search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எக்ஸ்பிரஸ் ரெயில்"

    • 2-வது நடைமேடையில் இருந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்த 1-வது நடைமேடைக்கு வந்தது.
    • மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 5 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

    தரங்கம்பாடி:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் முக்கிய ரெயில் நிலையமாக மயிலாடுதுறை ரெயில் நிலையம் உள்ளது.

    பல ரெயில்களின் முக்கிய வழித்தடமாக இந்த ரெயில் நிலையம் உள்ளது.

    மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை 5.55 மணிக்கு மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்

    1-வது நடைமேடையில் வரும் என அறிவிக்கப்பட்டது.

    இதனால் பயணிகள் அனைவரும் முதலாவது நடை மேடையில் தங்கள் பொருட்களுடன் கூடி இருந்தனர்.

    ஆனால் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 2-வது நடைமேடைக்கு வந்து சேர்ந்தது.

    இதனால் முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத்தி றனாளி பயணிகள் என அனைவரும் தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு ரெயில் நிலைய நடை மேம்பால படிகளில் ஏறி மிகுந்த சிரமத்துடன் 2-வது நடைமேடைக்கு சென்றனர்.

    சிலர் ரெயில்வே தண்டவா ளத்தில் இறங்கி கடந்து 2-வது நடைமேடையில் நின்ற மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினர்.

    இதன் பின் 2-வது நடைமேடையில் இருந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்த 1-வது நடை மேடைக்கு வந்தது.

    அப்போது 2-வது நடைமேடைக்கு சிரமத்துடன் தங்கள் உடைமைகளை சுமந்து வந்த பயணிகள் ரெயிலில் ஏற முடியாமல் மீண்டும் 1-வது நடைமேடைக்கு தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு சென்றனர்.

    இதனால் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 5 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

    இது குறித்து ரெயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் ரெயில்வே உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

    இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் இது தொடர்பாக மயிலாடுதுறை ரெயில் நிலைய மேலாளர் சுபம் குமாரை பணியிடை நீக்கம் செய்து ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

    • ரெயில்களின் இயக்கத்திற்கு முக்கியமானது சிக்னல்கள் தான்.
    • தாம்பரத்தில் இருந்து வந்த சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஆரல்வாய்மொழியில் நிறுத்தப்பட்டது.

    குமரி மாவட்டத்திற்கு தமி ழகத்தின் பல பகுதிகள் மட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்தும் தினசரி பல்வேறு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் பிரதான ரெயில் நிலையமாக நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து தான் கன்னியாகுமரி மற்றும் கேரள மாநிலங்களுக்கும், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் ரெயில்கள் சென்று வருகின்றன.

    இந்த ரெயில்களின் இயக்கத்திற்கு முக்கியமானது சிக்னல்கள் தான். இன்று காலை இந்த சிக்னல் திடீரென பழுதானதால் நாகர்கோவில் வந்த மற்றும் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் ரெயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தான். இந்த ரெயில் நாகர்கோவில் சந்திப்பு நிலையத்திற்கு ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது. அதுவும் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சில மீட்டர் தூரங்களே உள்ள பகுதியில் தான் இந்த சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நேற்று மாலை கன்னியாகுமரிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது. இந்த ரெயில் காலை 4.55 மணிக்கு நாகர்கோ வில் ரெயில் நிலையம் வந்து சேர வேண்டும். ஆனால் நாகர்கோ வில் ரெயில் நிலையம் அருகே ஊட்டு வாழ் மடம் ரெயில்வே கேட் அருகே திடீரென சிக்னலில் கோளாறு ஏற்பட்ட தால் ரெயில் நிறுத்தப் பட்டது.

    நீண்ட நேரமாகி யும் சிக்னல் கிடைக்கா ததால் ரெயில் அங்கேயே நிற்க பயணிகள் தவிப் புக்குள்ளா னர்கள். இது குறித்து ரெயில்வே பணியா ளர்களுக்கு தகவல் தெரி விக்கப்பட் டது. அவர்கள் விரைந்து வந்து சிக்னலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் சுமார் 1½ மணி நேரத்துக்கு பிறகே சிக்னல் சரி செய்யப்பட்டது. அதன் பிறகு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் அங்கி ருந்து புறப் பட்டு நாகர்கோ வில் ரெயில் நிலை யத்திற் குள் வந்தது.

