search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாயன்மார்கள்"

    • இன்று காரி நாயனார் குருபூஜை தினம்.
    • ஒவ்வொரு நாயன்மாருக்கும் ஒரு சிறப்பு உண்டு.

    இன்று, மாசி மாதம் பூராடம். காரி நாயனார் குருபூஜை தினம் ஒவ்வொரு நாயன்மாருக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதில் காரி நாயனார் தன்னுடைய பூத உடம்போடு கயிலை சேர்ந்து இன்புற்றார் என்பது பெருமை. இதை சேக்கிழார் பெருமான் மிக அற்புதமாக தன்னுடைய பெரிய புராணத்தில் பாடுகின்றார்.

    `ஏய்ந்த கடல் சூழ் உலகில் எங்கும் தம்

    இசை நிறுத்தி

    ஆய்ந்த உணர்விடை அறா அன்பினராய்

    அணி கங்கை

    தோய்ந்த நெடும் சடையார்தம் அருள்

    பெற்ற தொடர்பினால்

    வாய்ந்த மனம் போலும் உடம்பும்

    வடகயிலை மலை சேர்ந்தார்'.

    அங்கே அவர் ஒளிஉடம்பு பெற்றார் என்பது வரலாறு. காலனைக் கடிந்து, தன்னைச் சரணடைந்த மார்க்கண்டய மகரிஷிக்கு என்றும் பதினாறு என்ற வரத்தை அளித்தவர் திருக்கடவூர் அமிர்த கடேஸ்வரர். அபிராமி அன்னை கோயில் கொண்டுள்ள அத்தலத்தில் பிறந்தவர் காரி நாயனார். செந்தமிழ் கற்றவர்.

    நற்றமிழ் கற்ற நாவால் எப்பொழுதும் நமசிவாய என்ற ஐந்து எழுத்து மந்திரத்தை ஓதிக் கொண்டிருப்பவர். நான்கு வகை கவிபாடுவதில் வல்லவர். சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடம் சேர்ந்து, பாடி, பெரும் பரிசுகளைப்பெற்று, அந்த பரிசுகளை எல்லாம் சிவனடியார்களுக்கும் சிவனுடைய திருத்தலத் தொண்டுக்கும் முழுமையாக பயன்படுத்தியவர். கயிலைநாதனை கண நேரமும் மறவாதவர். அதனால் சிவபெருமான் இவரை நேரடியாக கயிலைப் பதியை அளித்தார்.

    • நேராக சிவனை தரிசித்து, அம்பாளை தரிசித்து விட்டு வெளியேறுதல் முழுமையான தல தரிசனம் ஆகாது.
    • இத்தல நாயகன் நடராஜன் ஆடல் வல்லானாய் இருப்பதால் கூத்தன் கோவில் என்ற திருநாமமும் உண்டு.

    கோவில்களில் உள்ள அனைத்துச் சன்னதிகளையும் தரிசித்து, பின்னர் அம்பாளை தரிசித்து, கடைசியாகத்தான் மூலவர் சிவனை தரிசிக்க வேண்டும்.

    நேராக சிவனை தரிசித்து, அம்பாளை தரிசித்து விட்டு வெளியேறுதல் முழுமையான தல தரிசனம் ஆகாது.

    எனவே இத்திரு கோவில்களில் உள்ள நவகிரக சன்னதி, பதஞ்சலி சன்னதி, கம்பத்து இளையனார் சன்னதி ஆகிய சன்னதிகளை வணங்க வேண்டும்.

    திருக்கோவில் சிறப்பு தங்களது பக்தியால் அறுபத்து மூவர் என்று சிறப்பு பெற்றவர்களுள், முக்கியமானவர்கள் நால்வர்.

    அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரே அந்நால்வர்-என்பது சிவனடியார்களுக்குத் தெரிந்ததுதான்.

