search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆழ்வார்கள்"

    • குமரியாக இருக்க அருள்புரிந்தார்.
    • காஞ்சியை விட்டு நகரவேண்டும் என ஆணை பிறப்பித்தான்.

    1. ஆழ்வார் உணவு எடுத்துக் கொள்ளாவிட்டாலும், தினமும் தனக்கு பால் அமுது செய்த மகப்பேறு கிட்டா தம்பதியினருக்கு இளமை நல்கி, குழந்தை பாக்கியம் அருளி, பிறந்த குழந்தைக்கு, கணிக்கண்ணன் என்று நாமமிட்டு, தன்னோடு தன் அந்தரங்க சிஷ்யராகக் கொண்டிருந்தார்.

    2. ஆழ்வார் திருவெஃகாவில் கணிக்கண்ணனுடன் இருந்த பொழுது, தனக்கு சேவை புரிந்த வயோதிக பெண்ணிற்கு அவளின் வேண்டுதல்படி என்றும் குமரியாக இருக்க அருள்புரிந்தார். ஒருநாள் இந்த குமரியைக் கண்ட பல்லவ அரசன் காதல் வயப்பட்டு மணம் புரிந்தான்.

    வருடங்கள் ஓட, அரசன் மட்டும் முதுமையடைய, அரசி இளமையுடன் இருப்பதற்கான காரணத்தை அறிந்து, ஆழ்வாரின் சீடன் கணிக்கண்ணன் உஞ்சவிருத்திக்கு வந்தபொழுது, தமக்கும் உமது குரு இவ்வரத்தை நல்க வேண்டும் என கட்டளையிட்டான். கணிக்கண்ணன் மறுத்திட, அரசன் இக்கணமே நீயும் உனது குருவும் காஞ்சியை விட்டு நகரவேண்டும் என ஆணை பிறப்பித்தான்.

    ஆழ்வாரும் இனி நாமிங்கிருக்கப் போவதில்லை; நாம் புறப்பட்ட பிறகு எம்பெருமானும் இங்கு கண் வளர்ந்தருள போவதில்லை எனப் புறப்பட்டார். அப்போது பாடிய பாடல்.

    `கணிக்கண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி

    மணிவண்ணா நீ கிடக்கவேண்டா – துணிவுடைய

    செந்நாப்புலவனும் போகின்றேன்

    நீயுமுன்றன்

    பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்'

    ஆழ்வாரும், கணிக்கண்ணனும், பெருமாளும், இதர தேவதைகளும் காஞ்சியை விட்டு அகன்று அருகிலுள்ள இடத்தில் ஓர் இரவு தங்கியதால் அந்த ஸ்தலத்துக்கு `ஓரிரவிருக்கை' என பெயர் பெற்று, தற்பொழுது ஓரிக்கை என மருவியுள்ளது. காஞ்சி இருளால் சூழ்ந்ததும், அரசன் பல்லவராயன் தன் தவற்றை உணர்ந்து ஓரிக்கை சென்று ஆழ்வார் மற்றும் கணிக்கண்ணன் பாதம் பணிந்திட, மீண்டும் அனைவரும் காஞ்சியில் எழுந்தருள ஒரு பாடல் பாடினார்.

    `கணிக்கண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி

    மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் – துணிவுடைய

    செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்

    பைந்நாகப் பாய்படுத்துக்கொள்'

    ஆழ்வார் சொற்படி நடந்ததால், திருவெஃகா பெருமாளுக்கு, சொன்ன வண்ணம் செய்த பெருமாள் எனப்பெயர். பெருமாள் முன்போல் வலத்திருக்கை கீழாகவன்றி இடத்திருக்கை கீழ்ப்பட கண் வளர்ந்தருள்கிறார்.

    3. ஆழ்வார் குடந்தைக்கு செல்கையில், புதுப்புனலுக்கு தனது நூல்கள் அனைத்தையும் அருளிட, அதில் நான்முகன் திருவந்தாதியும் திருச்சந்த விருத்தமும் புனலை எதிர்த்து திரும்பிட, புனல்வாதத்தில் வென்ற இவ்விரு நூல்களையும் புவனத்திற்கு அருளினார்.

