search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூட்ட நெரிசலை குறைக்க 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு
    X

    கூட்ட நெரிசலை குறைக்க 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

    • எக்ஸ்பிரஸ் ரெயிலில் படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.
    • ஆகஸ்டு 30-ந்தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து புனே செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூரில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆகஸ்டு 27-ந்தேதி வரை காலை 9.45 மணிக்கு புறப்பட்டு கேரள மாநிலம் குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண். 16127) படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.

    இதேபோல ஆகஸ்டு 27-ந்தேதி இரவு 9.55 மணிக்கு தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (16866), இன்று முதல் ஆகஸ்டு 31-ந்தேதி வரை இரவு 8.30 மணிக்கு திருவனந்தபுரம் - மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (16343), நாளை மற்றும் ஆகஸ்டு 30-ந்தேதிகளில் காலை 8.40 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புனே செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (16382) கூடுதலாக படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×