    இவர்கள் நால்வரும் இத்திருத்தல நாயகன் திருமூல நாதர் மீதும், உமையாம்பிகை மீதும் தேவாரப் பாடல்கள் பாடியுள்ளனர்.

    இத்தல நாயகன் நடராஜன் ஆடல் வல்லானாய் இருப்பதால் கூத்தன் கோவில் என்ற திருநாமமும் உண்டு.

    தில்லை மரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் தில்லை கூத்தன் கோவில் என்றும் அழைக்கப்படும்.

    சித் என்ற ஞானத்தையும், அம்பரம் என்ற ஆகாயத்தையும் குறிப்பதால் சிதம்பரம்.

    அதனால் சிதம்பரம் தில்லை கூத்தன் கோவில் என்றே அழைக்கப்படுகிறது.

    சிதம்பரம் என்ற பெயரே வழக்கில் இருந்தாலும் புலிக்கால் முனிவர் வியாக்கிரபாதர் பூசை செய்த காலத்தில் புலியூர் என்றும் இதுவே பூலோகக் கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.

    • திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஆர்த்ரா என பெயர். அதுவே ஆருத்ரா என மாறியது.
    • பார்வதிதேவியின் தவத்துக்கு மெச்சி அவளை மணப்பதாக வாக்கு கொடுத்தது இந்நாளில்தான்.

    திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஆர்த்ரா என பெயர்.

    அதுவே ஆருத்ரா என மாறியது.

    அறுபத்து நான்கு நாயன்மார்களில் ஒருவரான சேந்தனார் என்பவர் அரசபதவியிலிருந்து சிவனின் திருவிளையாடலால் ஏழையாகினாலும் தன்னுடைய சிவத்தொண்டான அடியவருக்கு உணவளிக்காமல், தான் உண்பதில்லை என்ற கொள்கையிலிருந்து மாறாமல் இருந்தார்.

    கடும் வறுமையில் வாழ்ந்து வந்தபோது, ஒரு மழைநாளில் சமைக்க ஏதுமில்லாதபோதும், கோலமிட வச்சிருந்த பச்சரிசி மாவில், சிறிதளவு வெல்லம் சேர்த்து களியாய் கிளறி அடியவருக்காக காத்திருந்தனர்.

    இரவுப்பொழுது ஆகியும் யாரும் வராததால் பசியோடு உறங்க சென்றனர்.

    இதனால், சிவனே அடியவர் வேடம் போட்டு சேந்தனார் வீட்டு வாயிலில் நின்று பிச்சை கேட்டார்.

    அவருக்கு களி பரிமாறி பசியாத்தினர் சேந்தனார் தம்பதியினர்.

    களி மிக ருசியாயுள்ளது என சொல்லி நாளைக்கும் வேண்டுமென கூறி மிச்சம் மீதி களியையும் பெற்று சென்றார்.

    மறுநாள் கோவிலில் சென்று இறைவனை காணும்போது, கருவறையில், முதல் நாள் அடியவருக்கு கொடுத்தனுப்பிய களி அங்கு சிதறி இருந்தது.

    அப்படி சேந்தனார், களியமுது படைத்திட்ட நாள் மார்கழி திருவாதிரை நட்சத்திரம் நாளாகும்.

    அன்றிலிருந்து, ஆருத்ரா தரிசனம் நாளன்று களி சமைத்து படைப்பது வழக்கமாகிவிட்டது.

    களின்ற வார்த்தைக்கு உணவு பண்டம்ன்னு மட்டும் பொருள் இல்லை.

    களின்னா ஆனந்தம்ன்னும் பொருள் தரும்.

    அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும்.

    சத், சித் ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாக வைத்துதான் திருவாதிரைக்களி நிவேதனம் செய்விக்கப்படுகிறது.

    இந்த ஆருத்ரா தரிசன நாளில்தான், மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடல்களை எழுதி முடித்தார்.

    கேரளத்தில் இந்நாளை ஈசன் காமனை எரித்த நாளாக கொண்டாடுகின்றனர்.

