தின் வளர்பிறை ஏகாதசியில் மகாவிஷ்ணுவை விரதம் இருந்து வழிபட்டுப் பிரார்த்தனை செய்தால் நம் வாழ்வில் வளமும் நலமும் தந்தருளுவார் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

    • வளர்பிறை ஏகாதசியை சுக்ல பட்ச ஏகாதசி என்பார்கள்.
    • தேய்பிறை ஏகாதசியை கிருஷ்ண பட்ச ஏகாதசி என்பார்கள்.

    இன்று திருவோணம் மற்றும் பங்குனி தேய்பிறை ஏகாதசி "விஜயா" எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்று என அடுக்கு முறையில் பரப்பி கலசம் வைத்து

    பங்குனி மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசியை விஜயா ஏகாதசி என்பார்கள். எத்தனை தடைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் நீக்கி, எடுத்த காரியத்தில் வெற்றியை அளிக்கக் கூடியது விஜயா ஏகாதசி.

    பங்குனி தேய்பிறை விஜயா ஏகாதசியில், பெருமாளை தரிசிப்பதும் துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்வதும் மகத்தான பலன்களை வழங்கும். நாம் பெருமாளிடம் வைக்கிற கோரிக்கைகளெல்லாம் நிறைவேறும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    'இலங்கை சென்று ராவணனுடன் போரிட்டு, சீதையை எப்படி மீட்பது?' என்று ஸ்ரீராமர் சிந்தனையில் ஆழ்ந்தார். அப்போது முனிவர் ஒருவர் அவரிடம் இந்த விஜயா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கச் சொன்னார். அதன்படி விரதம் இருந்து ஸ்ரீராமர், சீதையை மீட்டு வந்தார் என ஏகாதசி விரத மகாத்மியம் தெரிவிக்கிறது.

    விஜயா ஏகாதசி நன்னாளில், வாழை இலையில் ஏழு விதமான தானியங்களை (எள் சேர்க்கக் கூடாது என்பார்கள்) ஒன்றின் மேல் ஒன்றாகப் பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு கலசத்தை வைத்து, அதில் மஹாவிஷ்ணுவை ஆவாகணம் செய்து பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறுவர் என்பது ஐதீகம். நெல்லி மரத்தை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும். நெல்லி மரம் இல்லாத நிலையில், வீட்டுப் பூஜையறையில், வணங்கி வழிபட்டுவிட்டு, சர்க்கரைப் பொங்கல் மற்றும் புளியோதரை நைவேத்தியம் செய்து வழிபடலாம். துளசிச் செடி வளர்த்து வந்தால், துளசிச் செடிக்கு சந்தனம் குங்குமமிடலாம். மூன்று முறை வலம் வந்து வேண்டிக்கொள்ளலாம். இதனால், கோ தானம் செய்த பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.

    • ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயரும், தனிச்சிறப்பும் உண்டு.
    • விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம்.

    விரதங்களில் ஏகாதசிக்கு இணையான விரதம் எதுவும் இல்லை என பத்ம புராணம், கருட புராணம் உள்ளிட்ட புராணங்கள் சொல்கின்றன. ஏகாதசி திதியானது வளர்பிறை, தேய்பிறை என மாதத்திற்கு இரண்டு முறை வருகிறது. அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு முந்தைய நான்காவது நாளை ஏகாதசி என்கிறோம். வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வருகின்றன. ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயரும், தனிச்சிறப்பும் உண்டு. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலன்களை தரக்கூடியன.

    மாசி மாதம் வழிபாட்டிற்குரிய மாதம் என்பதால் இந்த மாதத்தில் வரும் அனைத்து திதிகளும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றவை. மாசி மாதத்தில் வரும் ஏகாதசியும் சிறப்பு வாய்ந்தது. மாசி மாதத்தில் வரும் ஏகாதசிகளுக்கு ஜெய ஏகாதசி, விஜய ஏகாதசிகள் என்று பெயர். இதில் வளர்பிறை வருவது ஜெய ஏகாதசி என்றும், தேய்பிறையில் வருவது விஜய ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு ஏகாதசிகளிலும் விரதம் இருப்பவர்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இன்று ஜெய ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில் கடுமையான விரதத்தை கடைபிடிப்பது பலரின் பழக்கம். ஜெய ஏகாதசி, பூமி ஏகாதசி என்றும், பீஷ்ம ஏகாதசி என்றும் தென்னிந்தியாவில் அழைக்கப்படுகிறது. குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இது பீஷ்ம ஏகாதசி என்ற பெயரிலேயே கொண்டாடப்படுகிறது.