    இதே போல் தாம்ப ரத்தில் இருந்து வந்த சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பி ரஸ், ஆரல் வாய் மொழி யில் நிறுத்தப்பட்டது. காலை 6.50 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் வரவேண்டிய இந்த ரெயில், காலை 7.30 மணிக்கு வந்தது. பெங்களூ ருவில் இருந்து புறப் பட்டு காலை 7.15 மணிக்கு நாகர்கோ வில் வர வேண் டிய எக்ஸ்பி ரஸ் ரெயில் 8 மணிக்கு வந்தது. நெல்லை யில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு நாகர்கோ வில் டவுன் வழியாக செல்லும் ரெயிலும் நடுவழி யில் நிறுத்தப் பட்டது. காலை 6.50 மணிக்கு நாகர்கோ வில் டவுன் ரெயில் நிலையம் வர வேண் டிய இந்த ரெயில் 8.20 மணிக்கே வந்தது. அனந்தபுரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 1 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது.

    இதேபோல் நாகர்கோவில் சந்திப்பில் இருந்து புறப்பட்ட ரெயில்களும் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றன. காலை 6.15 மணிக்கு புறப்பட வேண்டிய மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் 40 நிமிடம் தாமதமாக 6.55 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. காலை 7.50 மணிக்கு புறப்படும் கோவை எக்ஸ்பிரஸ் 1 மணி நேரம் தாமதமாக 8.40 மணிக்கும், குருவாயூர் எக்ஸ்பிரஸ் காலை 8.05 மணிக்கு பதிலாக 9 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

    ரெயில்களின் தாமதம் காரணமாக ரெயிலில் இருந்த பயணிகள் மட்டுமின்றி, அவர்களை வரவேற்க மற்றும் வழியனுப்ப நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்தவர்களும் தவிப்புக்குள்ளா னார்கள். வழக்கமாக ரெயில் ஒழுகினசேரி பாலம் பகுதியில் வந்தவுடன் அதில் பயணிப்பவர்கள், தங்கள் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து ரெயில் நிலையம் வர சொல்வார்கள். இன்று காலையும் அதேபோல் தகவல் கொடுத்ததால், பலரும் ரெயிலில் வரும் தங்கள் சொந்தங்களை அழைத்துச் செல்ல நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் வந்திருந்தனர்.

    ஆனால் ரெயில்கள் தாமதமாக வந்ததால் ரெயில் நிலையம் பரபரப்பாகவும் கூட்ட நெரிசலுடனும் காணப்பட்டது. அடிக்கடி நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இது போன்ற சிக்னல் கோளாறுகள் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருவதாக பயணிகள் பலரும் வேதனை தெரிவித்தனர்.

    • ரெயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீப்பிடித்தது.
    • அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலத்தின் பிரோஸ்பூர் மற்றும் மத்தியபிரதேசத்தின் சியோனி இடையே படல்கோட் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. நேற்று மாலை இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஆக்ரா ரெயில் நிலையத்துக்கு அருகே சென்றபோது, ரெயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, தீப்பிடித்த பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    பின்னர் அந்த பெட்டி ரெயிலில் இருந்து பிரிக்கப்பட்டு ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில், இது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

    • சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 3 பொது பெட்டிகளை இணைக்க வேண்டும்.
    • மூத்த குடிமக்களுகக்கான ரெயில் கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்னவிற்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சையில் இருந்து சென்னைக்கு அதிகாலையில் புறப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் போல் பகல்நேர சேர்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்றை புதிதாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்-அரியலூர், தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை, பட்டு க்கோட்டை-மன்னார்குடி, கும்பகோணம்-விருத்தா சலம் ரெயில் பாதை திட்டங்களுக்கு அதிகளவு பணம் ஒதுக்கி திட்டங்களை உடனடியாக தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    பூதலூரில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