    பார்வதிதேவியின் தவத்துக்கு மெச்சி அவளை மணப்பதாக வாக்கு கொடுத்தது இந்நாளில்தான்.

    அதனால்தான், இந்நாளில் விரதமிருந்து ஈசனை வழிபட்டால் சிறந்த கணவன் கிடைக்கும், தாலிபலம் கூடும்.

    பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்று சேர்வர்.

    • குமரியாக இருக்க அருள்புரிந்தார்.
    • காஞ்சியை விட்டு நகரவேண்டும் என ஆணை பிறப்பித்தான்.

    1. ஆழ்வார் உணவு எடுத்துக் கொள்ளாவிட்டாலும், தினமும் தனக்கு பால் அமுது செய்த மகப்பேறு கிட்டா தம்பதியினருக்கு இளமை நல்கி, குழந்தை பாக்கியம் அருளி, பிறந்த குழந்தைக்கு, கணிக்கண்ணன் என்று நாமமிட்டு, தன்னோடு தன் அந்தரங்க சிஷ்யராகக் கொண்டிருந்தார்.

    2. ஆழ்வார் திருவெஃகாவில் கணிக்கண்ணனுடன் இருந்த பொழுது, தனக்கு சேவை புரிந்த வயோதிக பெண்ணிற்கு அவளின் வேண்டுதல்படி என்றும் குமரியாக இருக்க அருள்புரிந்தார். ஒருநாள் இந்த குமரியைக் கண்ட பல்லவ அரசன் காதல் வயப்பட்டு மணம் புரிந்தான்.

    வருடங்கள் ஓட, அரசன் மட்டும் முதுமையடைய, அரசி இளமையுடன் இருப்பதற்கான காரணத்தை அறிந்து, ஆழ்வாரின் சீடன் கணிக்கண்ணன் உஞ்சவிருத்திக்கு வந்தபொழுது, தமக்கும் உமது குரு இவ்வரத்தை நல்க வேண்டும் என கட்டளையிட்டான். கணிக்கண்ணன் மறுத்திட, அரசன் இக்கணமே நீயும் உனது குருவும் காஞ்சியை விட்டு நகரவேண்டும் என ஆணை பிறப்பித்தான்.

    ஆழ்வாரும் இனி நாமிங்கிருக்கப் போவதில்லை; நாம் புறப்பட்ட பிறகு எம்பெருமானும் இங்கு கண் வளர்ந்தருள போவதில்லை எனப் புறப்பட்டார். அப்போது பாடிய பாடல்.

    `கணிக்கண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி

    மணிவண்ணா நீ கிடக்கவேண்டா – துணிவுடைய

    செந்நாப்புலவனும் போகின்றேன்

    நீயுமுன்றன்

    பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்'

    ஆழ்வாரும், கணிக்கண்ணனும், பெருமாளும், இதர தேவதைகளும் காஞ்சியை விட்டு அகன்று அருகிலுள்ள இடத்தில் ஓர் இரவு தங்கியதால் அந்த ஸ்தலத்துக்கு `ஓரிரவிருக்கை' என பெயர் பெற்று, தற்பொழுது ஓரிக்கை என மருவியுள்ளது. காஞ்சி இருளால் சூழ்ந்ததும், அரசன் பல்லவராயன் தன் தவற்றை உணர்ந்து ஓரிக்கை சென்று ஆழ்வார் மற்றும் கணிக்கண்ணன் பாதம் பணிந்திட, மீண்டும் அனைவரும் காஞ்சியில் எழுந்தருள ஒரு பாடல் பாடினார்.

    `கணிக்கண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி

    மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் – துணிவுடைய

    செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்

    பைந்நாகப் பாய்படுத்துக்கொள்'

    ஆழ்வார் சொற்படி நடந்ததால், திருவெஃகா பெருமாளுக்கு, சொன்ன வண்ணம் செய்த பெருமாள் எனப்பெயர். பெருமாள் முன்போல் வலத்திருக்கை கீழாகவன்றி இடத்திருக்கை கீழ்ப்பட கண் வளர்ந்தருள்கிறார்.

