search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதவித்தொகை"

    • மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    • மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு அலுவலகத்திலும் உதவித்தொகை பெறாத வராக இருக்க வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ள தாவது:-

    உதவித்தொகை

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின்கீழ் வேலை வாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி 10-ம் வகுப்பில் தோல்வி யுற்றவர்களுக்கு மாதம் ரூ. 200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 300, பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 400 மற்றும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 600 வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    வங்கி கணக்கில்....

    இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராகவும், தொடர்ந்து பதிவினை புதுப்பித்தும் இருக்க வேண்டும்.

    எஸ்.சி., எஸ்.சி. (ஏ), எஸ்.டி. பிரிவினர் 45 வயதுக்கு மிகாமலும், பி.சி., பி.சி.எம்., ஓ.சி. பிரிவினர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை கோரி விண்ணப் பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு அலுவலகத்திலும் உதவித்தொகை பெறாத வராக இருக்க வேண்டும்.

    வயது உச்ச வரம்பு

    மாற்றுத் திறனாளிகளுக்கு வயது உச்ச வரம்பு, வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படித்த வர்களுக்கு மாதம் ரூ. 600- பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 750, பட்டதாரிகளுக்கு ரூ. 1000 வீதம் 10 ஆண்டுகளுக்கு வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.

    அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ, மாணவிகள், பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்பு பயின்ற வர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது . எனி லும், தொலை தூரக்கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

    அடையாள அட்டை

    தகுதி உள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை (பழையது), மற்றும் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆன்லைன் மூலம் பெறப் பட்ட 'பிரிண்ட் அவுட்கள்' போன்ற வற்றுடன் அலு வலக வேலை நாட்களில் தென்காசி மாவட்ட வேலை வாய்ப்ப கத்திற்கு நேரில் வருகை புரிந்து அதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.

    அல்லது https://tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளத்தின் மூலமா கவும் பொது, மாற்றுத்திற னாளிகள் அவர்க ளுக்குரிய விண்ண ப்பத்தினை தனித்தனியே பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து, பொதுப் பிரிவினர் மட்டும் அத்துடன் இணைக்க ப்பட்டுள்ள வருவாய்த்துறை சான்றில் கிராம நிர்வாக அலுவலர் மற்றம் வருவாய் ஆய்வாளர் அவர்களின் முத்திரையுடன் கூடிய கையொப்பம் பெற்று வேலை வாய்ப்பு அடையாள அட்டை (பழையது மற்றும் ஆன்லைன் பிரிண்ட் அவுட்), அசல் கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், மாற்றுச்சா ன்றிதழ் (டி.சி), தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம், ஆதார் அட்டை, ரேசன் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவல கத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உடல்நலக்குறைவு காரணமாக தந்தை மறைந்த நிலையிலும் பவானி பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்தார்.
    • பவானியின் மேற்படிப்பிற்காக உதவித் தொகை வழங்கினார்.

    திருப்பூர்:

    ராமநாதபுரம் மாவட்டம் ஆதங்கொத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பூவலிங்கம். இவர் மனைவி வனஜாதேவி. இவர்களுடைய மகள் பவானி. இவர்கள் திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் வசித்து வந்தனர். ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பவானி கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்தார்.

    இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக தந்தை மறைந்த நிலையிலும் பவானி பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்தார். இதை அறிந்த தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் வி.ப.ஜெயபிரதீப் மாணவியிடம் கட்சி நிர்வாகிகள் மூலம் செல்போன் மூலமாக பேசி வாழ்த்து தெரிவித்தார். மேலும் பவானியின் மேற்படிப்பிற்காக உதவித் தொகையும் வழங்கினார். இதை ஓ.பன்னீர்செல்வம் அணியின் திருப்பூர் மாநகர் மாவட்ட துணை செயலாளரும், கனிஷ்கா பில்டர்ஸ் அண்டு புரொமோட்டர்ஸ் நிர்வாக இயக்குனருமான கனிஷ்கா சிவக்குமார் மாணவி பவானியிடம் வழங்கினார்.

    அப்போது ராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளர் மோ.ராஜசேகர் என்கிற திலீப் மற்றும் மாணவியின் குடும்பத்தினர் உடன் இருந்தனர். கல்வி உதவித்தொகையை பெற்றுக் கொண்ட பவானி, தமிழ்நாடு முழுவதும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவியும், ஏழை நோயாளிகளுக்கு மருத்துவ உதவியும் வழங்கி சமூக சேவையாற்றி வரும் ஜெயபிரதீப், தந்தையை இழந்த என்னை அழைத்து ஊக்கப்படுத்தி, உதவி செய்தது என்னை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது என்றார்.

