search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயக்கம்"

      சேலம்:

      தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகத்தில், சேலம் கோட்டம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மமாவட் டங்களிர் டவுன் பஸ், புறநகர் பஸ், மலை பஸ் என சேலம் மண்ட லத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் என மொத்தம் 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.

      தினசரி 9 லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு, 6 லட்சம் மக ளிர் மற்றும் 14 லட்சம் பய ணிகள் பயணம் செய்கின்ற னர். வார இறுதி நாட்கள் விடுமுறையை முன்னிட்டு, சேலம் கோட்டம் சார்பில், 17-ந் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

      இந்த சிறப்பு பஸ்கள் சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட், பெங்களூரு பஸ் ஸ்டாண்ட், சென்னை கோயம்படு, ஓசூர் பஸ் ஸ்டாண்ட், கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், திருப்பூர் பஸ் ஸ்டாண்ட், திருவண்ணா மலை பஸ் ஸ்டாண்ட், சிதம்பரம் பஸ் ஸ்டாண்ட் ஆகிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படுகிறது.

      இந்த வழித்தடங்களில் பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு போக்கு வரத்து கழக முன்பதிவு மையம் வழியாகவும், இணையதளம் மற்றும் ஆப் வழியாகவும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூ ருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூ ருவுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூ ருக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இத்தக வலை சேலம் கோட்ட நிர் வாக இயக்குனர் பொன் முடி தெரிவித்துள்ளார்.

      மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

      வரும் 17-ந் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு சேலம் டவுன் பஸ் ஸ்டாண்டில் இருந்து சித்தர் கோவிலுக்கும், சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்தும், மேட்டூர் மற்றும் தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு 35 சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கிறது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரி வித்தனர்.

      • கால நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் பெரம்பலூரில் நடைபெற்றது
      • மாவட்ட செயலாளர் ராஜா கையெழுத்து இட்டு தொடங்கி வைத்தார்

      பெரம்பலூர்,

      பா.ம.க.வின் பெரம்பலூர் மாவட்ட பசுமை தாயகம் அமைப்பு சார்பில் காலநிலை மாற்றம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நேற்று மாலை தொடங்கப்பட்டது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை எதிரே நடந்த இந்த கையெழுத்து இயக்கத்தை அமைப்பின் மாவட்ட செயலாளர் ராஜா என்ற காட்டு ராஜா கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அந்த அமைப்பினர், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.

      • (எண்:12680) 4 நாட்களுக்கு காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
      • ரெயில் இயக்கம் ஆகஸ்டு 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

      திருப்பூர்,ஜூலை.7-

      சென்னையில் மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதால் கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12680) 4 நாட்களுக்கு காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

      சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூலை மாத மாதாந்திர பராமரிப்பு, தண்டவாள மேம்பாட்டு பணிகள் நடக்கிறது. இதனால் சென்னை செல்லும் 8 ெரயில்கள் முழுமையாகவும், 4 ெரயில்கள் பகுதியளவிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

      அந்த பட்டியலின் படி தினமும் காலை 6:20 மணிக்கு புறப்படும் கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12680) ஜூலை 11,18,25 மற்றும், ஆகஸ்டு 1ந் தேதி (செவ்வாய்கிழமைகளில்) ஆகிய நான்கு நாட்கள் காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும்.

      அரக்கோணம், பெரம்பூர், சென்னை சென்ட்ரலுக்கு ெரயில் செல்லாது. மறுமார்க்கமாக சென்னைக்கு பதில் மாலை 4:20 மணிக்கு காட்பாடியில் இருந்து ெரயில் (எண்:12679) இயக்கம் துவங்கும் என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

      ரெயில் பயணிகள் தொடர் வலியுறுத்தலால், திருவனந்தபுரம் - சென்னை எழும்பூர் இடையே வாராந்திர ரெயில் (எண்:06044) இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு தொடர்ந்து அதிகரித்ததால் ெரயில் இயக்கம் ஆகஸ்டு 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

      திருவனந்தபுரத்தில் புறப்படும் ெரயில் கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, அரக்கோணம் வழியாக செல்லும். இந்தரெயிலில், 3 ஏசி., 9 படுக்கை வசதி, 5 பொது, 2 சரக்கு பெட்டி இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

      வடமாநிலம் செல்லும் ெரெயில்பயணிகள் வசதிக்காக, ரப்திசாஹர், ஹிம்சாகர், பாட்னா உட்பட 14 எக்ஸ்பிரஸ் ெரயில்கள் நின்று செல்லும் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளன.

      ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் வழியாக செல்லும் 14 எக்ஸ்பிரஸ் ெரயில்கள் நின்று செல்லும் நிலையங்களின் எண்ணிக்கையை தெற்கு மத்திய ெரயில்வே அதிகரித்துள்ளது.

      எர்ணாகுளம் - பரூனி ரப்திசாகர் எக்ஸ்பிரஸ், ஓங்கோல் - விஜயவாடா இடையே, சிரலா நிலைத்தில் 1 நிமிடம் நிற்கும்.ஸ்ரீவைஷ்ணவி தேவி கோவில் - கன்னியாகுமரி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், நெல்லூர் - ரேணிகுண்டா இடையே குண்டூரில் 2 நிமிடங்கள் நிற்கும்.

      எர்ணாகுளம் - பாட்னா எக்ஸ்பிரஸ் விஜயவாடா - வாரங்கல் இடையே கம்மம், வாரங்கல் - பெலம்பல்லி இடையே ராமகுண்டம் மற்றும் மன்சிர்யல் ஆகிய நிலையங்களில் 1 நிமிடம் நின்று செல்லும்.இவை தவிர மேலும் 11 ரெயில்கள் கூடுதலாக நின்று செல்லும் நிலையங்கள் விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.

      • ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
      • ம.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

      சிவகங்கை

      சிவகங்கை மாவட்டம் சிவன் கோவில் எதிரே ம.தி.மு.க. சார்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மாநில சட்டமன்றத்தின் செயல்பாடுகளுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முட்டுக்கட்டை போடுவதாகவும், அரசியல் சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள மதச்சார் பின்மைக்கு எதிராக பேசி இந்தியா மதம் சார்ந்த நாடுதான் என ஆர்.என்.ரவி கூறுவதாகவும் பா.ஜ.க. அரசியல் சார்ந்த கருத்துக்களைப் பேசி அரசியல் சட்டத்தை மதிக்காமல் அரசியல் சட்டப்படி எடுத்துக் கொண்டுள்ள பதவி பிரமாணத்தை ஆளுநர் ரவி மீறி விட்டார் எனக்கூறி ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி ம.தி.மு.க. நகர செயலாளர் திவான் சக்கரவர்த்தி தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

      இந்த நிகழ்ச்சியை முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ம.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

      • மேட்டூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மாதேஸ்வரன் மலைக்கோவில் உள்ளது.
      • தமிழக பக்தர்கள் மாதேஸ்வர மலைக்கு எளிதாக செல்வதற்காக ஒவ்வொரு அமாவாசை களிலும், சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

      சேலம்:

      மேட்டூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மாதேஸ்வரன் மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆருத்ரா தரிசனம், கார்த்திகை தீபம், வைகாசி விசாகம் உட்பட பல திருவிழா நாட்களில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடக்கும்.

      இது தவிர பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதேபோல ஒவ்வொரு அமாவாசை நாட்களில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர்.

      தமிழக பக்தர்கள் மாதேஸ்வர மலைக்கு எளிதாக செல்வதற்காக ஒவ்வொரு அமாவாசை களிலும், சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

      அந்த வகையில் வரும் 17-ந் தேதி ஆனி மாத அமா வாசையை முன்னிட்டு, அன்று அதிகாலை முதல் சேலம் புதிய பஸ் நிலையம், மேட்டூர் பஸ் நிலையம், தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து 40 சிறப்பு பஸ்கள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் நடவடிக்கை எடுத்துள்ளது.

      இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

      • கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று அரசு அறி வித்துள்ளது.
      • இதே போல் வெளி மாவட்டங்களில் இருந்தும் சேலம் மண்டலத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

      சேலம்:

      தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று அரசு அறி வித்துள்ளது. இதன் காரண மாக பஸ் நிலையங்களில் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

      இதற்காக சேலம் மண்ட லமான சேலம், தர்மபுரி, கிருஷ்ண கிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்னை, கோவை, திரு வண்ணாமலை, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும், பெங்க ளூருக்கும் இன்று (சனிக்கி ழமை) முதல் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன.

      இதே போல் வெளி மாவட்டங்களில் இருந்தும் சேலம் மண்டலத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன. இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 7-ந் தேதி வரை இயக்கப்படுகின்றன.

      மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவ டிக்கை எடுக்கப்படும். எனவே பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி பயணிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்து உள்ளார்.

      • அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கிரிவலம் செல்வார்கள்.
      • பக்தர்கள் வந்து செல்ல வசதிக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

      சேலம்:

      திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கிரிவலம் செல்வார்கள். இதையொட்டி பக்தர்கள் வந்து செல்ல வசதிக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

      அதன்படி சேலம் கோட்டம் சார்பில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

      அந்த வகையில் வருகிற 3-ந் தேதி வைகாசி பவுர்ணமியொட்டி சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 75 சிறப்பு பஸ்களும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், அரூர் உட்பட்ட ஊர்களில் இருந்து 75 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது .

      இந்த சிறப்பு பஸ்கள் நாளை காலை முதல் 4-ந் தேதி வரை இயக்கப்படும். இதனை பக்தர்கள் பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

      • நடை பயண பிரசார இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட சார்பில் நடைபெற்றது.
      • இந்த நடை பயணமானது பி.எஸ். ஆர். மணிமண்டபம் வரை நடைபெற்றது.

      திருத்துறைப்பூண்டி:

      திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், மத்திய பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவோம், நாட்டையும் மக்களையும் காப்போம் என்ற மாற்றத்தை நோக்கி நடை பயண பிரசார இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட சார்பில் நடைபெற்றது.

      திருத்துறைப்பூண்டி வேதை சாலையில் உள்ள அம்பேத்கார் சிலையிலிருந்து தொடங்கிய நடை பயண இயக்கத்தில் முன்னால் எம்.எல்.ஏ. பழனிச்சாமி தலைமையில் மாரிமுத்து எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், ஒன்றிய தலைவர் பாஸ்கர், நகரச் செயலாளர் சுந்தர், நிர்வாகிகள் சாமிநாதன், கோபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      இந்த நடை பயணமானது பி.எஸ். ஆர். மணிமண்டபம் வரை நடைபெற்றது.

      • புகழ் பெற்ற கோவில்களுக்கு செல்ல ஆன்மீக சுற்றுலா ரெயில் மே 4-ந் தேதி இயக்கப்படுகிறது.
      • சுற்றுலா செல்ல விருப்பமுள்ளர்வர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

      விருதுநகர்

      ஐ.ஆர்.சி.டி.சி. தென் மண்டலப் பொது மேலா ளர் ரவிக்குமார், தெற்கு ரெயில்வே அதிகாரி வெங்கட சுப்பிரமணியன், தென் மண்டல சுற்றுலா பொது மேலாளர் சுப்பிர மணி ஆகியோர் விருது நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

      கடந்தாண்டு ஜூலை மாதம் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பாரத் கவுரவ் விரைவு ரெயில் இயக்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

      ரெயில்வே நிர்வாகம், ஐ.ஆர்.சி.டி.சி. இணைந்து இந்தச் சிறப்பு ரெயிலை இயக்குவதால், சுற்றுலா சென்று வருவதற்கான செலவு குறைகிறது. இந்த ஆன்மீக சுற்றுலாவில் ஒரு நபருக்கு ரெயில் கட்டணம், தங்கும் அறை, கோவிலுக்குச் சென்று வருவதற்கான கட்டணம் என ரூ.20 ஆயிரத்து 367 செலுத்த வேண்டும்.

      குளிர்சாதனப் பெட்டியில் பயணம் செய்வோருக்கு கட்டணம் ரூ.35 ஆயிரத்து 651 ஆகும். இவர்களுக்கு தங்கும் அறை, வாகனம் ஆகியவை குளிர்சாதனத்துடன் வழங்கப்படும். மேலும் 5 முதல் 11 வயதுள்ள குழந்தைகளுக்கு கட்டணச் சலுகை உண்டு.

      வருகிற மே 4-ந் தேதி கேரள மாநிலம் கொச்சு வேலியில் இருந்து புறப்படும் இந்த சுற்றுலா சிறப்பு ரெயில் செங்கோட்டை, விருதுநகர் வழியாக தஞ்சை, சென்னை வழியாக, வட மாநிலத்தில் உள்ள பூரி, கோனார்க், கொல்கத்தா, கயா, வாராணசி, திரிவேணி சங்கமம் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று திரும்ப உள்ளது.

      இந்த ரெயிலில் 4 குளிர்சாத னப் பெட்டிகள், 7 படுக்கை வசதி பெட்டிகள் இருக்கும். வட மாநில கோவில்களுக்கு 10 நாட்கள் சுற்றுலா செல்ல விருப்பமுள்ளர்வர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

      இவ்வாறு அவர்கள் கூறினர்.

      • கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து சேலம், கரூர், திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது.
      • பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் காலை 9.25 மணிக்கு சேலம் வந்தடையும்.

      சேலம்:

      ெரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ெரயில்வே நிர்வாகம் சிறப்பு ெரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து சேலம், கரூர், திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது.

      அதன்படி ஹூப்ளி- தஞ்சாவூர் சிறப்பு ெரயில் (வண்டி எண் 07325) வருகிற 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் திங்கட்கிழமைதோறும் ஹூப்ளி ெரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் காலை 9.25 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 9.30 மணிக்கு புறப்பட்டு கரூர், திருச்சி வழியாக மதியம் 2.15 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.

      இதேபோல் மறு மார்க்கத்தில் தஞ்சாவூர்- ஹூப்ளி சிறப்பு ெரயில் (வண்டி எண் 07326) வருகிற 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் செவ்வாய்க்கிழமைதோறும் தஞ்சாவூரில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு திருச்சி ஜங்ஷன், திருச்சி கோட்டை, கரூர் வழியாக இரவு 11.45 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 11.50 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூர் வழியாக மறுநாள் மதியம் 12.30 மணிக்கு ஹூப்ளி சென்றடையும்.

      இந்த தகவலை சேலம்

      ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

      • திருச்சியிலிருந்து காலை 9.20 மணிக்கு புறப்பட்டு திருவாரூக்கு முற்பகல் 11.40 மணிக்கு சென்றடையும்.
      • திருவாரூரில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு திருச்சியை மாலை 6.05 மணிக்கு வந்தடையும்.

      தஞ்சாவூர்:

      திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

      திருவாரூரில் நாளை (சனிக்கிழமை) உலக புகழ் பெற்ற ஆழித்தேரோட்ட திருவிழா நடைபெறுகிறது.

      இதனையொட்டி நாளை ஒரு நாள் மட்டும் திருச்சி-திருவாரூர் இடையே சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06131) இயக்கப்படுகிறது.

      இந்த ரெயில் திருச்சியி லிருந்து காலை 9.20 மணிக்கு புறப்பட்டு பொன்மலை, மஞ்சத்திடல், திருவெறும்பூர், சோளகம்பட்டி, பூதலூர், ஆலங்குடி, தஞ்சாவூர், சாலியமங்கலம், நீடாமங்கலம், கொரடாச்சேரி, குளிக்கரை வழியாக திருவாரூக்கு முற்பகல்
      11.40 மணிக்கு சென்றடையும்.

      மறுமார்க்க மாக திருவாரூர்-திருச்சிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06132) திருவாரூரில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு திருச்சியை மாலை 6.05 மணிக்கு வந்தடையும்.

      இதேபோல் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மட்டும் மயிலாடுதுறை-திருவாரூர் சிறப்பு ரெயிலானது (06133) மயிலாடுதுறையில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு திருவாரூரை இரவு 10.20 மணிக்கு சென்றடையும்.

      மறுமார்க்கமாக, நாளை ஒரு நாள் மட்டும் திருவாரூர்-மயிலாடுதுறை சிறப்பு ரெயில் (06134) திருவாரூரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு காலை 5.55 மணிக்கு வந்தடையும்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • வருகிற 21-ந்தேதி அமாவாசை , 22-ந்தேதி யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
      • இதையடுத்து அமாவாசை, யுகாதி பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம், தருமபுரியில் இருந்து மாதேஸ்வரன்ம லைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

      சேலம்:

      பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி வருகிற 21-ந்தேதி அமாவாசை , 22-ந்தேதி யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

      இதையடுத்து அமா வாசை, யுகாதி பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம், தருமபுரியில் இருந்து மாதேஸ்வரன்ம லைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

      இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 20-ந்தேதி முதல் 23-ம் தேதி வரை இயக்கப்ப டுகிறது.

      இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அமாவாசை, யுகாதி தினத்தில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் மாதேஸ்வரன் மலைக்கு செல்வார்கள்.

      இதனால் பக்தர்களின் வசதிக்காக வருகிற 20-ந்தேதி முதல் 23-ம் தேதி வரை கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி, மேச்சேரி, மேட்டூர் வழியாகவும், தருமபுரியில் இருந்து மேச்சேரி மேட்டூர் வழியாகவும், சேலத்தில் இருந்து மேச்சேரி, மேட்டூர் வழியாகவும் மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது, என்றார்.

      ×