    3. ஆழ்வார் குடந்தைக்கு செல்கையில், புதுப்புனலுக்கு தனது நூல்கள் அனைத்தையும் அருளிட, அதில் நான்முகன் திருவந்தாதியும் திருச்சந்த விருத்தமும் புனலை எதிர்த்து திரும்பிட, புனல்வாதத்தில் வென்ற இவ்விரு நூல்களையும் புவனத்திற்கு அருளினார்.

    புனல்வாதத்தில் வென்ற ஏடுகளுடன் ஆராவமுதன் சந்நதிக்குச் சென்று பெருமானை சேவித்து, தன்னுடன் சயன கோலத்தில் இருந்து எழுந்து பேச வேண்டும் என்று பக்தியுடன் துதிக்கிறார்.

    `நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய்

    இடந்த மெய் குலுங்கவோ? இலங்கு மால் வரைச் சுரம்

    கடந்த கால் பரந்த காவிரிக் கரைக்

    குடந்தையுள்

    கிடந்தவாறு எழுந்திருந்து பேசு, வாழி! கேசனே!'

    இங்ஙனம் ஆழ்வார் வாழ்த்தியதும் ஆராவமுதன் உத்தானசாயியாக (எழவும் படுக்கவும் இல்லாத இடைநிலை) நின்றுவிட்டாராம்.

    • இங்கு முற்றும் துறந்த ஞானியாகக் கோவணத்துடன் வருகை தந்தார்.
    • முடிவாக ஜீவ சமாதியாக கடற்கரை அருகில் சிவலிங்க வடிவாகவே ஆனார்.

    திருவொற்றியூரில் பட்டினத்தார் முக்தி

    "பட்டினத்தார் உலகையே துறந்தவர். அவரைபோல அனைத்தையும் துறந்தவர் பூவுலகில் யாரும் இல்லை" என்று தாயுமானவர் பாடியுள்ளார்.

    அத்தகைய பட்டினத்தார் முக்திபெற்ற இடம் திருவொற்றியூர்.

    இங்கு முற்றும் துறந்த ஞானியாகக் கோவணத்துடன் வருகை தந்தார்.

    பக்திரசம் சொட்டச் சொட்ட பல பாடல்கள் பாடினார்.

    திருவொற்றியூரில் தெருவில் நடந்து போனேன் காலடி மண்ணை நெற்றியில் திருநீறாக பூசினால் பிறவி நோய்க்கும் அருமுருந்தாகும் என்று பட்டினத்தார் பாடலில் கூறியுள்ளார்.

    பட்டினத்தார் இந்த ஊரில் மீனவச் சிறுவர்களுடன் விளையாடினார்.

    மணலைத் தோண்டி அதில் தன்னை புதைக்கச் செய்தார்.

    வேறு இடத்தில் இருந்து வெளியில் வந்தார்.

    இதுபோல 2 முறை செய்தார். 3வது முறையும் புதைத்த போது அவர் வெளியே வரவில்லை.

    தோண்டி பார்க்கும் போது இறைவனடி சேர்ந்து லிங்கமாக காட்சி தந்தார்.

    திருவொற்றியூர் இறைவனை பாடி அர்ச்சனை செய்ய ஏதுவாக 28 போற்றி பாடல்கள் பாடியுள்ளார்.

    முடிவாக ஜீவ சமாதியாக கடற்கரை அருகில் சிவலிங்க வடிவாகவே ஆனார்.

    இவரது சமாதிக் கோவில் திருவொற்றியூர் கடற்கரை சாலை அருகே இன்றும் உள்ளது.