    புனல்வாதத்தில் வென்ற ஏடுகளுடன் ஆராவமுதன் சந்நதிக்குச் சென்று பெருமானை சேவித்து, தன்னுடன் சயன கோலத்தில் இருந்து எழுந்து பேச வேண்டும் என்று பக்தியுடன் துதிக்கிறார்.

    `நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய்

    இடந்த மெய் குலுங்கவோ? இலங்கு மால் வரைச் சுரம்

    கடந்த கால் பரந்த காவிரிக் கரைக்

    குடந்தையுள்

    கிடந்தவாறு எழுந்திருந்து பேசு, வாழி! கேசனே!'

    இங்ஙனம் ஆழ்வார் வாழ்த்தியதும் ஆராவமுதன் உத்தானசாயியாக (எழவும் படுக்கவும் இல்லாத இடைநிலை) நின்றுவிட்டாராம்.

    • நம்மாழ்வார் குழந்தையாக தவழ்ந்த புளியமரத்தில் இன்றும் குழந்தையின் உருவம் உள்ளது.
    • இது வியாழ கிரகதோஷ நிவர்த்தி ஸ்தலம்.

    திருமாலிடம் பிரம்மா தவம் இருக்க இடம் கூறுமாறு வேண்டினார்.

    அதற்கு திருமால் நான் உன்னை படைப்பதற்கு முன்பே தாமிரபரணி நதிக்கரையில்

    யாம் எழுந்தருளி உள்ளோம் என்று கூறினார்.

    திருமால் கூறிய இடமான ஆழ்வார்திருநகரி பெருமாள் ஆதியிலே தோன்றிய நாதன் என்பதால்

    ஆதிநாதன் என திருநாமம் ஏற்பட்டது.

    திருமாலே பிரம்மனுக்கு குருவாக காட்டிய இடமாகியதால் குருகூர் என அழைக்கப்படுகிறது.

    ஆற்றில் வந்த சங்கு இப்பெருமானை வழிபட்டு மோட்சம் பெற்றதால்,

    சங்கின் மறுபெயரான குருகு என்பதில் இருந்து குருகூர் என்று அழைக்கப்படுகிறது.

    சங்கு மோட்சம் பெற்ற தலம் இன்றும் திருச்சங்கண்ணிதுறை என்று அழைக்கப்படுகிறது.

    வராஹ அவதாரம் காண முனிவர்கள் இத்தலத்தில் தவமிருந்து அவர்களுக்கு பிராட்டியுடன்

    வராஹ நாராயணன் காட்சி அளித்ததால் வராக ஷேத்திரம் எனவும், நாய்க்கும் மோட்சம் அளித்த

    தீர்த்தகரை என்பதால் தீர்த்த ஷேத்திரம் எனவும், பஞ்ச மஹா ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.

    நம்மாழ்வார் குழந்தையாக தவழ்ந்த புளியமரத்தில் இன்றும் குழந்தையின் உருவம் உள்ளது.

    இது வியாழ கிரகதோஷ நிவர்த்தி ஸ்தலம்.

    • இழந்த செல்வத்தை பெற திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாளை வழிபடலாம்.
    • இது செவ்வாய் கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

    தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வாரிதிருநகரி செல்லும் வழியில் 3 கிலோமீட்டர் மேற்காக வந்து

    இடது புறம் செல்லும் ரோட்டில் திரும்பி 2 கிலோமீட்டர் சென்றால் திருக்கோளூர்.

    இது மதுரகவி ஆழ்வார் அவதார தலம். இங்கு மூலவர் வைத்தமாநிதி பெருமாள், உற்சவர் நிக்சோவித்தன்,

    தாயார் குமுத வல்லி, கோளூர் வல்லி ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    குபேரன் சிவனை வழிபட கைலாயம் சென்றபோது அங்கே பார்வதியை கெட்ட நோக்கத்தோடு பார்த்தானாம்.

    உடனே பார்வதி கோபம் கொண்டு குபேரனை சபித்தாள்.

    உடனே குபேரனின் உடல் விகாரமானது.

    குபேரன் தன் தவறை உணர்ந்து பார்வதியை அடி பணிந்தான்.

    பார்வதி கோபம் தணியாதவளாய் குபேரனை பார்த்து உன் உடல் விகாரம் மாறாது.