    ஜெய ஏகாதசி விரதம் மிகவும் உயர்வான விரத நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்து, பெருமாளை வழிபட்டால் கொடுமையான பாவங்களில் இருந்தும் விடுபட முடியும். இது சிவனை வழிபடுவதற்கும் ஏற்ற நாளாகும். இந்த நாளில் மகாவிஷ்ணுவின் பத்தினியான மகாலட்சுமியை வணங்கினால் வீட்டில் செல்வ வளம் பெருகும். ஏகாதசி விரதம் கடைபிடிப்பவர்கள் அன்று இரவு தூங்காமல், விஷ்ணுவின் நாமங்களை பாராயணம் செய்த படி இருக்க வேண்டும்.

    ஏகாதசி விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். வாழ்வில் ஏற்றம் பெற்று, சங்கடங்கள் தீர்ந்து இன்புற்று வாழலாம். காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை; ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை' என்பது ஆன்றோர் வாக்கு.

    சொல்ல வேண்டிய மந்திரம்

    "ஓம் நமோ பகவதே வாசுதேவாய"

    "ஓம் நமோ நாராயணா"

    இந்த மந்திரங்களை பூஜையின் போதும், மற்ற நேரங்களிலும் பாராயணம் செய்வது மகாவிஷ்ணுவின் ஆசிகளை பெற்றுத் தரும்

    • 19-ந் தேதி வரை திருவாய் மொழி திருநாட்கள் நடைபெறும்.
    • வருகிற 20-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறும்.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில், 108 வைணவ தலங்களில் 2-வது தலமாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலமாகவும் விளங்குகிறது. இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது.

    அன்று முதல் தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி சேவித்தலும், இரவு 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்த கோஷ்டியும், இரவு 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை பொது ஜன சேவையும் நடைபெற்றது.

    வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து உற்சவ நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு பரமபத வாசல் நோக்கி வந்தார். மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    சொர்க்கவாசலை கடந்து சென்ற உற்சவ நாச்சியார் வழிநடை உபயங்கள் கண்டருளி, ஆழ்வார்-ஆச்சாரியார் மரியாதையாகி திருவாய்மொழி ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். அப்போது சொர்க்கவாசல் முன்பு திரண்டு நின்ற பக்தர்கள் உற்சவ நாச்சியாரை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 9.45 மணி அளவில் வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இதனை தொடர்ந்து 19-ந் தேதி வரை திருவாய் மொழி திருநாட்கள் நடைபெறும். அன்றைய தினங்களில் மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். வருகிற 20-ந் தேதி தீர்த்தவாரி, திருமஞ்சனம், திருவாய் மொழி திருநாள் சாற்றுமறை நடைபெறும்.

    21-ந் தேதியன்று இயற்பா சாற்று மறையுடன் விழா நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இயற்பா தொடக்கமும், மாலை 5.15 மணி முதல் இரவு 7.45 மணி வரை இயற்பா பிரபந்தம் சேவித்தல், திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தலும் நடக்கிறது. இரவு 7.45 மணி முதல் 8.30 மணி வரை இயற்பா சாற்றுமறை திருத்துழாய் தீர்த்த வினியோகம் நடக்கிறது.

    • இன்று மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
    • 20-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலானது உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில். 108 வைணவ தலங்களில் 2-வது தலமாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

    இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் நேற்று வரை தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி சேவித்தலும், இரவு 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்த கோஷ்டியும், இரவு 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை பொது ஜன சேவையும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெறுகிறது. அதையொட்டி மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து தாயார் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு பரமபத வாசல் வந்தடைகிறார். மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து சொர்க்கவாசலை கடந்து தாயார் வழிநடை உபயங்கள் கண்டருளி, ஆழ்வார்-ஆச்சாரியார் மரியாதையாகி திருவாய்மொழி ஆஸ்தான மண்டபத்துக்கு மாலை 6.30 மணிக்கு வந்து சேர்கிறார். இரவு 8 மணி முதல் 8.45 மணி வரை பொதுஜன சேவை நடைபெறுகிறது. பின்னர் இரவு 9.45 மணி அளவில் வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைகிறார். தொடர்ந்து 21-ந் தேதி வரை திருவாய் மொழி திருநாள் எனப்படும் ராப்பத்து உற்சவம் நடைபெறும்.

    அன்றைய தினங்களில் மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். வருகிற 20-ந் தேதி மாலை 3 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 3.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுகிறார். தொடர்ந்து பரமபதவாசல் திறக்கப்பட்டு மாலை 4.15 மணிக்கு திருவாய்மொழி மண்டபம் வந்து சேருகிறார். அங்கு திருமஞ்சனம், திருவாய் மொழி திருநாள் சாற்றுமறை நடைபெறும்.