    • சோழ நாட்டு திருவெண்ணை நல்லூர் சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தார்.
    • முதல் குலோத்துங்க சோழன் கி.பி. 12ம் நூற்றாண்டில் கம்பரை ராமாயணம் எழுத வேண்டினான்.

    ஒற்றியூரில் கம்பர் ராமாயணம் எழுதினார்

    சான்றோருடையது தொண்டை நன்னாடு என்பதால் கல்வியில் சிறந்த கம்பன், வடமொழி வான்மீகி ராமாயணத்தைக் கேட்டு, அதைக் தமிழில் மொழிபெயர்த்து எழுத சோழ நாட்டிலிருந்து, தொண்டை நாட்டிலுள்ள திருவொற்றியூர் வந்தார்.

    கவி சக்கரவர்த்தி உவச்சர் குலத்தைச் சேர்ந்தவர். இக்குலத்தை சேர்ந்தவர்களே ஸ்ரீ வட்டபாறை அம்மனை பூசித்து வந்தனர்.

    சோழ நாட்டு திருவெண்ணை நல்லூர் சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தார்.

    திருவொற்றியூரில் வடமொழி வான்மீகி ராமாயணத்தை கேட்டு அதைத் தமிழில் மொழிபெயர்த்து ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றினார்.

    இதற்கான ஆதாரங்கள் கல்வெட்டுக்கள், புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    முதல் குலோத்துங்க சோழன் கி.பி. 12ம் நூற்றாண்டில் கம்பரை ராமாயணம் எழுத வேண்டினான்.

    வடமொழியில் இருந்த வால்மீகி ராமாயணத்தை கற்க கம்பர் திருவொற்றியூர் வந்தார்.

    திருவொற்றியூர் சதுரானை பண்டிதர் என்பவர் மடம் ஒன்றை நிறுவினார்.

    இவர் கேரள நாட்டினர்.

    பல கலைகளையும் பயின்றவர் என்று தமிழக வரலாற்றில் (பக்கம் 356) கல்வெட்டை ஆதாரமாகக் கொண்டு கூறுகிறது.

    இவரிடம் தான் பகல் எல்லாம் வடமொழி வான்மீகி ராமாயணத்தை கம்பர் கேட்டு, இரவு முழுவதும் அதைத் தமிழில் எழுதினார்.

    கம்பர் உவச்சர் குலத்தவர், காளி பக்தர், எனவே தினமும் வட்டபாறை காளியம்மனை வணங்கிய பிறகே ராமாயணத்தை எழுதுவார்.

    இரவில் தமிழில் பாட்ல எழுதும் போது வட்டபாறை நாச்சியார்,பெயர் வடிவில் வந்து ராமாயணம் எழுதும் கம்பனுக்குத் தீபந்தம் ஏந்தி நின்றதைக் கம்பரே பாடியுள்ளார்.

    ஒற்றியூர் காக்க உறைகின்றகாளியே

    வெற்றியூர்க் காகுத்தன் மெய்ச்சரிதை & பற்றியே

    நந்தாது எழுதற்கு நள்ளிரவில் மாணாக்கர்

    பிந்தாமல் பந்தம் பிடி

    தீப்பந்தம் ஏந்தி நின்று வட்டபாறை அம்மனே கம்பனின் தமிழுக்குத்தொண்டு செய்துள்ளதும், சதுரானை பண்டித மடத்தில் உள்ள ஒருபெண் மேல் கம்பன் அன்பு கொண்டு பாடியுள்ளதும் இங்கு அகச்சான்றுகளாய் உள்ளன.

    கம்பர், வான்மீகி ராமாயண வடமொழிகள் மூல படம் கேட்க ஒற்றியூர் சதுரானை மடம் வந்ததும், வட்டபாறையம்மன் அருளால் தமிழில் ராமாயணம் பாடியதும் தனிச்சிறப்புக்குரிய செய்தியாகும்.

