search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்க்கட்சிகள் கூட்டம்"

    • முதல் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்தது.
    • 2-வது முறையாக பெங்களூருவில் கடந்த 17, 18-ம் தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூடி மீண்டும் ஆலோசனை நடத்தின.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பலம் மிக்க கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

    இதற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்தது. 2-வது முறையாக பெங்களூருவில் கடந்த 17, 18-ம் தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூடி மீண்டும் ஆலோசனை நடத்தின.

    26 கட்சிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் அணிக்கு 'இந்தியா' (I.N.D.I.A) என பெயரிடப்பட்டது.

    அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தி தேர்தல் வியூகங்கள் உள்ளிட்டவற்றை வகுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், இம்மாதம் 31ம் தேதி மற்றும் செப்டம்பர் 1ம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெறும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து ஷிவ் சேனா உத்தவ் பாலசாஹேப் தாக்கரேவின் தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், " இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 31ம் தேதி மற்றும் செப்டம்பர் 1ம் தேதி மும்பையில் நடைபெறும். கூட்டம் வெற்றிகரமாக நடைபெறும் என்பதை உறுதி செய்கிறோம்" என்றார்.

    • மத்திய அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா எனப் பெயர் வைத்துள்ளது
    • நாட்டின் பெயரை வைத்துள்ளதால் பொதுநல மனு

    பாராளுமன்ற தேர்தல்  அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இரண்டு முறை பிரதமராகிய மோடி, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வகையில் வியூகம் வகுத்து வருகிறார். இந்தமுறை எப்படியாவது பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

    இதனால் மோடிக்கு எதிரான எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக பீகாரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் கர்நாடகாவில் நடைபெற்றது. அப்போது இந்த கூட்டணிக்கு I.N.D.I.A. எனப் பெயர் வைக்கப்பட்டது.

    இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனம் கிளம்பியது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் இதற்கு எதிராக பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பொது நல மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, இதுகுறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசு, மத்திய தேர்தல் ஆணையம், பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    • மும்பையில் எதிர்க்கட்சிகளின் 3-வது ஆலோசனை கூட்டம் ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெற உள்ளது.
    • பாட்னா, பெங்களூருவில் ஏற்கனவே எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டங்கள் நடந்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பலம் மிக்க கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

    இதற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்தது. 2-வது முறையாக பெங்களூருவில் கடந்த 17, 18-ம் தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூடி மீண்டும் ஆலோசனை நடத்தின. 26 கட்சிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் அணிக்கு 'இந்தியா' என பெயரிடப்பட்டது.

    அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தி தேர்தல் வியூகங்கள் உள்ளிட்டவற்றை வகுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை மும்பையில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

    • எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.
    • 26 கட்சிகள் பங்கேற்ற எதிர்க்கட்சிகளின் அணிக்கு 'இந்தியா' என பெயரிடப்பட்டது.

    மும்பை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. முதல் ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும் நடந்தன.

    26 கட்சிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் அணிக்கு 'இந்தியா' என பெயரிடப்பட்டது. மேலும், தொடர்ந்து கூட்டங்கள் நடத்தி தேர்தல் வியூகங்கள் உள்ளிட்டவற்றை வகுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே, இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் ஆகஸ்டு மாதம் 25 மற்றும் 26-ம் தேதிகளில் மும்பையில் நடைபெறும் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பீகார் முதல் மந்திரியான நிதிஷ்குமார் எப்போது வேண்டுமானாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பி வருவார்.

    தற்போதைய சூழ்நிலையில் நிதிஷ்குமார் மகிழ்ச்சியாக காணப்படவில்லை. எதிர்க்கட்சி கூட்டணிகள் அடுத்த கூட்டம் நடைபெறும் மும்பைக்கு அவர் நிச்சயம் செல்ல மாட்டார் என தெரிவித்தார்.

    • எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெறுகிறது.
    • இதுவரை பாட்னா, பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

    முதல் ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும் நடந்தன. 26 கட்சிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் அணிக்கு 'இந்தியா' என பெயரிடப்பட்டது. மேலும், தொடர்ந்து கூட்டங்கள் நடத்தி தேர்தல் வியூகங்கள் உள்ளிட்டவற்றை வகுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் ஆகஸ்டு மாதம் 25 மற்றும் 26-ம் தேதிகளில் மும்பையில் நடைபெறும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

    காங்கிரஸ் உதவியுடன் நடைபெறும் இந்தக் கூட்டத்தை உத்தவ் தாக்கரேயின் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஒருங்கிணைக்கும் என்றும் எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் உள்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
    • பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதே எனது முயற்சி.

    பாட்னா:

    அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் ஆலேசானை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் நடந்தது.

    அதை தொடர்ந்து, 2-வது கூட்டம் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் உள்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    கூட்டம் முடிந்த பிறகு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். ஆனால் இதில் நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை.

    இதுகுறித்து பேசிய பா.ஜ.க. தலைவர் சுஷில் மோடி, எதிர்க்கட்சிகள் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தன்னை அறிவிக்காததால் நிதிஷ் குமார் அதிருப்தி அடைந்ததாகவும், அதனாலேயே அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்வில்லை எனவும் கூறினார்.

    ஆனால் நிதிஷ் குமார் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுப்பற்றி அவர் கூறுகையில், "எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, முடிவில் நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். உடனடியாக பாட்னாவுக்கு வர வேண்டியிருந்ததால், கூட்டத்துக்கு பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதே எனது முயற்சி. இப்போது அது வடிவம் பெற்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பாஜக அழிந்துவிடும்" என கூறினார்.

    • எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ (இந்திய வளர்ச்சி கூட்டணி) என பெயரிடப்பட்டுள்ளது.
    • மக்களைப் பிளவுபடுத்துவது மட்டுமே பா.ஜ.க.வின் வேலை.

    கொல்கத்தா :

    2024 பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளன. நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் கூட்டணி குறித்த முடிவு அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' (இந்திய வளர்ச்சி கூட்டணி) என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மேற்குவங்காள தலைநகர் கொல்கத்தாவில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் குறித்து பேசினார்.

    அப்போது அவர், "கலவரம், வன்முறை, மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவது மட்டுமே பா.ஜ.க.வின் வேலை. அவர்கள் தீர்க்கமான பதிலைப் பெறுவார்கள். தேர்தலில் அவர்களுக்கு (பாஜக) எதிராக வாக்களித்து மக்கள் பழிவாங்குவார்கள். இந்திய வளர்ச்சி கூட்டணி போரை எதிர்கொள்ளும்" என்றார்.

    தொடர்ந்து, மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு சில மாதங்களுக்குள் கவிழும் என பா.ஜ.க. எம்.பி. சாந்தனு தாக்கூர் பேசியது குறித்து கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி, "அவர்களிடம் (பாஜக) ஒரு டம்ளரை கவிழ்க்கச் சொல்லுங்கள். பின்னர் எங்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கலாம். விரைவில் மத்தியில் ஆட்சி கவிழும் என்பதை அவர்கள் உணர வேண்டும். நேற்றிலிருந்து (எதிர்க்கட்சிகள் கூட்டணியை அறிவித்தது முதல்) பா.ஜ.க. பயத்தில் நடுங்குகிறது" என கூறினார்.

    • கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்.
    • ஒற்றுமையே நமது பலம், ஒன்றாக இணைந்து #இந்தியா வெற்றி பெறும்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    பின்னர் இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பெங்களுருவில் மதச்சார்பற்ற, ஜனநாயக தலைவர்களுடன் வரலாற்று சிறப்புமிக்க மற்றும் ஆக்கபூர்வமான சந்திப்பு நடந்தது.

    பிரிவினைவாத அரசியலின் பிடியில் இருந்து நமது தேசத்தின் பன்மைத்துவ விழுமியங்களைப் பாதுகாப்பதற்கு நாங்கள் #இந்தியா - இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணியை (#INDIA - Indian National Developmental Inclusive Alliance)உருவாக்கியுள்ளோம்.

    தேசியவாதத்தின் முகமூடிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் எதேச்சாதிகாரிகள் இறுதியில் வீழ்வார்கள் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது!