    தஞ்சையில் இருந்து திருப்பதிக்கும்,தூத்துக்குடிக்கும், திருவனந்தபுரத்திற்கும் புதிதாக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    தஞ்சையில் இருந்து திருச்சிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 ரெயில் பெட்டிகள் உள்ள கோச் ஒன்றை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 3 பொது பெட்டிகளை இணைக்க வேண்டும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் மாரியம்மன் கோவில் ரெயில் நிலையத்தில் ரெயில்களை நிறுத்துவதற்கு மத்திய அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

    காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுகக்கான ரெயில் கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • பெங்களூர் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் 700-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
    • சதி திட்டத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    திருத்தணி:

    பீகார் மாநிலம் பகல்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ரேனிகுண்டா, திருத்தணி வழியாக பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் திருத்தணி அருகே உள்ள பொன்பாடி ரெயில் நிலையத்தை கடந்து சென்றது நேற்று நள்ளிரவு 2 மணி யளவில் பொன்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ரெயில் சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தில் 10 கிலோ எடை கொண்ட சிமெண்டு கற்கள் 2 இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. ரெயில் டிரைவர் அதனை பார்த்து துரிதமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தினார்.

    பின்னர் ரெயிலில் இருந்து கீழே இறங்கி தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த 2 கற்களையும் செல்போனில் வீடியோ எடுத்துவிட்டு அகற்றினார். பின்னர் வீடியோவை ரெயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பி தகவல் தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து அரக்கோணம் ரெயில்வே போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப் போது எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் சதி திட்டம் தீட்டியிருப்பது தெரிய வந்தது. அவர்கள் யார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தண்ட வாளத்தில் வைக்கப்பட்டு இருந்த சிமெண்டு கற்கள் ரெயில்வே பணிக்கு பயன்படுத்தக் கூடியவை என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    அதே பகுதியை சேர்ந்த நபர்கள் தண்டவாளத்தில் நாச வேலையில் ஈடுபடும் வகையில் கற்களை வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சதி திட்டத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    பெங்களூர் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் 700-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். டிரைவரின் சாமர்த்தியத்தால் ரெயில் கவிழ்வதில் இருந்து தப்பி உள்ளது. பயணிகள் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர். இதையடுத்து ரெயில் டிரைவரை பாராட்டியுள்ள அதிகாரிகள் அவரை கவுரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

    • ரெயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் அளித்தனர்.
    • பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லி வரை செல்லும் சம்பார்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் பயணி மீது, அந்த ரெயில் பயணம் செய்து கொண்டிருந்த மற்றொரு நபர் சிறுநீர் கழித்துள்ளார். இது குறித்து உடனடியாக சக பயணிகள் அந்த ரெயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் அளித்தனர்.

    இதையடுத்து ஜான்சி ரெயில் நிலையத்தில் ரெயில்வே அதிகாரிகள், பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர். அந்த நபரின் பெயர் ரித்தேஷ் என்பதும், சம்பவத்தின்போது அவர் மதுபோதையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக ரித்தேஷ் மீது ரெயில்வே சட்டம் பிரிவு 145-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ரெயில் பெட்டிகளும் சிறிது தூரம் ஓடியபடி நின்றது.
    • பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து கூச்சலிட்டனர்.

    மும்பை:

    மும்பை போரிவிலியில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 19417) நேற்று மதியம் 1.30 மணி அளவில் புறப்பட்டது. இந்த ரெயில் பிற்பகல் 2.15 மணி அளவில் விராரை அடுத்த ரெயில் நிலையமான வைத்தர்ணா அருகே வந்தது. அப்போது திடீரென ரெயில் என்ஜின் தனியாக கழன்று ஓடியது. என்ஜினுக்கும், ரெயில் பெட்டிக்கும் இடையே உள்ள இணைப்பு துண்டிக்கப்பட்டதால் இந்த விபரீதம் நடந்தது. இந்த சம்பவம் நடந்தபோது டமார் என்ற சத்தம் கேட்டது. பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து கூச்சலிட்டனர். சிறிது தூரம் ஓடிய என்ஜினை டிரைவர் நிறுத்தினார். ரெயில் பெட்டிகளும் சிறிது தூரம் ஓடியபடி நின்றது.