    • அரவக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கபட்டது
    • பள்ளியில் பயிலும் அகிலன், முகிலன் ஆகியோரின் தந்தை அண்மையில் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

    கரூர்,

    அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வட்டாரக்கல்வி அலுவலர்கள் துரை, சதீஷ்குமார் ஆகியோர் உதவித்தொகை வழங்கினர். பள்ளியில் பயிலும் அகிலன், முகிலன் ஆகியோரின் தந்தை அண்மையில் சாலை விபத்தில் உயிரிழந்தனர். அதைதொடர்ந்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மணிவண்ணன் இரு மாணவர்களுக்கும் உதவித்தொகை பெற பரிந்துரைத்தார். அதனடிப்படையில் இவர்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் வீதம், ரூ.1.50 லட்சம் வழங்குவதற்கான ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சாகுல்அமீது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    • மாணவர்கள் உதவித்தொகை பெற மீண்டும் இணையதளம் தொடக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 30-ந்தேதிக்குள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி பள்ளி மற்றும் கல்லூரிகளில் 2022-23-ம் கல்வியாண்டில் கல்வி பயின்ற ஆதி திராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்வத ஆதி திராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கான https:/tnadtwscholarship.tn.gov.in/ என்ற இணையதளம் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வருகிற 30ந்தேதிக்குள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது. மேலும், காலநீட்டிப்பு வழங்க இயலாத சூழ்நிலையுள்ளதால் குறித்த காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து கல்வி உதவித்தொகையினை பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் 4 ரோடு, சாமிநாதபுரம், அரிசி பாளையம், பள்ளப்பட்டி பகுதிகளில் அரசின் முதியோர் உதவித் தொகையை 1500 பேர் பெற்று வருகின்றனர்.
    • இரு மாதங்களாக அவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை. நேற்று முதியோர் உதவித்தொகை பெறும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் 4 ரோடு, சாமிநாதபுரம், அரிசி பாளையம், பள்ளப்பட்டி பகுதிகளில் அரசின் முதியோர் உதவித் தொகையை 1500 பேர் பெற்று வருகின்றனர்.

    இரு மாதங்களாக அவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை. நேற்று முதியோர் உதவித்தொகை பெறும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து சத்திரம் பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கிக் கிளைக்கு கணக்கு புத்தகத்துடன் சென்ற, பயனாளிகளின் புத்த கங்களை சரிபார்த்த உஷா என்ற பெண் காசாளர், ஒவ்வொரு பயனாளிகளிடம் 50 ரூபாய் வசூல் செய்துள்ளார்.

    பணம் தராதவரிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதோடு, ஒரு மூதாட்டி 30 ரூபாய் வழங்கிய நிலையில் அவரிடம் நோட்டு சரி இல்லை எனக் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இதனை அங்கிருந்து இளைஞர்கள் வீடியோவாக பதிவிட்டு வெளியிட் டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதற்கிடையே வங்கி ஊழியர் லஞ்சம் வாங்கியது தொடர்பாக வங்கி உயர் அதிகாரிகள் மற்றும் சமூகநிலைத்துறை அதிகாரிகள் வங்கியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

    • 10 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, இலவச நோட்டுப்புத்தகம் வழங்கினார்.
    • கோவை மண்டல பொறுப்பாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள இந்து முன்னேற்ற கழக அலுவலகத்தில் இந்து முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் வக்கீல் கோபிநாத் 10 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, இலவச நோட்டுப்புத்தகம் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ஸ்ரீகாந்த், மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாந்தி, மாநகர செயலாளர் செல்வக்குமார், மாவட்ட அமைப்பாளர் அசோக்குமார், கோவை மண்டல பொறுப்பாளர் அருண்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கபடும்
    • கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் கலெக்டர் கூறும்போது, 2023-2024 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் முடிய நெல் 2,720 ஹெக்டேர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 153 ஹெக்டேர், பயறுவகைப் பயிர்கள் 80 ஹெக்டேர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 188 ஹெக்டேர் பரப்பிலும், கரும்பு 12 ஹெக்டேர் பரப்பளவிலும், பருத்தி 2 ஹெக்டேர், தென்னை 12,584 ஹெக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 68.675 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 49.896 மெ.டன் பயறு விதைகளும், 24.365 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 5.151 மெ.டன் சிறுதானிய விதைகளும்,0.050 மெ.டன் எள் விதைகளும் இருப்பில் உள்ளன. யூரியா விநியோகத் திட்ட இலக்கின்படி 2750 மெ.டன்களுக்கு,இதுவரை 2652 மெ.டன் யூரியா பெறப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளாக ஏப்ரல் – செப்டம்பர், ஆகஸ்ட்- நவம்பர் மற்றும் டிசம்பர் - மார்ச் மாதங்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் தங்களது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைத்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அவர் கூறினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்இராஜேந்திர பிரசாத், மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம், மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் தனலெட்சுமி, மேற்பார்வை பொறியாளர் (மின்சார வாரியம்) சேகர் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • கடந்த 24-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங் உதவித் தொகையுடன் வழங்கப்படும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது-

    கடலூர் மாவட்டத்தில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கடலூர், கடலூர் (மகளிர்), சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், மங்களுர் மற்றும் நெய்வேலி தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2023-ம் ஆண்டு பயிற்சியா ளர்கள் சேர்க்கை இணை யவழிக் கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது. இதற்காக இணைதளம் வாயிலாக கடந்த 24-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவ, மாணவியர் இந்ந வாய்ப்பினை பயன்படுத்தி அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர்ந்து பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மாணவர்களின் விண்ண ப்பங்கள் அடிப்படையில் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை இணையதளத்தில் வெளியிட ப்படும். தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவ ர்களுக்கு மாதந்தோரும் ரூ.750 உதவித்தொகை மற்றும் விலையில்லா மிதிவண்டி, புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் ஆகியவை வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு (மின்சாரப்பணியாளர் மற்றும் பொருத்துனர் பிரிவு) சுய வேலை வாய்ப்பு செய்திடும் கைகருவிகள் அடங்கிய தொகுப்பு இலவ சமாக வழங்கப்படுகிறது. மாறிவரும் தொழிற்சா லைகளின் நவீன தொழில்நு ட்பத்திற்கு ஏற்றவாறு முன்னனி தனியார் நிறுவன ங்ளுடன் இணைந்து தொழிற்நுட்ப மையங்களாக உயர்த்த ப்பட்டு பயிற்சியளிக்க ப்படுகிறது. மேலும் பயிற்சியின் போது பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங் உதவித் தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியா ளர்களுக்கு பிரபல தொழில் நிறுவன ங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் 07.06.2023 ஆகும். இணையதள வழியிலான கலந்தாய்வில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.

    • மொத்தம் 225 மனுக்கள் பெறப்பட்டன.
    • வேலைவாய்ப்பற்ற 26 இளைஞர்களுக்கு ரூ.36 ஆயிரத்து 600 உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது.

    மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகைபுரிந்து மாவட்ட கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர்.

    கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், வேலைவாய்ப்பு், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகை, புகார் தொடர்பான மனுக்கள், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள், அடிப்படை வசதிகோரியும் என மொத்தம் 225 மனுக்கள் பெறப்பட்டன.

    இம்மனுக்களை கலெக்டர் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தவிபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்றார்.

    முன்னதாக, மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பற்ற 26 இளைஞர்களுக்கு ரூ.36 ஆயிரத்து 600 உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், தனித்துணை கலெகடர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கண்மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேல், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நரேந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    • இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர்.
    • இதர மனுக்கள் 129 என மொத்தம் 282 மனுக்கள் வரப்பெற்றன.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரேஷன் அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். இதில் பட்டா தொடர்பான 53 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 27 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 17 மனுக்களும், போலீஸ் துறை தொடர்பாக 41 மனுக்களும், மாற்றுதிறனாளி நல அலுவலகம் தொடர்பாக 15 மனுக்களும் மற்றும் இதர மனுக்கள் 129 என மொத்தம் 282 மனுக்கள் வரப்பெற்றன.

    பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதா ரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள ப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் தனி த்துணை கலெக்டர் கற்பகம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஷ்வரன், மாவட்ட வழங்கல் உதயகுமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும்.

        சேலம்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுகள் மட்டும்) - எலைட், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் (எம்ஐஎம்எஸ்), வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் (சிடிஎஸ்) என 3 வகைகளில் செயல்படுத்தப்படுகிறது.

    மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்று, பதக்கம் வென்றிருக்க வேண்டும்.

    இந்த திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் sdat@tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை வருகிற 20-ந்தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். இணைய வழியில் வரும் விண்ணப்பங்களைத் தவிர, பிற விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

    தகுதியான வின்ணப்பங்கள், அரசால் அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக் குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டு, அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும். பின்னர், நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, இறுதியாக தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவர். அதிகபட்சம் அவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

    இந்த 3 திட்டங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 22-ந்தேதி வரை ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் கடந்த 4 மாதங்களில் பெற்ற பன்னாட்டு, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி விவரங்களை ஏற்கனவே உள்ள பதிவு ஐ.டி. மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று சேலம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தெரிவித்து உள்ளார்.

    • ஊத்துக்குளி வட்டார 3 ஆவது மாநாடு தனியாா் உணவகத்தில் நடைபெற்றது.
    • மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

    திருப்பூர்:

    மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் ஊத்துக்குளி வட்டார 3 வது மாநாடு தனியாா் உணவகத்தில் நடைபெற்றது.

    இந்த மாநாட்டுக்கு அச்சங்கத்தின் வட்டார அமைப்பாளா் ஆா்.மணியன் தலைமை வகித்தாா்.இதில்தமிழக அரசு மாற்றுத் திறனாளிக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும்.

    விண்ணப்பித்துள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் ஸ்மாா்ட் அட்டை வழங்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 மணி நேரம் வேலை வழங்குவதுடன், முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும்.வீடில்லாத அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×