search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதவிகள்"

    • அரியலூரில் சுதந்திரதின விழாவில் ரூ.1.56 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 77வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தேசியகொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

    அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 255 அதிகாரிகளுக்கு சான்றிதழ்களை அவர் வழங்கினார். பின்னர் ரூ.1.56 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிகளில் அரியலூர் எம்எல்ஏ வக்கில் கு.சின்னப்பா, மாவட்ட வருவாய்அலுவலர் கலைவாணி, மாவட்ட திட்ட அலுவலர் பாலமுரளி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்பூங்கோதை, கலெக்டர் அலுவலக மேலாளர் குமரைய்யா, ஆர்டிஓ அரியலூர் ராமகிருஷ்ணன், உடையார்பாளையம் பரிமளம், மருத்துவத்துறை துணைஇயக்குனர் அஜீதா, செய்திமக்கள் தொடர்பு அலுவலர்சுருளிபிரபு, உதவி அலுவலர் பிரபாகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், தீயணைப்பு அலுவலர்செந்தில்குமார், தாசில்தார் அரியலூர் கண்ணன், செந்துறை பாக்கியம்விக்டோரியா, ஆண்டிமடம் இளவரசன், ஜெயங்கொண்டம் துரை, யூனியன் கமிஷனர் அரியலூர் முத்துகுமார், அருளப்பன்,திருமானூர் ஜெயகுமாரி, பொய்யாமொழி, செந்துறை பிரபாகரன், ஜாகிர்உசேன்,ஜெயங்கொண்டம் செந்தில், முருகன், ஆண்டிமடம் ஸ்ரீதேவி, விஸ்வநாதன், தா.பழுர் நாராயணன்,

    அமிர்தலிங்கம், கூட்டுறவுத்துறை இணைபதிவாளர் தீபாசங்கரி, காவல்துறை சார்பில் மாவட்ட கூடுதல்கண்காணிப்பாளர் அந்தோணி, ஆரி, டிஎஸ்பி சங்கர் கணேஷ், ரவி ச்சந்திரன், வெங்கடேசன், சுரேஷ்குமார், உட்பட அனைத்து அரசுத்துறை அலுவலர் களும், மக்கள்பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.சுதந்திரதினவிழா நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • பெரம்பலூர் சுதந்திர தின விழாவில் ரூ.2.05 கோடி நில திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • 286 பயனாளிகளுக்கு கலெக்டர் கற்பகம் வழங்கினார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திரத்திருநாள் விழா நிகழ்ச்சிகள் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் கற்பகம் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 286 பயனாளிகளுக்கு ரூ.2,04,74,026 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணிபுரிந்த 286 அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

    • கொல்லிமலையில்‌ நடை பெற்ற வல்வில்‌ ஓரி நிறைவு விழாவில்‌ கலெக்டர் டாக்டர் உமா, சேந்த மங்கலம்‌ எம்.எல்.ஏ. பொன்னுசாமி முன்னிலை வகித்தனர்.
    • விழாவில் 437 பயனாளிகளுக்கு ரூ.3.20 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் நடை பெற்ற வல்வில் ஓரி நிறைவு விழாவில் கலெக்டர் டாக்டர் உமா, சேந்த மங்கலம் எம்.எல்.ஏ. பொன்னுசாமி முன்னி லையில் 437 பயனாளி களுக்கு ரூ.3.20 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    வில்வித்தை போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், கலைநிகழ்ச்சிகள் நடத்திய கலை குழுவினர் மற்றும் மாணவ, மாண வியர்களுக்கு, சிறந்த அரங்கங்கள் அமைத்த அரசு துறையினருக்கு சான்றி தழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.வல்வில் ஓரி விழாவில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு துறைகளின் கண்காட்சி அரங்குகளை கலெக்டர் உமா பார்வையிட்டார்.

    தொடர்ந்து வல்வில் ஓரி அரங்கில் சுற்றுலாத்துறை, கலைபண்பாட்டுத்துறை மற்றும் பள்ளிகல்வித்துறை ஆகிய துறைகளின் சார்பில் நடைபெற்ற தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், கொக்கலி யாட்டம், மயிலாட்டம், மான்கொம்பு, பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், பரத நாட்டியம், தெருகூத்து,

    சேர்வை ஆட்டம், கொல்லிமலையில் சுற்றுலா முக்கியத்துவம் குறித்த நாடகம், பள்ளி மாணவ, மாணவியர்களின் பல்சுவை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கலெக்டர் உமா பார்வையிட்டார்.