    ரெயில் மெதுவாக சென்று கொண்டு இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ரெயில் பெட்டியுடன் என்ஜினை இணைத்தனர். இதன்பின்னர் தாமதமாக அங்கிருந்து ரெயில் புறப்பட்டு அகமதாபாத் நோக்கி சென்றது. பயணிகளை பதற்றத்துக்கு உள்ளாக்கிய இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
    • செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக செங்கல்பட்டு அருகே ஒத்திவாக்கம் ரெயில் நிலையத்தில் நடை மேடையில் நின்று கொண்டிருந்த மரம் முறிந்து தண்டவாளத்தில் விழுந்தது.

    இதன் காரணமாக அந்த வழியாக ரெயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் தென் மண்டலங்களில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

    அதன்பிறகு தண்ட வாளத்தில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரெயில்கள் சுமார் 1 மணி நேரம் வரை தாமதமாக வந்தன. சென்னை வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டது.

    செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை தாம்பரம், மாம்பலம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் ஆகியோர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஏறி செல்வது வழக்கம். அந்த ரெயில் சுமார் 1 மணி நேரம் தாமதமாக வந்ததால் சென்னைக்கு வேலைக்கு செல்பவர்களும், மாணவ-மாணவிகளும் பெரிதும் அவதிப்பட்டனர். இதனால் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

    • சென்னைக்கு அகல ரெயில் பாதை அமைத்தும் போக்குவரத்து இயக்கப்படவில்லை.
    • இதனால் அவர்களுக்கு நேரமும், பணமும் அதிகமாக விரயமாகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தை தென்னக ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் நேரில் பாார் ஆய்வு செய்தார். அவரிடம் திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிரு ப்பதாவது:-

    திருத்துறைப்பூண்டி, வேதாரண்யத்தில் இருந்து வர்த்தகர்களும், வியாபாரிகளும் தொழில் நிமித்தமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களுக்காகவும் சென்னைக்கு அதிகமாக செல்ல வேண்டியுள்ளது.

    இந்நிலையில், வேதாரண்யம் மற்றும் திருத்து றைப்பூண்டி- அகஸ்தி யம்பள்ளியில் இருந்து சென்னைக்கு அகல ரெயில் பாதை அமைத்தும் ரெயில் போக்குவரத்து இயக்கப்படவில்லை.

    எனவே, அப்பகுதி மக்களும், வணிகர்களும் சென்னை செல்ல வேண்டும் என்றால் அதிக கட்டணம் கொடுத்து பஸ்களில் தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் அவர்களுக்கு நேரமும், பணமும் அதிகமாக விரயமாகிறது.

    அகல ரெயில் பாதை அமைக்கப்பட்ட பின்பும் சென்னைக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கவில்லை என்பது பொதுமக்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக உள்ளது.

    எனவே, பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக வேதாரண்யம் - சென்னைக்கு திருத்து றைப்பூண்டி வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரக்கோணம் ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் மெத்தன போக்கை கடைபிடித்து வருவதாக பயணிகள் தெரிவித்தனர்.
    • இன்று காலை 4 மணிநேரம் ரெயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

    அரக்கோணம்:

    சென்னை செண்ட்ரல் அரக்கோணம் இடையே தண்டவாள சீரமைப்பு பணிகள் இன்று நடந்தது.

    இதனால் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இன்று காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை சென்னைக்கு செல்லும் மின்சார ரெயில்கள்,எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

    இதனால் சென்னை செல்ல திட்டமிட்டு இருந்த பயணிகள் அரக்கோணம் ரெயில் நிலையத்துக்கு வந்த போது டிக்கெட் கொடுக்கும் இடத்தில் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என ஊழியர்கள் தெரிவித்தனர். முன் அறிவிப்பு இன்றி திடீரென அறிவித்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் இதுபோன்று தொடர்ந்து அரக்கோணம் ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் மெத்தன போக்கை கடைபிடித்து வருவதாக பயணிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இன்று காலை 4 மணிநேரம் ரெயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

    • எக்ஸ்பிரஸ் ரெயிலில் படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.
    • ஆகஸ்டு 30-ந்தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து புனே செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூரில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆகஸ்டு 27-ந்தேதி வரை காலை 9.45 மணிக்கு புறப்பட்டு கேரள மாநிலம் குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண். 16127) படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.

