என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரவக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை
- அரவக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கபட்டது
- பள்ளியில் பயிலும் அகிலன், முகிலன் ஆகியோரின் தந்தை அண்மையில் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
கரூர்,
அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வட்டாரக்கல்வி அலுவலர்கள் துரை, சதீஷ்குமார் ஆகியோர் உதவித்தொகை வழங்கினர். பள்ளியில் பயிலும் அகிலன், முகிலன் ஆகியோரின் தந்தை அண்மையில் சாலை விபத்தில் உயிரிழந்தனர். அதைதொடர்ந்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மணிவண்ணன் இரு மாணவர்களுக்கும் உதவித்தொகை பெற பரிந்துரைத்தார். அதனடிப்படையில் இவர்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் வீதம், ரூ.1.50 லட்சம் வழங்குவதற்கான ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சாகுல்அமீது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






