என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ரெயிலில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபர்
Byமாலை மலர்6 Oct 2023 8:45 PM GMT (Updated: 6 Oct 2023 8:45 PM GMT)
- ரெயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் அளித்தனர்.
- பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லி வரை செல்லும் சம்பார்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் பயணி மீது, அந்த ரெயில் பயணம் செய்து கொண்டிருந்த மற்றொரு நபர் சிறுநீர் கழித்துள்ளார். இது குறித்து உடனடியாக சக பயணிகள் அந்த ரெயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் அளித்தனர்.
இதையடுத்து ஜான்சி ரெயில் நிலையத்தில் ரெயில்வே அதிகாரிகள், பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர். அந்த நபரின் பெயர் ரித்தேஷ் என்பதும், சம்பவத்தின்போது அவர் மதுபோதையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ரித்தேஷ் மீது ரெயில்வே சட்டம் பிரிவு 145-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X