    இதேபோல ஆகஸ்டு 27-ந்தேதி இரவு 9.55 மணிக்கு தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (16866), இன்று முதல் ஆகஸ்டு 31-ந்தேதி வரை இரவு 8.30 மணிக்கு திருவனந்தபுரம் - மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (16343), நாளை மற்றும் ஆகஸ்டு 30-ந்தேதிகளில் காலை 8.40 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புனே செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (16382) கூடுதலாக படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சென்னை- அரக்கோணம் இடையே வேகம் அதிகரிக்க மேம்படுத்தப்பட்டுள்ளது.
    • வந்தே பாரத் ரெயிலில் 4 மணி நேரம் 25 நிமிடங்களாக உள்ளன.

    சென்னை:

    சென்னையில் இருந்து பெங்களூர் மற்றும் சில நகரங்களுக்கு ரெயிலில் பயணம் நேரம் குறைகிறது. அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை இடையே உள்ள 144 கி.மீ. தூரத்தை 110 கி.மீ. வேகத்தில் இருந்து 130 கி.மீ. வேகத்தில் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க ரெயில்வே அனுமதித்து உள்ளதால் வரும் நாட்களில் பயண நேரம் குறைந்தது 20 நிமிடங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.

    அரக்கோணம்- ஜோலார்பேட்டை இடையே தண்டவாளம் மற்றும் சிக்னல் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சென்னை- அரக்கோணம் இடையே வேகம் அதிகரிக்க மேம்படுத்தப்பட்டுள்ளது.

    இதனால் பெங்களூர் செல்லும் ரெயில்களின் பயண நேரம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும். இப்போது வந்தே பாரத் ரெயிலில் 4 மணி நேரம் 25 நிமிடங்களாக உள்ளன.

    இது 4 மணி நேரமாக குறையும். சதாப்பதி அல்லது பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நேரம் தற்போதுள்ள 6 மணி நேரத்தில் இருந்து 5 மணி நேரம் 30 நிமிடங்களாக குறையும். அரக்கோணம்-ஜோலார்பேட்டை இடையே பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த வாரம் முதல் 130 கி.மீ. வேகத்தில் 124 ரெயில்களை இயக்க அனுமதி அளித்து உள்ளது.

    இதுபற்றி ரெயில் இயக்குனரகம் என்ஜின் டிரைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    எல்.எச்.பி. பெட்டிகள் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயங்கும் அதே வேளையில் ஐ.சி.எப். வடிவமைப்பு பெட்டிகள் 110 கி.மீ. வேகத்தில் இயக்கக் கூடியவை. பல ரெயில்களில் எல்.எச்.பி. பெட்டிகள் இருப்பதால் பெங்களூர், கோயம்புத்தூர், திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, மங்களூர், மும்பை மற்றும் சில இடங்களுக்கான பயண நேரம் குறைக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மேலும் தற்போது நடைபெற்று வரும் பெரும்பாலான பணிகள் முடிவடைந்து உள்ளதால் படிப்படியாக ஒவ்வொரு ரெயில்களையும் அதிவேகத்தில் இயக்க முடிவு செய்யப்படும் என்று மேலும் தெரிவித்தார்.

    பெங்களூர் மற்றும் கோவை செல்லும் வந்தே பாரத் ரெயில்கள் சென்னை மற்றும் அரக்கோணம் இடையே 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வருவதாகவும் தற்போது மேம்படுத்தப்பட்ட பாதையை ஜோலார்பேட்டை வரை நீட்டிப்பதன் மூலம் மற்ற ரெயில்களும் சிறந்த வேகத்தில் இயக்கப்படும் என்று ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ×