search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிசி விலை"

    • பிலிப்பைன்சில் வரலாறு காணாத அளவில் அரிசி விலை உயர்ந்துள்ளது.
    • அரிசி விலையை குறைக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    மணிலா:

    பிலிப்பைன்சில் சமீப காலமாக அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, கடந்த டிசம்பருடன் ஒப்பிடுகையில் பணவீக்கம் உயர்ந்து 22.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் அரிசி விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

    அரசின் கையிருப்பில் உள்ள அரிசியை சட்ட விரோதமாக விற்பனை செய்ததே இதற்கு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.

    இதற்கிடையே அரிசி விலையை குறைக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். எனவே வேளாண் துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டது.

    இந்நிலையில், அரிசி விற்பனை ஊழல் தொடர்பாக தேசிய உணவு ஆணையத்தின் தலைவர், அதிகாரிகள் உள்பட 138 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வேளாண்துறை மந்திரி பிரான்சிஸ்கோ டியு லாரல் கூறினார்.

    • சில்லறை மார்க்கெட்டில் ஒரு கிலோ மணச்சநல்லூர் பொன்னி ரூ. 64 வரை விற்கப்படுகிறது.
    • டெல்டா உற்பத்தி பாதிப்பு மட்டுமல்லாமல் கர்நாடகாவில் இருந்து வரும் நெல் வரத்து சரிந்ததும் காரணமாக உள்ளது.

    திருச்சி:

    காவிரியில் போதிய நீர்வரத்து இல்லாத காரணத்தினால் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக இருக்கும் டெல்டாவில் நடப்பு ஆண்டில் நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக திருச்சி மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    திருச்சி மொத்த மார்க்கெட்டில் 26 கிலோ எடை கொண்ட மணச்சநல்லூர் பொன்னி அரிசி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரூ. 1290க்கு விற்கப்பட்டது. இன்றைக்கு அதன் விலை ரூ. 1500 ஆக உயர்ந்துள்ளது.

    சில்லறை மார்க்கெட்டில் ஒரு கிலோ மணச்சநல்லூர் பொன்னி ரூ. 64 வரை விற்கப்படுகிறது. அதேபோன்று அட்சயா பொன்னியின் விலை ரூ.74 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று இட்லி அரிசி உள்பட அனைத்து வகையான அரிசியின் விலையும் உயர்ந்துள்ளது.

    திருச்சி மணச்சநல்லூர் அரியமங்கலம், மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. அதன் காரணமாக திருச்சியில் மணச்சநல்லூர் பொன்னி ரூ. 1500 க்கு கிடைக்கிறது. இதுவே சென்னை கோவை போன்ற பெருநகரங்களில் ரூ.1600 முதல், ரூ. 1700 வரை விற்கப்படுகிறது.

    இந்த விலை ஏற்றத்தின் காரணமாக பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை ஏற்றத்திற்கு டெல்டா உற்பத்தி பாதிப்பு மட்டுமல்லாமல் கர்நாடகாவில் இருந்து வரும் நெல் வரத்து சரிந்ததும் காரணமாக உள்ளது.

    இது தொடர்பாக திருச்சி உறையூர் கற்பகம் அரிசி மண்டி உரிமையாளர் குணசேகரன் கூறும்போது, திருச்சியில் உள்ள அரிசி ஆலைகளுக்கு முன்பெல்லாம் பெங்களூரில் இருந்து அதிக அளவு நெல் வரும்.

    தற்போது இலவச அரிசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அங்கிருந்து வரும் நெல் வரத்து சரிந்துவிட்டது. காவிரி டெல்டாவிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் அரிசி உற்பத்தி குறைந்து விலை உயர்ந்து விட்டது என்றார்.

    மேலும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு கூறும் போது, பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 25 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்படும்.

    காவிரியில் தண்ணீர் வராத காரணத்தினால் நடப்பு ஆண்டில் சம்பா சாகுபடி 10 லட்சம் ஏக்கராக சுருங்கிவிட்டது.

    அதிலும் திருச்சி, கரூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் 5 சதவீதம் கூட சம்பா சாகுபடி செய்யப்படவில்லை. 1890க்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் காவிரியில் 50,000 ஏக்கரில் மட்டுமே சம்பா சாகுபடி செய்யப்பட்டது.

