search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து தர்மா"

    • மோடி கர்நாடகாவில் வாக்காளர்களை 'ஜெய் பஜ்ரங்பலி' என்று கோஷமிடச் சொல்லி பின்னர் வாக்குப்பதிவு இயந்திர பொத்தானை அழுத்துமாறு கூறினார்
    • பாஜக ஆட்சிக்கு வந்தால், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு இலவச சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்யும் என்று அமித் ஷா வாக்காளர்களுக்கு உறுதியளித்தார்

    சிவசேனா தேர்தல் பிரச்சார பாடலில் இருந்து 'இந்து தர்மா' மற்றும் 'ஜெய் பவானி' ஆகிய வார்த்தைகளை நீக்க கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதற்கு சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கடந்த வாரம், கட்சியின் பிரச்சார பாடலாக 'மஷல் கீத்' பாடலை வெளியிட்டோம். அதில் 'இந்து தர்மம்', 'ஜெய் பவானி' என்ற இரண்டு வார்த்தைகளுக்கு தேர்தல் ஆணையம் ஆட்சேபனை தெரிவித்தது. பாடலில் 'ஜெய் பவானி, ஜெய் சிவாஜி' என்ற முழக்கம் உள்ளது, இது மகாராஷ்டிரா மற்றும் மராத்தியின் பெருமை.

    மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையத்திற்கு, மகாராஷ்டிராவின் குலதெய்வமான துல்ஜா பவானி தேவி மீது இவ்வளவு வெறுப்பு இருப்பதாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. இன்று 'ஜெய் பவானி'யை நீக்கச் சொல்கிறார்கள், நாளை 'ஜெய் சிவாஜி'யை நீக்கச் சொல்வார்கள். இதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்" என்று அவர் தெரிவித்தார்.

    மேலும், "நரேந்திர மோடி கர்நாடகாவில் வாக்காளர்களை 'ஜெய் பஜ்ரங்பலி' என்று கோஷமிடச் சொல்லி பின்னர் வாக்குப்பதிவு இயந்திர பொத்தானை அழுத்துமாறு கூறினார். மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு இலவச சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்யும் என்று அமித் ஷா வாக்காளர்களுக்கு உறுதியளித்தார்.

    இந்த இரண்டு பேச்சுகளையும் குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்திற்கு நான் கடிதம் எழுதி விளக்கம் கேட்டேன். ஆனால் எனக்கு எந்த பதிலும் வரவில்லை. எனவே தேர்தல் ஆணையம் இப்போது எங்கள் மீது நடவடிக்கை எடுக்க விரும்பினால், அந்த ஆணையம் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தவ் தாக்கரே பதில் அளித்துள்ளார். 

    ×