    இனி உனக்கு ஒரு கண் தெரியாது. நீ இழந்த நிதிகளை அவை தஞ்சம் அடைந்துள்ள

    வைத்தமாநிதி பெருமாளிடம் தவம் செய்து பெற்றுக் கொள் என்று கூறினாள்.

    குபேரன் திருக்கோளூர் பெருமாளை நோக்கி கடும் தவம் செய்து இழந்த நிதியில் பாதியை பெற்றான்.

    எனவே இழந்த செல்வத்தை பெற திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாளை வழிபடலாம்.

    இது செவ்வாய் கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

    • இத்தலத்தில் மழை வேண்டி பிரார்த்தனை செய்தால் இன்று வரை பொய்ப்பதில்லை.
    • இது சுக்கிர கிரகதோஷ நிவர்த்தி ஸ்தலம்.

    ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்தில் தென் திருப்பேரை உள்ளது.

    இங்கு மூலவர் மகர நெடுங்குழைக்காதர் வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

    உற்சவர் நிகரில் முகில் வண்ணன், தாயார் குழைக்காத நாச்சியார், திருப்பேரை நாச்சியார்

    ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    துர்வாசமுனிவரின் சாப விமோசனம் பெறுவதற்காக பூமாதேவி இத்தலம் வந்து

    ஓம் நமோ நராயணாய என்ற மந்திரத்தை ஜெபம் செய்தார்.

    பங்குனி பவுர்ணமி தினத்தில் ஜெபம் செய்து ஆற்றில் நீரை அள்ளி எடுக்கும்போது

    இரண்டு மகர குண்டலங்கள் கிடைக்க திருமாலுக்கு அணிவித்து மகிழ்ந்தார்.

    அப்போது தேவர்கள் பூமாரி செரிய பூமா தேவியின் மேனி அழகானது.

    லக்குமியின் உடலுடன் பூமாதேவி தவமிருந்ததால் இவ்வூர் ஸ்ரீபேரை என்றழைக்கப்பட்டது.

    இத்தலத்தில் மழை வேண்டி பிரார்த்தனை செய்தால் இன்று வரை பொய்ப்பதில்லை.

    இது சுக்கிர கிரகதோஷ நிவர்த்தி ஸ்தலம்.

    • உற்சவர் செந்தாமரைக் கண்ணன் தாயார் கருத்தடங்கண்ணியுடன் எழுந்தருளியுள்ளார்.
    • இது கேது கிரகதோஷ நிவர்த்தி ஸ்தலம்.

    தெற்கு கோவிலில் இருந்து கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வடக்கு கோவில் அமைந்துள்ளது.

    இங்கு மூலவர் அரவிந்த லோசனார் வீற்றிருந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

    உற்சவர் செந்தாமரைக் கண்ணன் தாயார் கருத்தடங்கண்ணியுடன் எழுந்தருளியுள்ளார்.

    தினமும் தேவபிரானுக்கு வடக்கு தடாகத்தில் இருந்து சுப்ரபர் தாமரை மலர்களை எடுத்து வந்து பூஜித்து வந்தார்.

    ஒருமுறை சுப்ரபர் எங்கிருந்து தாமரை மலர்களை கொய்து கொண்டு வருகிறார் என்பதை பார்ப்பதற்காக, பின் தொடர்ந்து சென்றார்.

    இதை அறிந்த சுப்ரபர் தன்னை பின் தொடர்வதற்கான காரணம் கேட்க தேவ பிரானோடு சேர்த்து

    தனக்கும் அபிஷேகம் செய்ய பெருமாள் கூறியதால், அங்கேயும் ஒரு பெருமாளை பிரதிஷ்டை செய்து

    சுப்ரபர் பூஜைகள் செய்து வந்தார்.

    அந்த பெருமாளே செந்தாமரைக்கண்ணனாக காட்சி அளிக்கிறார். இது கேது கிரகதோஷ நிவர்த்தி ஸ்தலம்.

    • அவர் கையில் எடுத்தவுடன் வில் ஆணாகவும், தராசு பெண்ணாகவும் மாறியது.
    • இத்தலம் ராகு தோஷநிவர்த்தி ஸ்தலம்.