    • இந்த தலவிருட்ச மரமாகிய அத்தி மரத்தின் கீழ் அமர்ந்து தவம் புரிந்து சிவனருள் பெற்றார்.
    • அடியார் பசித்திருக்க அன்னை பொறுப்பாளோ?

    அண்ணி வடிவில் வந்து ராமலிங்க வள்ளலார் அடிகளுக்கு சாதம் பரிமாறிய அன்னை

    ராமலிங்க அடிகள் தனது 12வது வயதிலிருந்து 35வது வயது வரை 24 ஆண்டுகள் இடைவிடாமல் இந்த ஒற்றியூர் இறைவனை வந்து வணங்கினார்.

    இந்த தலவிருட்ச மரமாகிய அத்தி மரத்தின் கீழ் அமர்ந்து தவம் புரிந்து சிவனருள் பெற்றார்.

    அவர் அருளிச் செய்த 6 திருமுறைகளில் 3 திருமுறைகள் முற்றிலும் திருவொற்றியூரின் மேன்மையை உணர்த்துகின்றன.

    ஆதிபுரிஸ்வரர் மீது எழுத்தறி பெருமான் மாலை என 31 பாடல்களையும், வடிவுடையம்மன் மீது ஸ்ரீ வடிவுடை மாணிக்க மாலை என 101 பாடல்களையும் பாடியுள்ளார்.

    ஸ்ரீ தியாகராஜ பெருமானது பவனி பற்றியும் சிறப்பாக பாடியுள்ளார்.

    திருவொற்றியூர் முருகன் கற்பூரம் ஏற்ற காசு இன்றி மிகவும் வருந்தி பாடியுள்ளார்.

    "அருமருந்தே தணிகாசலம் மேவும் ஆருயிரே

    திருமருங்கார் ஒற்றியூர் மேவிய நின் திருமுன்னதால்

    ஒருமருங்கு ஏற்ற என் செய்வேன்

    கற்பூர ஒளியினுக்கே" என்று வருந்தி பாடியுள்ளார்.

    அடியார் பசித்திருக்க அன்னை பொறுப்பாளோ?

    ஒருநாள் இரவு அன்னை ஸ்ரீ வடிவுடையாளை தரிசித்து கால்நோக நடந்து சென்று நள்ளிவு ஆனதால் வீட்டில் அண்ணியை எழுப்ப மனமின்றி பசியோடு வீட்டுத் திண்ணையில் ஸ்ரீ ராமலிங்க அடிகள் தூங்கச் சென்றார்.

    அண்ணி வடிவில் அன்னை ஸ்ரீ வடிவுடையாளே அவருக்கு சாதம் தந்து அருள் செய்தாள்.

    குழந்தையின் பசியை பொறுக்காது ஞானபால் தந்தவளாயிற்றே? அடியாரை பசிக்க விடுவாளோ? என்று ராமலிங்க அடிகளார் பாடுகிறார்.

    • “காதற்றஊசி வாராது காணும் கடை வழிக்கே” என்ற உண்மையை அந்த ஓலை உணர்த்தியது.
    • சிவனைத் தவிர எல்லா செல்வமும் பொய் என்ற ஞானம்பெற்றார்.

    திருவொற்றியூரில் சித்துக்கள் செய்த பட்டினத்தார்

    பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவரான பட்டினத்தார், திருவொற்றியூருக்கு வந்து திருவருள் பெற்று கடற்கரை ஓரத்தில் உயிரோடு ஜீவ சாமாதியான சித்தர்.

    காவிரிபூம்பட்டினத்தில் நகரத்துச் செட்டியார் மரபில் தோன்றியவர் திருவெகாடர், திருமணமான பின் மகப்பேறு இன்றி சிவனிடம் முறையிட்டதால் திருவிடைமருதூர் ஈசனே மருதவாணர் என்ற பெயரில் வளர்ப்பு மகனாக வந்தார், வளர்ந்தார், கடல் கடந்து வணிகம் செய்து திரும்பி வந்தார்.

