search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்க்கட்சிகள் கூட்டம்"

    • கடந்த மாதம் 20-ந்தேதி பீகார் மாநிலம் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் சந்திப்பு நடந்தது.
    • ஜூலை 13, 14-ம் தேதிகளில் பெங்களூருவில் அடுத்த கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளன.

    ஆனால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒருமித்த கருத்துடன் ஒன்று திரளுமா? என்பதில் தொடர்ந்து சந்தேகம் நிலவுகிறது. குறிப்பாக காங்கிரஸ் தலைமையை ஏற்க சில மாநில கட்சி தலைவர்கள் இன்னமும் தயங்குகிறார்கள்.

    எதிர்க்கட்சிகள் இடையே நிலவும் கருத்து வேற்றுமைகளை விலக்கி ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிகளை பீகார் முதல்-மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார் மேற்கொண்டார். அவரது தொடர் முயற்சி காரணமாக கடந்த மாதம் 20-ந்தேதி பீகார் மாநிலம் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் சந்திப்பு நடந்தது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட 16 கட்சிகள் பங்கேற்றன. அப்போது தேசிய அளவில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து, ஜூலை 13, 14-ம் தேதிகளில் பெங்களூருவில் அடுத்த கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் பல்வேறு காரணங்களால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் பெங்களூருவில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெங்களூரு ஆலோசனை கூட்டம் தள்ளிப்போவதற்கு வேறு சில முக்கிய காரணங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
    • பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளன.

    ஆனால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒருமித்த கருத்துடன் ஒன்று திரளுமா? என்பதில் தொடர்ந்து சந்தேகம் நிலவுகிறது. குறிப்பாக காங்கிரஸ் தலைமையை ஏற்க சில மாநில கட்சி தலைவர்கள் இன்னமும் தயங்குகிறார்கள்.

    எதிர்க்கட்சிகள் இடையே நிலவும் கருத்து வேற்றுமைகளை விலக்கி ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிகளை பீகார் முதல்-மந்திரியும், ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார் மேற்கொண்டார். அவரது தொடர் முயற்சி காரணமாக கடந்த மாதம் 20-ந்தேதி பீகார் மாநிலம் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் சந்திப்பு நடந்தது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஸ்டீரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட 16 கட்சிகள் பங்கேற்றன. அப்போது தேசிய அளவில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

    அடுத்த கட்டமாக மாநில அளவில் கூட்டணிகளை உருவாக்குவது, நாடு முழுவதும் 450 தொகுதிகளில் பொது வேட்பாளர்களை நிறுத்துவது மற்றும் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை வகுப்பது ஆகியவற்றை முடிவு செய்ய 2-வது முறையாக மீண்டும் சந்தித்து பேச எதிர்க்கட்சிகள் தீர்மானித்தன. 2-வது முறையாக சிம்லாவில் சந்திக்க முதலில் திட்டமிடப்பட்டது.

    ஆனால் பருவமழை காரணமாக அந்த கூட்டத்தை கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரில் நடத்த முடிவு செய்தனர். வருகிற 13, 14-ந்தேதிகளில் பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்கள் மீண்டும் கூடி ஆலோசனை நடத்த இருந்தனர்.

    இந்த நிலையில் பெங்களூரு ஆலோசனை கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த கே.சி.தியாகி உறுதிப்படுத்தினார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ந்தேதி தொடங்குவதால் பெங்களூரு கூட்டத்தை ஒத்திவைப்பதாக அவர் கூறினார்.

    ஆனால் பெங்களூரு ஆலோசனை கூட்டம் தள்ளிப்போவதற்கு வேறு சில முக்கிய காரணங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. பீகார் மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அதுபோல கர்நாடகா சட்டசபை கூட்டமும் இன்று தொடங்கி வருகிற 14-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த இரு சட்டசபைகள் கூடும் நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர்களை ஒரே இடத்தில் ஒன்று திரட்டுவது சாத்தியம் இல்லாததால் எதிர்க்கட்சிகளின் கூட்டம் ரத்தாகி இருக்கிறது. காங்கிரஸ், தி.மு.க. கட்சிகளும் பெங்களூரு கூட்டத்தை ஒத்திவைக்க வலியுறுத்தியதாக தெரியவந்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீரென தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கட்சி தலைவர் சரத்பவார் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளார். பாட்னா கூட்டம் முடிந்த நிலையில் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளுக்கு வெவ்வேறு வகைகளில் சிக்கல் எழுந்துள்ளது.

    இதன் காரணமாகவே பெங்களூரு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது. எனவே அதுவரை எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்காது என்று கூறப்படுகிறது.

    இதனால் எதிர்க்கட்சி தலைவர்கள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக புதிய தேதி எப்போது அறிவிக்கப்படும் என்று தெரியவில்லை.

    • முதல் கூட்டத்தின் முடிவில் 2வது கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என கூறப்பட்டது.
    • கூட்டம் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.

    பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதற்கிடையே, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் கடந்த 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜிரிவால், ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பேனர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் என 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 6 மாநில முதல் மந்திரிகள் பங்கேற்றனர்.

