search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
    X

    கடலூர் மாவட்டத்தில் தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

    • கடந்த 24-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங் உதவித் தொகையுடன் வழங்கப்படும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது-

    கடலூர் மாவட்டத்தில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கடலூர், கடலூர் (மகளிர்), சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், மங்களுர் மற்றும் நெய்வேலி தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2023-ம் ஆண்டு பயிற்சியா ளர்கள் சேர்க்கை இணை யவழிக் கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது. இதற்காக இணைதளம் வாயிலாக கடந்த 24-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவ, மாணவியர் இந்ந வாய்ப்பினை பயன்படுத்தி அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர்ந்து பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மாணவர்களின் விண்ண ப்பங்கள் அடிப்படையில் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை இணையதளத்தில் வெளியிட ப்படும். தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவ ர்களுக்கு மாதந்தோரும் ரூ.750 உதவித்தொகை மற்றும் விலையில்லா மிதிவண்டி, புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் ஆகியவை வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு (மின்சாரப்பணியாளர் மற்றும் பொருத்துனர் பிரிவு) சுய வேலை வாய்ப்பு செய்திடும் கைகருவிகள் அடங்கிய தொகுப்பு இலவ சமாக வழங்கப்படுகிறது. மாறிவரும் தொழிற்சா லைகளின் நவீன தொழில்நு ட்பத்திற்கு ஏற்றவாறு முன்னனி தனியார் நிறுவன ங்ளுடன் இணைந்து தொழிற்நுட்ப மையங்களாக உயர்த்த ப்பட்டு பயிற்சியளிக்க ப்படுகிறது. மேலும் பயிற்சியின் போது பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங் உதவித் தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியா ளர்களுக்கு பிரபல தொழில் நிறுவன ங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் 07.06.2023 ஆகும். இணையதள வழியிலான கலந்தாய்வில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.

    Next Story
    ×