    அதன் பின்னர் 1924 களில் 5 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிரிடப்பட்டது.

    ஆனால் இன்றைக்கு கர்நாடகா காவிரியின் குறுக்கே 5 அணைகள், 30 ஆயிரம் ஏரிகள் அமைத்ததால் 30 லட்சம் ஏக்கரில் அங்கு சம்பா பயிரிட்டுள்ளார்கள். காவிரி டெல்டாவில் முன்பெல்லாம் முப்போக சாகுபடி இருக்கும்.

    இப்போது ஒரு போகத்திற்கு விவசாயிகள் தள்ளாடுகின்றனர். ஏற்கனவே குறுவை சாகுபடி பொய்த்துப் போன நிலையில் சம்பா சாகுபடியும் சுருங்கிவிட்டதால் அரிசி விலை உயர்ந்துள்ளது என்றார்.

    இதற்கிடையே அரிசி ஆலை அதிபர் ஒருவர் கூறுகையில், நடப்பு ஆண்டில் அதிகளவு சாப்பாட்டு அரிசியான சன்ன ரக நெல்களை அரிசி உற்பத்தி ஆலைகள் விவசாயிகளுக்கு அதிக விலை கொடுத்து வாங்கி இருப்பு வைத்துள்ளனர்.

    இதனால் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் சரிந்துள்ளது.

    இந்த கால கட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் அரசின் கையிருப்பில் பல லட்சம் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டிருக்கும்.

    ஆனால் இப்போது 50 ஆயிரம் டன் நெல் இருப்பு இருக்குமா என்பது கூட சந்தேகமாக உள்ளது. ஆகவே வருங்காலத்தில் ரேசன் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விலை குறைவாக இருக்கும் காரணத்தினாலும், நிபந்தனைகளில் தளர்வுகள் கொண்டு வந்த காரணத்தாலும் தனியார் அரிசி ஆலை அதிபர்கள் நெல்லை பதுக்கி உள்ளனர். ஆகவே வருங்காலங்களில் அரிசி விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்றார்.

    • காவிரி டெல்டா பகுதிகளில் இருந்து நெல் கொண்டுவரப்படுகிறது.
    • கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மேலும் 20 சதவீதம் அதிகரித்துள்ளதால் அரிசி விலை உயர்ந்துள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் சாகுபடி மையங்களில் இருந்து நெல் வரத்து குறைந்துள்ளதால் அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    திருச்சி மணச்சநல்லூர் அரியமங்கலம், காட்டூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான அரிசி ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளுக்கு திருச்சி மட்டுமல்லாமல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் இருந்து நெல் கொண்டுவரப்படுகிறது.

    இது தவிர அந்த ஆலைகள் கர்நாடகாவிலிருந்து நெல்லைப் பெறுகின்றன. பல்வேறு இடங்களில் அரிசி கொள்முதல் செய்யும் வியாபாரிகள் உள்ளனர். தற்போது டெல்டா பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நெல் வரத்து குறைந்துள்ள காரணத்தால் திருச்சி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் அரிசி விலை உயர்ந்துள்ளது.

    கடந்த ஆண்டு ஜனவரியில் கர்நாடக பொன்னி என்று பிரபலமாக அழைக்கடும் 1 கிலோ ஆர்.என். ஆர். அரிசி ரூ. 46-க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது சில்லறை சந்தைகளில் ஒரு கிலோவுக்கு ரூ. 55 முதல் 60 வரை நிர்ணயிக்கப்பட்டது. இதேபோல், மணச்சநல்லூர் பொன்னியின் விலையும் (ஒரு வருட ரகம்) கிலோ ₹65 ஆக உள்ளது.

    மொத்த சந்தையில் பொதுவான அரிசி வகைகளின் விலை (அளவில் பெரியது) கிலோ 46-ல் இருந்து 51 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களில் உள்ள சாகுபடி மையங்களில் இருந்து வரத்து குறைவாக உள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த சில மாதங்களாக டெல்டா பகுதியில் இருந்து வரத்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், கர்நாடகாவில் இருந்து வரத்து குறைந்துள்ளதால், தேவைக்கும் சப்ளைக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுள்ளது.