    ஒற்றுமையே நமது பலம், ஒன்றாக இணைந்து #இந்தியா வெற்றி பெறும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • கட்சிகளுக்கிடையே உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க 11 பேர் கொண்ட துணைக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • இக்குழுவில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து மும்பை கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:-

    நாட்டின் நன்மைக்காக அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைப்பு கூட்டணி (INDIA) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும். கட்சிகளுக்கிடையே உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க 11 பேர் கொண்ட துணைக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்குழுவில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து மும்பை கூட்டத்தில் முடிவு செய்யப்படும். கூட்டத்திற்கான தேதியை விரைவில் அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பேசும்போது, எனனுடைய 52 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக இவ்வளவு யாரும் செய்து பார்த்ததில்லை என்றார்.

    • ஓரணியில் திரள வேண்டும் என்ற கருத்து பல்வேறு எதிர்க்கட்சிகளிடமும் ஏற்பட்டுள்ளது.
    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவது தொடர்பாக விரிவாக பேசப்பட்டது.

    பெங்களூரு:

    பா.ஜ.க.வை எப்படியாவது வருகிற பாராளுமன்ற தேர்தலில் வீழ்த்திவிட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களிலும் பெரும்பான்மையாக வெற்றி பெற்று பெரும் வலிமையாக இருக்கும் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற கருத்து பல்வேறு எதிர்க்கட்சிகளிடமும் ஏற்பட்டுள்ளது.

    அந்த வகையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முதல் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக பெங்களூருவில் நேற்று இரண்டாவது கூட்டம் தொடங்கியது. இன்றும் கூட்டம் நடைபெறுகிறது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவது தொடர்பாக விரிவாக பேசப்பட்டது. கூட்டணியின் பெயர், கூட்டணிக்கான தலைமை உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் தற்போதைய கூட்டணிக்கு இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைப்பு கூட்டணி (INDIA) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது, பிரதமர் பதவியை பெறுவதிலோ அதிகாரத்தை பெறுவதிலோ காங்கிரசுக்கு ஆர்வம் இல்லை என்றார். இதேபோல் மற்ற தலைவர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

    • எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா நேற்றிரவு விருந்து கொடுத்தார்.
    • இந்த கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவது தொடர்பாக விரிவாக பேசப்பட்டது.

    பெங்களூரு:

    பா.ஜ.க.வை எப்படியாவது வருகிற பாராளுமன்ற தேர்தலில் வீழ்த்திவிட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களிலும் பெரும்பான்மையாக வெற்றி பெற்று பெரும் வலிமையாக இருக்கும் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற கருத்து பல்வேறு எதிர்க்கட்சிகளிடமும் ஏற்பட்டுள்ளது.

    அந்த வகையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முதல் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கருத்து வேறுபாடுகளை கடந்து பா.ஜ.க.வை தோற்டிக்க வேண்டும் என்பதே நம்முடைய ஒற்றை இலக்காக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் எதிர்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் 2 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த கூட்டத்துக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்ட பிரதான பெரிய கட்சிகள் தவிர முதல் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாத பல சிறிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    குறிப்பாக தி.மு.க. கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வார்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மணி) உள்ளிட்ட கட்சிகளுக்கு புதிதாக அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள், சிறிய கட்சிகள், பாஜ.க. பக்கம் தாவி விடக்கூடாது என்பதை மனதில் வைத்து எதிர்கட்சிகள் தங்களது கூட்டணியை விரிவுபடுத்தியது.

    இந்த நிலையில் பெங்களூர் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள தாஜ் வெஸ்டன்ட் நட்சத்திர ஓட்டலில் நேற்று எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் தொடங்கியது. இதில் பங்கேற்க காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்-அமைச்சர் நிதிஷ்குமார், மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மராட்டிய மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் லாலு பிரசாத் யாதவ், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகமூபா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன், கேரளா மாநில காங்கிரஸ் (எம்) தலைவர் ஜோஸ் கே.மணி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அபிஷேக் பானர்ஜி, டெரிக் ஜி.பிரைன் உள்பட 26 கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா நேற்றிரவு விருந்து கொடுத்தார். இதில் சைவ, அசைவ உணவுகள் மற்றும் கர்நாடக மாநில பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் எதிரும், புதிருமாக உள்ள கட்சி தலைவர்கள் தங்களது எதிர்ப்புகளை ஒதுக்கிவிட்டு இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

    இன்று 2-வது நாளாக எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவது தொடர்பாக விரிவாக பேசப்பட்டது. மேலும் தேசிய அளவில் பொது வேட்பாளரை நிறுத்துவது, அந்தந்த மாநிலங்களில் பெரும்பான்மையாக உள்ள மாநில கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ.க. வேட்பாளருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது? என்பது குறித்தும் பேசப்பட்டது.