    கூட்டம் முடிந்ததும் முதலமைச்சர் நிதிஷ் குமார்," வரும் பாராளுமன்ற தேர்தலை அனைவரும் ஒன்றாக இணைந்து சந்திக்க திட்டமிட்டு உள்ளோம்" என கூறினார்.

    இந்நிலையில், 2வது கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் ஜூலை 13,14ம் தேதிகளில் நடைபெறும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.

    • எதிர்க்கட்சிகளின் கூட்டம் முரண்பாட்டின் முழு வடிவம் என்று ஜி.கே.வாசன் கூறினார்.
    • தமிழக ஆளுநர் தனது சட்டத்திற்கு உட்பட்டு பணிகளை செய்து வருகிறார்.

    மதுரை

    தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தென் மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் மதுரையில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாரதீய ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஆசையில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியுள்ளன. பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் முரண்பாட்டின் முழு வடிவமாகும். பா.ஜ.க.வுடன் தனியாக மோதினால் வெல்ல முடியாது என்பதால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது. ஆனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும். தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் தேர்தலை த.மா.கா. சந்திக்கும். விரைவில் எங்கள் கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய உள்ளன.

    டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூடினால் தான் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை காக்க முடியும். தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும்போது அமலாக்கத் துறை சோதனையை சரி என்கிறது. ஆனால் ஆளுங் கட்சியாக மாறிய பின் தவறு என்கிறது.

    தி.மு.க. மக்களுக்கு அதிக வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றியுள்ளது. தமிழக ஆளுநர் தனது சட்டத்திற்கு உட்பட்டு பணிகளை செய்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ஆலோசனை கூட்டத்தில் மாவட்டத் தலை வர் ராஜாங்கம், நிர்வாகிகள் கே.எஸ்.கே.ராஜேந்திரன், சித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜனநாயகம் எப்படி குழிதோண்டி புதைக்கப்படுகிறது என்பதை நாடு கண்கூடாக காண்கிறது.
    • எதிர்க்கட்சிகள் அதிகாரத்திற்காக அல்லாமல் கொள்கைகளுக்காக ஒன்றிணைந்து செயல்படவேண்டும்.

    பாட்னா:

    பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, மகாத்மா காந்தியின் இந்தியாவை, கோட்சேவின் நாடாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது என்றார்.

    நாட்டில் சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள், ஜனநாயகம் எப்படி குழிதோண்டி புதைக்கப்படுகிறது என்பதை நாடு கண்கூடாக காண்பதாகவும், அதனை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கொள்வதாகவும் மெகபூபா குறிப்பிட்டார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மற்றொரு முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா பேசும்போது, எதிர்க்கட்சிகள் அதிகாரத்திற்காக அல்லாமல் கொள்கைகளுக்காக ஒன்றிணைந்து, நாட்டில் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

    • நிதிஷ்குமார் நாடு முழுவதும் பயணித்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
    • எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் சிம்லாவில் நடைபெறும்,

    பாட்னா:

    பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித்தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

    இதற்கிடையே, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜிரிவால், ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பேனர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் என 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 6 மாநில முதல் மந்திரிகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், கூட்டம் முடிந்ததும் முதல் மந்திரி நிதிஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இன்று நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம் பயனுள்ளதாக அமைந்தது. வரும் பாராளுமன்ற தேர்தலை அனைவரும் ஒன்றாக இணைந்து சந்திக்க திட்டமிட்டு உள்ளோம். அது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. விரைவில் மற்றொரு கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

    மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசுகையில், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தங்களுடன் இணைந்து செயல்படாமல் பிரதான எதிர்க்கட்சியான இடதுசாரிகளுடன் கை கோர்ப்பது எப்படி சரியாக இருக்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.

    தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா பேசுகையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு நீக்க விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நிலைப்பாட்டை விமர்சித்தார்.

    தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத்பவார் பேசுகையில், மகாராஷ்டிர மாநிலத்தில் நாங்கள் இருவரும் 25 ஆண்டுகளாக கடுமையான எதிரிகளாக இருந்து சண்டை போட்டவர்கள். இப்போது இணைந்து செயல்படவில்லையா? அதேபோலதான் நாம் அனைவரும் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கூறினார்.

    • பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
    • கூட்டம் முடிந்ததும் விமானம் மூலம் சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்.

    சென்னை:

    பீகாரின் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பங்கேற்றார். கூட்டம் முடிந்ததும் விமானம் மூலம் சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

    தனிப்பட்ட ஒரு கட்சிக்கு எதிராக நடைபெற்ற கூட்டமாக இதைக் கருத வேண்டாம்.

    எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் 7 முக்கிய கருத்துக்களை எடுத்து வைத்தேன்.

    பிரதமர் வேட்பாளர் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    இந்தியாவின் பன்முகத்தன்மை, ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாக்க வேண்டும்.

    மீண்டும் பா.ஜ.க. வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் தோற்கடிக்கப்படும்.

    மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமைதான் மிக முக்கியம் என்பதை வலியுறுத்தினேன் என தெரிவித்தார்.

    ×