    (இரட்டைதிருப்பதி) தெற்குகோவில்

    பெருங்குளத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் மங்களகுறிச்சியில் இருந்து வலது புறமாக திரும்பி

    2 கிலோமீட்டர் மேற்கு நோக்கி வந்தால், இரட்டை திருப்பதி ஸ்தலங்கள்.

    தெற்கு கோவிலில் மூலவர் தேவபிரான் உற்சவர் ஸ்ரீனிவாசன் தாயார் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் காட்சியளிக்கிறார்.

    ஆத்ரேயசுப்ரபர் என்ற ரிஷி யாகம் செய்வதற்காக இத்தலத்தில் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது,

    பூமியில் புதையுண்டு கிடந்த மிக ஒளிமயமான ஒரு வில்லையும் தராசையும் எடுத்தார்.

    அவர் கையில் எடுத்தவுடன் வில் ஆணாகவும், தராசு பெண்ணாகவும் மாறியது.

    இருவரும் குபேர சாபத்தால் வில்லாகவும் தராசாகவும் மாறி இத்தல மண்ணில் புதையுண்டு கிடந்ததாக கூறி

    பரமபத முக்தி அடைந்ததால் இத்தலம் தொலைவில்லி மங்கலம் எனப் பெயர் பெற்றது.

    இத்தலம் ராகு தோஷநிவர்த்தி ஸ்தலம்.

    • குமுதவல்லியை அரக்கனிடமிருந்து பெருமாள் மீட்டுவந்தார்.
    • இது சனி கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

    திருப்புளியங்குடியில் இருந்து அதே சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் பெருங்குளத்தில் மூலவர்

    வேங்கடவாணனாகவும், உற்சவர் மாயக்கூத்தன் தாயர் அலமேலுமங்கை, குளந்தைவல்லி தாயாருடன்

    அருள் பாலிக்கிறார்.

    பெருங்குளத்தில் வசித்து வந்த வேதசாரண் குமுதவல்லி தம்பதியினரின் மகள் கமலாவதி,

    தான் திருமணம் செய்தால் பெருமாளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி,

    பெருமாளை நோக்கி கடும் தவம்புரிந்தார்.

    பெருமாளும் நேரில் தோன்றி தன்னுடைய மார்பில் கமலாவதியை ஏற்றுக்கொண்டார்.

    ஒரு சமயம் வேதாசாரண் மனைவி குமுதவல்லியை அச்மசாரன் என்னும் அரக்கன் கவர்ந்து சென்றான்.

    குமுதவல்லியை அரக்கனிடமிருந்து பெருமாள் மீட்டுவந்தார்.

    பெருமாளுடன் அரக்கன் போரிட்டான்.

    அரக்கனை நர்த்தனம் செய்து அவனை வதம் செய்ததால், மாயக்கூத்தன் என்ற திருநாமம் பெருமாளுக்கு ஏற்பட்டது.

    இது சனி கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

    • பூமி தேவியை சமாதானம் செய்து பூமியை காத்ததால், பூமிபாகர் என்ற திருநாமமும் சுவாமிக்கு உண்டு.
    • இது புதன்கிரக தோஷநிவர்த்தி ஸ்தலம்.

    திருவரகுணமங்கையில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் திருப்புளியங்குடியில்

    மூலவர் காய்சினவேந்தன் தாயார் மலர்மகள், திரு மகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    திருமால் இலக்குமி தேவியுடன் நதிக் கரையில் தனித்திருந்த போது, தன்னை திருமால்

    கண்டுகொள்ளாதிருக்கிறாரோ என பூமாதேவி சினங்கொண்டு பாதாள லோகம் செல்ல

    திருமால் அங்கு சென்று பூமாதேவியை சமாதானம் செய்து அழைத்து வந்து

    இருவரும் சமமே என இரு தேவியருடனும் திருமால் இங்கு எழுந்து காட்சியளிக்கிறார்.

    பூமி தேவியை சமாதானம் செய்து பூமியை காத்ததால், பூமிபாகர் என்ற திருநாமமும் சுவாமிக்கு உண்டு.

    இது புதன்கிரக தோஷநிவர்த்தி ஸ்தலம்.

    • திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
    • இங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

    ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருவரகுணமங்கை எனப்படும் நத்தத்தில்,

    மூலவர் விஜயா சன பெருமாள் ஆதி சேஷன் குடைபிடிக்க வீற்றிருந்த கோலத்தில் தாயார்கள் வரகுண வல்லித் தாயர்,

    வரகுண மங்கைத் தாயாருடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இது சந்திரகிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

    இத்திருப்பதியில் உயில் நீத்தால் மோட்சம் கிட்டும் எனரோமேச முனிவர் கூறியுள்ளார்.

    திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

    இங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

    • வைகுண்டநாதனாக நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    • இது சூரியகிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

    திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 28 வது கிலோ மீட்டர் தூரத்தில் ஸ்ரீவைகுண்டம் உள்ளது.

    நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியான பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீவைகுண்டத்தில்

    வைகுண்டநாதன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    ஒரு காலத்தில் சோமுகாசுரன் என்ற அரக்கன் பிரம்ம தேவனிடம் இருந்து படைப்புத் தொழில் குறித்த

    ரகசியம் அடங்கிய ஏடுகனை ஒளித்து வைத்துக்கொண்டாராம்.

    அந்த ஏடுகளை மீட்க தாமிரபரணி ஆற்றங்கரையில் விஷ்ணுவை நோக்கி பிரம்மா தவம் இருந்தார்.

    கடும் தவம் செய்துகொண்டிருந்த பிரம்மாவுக்கு திருமால் நேரில் காட்சியளித்து படைப்புத் தொழில்

    குறித்த ரகசியத்தை சோமுகாசுரனிடமிருந்து மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார்.

    தனக்கு காட்சி கொடுத்து நின்ற திருக்கோலத்திலேயே இங்கு வைகுண்டநாதனாக காட்சியளிக்க வேண்டும்

    என்று பிரம்மா வேண்ட திருமாலும் அப்படியே ஆகட்டும் என வைகுண்டநாதனாக

    நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இது சூரியகிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

    • ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ தலங்கள் 108.
    • அவற்றில் 9 கோவில்கள் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் தாமிரபரணி நதி தீரத்தில் அமைந்துள்ளன.

    ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ தலங்கள் 108.

    அவற்றில் 9 கோவில்கள் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) தாமிரபரணி நதி தீரத்தில் அமைந்துள்ளன.

    நவ திருப்பதிகள் என அழைக்கப்படும் அந்த தலங்கள்:

    1. ஸ்ரீவைகுண்டம்,

    2. நத்தம்,

    3. திருப்புளியங்குடி,

    4. தொலைவில்லி மங்கலம்,

    5. தொலைவில்லி மங்கலம் (இங்கு 2 கோவில்கள் உள்ளதால் இரட்டை திருப்பதி என அழைக்கப்படுகிறது)

    6. பெருங்குளம்,

    7. தென்திருப்போரை,

    8. திருக்கோளூர்,

    9. ஆழ்வார் திருநகரி,

    ஒவ்வொரு தலத்தின் சிறப்புகளையும் அடுத்தடுத்த பதிவுகளில் காண்போம்

    • திருமங்கை ஆழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பட்ட சிறப்புக்குரிய கோவில்.
    • காவிரி நாலுகால் மண்டபத்தில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஸ்தலமாகவும், பஞ்ச அரங்கத் தலங்களில் ஐந்தாவதாகவும் திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.

    திருமங்கை ஆழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பட்ட சிறப்புக்குரிய இக்கோயிலில் துலா உற்சவம் கடந்த 8-ஆம் தேதி கருட கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    ஒன்பதாம் திருநாளான நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்று, பின்னர் காவிரி நாலுகால் மண்டபத்தில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

    இந்நிலையில் கோயிலில் தேரோட்டம் நான்கு வீதிகளில் வலம் வந்தது.

    இதில் மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார், பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, கோவிந்தா, பரிமள ரெங்கநாதா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

    திருத்தேர் நான்கு வீதிகளை சுற்றி சன்னதியை வந்தடைந்தது.

    பின்னர் மதியம் 1:30 மணி அளவில் நாலுகால் மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

    இதில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் முத்துராமன், நிர்வாக அலுவலர் ரம்மியா, கோயில் அலுவலர் விக்னேஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துக்கொன் சாமிதரிசனம் செய்தனர்.

    ×