    விவசாயிகள் பெரும்பாலும் 2-வது போகம் நெல் சாகுபடிக்கு செல்லவில்லை. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சி முதல் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை வரையிலான பெரும்பாலான விவசாயிகள் சம்பா பருவ சாகு படியை மேற்கொள்ளாததால் டெல்டா மாவட்டங்களில் இருந்து நெல் வரத்து மேலும் சரியும் என கூறப்படுகிறது.

    இது பற்றி ஆலை உரிமையாளர் ஒருவர் கூறும்போது, எங்களால் எங்கள் ஆலைகளை அதன் திறனுக்கு ஏற்ப இயக்க முடியவில்லை. நெல் பற்றாக்குறை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மேலும் 20 சதவீதம் அதிகரித்துள்ளதால் அரிசி விலை உயர்ந்துள்ளது. இது அரிதான நிகழ்வு.

    வரும் ஆண்டில் அடுத்த சம்பா பருவம் வரை பொன்னி போன்ற பிரபலமான ரகங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் இருந்து வரும் சப்ளையை இப்பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் மற்றும் வணிகர்கள் சார்ந்திருக்க வேண்டும் என்றார்.

    இதனால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • அரிசி விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • டிசம்பர் மாதம் வரை விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் அரிசி விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. சாப்பாடு அரிசி, இட்லி அரிசி, பச்சரிசி உள்ளிட்ட அனைத்து வகையான அரிசி விலையும் உயர்ந்தது. கடந்த 2 வாரமாக அரிசி விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் மாவட்ட பகுதியில் அனைத்து அரிசி வகையும் 25 கிலோ மூட்டை ரூ.200 வரை அதிகரித்துள்ளது.

    ரூ.900 ஆக இருந்த சாப்பாடு அரிசி கடந்த 10 நாட்களில் 50 ரூபாய் வீதம் படிப்படியாக அதிகரித்து தற்போது ரூ.1100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ரூ.1200 ஆக இருந்த உயர்ரக சாப்பாடு அரிசி மூட்டை ரூ.1400 ஆக அதிகரித்தது. ரூ.1400 ஆக இருந்த மூட்டை ரூ.1550 வரை உயர்ந்தது.

    பச்சரிசி 26 கிலோ மூட்டை ரூ.1350ஆக இருந்தது. கிலோ 56க்கு விற்கப்பட்டது. தற்போது மூட்டை ரூ.1450 ஆக கூடியுள்ளது. இதே போல் இட்லி அரிசி விலையும் அதிகரித்தது. அரிசி விலை உயர்வுக்கு நெல்வரத்து பற்றாக்குறையானதே காரணம் என்று அரிசி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரக்கூடிய நெல் வரத்து குறைந்ததால் அரிசி இருப்பு குறைந்தது. இதுவே விலை உயர காரணமாக அமைந்து உள்ளது.

    இதுகுறித்து முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த அரிசி வியாபாரி ஆனந்த ராஜ் என்பவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விளைச்சல் ஆகும் நெல் அந்த பகுதிக்கே போதுமானதாக உள்ளது. ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரும் நெல்லை நம்பி தான் தமிழக மக்களின் தேவை சமாளிக்கப்பட்டது. தற்போது அங்கிருந்து நெல் வரத்து வருவது குறைந்து உள்ளது. 100 லாரி நெல் வர வேண்டிய இடத்தில் 10 லாரி வருகிறது. இதனால் தான் அரிசி விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    ஆரணியிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. டிசம்பர் மாதம் வரை விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாதம் புது நெல் வந்தபிறகு தான் விலை குறையலாம். ஆனாலும் பழைய அரிசிக்கு தான் தேவை அதிகரிக்கும். எனவே ஜனவரி மாதம் வரை அரிசி விலை உயர்வாக இருக்கும்.

    அரிசி விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரிசி கிலோவுக்கு ரூ.7 வரை உயர்ந்து உள்ளது. மழைக்காலம் தொடங்கி இருப்பதால் அரிசி விலை குறைய வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 2 மாதத்திற்கு முன்பு வரை ரூ.1,100, ரூ.1,200-க்கு விற்கப்பட்ட சாப்பாட்டு அரிசி வகைகள் படிப்படியாக விலை உயர்ந்து இப்போது ரூ.1400 வரை வந்து விட்டது.
    • உயர் தரமான இட்லி அரிசி மூட்டை ரூ.900-ல் இருந்து ரூ.1,050-ஆக கூடியுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உணவு பொருட்களின் விலை கடந்த 2 மாதமாக கூடி வருகிறது. அரிசி முதல் மளிகைப் பொருட்கள் வரை விலை உயர்ந்துள்ளது.

    சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் விலை அதிகரித்துள்ளன. பொருட்களை கொண்டு வரக்கூடிய போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

    வரலாறு காணாத வகையில் காய்கறி விலைகளும் அதிகரித்தன. விளைச்சல் குறைவு, மழை காரணமாக எல்லா காய்கறிகளும் விலை உயர்வாக உள்ளன.

    இஞ்சி கிலோ ரூ.300-க்கு விற்கப்படுகிறது. தக்காளி இன்னும் ரூ.100-க்கு மேல் விற்கப்படுகிறது.

    இந்த நிலையில் அரிசி விலை மீண்டும் உயர்ந்து உள்ளது. இதுவரையில் பாசுமதி அரிசி விலை உயராமல் இருந்தன. கடந்த வாரம் அதன் விலையும் மூட்டைக்கு ரூ.400 கூடியுள்ளது. ரூ.3 ஆயிரத்து 500-ஆக இருந்த பாசுமதி மூட்டை ரூ.3 ஆயிரத்து 900-ஆக உயர்ந்து உள்ளது.

    இட்லி அரிசியும் மூட்டைக்கு ரூ.100 உயர்ந்தது. ரூ.850-க்கு விற்கப்பட்ட 26 கிலோ மூட்டை ரூ.950-ஆக அதிகரித்தது.

    உயர் தரமான இட்லி அரிசி மூட்டை ரூ.900-ல் இருந்து ரூ.1,050-ஆக கூடியுள்ளது.

    சாப்பாட்டு அரிசி விலை மூட்டைக்கு ரூ.100 அதிகரித்துள்ளது. 26 கிலோ எடை கொண்ட சாப்பாட்டு அரிசி விலை கடந்த வாரம் வரை ரூ.1,250-க்கு விற்கப்பட்டது. அவற்றின் விலை தற்போது ரூ.1,350 ஆக உயர்ந்தது.

    சில அரிசி ரகங்கள் ரூ.1,400-ல் இருந்து ரூ.1,500 ஆகவும் கூடியது. மூட்டைக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை உயர்ந்து உள்ளது.

    கடந்த 2 மாதத்திற்கு முன்பு வரை ரூ.1,100, ரூ.1,200-க்கு விற்கப்பட்ட சாப்பாட்டு அரிசி வகைகள் படிப்படியாக விலை உயர்ந்து இப்போது ரூ.1400 வரை வந்து விட்டது.

    இதுகுறித்து கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் பொன்ராஜ் கூறியதாவது:-

    எங்கள் கடையில் மொத்தமாகவும் சில்லரையாகவும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 மாதமாக அரிசி விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது. சாப்பாடு, இட்லி அரிசி விலை உயர்ந்து வந்த நிலையில் இப்போது பாசுமதி அரிசி விலையும் கூடிவிட்டது. கிலோவுக்கு 10 ரூபாய் அதிகரித்துள்ளது. மாதந்தோறும் மளிகைப் பொருட்கள் வாங்கக் கூடிய வாடிக்கையாளர்கள் விலை உயர்வால் கஷ்டப்படுகிறார்கள்.

    இதனால் மூட்டையாக வாங்கக் கூடியவர்கள் சில்லரையில் 5 கிலோ, 10 கிலோ பாக்கெட்டாக வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது.

    சிவாஜி பிராண்ட் சாப்பாட்டு அரிசி (26 கிலோ) ரூ.1,500-ல் இருந்து ரூ.1,600-ஆகவும், கிருஷ்ணா ரூ.1200-ல் இருந்து ரூ.1,300-ஆகவும் கூடியுள்ளது.

