என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![முதியோர் உதவித்தொகை பயனாளிகளிடம் ரூ.50 வசூல் செய்த வங்கி ஊழியர் முதியோர் உதவித்தொகை பயனாளிகளிடம் ரூ.50 வசூல் செய்த வங்கி ஊழியர்](https://media.maalaimalar.com/h-upload/2023/06/12/1896929-4.webp)
முதியோர் உதவித்தொகை பயனாளிகளிடம் ரூ.50 வசூல் செய்த வங்கி ஊழியர்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சேலம் 4 ரோடு, சாமிநாதபுரம், அரிசி பாளையம், பள்ளப்பட்டி பகுதிகளில் அரசின் முதியோர் உதவித் தொகையை 1500 பேர் பெற்று வருகின்றனர்.
- இரு மாதங்களாக அவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை. நேற்று முதியோர் உதவித்தொகை பெறும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது.
சேலம்:
சேலம் 4 ரோடு, சாமிநாதபுரம், அரிசி பாளையம், பள்ளப்பட்டி பகுதிகளில் அரசின் முதியோர் உதவித் தொகையை 1500 பேர் பெற்று வருகின்றனர்.
இரு மாதங்களாக அவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை. நேற்று முதியோர் உதவித்தொகை பெறும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து சத்திரம் பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கிக் கிளைக்கு கணக்கு புத்தகத்துடன் சென்ற, பயனாளிகளின் புத்த கங்களை சரிபார்த்த உஷா என்ற பெண் காசாளர், ஒவ்வொரு பயனாளிகளிடம் 50 ரூபாய் வசூல் செய்துள்ளார்.
பணம் தராதவரிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதோடு, ஒரு மூதாட்டி 30 ரூபாய் வழங்கிய நிலையில் அவரிடம் நோட்டு சரி இல்லை எனக் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அங்கிருந்து இளைஞர்கள் வீடியோவாக பதிவிட்டு வெளியிட் டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதற்கிடையே வங்கி ஊழியர் லஞ்சம் வாங்கியது தொடர்பாக வங்கி உயர் அதிகாரிகள் மற்றும் சமூகநிலைத்துறை அதிகாரிகள் வங்கியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)