    வறட்டிகளோடு ஒரு கிழிந்த ஓலையையும் தந்து மறைந்தார்.

    "காதற்றஊசி வாராது காணும் கடை வழிக்கே" என்ற உண்மையை அந்த ஓலை உணர்த்தியது.

    சிவனைத் தவிர எல்லா செல்வமும் பொய் என்ற ஞானம்பெற்றார்.

    செல்வம், மனைவி, உறவு யாவற்றையும் துண்டித்துக் கொண்டு துணையோடு துறவு பூண்டார்.

    கோவில் தோறும் இறைவனை வழிபட்டு தான் பெற்ற ஞானத்தை பாடினார்.

    சுவையற்றபேய்க் கரும்பு இனித்த இடமாகிய திருவொற்றியூர் தனக்கு முக்தி தரும் இடம் என இங்கு வந்து கடற்கரை அருகே சித்துக்கள் செய்தார்.

    • மறைமலை அடிகளார் வயிற்று வலி நோயினால் அதிக துன்பம் அடைந்தார்.
    • தமிழ் தெய்வம், முருகன் பாவலருக்கு உடல் நலத்தைத் தந்து நோயைத் தீர்த்தார்.

    மறைமலை அடிகளின் வயிற்றுவலியை தீர்த்த திருவொற்றியூர் முருகபெருமான்!

    தனித்தமிழ் அடிகளாய் விளங்கிய மறைமலை அடிகளார் வயிற்று வலி நோயினால் அதிக துன்பம் அடைந்தார்.

    சூலை நோயைத் தந்து திருநாவுக்கரசு ஆட்கொள்வது போல சிவன் இவருக்கு ஆற்றாத வயிற்று நோயைத் தந்தார்.

    தமக்கு உற்றநோய் நீங்குமாறு திருவொற்றியூரில் திருக்கோவில் கொண்டு, அருணகிரிக்கும், ராமலிங்கருக்கும் அருளிய முருகபெருமானை வேண்டி புதிருவொற்றி முருகர் மும்மணிக் கோவையை பாடினார்.

    தமிழ் தெய்வம், முருகன் பாவலருக்கு உடல் நலத்தைத் தந்து நோயைத் தீர்த்தார்.

    இம்முருக பெருமான் இன்றைக்கும் வேண்டுவோருக்கு வேண்டுவன ஈந்து அருள்பாலித்து வருகிறார்.

    • நடன நாயகர்கள் நடராஜ பெருமான் தியாகராஜர் என இருவர் உள்ளனர்.
    • நந்தி தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என இரண்டு தீர்த்த குளங்கள் உள்ளன.

    இரட்டை சிறப்பு பெற்ற திருவொற்றியூர் தலம்

    பிற கோவில்களில் ஒன்றாக இருக்கும் யாவும் இங்கு இரட்டை சிறப்புகளாக அமைந்திருக்கிறது.

    இங்குள்ள இரண்டு விருட்சம் அத்தி, மகிழம் , இரண்டு திருக்குளங்கள் நந்தி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், இரண்டு பெருமான் படம்பக்கநாதர், தியாகராஜர் , இரண்டு அம்பிகை ஸ்ரீ வடிவுடையம்மன், ஸ்ரீ வட்ட பாறையம்மன்,

    இரண்டு விநாயகர், குணாலய விநாயகர், பிரதான விநாயகர், இரண்டு முருகர், அருட்ஜோதி பெருமான், பிரதானமுகர், இரண்டு நடன நாயகர்கள் நடராஜ பெருமான் தியாகராஜர்,

    திருவீதி விழாவில் கூட சந்திரசேகர் வீதி வலம் வந்த பின் இரண்டாவதாக தியாகராஜரும் வீதி வலம் வருவார்.

    பிரம்ம உற்சவம், வசந்த உற்சவம் என சிவனுக்கு இரண்டு உற்சவமும், சிவராத்திரி உற்சவம் வட்ட பாறையம்மன் நவராத்திரி உற்சவம் என அம்பிகாவுக்கு இரண்டும் உற்சவங்கள் நடைபெறுகின்றன.