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது, பிரதமர் பதவியை பெறுவதிலோ அதிகாரத்தை பெறுவதிலோ காங்கிரசுக்கு ஆர்வம் இல்லை என்றார். அவர் மேலும் பேசியதாவது:-

    மாநில அளவில் நம்மிடையே உள்ள கட்சிகளுக்குள் சில வேறுபாடுகள் உள்ளன. அந்த வேறுபாடுகள் சித்தாந்தம் சார்ந்தவை அல்ல. ஆனால் அவை மக்கள் நலனுக்காக ஒதுக்கி வைக்க முடியாத அளவுக்கு பெரிய விஷயம் இல்லை. நாம் 26 கட்சிகள் இருக்கிறோம். 11 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். பாஜக தனித்து 303 இடங்களைப் பெறவில்லை, கூட்டணி கட்சிகளின் வாக்குகளைப் பயன்படுத்தி வெற்றி பெற்று பின்னர் அவற்றை நிராகரித்தது. இப்போது பாஜக தலைவர் மற்றும் அக்கட்சியின் பிற தலைவர்கள் பழைய கூட்டாளிகளுடன் ஒட்டிக்கொள்வதற்காக மாநிலம் விட்டு மாநிலம் வருகின்றனர்.

    இவ்வாறு கார்கே பேசினார்.

    எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் காரணமாக பெங்களூரு நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.
    • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்துக்கும் எங்களுக்கு அழைப்பு வரவில்லை.

    பெங்களூரு:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி அமைக்க திட்டமிடப்பட்டு எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. காங்கிரசை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூரில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் தி.மு.க., திரிணாமூல் உள்ளிட்ட 24-க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    இன்றும் ஆலோசனை நடைபெறும் நிலையில் கர்நாடகாவில் 3-வது பெரிய எதிர்க்கட்சியாக திகழும் மதசார்பற்ற ஜனதா தளத்தை இந்த கூட்டணியில் இணைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. அதே வேளையில் பா.ஜ.க.வும் தங்கள் கூட்டணியில் ம.ஜ.த. கட்சியை இணைக்க ஆலோசித்து வருகிறது. இதுபற்றி கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும் பா.ஜ.க. மூத்த தலைவருமான பசவராஜ் பொம்மை கூறுகையில், "மக்களவைத் தேர்தலில் பாஜக-ம.ஜ.த. இடையே கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது. 2 கட்சி தலைவர்களும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர். ம.ஜ.த. எங்களது கூட்டணியில் இணைந்தால் கர்நாடகாவில் உள்ள அனைத்து தொகுதிகளையும் நாங்கள் கைப்பற்றுவோம்'' என்றார். இது தொடர்பாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி கூறியதாவது:-

    பெங்களூருவில் நடைபெறும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எங்கள் கட்சிக்கு அழைப்பு வரவில்லை. அதனால் அந்த கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம். ஒருமித்த கருத்து இல்லாத அந்த கூட்டணியால் எந்த மாற்றமும் ஏற்படாது.

    எதிர்க்கட்சிகள் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை கணக்கில் வைக்கவில்லை. எங்கள் கட்சி மூழ்கிவிட்டது என்ற எண்ணத்தில் உள்ளனர். அதனால் எங்கள் கட்சியை அவர்கள் அழைக்கவில்லை. அதுபற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்துக்கும் எங்களுக்கு அழைப்பு வரவில்லை. அந்த கூட்டணிக்கு செல்வது குறித்து இன்னும் எங்களது கட்சி தலைவர்களுடன் ஆலோசிக்கவில்லை. இந்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா முடிவெடுப்பார்.

    இப்போதைக்கு எங்கள் கட்சியை பலப்படுத்துவது தான் எனது முக்கிய பணி. அதை நான் செய்கிறேன். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ளன. அடுத்த என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×