    கொல்லிமலை வட்டம், செம்மேடு வல்வில் ஓரி அரங்கத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில் வருவாய் துறை சார்பில் 24 பயனாளி களுக்கு ரூ.4.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், கூட்டுறவுத் துறை சார்பில் 96 பயனாளி களுக்கு ரூ.1.23 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், தாட்கோ மூலம் 18 பயனாளிகளுக்கு ரூ.64.51 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவி களையும், மகளிர் திட்டம் சார்பில் 14 பயனாளிகளுக்கு ரூ.98.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண் பொறியியல் துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு ரூ.28.31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.69,150/- மதிப்பிலான நலத்திட்ட உதவி களையும், வேளாண்மைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.843/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திற னாளிகள் நலத்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.17,960/- மதிப்பிலான நலத்திட்ட உதவி களையும், பழங்குடியி னர் நலத்துறை சார்பில் 45 பயனாளி களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டைகளும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 138 பழங்குடியின மாணவிகளுக்கு ரூ.50,000/- மதிப்பில் ஸ்வெட்டர்க ளையும் என மொத்தம் 437 பயனாளி களுக்கு ரூ.3.20 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

    மேலும், வல்வில் ஓரி மற்றும் சுற்றுலா விழாவில் நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட 17 பள்ளிகளை சேர்ந்த 427 மாணவ, மாண வியர்களுக்கும், 360 கலைஞர்க ளுக்கும், வல்வில் ஓரி அரங்கில் அமைக்கப்பட்ட 22 அரசுத்துறைகளின் பணி விளக்க கண்காட் சியில், சிறப்பாக அரங்கம் அமைத்த தற்காக முதல் இடம் ெபற்ற வனத்துறைக்கும், 2-ஆம் இடம் பெற்ற காவல் துறைக்கும், 3-ஆம் இடம் பெற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் ஆகிய துறைகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களையும், தொடர்ந்து, வில்வித்தை போட்டி யில் வெற்றி பெற்ற போட்டியாளர்க ளுக்கும், கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிய ருக்கும் கலெக்டர் உமா பதக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்சிவக்குமார், மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, நாமக்கல் வருவாய் ஆர்.டி.ஓ. சரவணன், வேளாண் இணை இயக்குநர் துரைசாமி, துணை இயக்குநர் தோட்டக்கலைத் துறை கணேசன், மாவட்ட மேலாளர் தாட்கோ ராமசாமி, பழங்குடியினர் திட்ட அலுவ லர்பீட்டர், மாவட்ட சுற்றுலா அலுவலர் அபராஜிதன், மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளர் முருகன், உதவி இயக்கு நர் பட்டுவளர்ச்சி முத்துப்பாண்டி யன், கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (வேளாண்மை) முரு கன், அத்மா குழுத்தலைவர் செந்தில் முருகன், கொல்லி மலை தாசில்தார் அப்பன்ராஜ், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • நலத்திட்ட உதவி மற்றும் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகளையும் பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்ட றிந்தார்.

    கூட்ட த்தில் பொது மக்கள் முதியோர் உதவி த்தொகை, விதவை உதவி த்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனை ப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 452 மனுக்களை வழங்கி னார்கள். அவற்றை பரி சீலனை செய்த கலெக்டர், உரிய அலுவலர்களிடம் வழங்கி மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    நிகழ்ச்சியில், ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.6,000 வீதம் ரூ.18,000 மதிப்பில் 3 பயனாளிகளுக்கு இலவச தையல் மெஷின்கள், தாட்கோ சார்பில் 1 பயனாளிகளுக்கு ரூ. 3,500 மதிப்பில் சலவைப்பெட்டி, ஒரு விவசாயிக்கு நிலம் வாங்கு வதற்காக, மானி யத்துடன் ரூ. 4,05,000 கடன் உதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவி மற்றும் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகளையும் பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை யின் சார்பில் தலா ரூ.2,780 வீதம் ரூ.11,120 மதிப்பில் 4 மாற்றுத்தி றனாளிகளுக்கு காதொலி கருவிகளை கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட சப்-கலெக்டர் பிரபாகரன், மாவட்ட தாட்கோ மேலா ளர் ராமசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுகந்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.
    • கிளை செயலளார்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பெட்போர்டு பகுதியில் குன்னூர் நகர தி.மு.க சார்பில் 500-க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடந்தது. குன்னூர் நகர செயலாளர் ராமசாமி வரவேற்றார்.

    மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் தமிழ்மறை, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத் துல்லா, குன்னூர் நகரமன்ற தலைவர் ஷீலாகேத்ரின், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர கழக நிர்வாகிகள் தாஸ், முருகேசன், சாந்தா சந்திரன், ஜெகநாத் ராவ், பழனிசாமி, மணிகண்டன், தலைமை கழக பேச்சாளர் ஜாகீர்உசேன், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் சிக்கந்தர், நகரமன்ற உறுப்பினர்கள் மன்சூர், குமரேசன், வசந்தி, ஜெக நாதன், செல்வி, பாக்கியவதி, சித்ரா, சமீனா, அப்துல்காதர், மது, கோபு, சகாயநாதன், இளைஞரணி பிரவீன், அபி, கிப்சன், ஜெயராம் மற்றும் கிளை செயலளார்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

    • மாவட்ட வருவாய் அதிகாரி டாக்டர்.சர்மிளா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வழங்கினார்
    • மானியத்தொகை உள்பட மொத்தம் 237 பேருக்கு 2 கோடியே 6 லட்சத்து 95 ஆயிரத்து 420 ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங் கப்பட்டு உள்ளன.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரியநா யக்கன்பாளையம் அருகே கூடலூரில் மாவட்ட வரு வாய் அலுவலகம் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் வடக்கு வருவாய் கோட்டாட்டாட்சி யர் கோவிந்தன், கூடலூர் நகராட்சி தலைவர் அறி வரசு, பேரூராட்சித்தலைவர் விஸ்வபிரகாஷ், மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் மாவட்ட வருவாய் அதிகாரி டாக்டர்.சர்மிளா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 80 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது சமூகப்பா துகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 60 ஆயிரமும், வருவாய் துறை மூலம் 79 பயனாளிகளுக்கு 7 லட்சத்து 26 ஆயிரத்து 971 ரூபாய் மதிப்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆதி திராவிடர் நலத்துறை மூலம் 57 பேருக்கு ஒரு கோடியே 60 லட்சத்து 5 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பில் இணையவழி பட்டாவும், மகளிர் சுய உதவிக்குழுவில் 2 பேருளுக்கு 28 லட்சம் மதிப்பிலான மானியத் தொகை, வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் 4 பேருக்கு 7 ஆயிரத்து 805 ரூபாய் மானியத்தொகை உள்பட மொத்தம் 237 பேருக்கு 2 கோடியே 6 லட்சத்து 95 ஆயிரத்து 420 ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இதில் தாசில்தார் தங்கராஜ், கமிஷனர் பால்ராஜ், சிறப்பு தாசில்தார்கள் யமுனா, சரண்யா, நகராட்சி துணைத்தலைவர் ரதி ராஜேந்திரன், வேளாண்மை உதவி இயக்குநர்கள் சபி அஹமது, நந்தினி, சபின் அஹமதுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணிக்கம்தாகூர் எம்.பி. பிறந்தநாளை முன்னிட்டு சேர்மன் குருசாமி ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடந்தன.

    திருமங்கலம்

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில பொறுப்பாளரும், விருது நகர் பாராளுமன்ற உறுப்பி னருமான மாணிக்கம் தாகூர் பிறந்தநாள் விழா இன்று கொண்டா டப்பட்டது.

    இதையொட்டி மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள பேரையூரில் பேரூராட்சி மன்ற தலைவர் கே.கே.குருசாமி தலைமை யில் பேரையூர் பட்டயத்து முக்கு விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    அதன்பின்னர் வி.அம்மா பட்டி அமலா மனநல காப்ப கத்தில் உள்ள அனை வருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பி னரும், பேரையூர் பேரூராட்சி மன்ற உறுப்பினருமான கே.கே.ஜி.காமாட்சி, வட்டார தலைவர் கணேசன், நகர் தலைவர் சற்குணன், நிர்வாகிகள் மகாலிங்கம், சுப்பையா, காளிஸ்வரன், சங்கரபாண்டியன், மணிகண்டன், முத்துகிருஷ்ணன், டில்லி ராஜன், முத்து விஜயன், மாசாணம், மலைராஜன், கருத்தப்பாண்டி, ராஜா, முத்தையா, முத்துவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஆர். எஸ். மங்கலம் அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில் ரூ. 26 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.
    • அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள புல்லமடை ஊராட்சி தெற்கனேந்தல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் 141 பயனாளிகளுக்கு ரூ.26.14 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து 126 கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.

    முகாமில் கலெக்டர் பேசியதாவது:-

    மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் கிராமத்தில் ஒரு மாதத்திற்கு முன்பாக அரசின் அனைத்துத் துறைகளின் அலுவலர்கள் சம்மந்தப்பட்ட கிராமத்தில் முகாமிட்டு அக்கிராம மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை நேரடியாக பெறுவார்கள். மக்களைத் தேடி வந்து மனுக்களை மட்டும் பெறாமல் மனுக்கள் மீதான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தீர்வு காணப்பட்ட மனுக்க ளுக்கு அரசின் நலத்திட்டங் கள் வழங்கப்படுகின்றன.