    திருவிழாவிலும் இரண்டு திருக்கல்யாணங்கள் நடைபெறும். சுந்தரர் சங்கிலி செய்வார். இரட்டைச் சிறப்புகள் இக்கோவிலின் தனிபெருமையன்றோ?

    • ஒரே இடத்தில் பஞ்சபூத லிங்கங்களைத் தரிசிக்கும் சிறப்பு பெற்றது இக்கோவில்.
    • பிரகாரத்தில் வரிசையாக பஞ்சபூதத் தலங்களாக இருப்பது மிகவும் சிறப்பானதாகும்.

    திருவொற்றியூர் ஆலயம்-பஞ்சபூத லிங்கங்கள்

    மண்ணுக்கு சோமசுந்தர் கோவிலும், விண்ணுக்கு ஆகாசலிங்கமும், நெருப்புக்கு அண்ணாமலையார் கோவிலும், காற்றுக்கு காளத்தீஸ்வரரர் கோவிலும், வெளிச்சுற்று பிரகாரத்தில் வரிசையாக பஞ்சபூதத் தலங்களாக இருப்பது மிகவும் சிறப்பானதாகும்.

    ஒரே இடத்தில் பஞ்சபூத லிங்கங்களைத் தரிசிக்கும் பேறு இந்தத் திருக்கோவிலில் மட்டுமே வாய்த்துள்ளது.

    ஆஞ்சநேயர்

    கோவில் தூணிலே உள்ள ஆஞ்சநேயர் வேண்டியவருக்கு அருளை அள்ளி வழங்கும் வள்ளல் இவர், நினைத்த காரியம் இவரிடம் ஜெயமாகும்.

    • பூவுலக சிவலோகம் என்று இக்கோவில் போற்றப்படுகிறது.
    • ஆகம விதிப்படி 4 கால பூஜை இங்கு நடைபெறுகிறது.

    திருவொற்றியூர் ஆலயம்-பூவுலக சிவலோகம்

    படை வளம் செறிந்த பாடல் 274 திருக்கோவில்களில் தொண்டை நாட்டில் 32 திருத்தலங்கள் உள்ளன.

    அதில் பெரும் புகழ்பெற்று, பழமையானது திருவொற்றியூர் திருத்தலமாகும்.

    பூவுலக சிவலோகம் என்று இக்கோவில் போற்றப்படுகிறது.

    முக்தி தலம், ஞானத்தலம் என்றும் இதனை போற்றுவர்.

    ஆகம விதிப்படி 4 கால பூஜை இங்கு நடைபெறுகிறது.

    மூன்று தனித்தனி கொடி மரங்கள், ராஜகோபுரம் 7 நிலையில் 120 அடி உயரத்துடன் நிற்கிறது.

    கோவிலில் நுழைந்ததும் உயர்ந்தோங்கிய கொடி மரத்தைக் காண்கிறோம்.

    இக்கோவிலில் ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீ வடிவுடையம்மன், ஸ்ரீ வட்ட பாறையம்மன் என்ற மூவருக்கும் தனித்தனி திருவிழாக்கள் சிறப்புற நடப்பதால் மூன்று கொடி மரங்கள் தனித்தனியே உள்ளது.

    இதில் கொடியேறியதும் 10 நாள் திருவிழாக்கள் தனித்தனியே நடைபெறும்.

    உள்ளே நுழைந்ததும் மேற்கு பார்த்த சன்னதியில் வரிசையாக சூரிய பகவான், தேவார மூவர், சுந்தரர், சங்கிலி நாச்சியார் 1008 கோடுகளை லிங்கங்களாக கொண்ட சரஸ்ரலிங்கம், ஏகாம்பரேஸ்வரர், ராமநாதர் போன்ற தெய்வங்களை தரிசிக்கலாம்.

    ×