    வருகிற 21-ந் தேதியன்று இயற்பா சாற்றுமறையுடன் விழா நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இயற்பா தொடக்கமும், மாலை 5.15 மணி முதல் இரவு 7.45 மணிவரை இயற்பா பிரபந்தம் சேவித்தல், திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல் நடக்கிறது. இரவு 7.45 மணி முதல் 8.30 மணிவரை இயற்பா சாற்றுமறை திருத்துழாய் தீர்த்த வினியோகம் நடக்கிறது.

    • தானத்தில் சிறந்தது அன்னதானம்.
    • அன்னதானத்தை ஏகாதசி அன்று செய்யக்கூடாது.

    இன்று (வியாழக்கிழமை) ஷட்திலா ஏகாதசி ஆகும். ஷட் என்றால் ஆறு என்ற பொருள். தில என்றால் எள் என்று பொருள்.

    ஆறு வகையான எள் தானத்தை முன்னிலைப்படுத்தி இருப்பது ஷட்திலா ஏகாதசி. இந்த ஏகாதசி நிறைவின் போது (துவாதசியில்) அன்னத்தை அளிப்பதன் மூலமாக பெரும் பலனை அடைய முடியும்.

    தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னதானம் செய்து அற்புதமான பலன்களை அடைவதற்கான ஏகாதசி விரதத்தில் ஒன்று ஷட்திலா ஏகாதசி. ஆனால், இந்த அன்னதானத்தை ஏகாதசி அன்று செய்யக்கூடாது. துவாதசி அன்று செய்யவேண்டும்.

    இந்த மாதம் ஏகாதசி விரதம், குரு வாரத்தில் வருகிறது. அதாவது பசிப் பிணி தீர்ப்பதற்கு வழி சொன்ன குருவின் தினமாகிய வியாழக்கிழமை இந்த ஏகாதசி விரதம் வருவது மிக மிகச் சிறப்பு.

    • வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் நமக்கு காட்சி தருகிறார்.
    • வைகுண்ட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது நல்லது என்பது நம் முன்னோர்களின் கூற்று.

    வைகுண்டத்தில் தான் விஷ்ணு வசிக்கிறார். 'ஏகம்' என்பது 'ஒன்றை' குறிக்கின் றது. 'தசம்' என்பது பத்தை குறிக்கின்றது. ஒன்றையும் பத்தையும் கூட்டினால் 11. அமாவாசை வளர்பிறையில் பதினோராவது நாளில் ஒரு ஏகாதசியும், பவுர்ணமி தேய் பிறையில் பதினோராவது நாளில் மற்றொரு ஏகாதசி வருகிறது. மொத்தம் வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும்.

    இதில் மார்கழி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசியை நாம் வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடி வருகிறோம். மற்ற ஏகாதசியில் நம்மால் விரதத்தை கடைபிடிக்க முடியவில்லை என்றாலும் இந்த மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது நல்லது என்பது நம் முன்னோர்களின் கூற்று. ஏகாதசி விரதமானது முதலில் தொடங்கப்பட்ட மாதமும் மார்கழி தான்.

    பெருமாள் கோவில்களில் இருக்கும் சொர்க்க வாசல் என்று கூறப்படும் அந்த கதவினை குறிப்பாக ஏன் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கிறார்கள் என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு இன்னும் இருந்துதான் வருகிறது. அந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காக இந்த பதிவு.

    நம்முடைய இந்து புராண கதைகள் என்றாலே அது ஒருவருடைய கர்வத்தை அடக்குவதற்காகவோ அல்லது தீயவர்களிடமிருந்து நல்லவர்களை காப்பாற்றுவதற்காகவோ அல்லது அதர்மத்தை அழிப்பதற்காகவோ தான் இருக்கும். நம் வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக நம் முன்னோர்கள் நமக்கு கூறிவிட்டு சென்றுள்ள வழிபாடுகளும் விரதங்களும் நமக்கு நன்மை தரும் வகையில் அமைந்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு நல்ல புராணக்கதையைத்தான் நாம் தெரிந்து கொள்ளப்போகிறோம்.