    மக்கள் தொடர்பு முகாமில் அனைத்து துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்து கொண்டு பயன் பெறலாம்.

    பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கையான குடிநீர் வசதி முழுமையான அளவு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சாலை வசதிகள் தேவைக்கேற்ப அமைக்கப்பட்டு வருகிறது. எனவே தனிநபர் பொரு ளாதர முன்னேற்றத்திற்கு அரசு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறது. அதை தகுதியுடையோர் பெற்று பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயணசர்மா, வருவாய் கோட்டாட்சியர் கோபு, தனித்துணை கலெக்டர் மாரிச்செல்வி, ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் சிரோன்மணி, ஊராட்சி மன்றத்தலை வர்கள் கனிமொழி (புல்ல மடை), ஜெயபாரதி (சனவேலி), பூபதி (காவண கோட்டை) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டை அருகே 343 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.
    • கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்பத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் 343 பயனாளிகளுக்கு ரூ.41.29 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படை யில் திருவேகம்பத்தூர் கிராமத்தில் நடந்த முகாமில் பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக 287 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

    அதில், தகுதியுடைய 218 மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, அம்மனுதாரர்க ளுக்கு நலத்திட்ட உதவி களும், அதன் பயன்களும் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.இந்த முகாமில் வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் சிவராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மதினா பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நோன்பு திறப்பு மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • கடலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    கடலூர்:

    கடலூர் துறைமுகம் மாலுமியார்பேட்டை மதினா பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நோன்பு திறப்பு மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கடலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாநகர அவைத்தலைவர் பழனிவேல், பொருளாளர் ராஜேந்திரன், மாநகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, மண்டல குழு தலைவர்கள் இளையராஜா, பிரசன்னா, மாநகராட்சி கவுன்சிலர்கள் பாலசுந்தர் மற்றும், விஜயலட்சுமி செந்தில், வட்ட செயலாளர்கள் நவ்ஷத் அலி, வெங்கடேஷ், ராஜேஷ், பகுதி அவைத் தலைவர் சண்முகம், மனோகர், தகவல் தொழில்நுட்ப அணி பிரவின், கோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் தொங்கும் பூங்காவில் நடந்தது.
    • 35 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.153.40 லட்சம் இணை மானியம் வழங்குதலும் என மொத்தம் 1,602 மகளிர் சுய உதவி குவழுக்களுக்கு ரூ.100 கோடியே 51 லட்சத்தி 70 ஆயிரம் செலவில் கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

    சேலம்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் தொங்கும் பூங்காவில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார்.

    விழாவில் 987 ஊரக பகுதியில் உள்ள மகளிர் உதவி குழுக்களுக்கு ரூ.7452.39 லட்சம் வங்கிக் கடன் உதவியும், 14 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.648.10 லட்சம் கடன்களையும், 295 ஊரக பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.442.5 லட்சம் சமுதாய முதலீட்டு நிதி வழங்குதலும், 40 மகளிர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.80 லட்சம் தொடக்க நிதியும், 221 நகர்ப்புற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1492.71 லட்சம் வங்கி கடன் உதவியும், 10 நகர்ப்புற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 லட்சம் சுழல் நிதி வழங்குதலும், வாழ்ந்து காட்டுவோம் திட்ட 35 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.153.40 லட்சம் இணை மானியம் வழங்குதலும் என மொத்தம் 1,602 மகளிர் சுய உதவி குவழுக்களுக்கு ரூ.100 கோடியே 51 லட்சத்தி 70 ஆயிரம் செலவில் கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் மேயர் ராமச்சந்திரன், ராஜேந்திரன் எம்.எல்.ஏ ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கடன் உதவிகளை வழங்கினர். அப்போது மாவட்ட செயலாளர்கள் டி.எம்.செல்வ கணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • 1291 பயனாளிகளுக்கு ரூ.2.08 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    • பொன்னமராவதி அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் தேனூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கலந்து கொண்டார்.

    மேலும் வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 1291 பயனாளிகளுக்கு ரூ 2.08 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். அப்போது பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

    மேலும் அரசின் பல்வேறு துறைகளைச்சார்ந்த அலுவலர்கள் துறை சார்ந்த அரசின் திட்டங்கள் குறித்து பேசினர். முகாமில் தோட்டக்கலைத்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. முகாமில் பெண்களுக்கெதிரான பாலியல் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிரான பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    இதில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குனர் ரேவதி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, பொன்னமராவதி ஒன்றியக்குழு தலைவர் சுதா அடைக்கலமணி, தேனூர் ஊராட்சிமன்றத்தலைவர் வி.கிரிதரன், வட்டாட்சியர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×