search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    8. திருக்கோளூர்
    X

    8. திருக்கோளூர்

    • இழந்த செல்வத்தை பெற திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாளை வழிபடலாம்.
    • இது செவ்வாய் கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

    தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வாரிதிருநகரி செல்லும் வழியில் 3 கிலோமீட்டர் மேற்காக வந்து

    இடது புறம் செல்லும் ரோட்டில் திரும்பி 2 கிலோமீட்டர் சென்றால் திருக்கோளூர்.

    இது மதுரகவி ஆழ்வார் அவதார தலம். இங்கு மூலவர் வைத்தமாநிதி பெருமாள், உற்சவர் நிக்சோவித்தன்,

    தாயார் குமுத வல்லி, கோளூர் வல்லி ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    குபேரன் சிவனை வழிபட கைலாயம் சென்றபோது அங்கே பார்வதியை கெட்ட நோக்கத்தோடு பார்த்தானாம்.

    உடனே பார்வதி கோபம் கொண்டு குபேரனை சபித்தாள்.

    உடனே குபேரனின் உடல் விகாரமானது.

    குபேரன் தன் தவறை உணர்ந்து பார்வதியை அடி பணிந்தான்.

    பார்வதி கோபம் தணியாதவளாய் குபேரனை பார்த்து உன் உடல் விகாரம் மாறாது.

    இனி உனக்கு ஒரு கண் தெரியாது. நீ இழந்த நிதிகளை அவை தஞ்சம் அடைந்துள்ள

    வைத்தமாநிதி பெருமாளிடம் தவம் செய்து பெற்றுக் கொள் என்று கூறினாள்.

    குபேரன் திருக்கோளூர் பெருமாளை நோக்கி கடும் தவம் செய்து இழந்த நிதியில் பாதியை பெற்றான்.

    எனவே இழந்த செல்வத்தை பெற திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாளை வழிபடலாம்.

    இது செவ்வாய் கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

    Next Story
    ×