    ஒரு நாள் இந்த பூலோகத்தில் உயிர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் விஷ்ணுவிற்கு வந்தது. உயிர்களைப் படைக்கும் வேலையை செய்வதற்கு ஒரு வரை நியமிக்க வேண்டும் அல்லவா? அதற்காக பிரம்மனை படைத்தார். உயிர்களையெல்லாம் இந்த பூலோகத்தில், பிரம்மாவான நான் தான் படைக்கப் போகிறேன், என்ற கர்வமானது பிரம்மனுக்கும் வந்துவிட்டது. தலைக் கணம் ஏறிவிட்டது. இந்த பிரம்மனின் தலைக்கணத்தை அடக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்த விஷ்ணு தன் காதுகளில் இருந்து இரு அசுரர்களை வெளிக்கொண்டு வந்தார். அந்த இரண்டு அரக்கர்களின் பெயர் லோகன், கண்டன்.

    இந்த இரண்டு அசுரர்களின் கோரதாண்டவத்தை கண்ட பிரம்மாவின் கர்வமானது அடங்கி விட்டது. ஏனென்றால் இந்த இரண்டு அரக்கர்களும் விஷ்ணுவால் உருவாக்கப்பட்டவர்கள் அல்லவா? இவர்களுக்கு சக்தி அதிகம். அதாவது ஒரு நல்ல செயலுக்காக உருவாக்கப்பட்ட அரக்கர்கள் இவர்கள்.

    'பிரம்மனின் தலைக் கணத்தை நீக்கிய உங்களுக்கு என்ன வரம் வேண்டும்' என்று விஷ்ணு அந்த இரண்டு அரக்கர்களையும் நோக்கி கேட்டார். அந்த இரண்டு அரக்கர்களும் வித்தியாசமான ஒரு வரத்தை விஷ்ணுவிடம் கேட்டனர். விஷ்ணு பகவானால் படைக்கப்பட்ட அரக்கர்கள் அல்லவா, இவர்களுக்கும் தலைக்கணம் வந்து விட்டது.

    அப்போது விஷ்ணு பகவானான நீங்கள் அரக்கர்களான எங்கள் இருவரிடமும் போர்புரிய வேண்டும்' என்ற ஒரு கோரிக்கையை வைத்தனர். விஷ்ணுவும் இதை ஏற்றுக் கொண்டார். விஷ்ணு பகவான் வடக்கு வாசலின் வழியாக வந்து இந்த இரண்டு அரக்கர்களிடமும் போரினை தொடங்கினார். விஷ்ணுவிடம் பரமபதத்தில் போரிட்ட அந்த இரண்டு அரக்கர்களும் தோல்வி அடைந்து விஷ்ணுவின் பாதங்களில் சரண் அடைந்தனர்.

    பகவானே! 'தங்களின் சக்தியால் உருவாக்கப்பட்ட நாங்கள் வைகுண்டத்தில் உன்னிடமே இருக்க வேண்டும்' என்று வேண்டி வரத்தை கேட்டனர். தோல்வியுற்ற இந்த இரண்டு அரக்கர்களும் வடக்கு வாசலின் வழியாக பெருமாளை சென்றடைந்தனர். இரண்டு அரக்கர்களும், பெருமாளை சென்றடைந்த இந்த நாளைத்தான் வைகுண்ட ஏகாதேசி திருநாளாக கொண்டாடி வருகிறோம். இரண்டு அரக்கர்களும் இன்றுவரை பெருமாளின் இருபுறங்களிலும் சங்கு சக்கரமாக மாறி காட்சி தருகின்றனர். இந்த வடக்குவாசல் தான் சொர்க்க வாசலாக கூறப்படுகிறது.

    இதன்மூலம் 'வைகுண்ட ஏகாதசிஅன்று சொர்க்க வாசல் வழியாக வெளியில் தரிசனத்திற்காக வரும் பெருமாளை தரிசிப்பவர்களுக்கும், பெருமாளை சொர்க்கவாசல் வழியாக பின் தொடருபவர்களுக்கும் பாவங்கள் நீங்கி முக்தி அளிக்க வேண்டும்' என்று அந்த அசுரர்கள் பெருமாளிடம் வரத்தை வாங்கிக்கொண்டனர். இதன் மூலமாகத்தான் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் நமக்கு காட்சி தருகிறார்.

    அந்த விஷ்ணுவால் படைக்கப்பட்ட அசுரர்கள், தெரியாமல் செய்த தவறினை மன்னித்து அவர்களுக்கு மோட்சம் தந்து தன்னுடனே வைத்துக் கொண்ட அந்தப் பெருமாள், மனித பிறப்பு எடுத்து தெரியாமல் தவறு செய்யும் நம்மையும் மன்னித்து மோட்சத்திற்கு அழைத்துச் செல்வார். ஆகவே நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளில் இருந்து விமோசனம் பெற வேண்டுமென்றால் பெருமாளை இந்த ஏகாதசி அன்று சொர்க்க வாசலில் தரிசனம் செய்யுங்கள்.

    ×