    அரிசி விலை உயர்வுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் மொத்த வியாபாரிகள் விலையை உயர்த்தும் போது நாங்களும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆரணி மற்றும் களம்பூர் சுற்று வட்டார பகுதியில் சுமார் 80 அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன.
    • ஆரணி பகுதியில் மட்டும் 5 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகின்றன.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, களம்பூர் என்றாலே அரிசிக்கு பெயரெடுத்த ஊராக விளங்கி வருகின்றன. ஆரணி மற்றும் களம்பூர் சுற்று வட்டார பகுதியில் சுமார் 80 அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன.

    இங்கு பொன்னி, பிடிடி, சோனா டீலக்ஸ், ஐ.ஆர் 50, ஐ.ஆர் 20 உள்ளிட்ட பல ரக அரிசிகள் உற்பத்தி செய்யபடுகின்றன. நாள் ஓன்றுக்கு ஆரணி பகுதியில் மட்டும் 5 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இதில் 50 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், கோவை உள்ளிட நகரங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடக போன்ற வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    தமிழகத்தில் இருந்து மட்டும் 20 சதவீத அரிசி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் 5 சதவீதம் ஆரணியில் இருந்து ஏற்றுமதியாகிறது.

    சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஆரணி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    தற்போது உள்நாட்டு நெல் அரிசி உற்பத்தி குறைவாக உள்ளது. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை குறைவானதாலும் அரிசி உற்பத்தி மிகவும் பாதிக்கபட்டுள்ளதால் வெளிநாட்டு அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்தது.

    ஏற்றுமதி தடை செய்யபட்டதால் அரிசி ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசிகள் ஆலைகளில் தேக்கமடைந்துள்ளன.

    இதுகுறித்து ஆரணி அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறியதாவது:-

    ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆரணி, களம்பூரில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய அரிசி மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.

    கடந்த ஒருவாரத்தில் 5சதவீதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் தொழில் முழுமையாக பாதிக்கும். அரிசி மூட்டைகள் தேங்கியுள்ளதால் விலை குறைய வாய்ப்புள்ளது. மற்றும் சீராக இருக்கும்.

    அரிசி ஆலைகளுக்கு மின் கட்டணம் மானியம் வழங்க வேண்டும் அரசு விதித்த ஜி.எஸ்.டி 5 சதவீதத்தை முற்றிலும் அகற்றி மானியம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    இதுகுறித்து ஆரணி பகுதி விவசாயிகள் கூறுகையில்:-

    அரிசி ஆலைகள் தொடர்ந்து உற்பத்தியை குறைத்தால் நெல் மூட்டைகள் தேங்கும். நெல்கொள்முதல் நிலையங்கள் திறப்பதில் தாமதம் ஏற்படும்.

    ஏற்றுமதிக்கு தடைநீங்கும் வரை நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதில் பெரும் பிரச்சனை ஏற்படும்.

    மேலும் நெல் விலையும் குறையும், விவசாயம் சம்பந்தபட்ட மூல பொருட்களான பொட்டாசியம், யூரியா உள்ளிட்ட பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வு ஏற்பட்டுள்ளது.

    இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். நாடு ஒருபோதும் அரிசி நெருக்கடியை சந்திக்காது. விவசாயிகள் நெருக்கடியை சந்திக்க வேண்டும். அரிசி ஏற்றுமதிக்கான தடையை நீக்க வேண்டும் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு தற்காலிகமாக தடை விதித்து இருப்பதால் அடுத்த மாதம் முதல் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
    • விலை உயர்வுக்கு அரிசி உற்பத்தி குறைந்தது மற்றும் வடமாநிலங்களில் பெய்து வரும் மழை காரணம் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மளிகை பொருட்கள், காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    சமையலுக்கு பயன்படுத்தப்படக்கூடிய பருப்பு வகைகள், எண்ணெய் உள்ளிட்ட எல்லா பொருட்களும் விலை உயர்ந்து விட்டதால் சாமான்ய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அன்றாடம் பயன்படுத்தும் தக்காளி, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விலை இன்னும் குறையவில்லை.

    இதனால் மக்கள் காய்கறிகள் பயன்பாட்டை குறைத்து வருகிறார்கள். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மளிகை பொருட்கள் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறினாலும் விலை உயர்த்தப்பட்ட பின்னர் எந்த பொருட்களின் விலையையும் மீண்டும் வியாபாரிகள் குறைப்பது இல்லை.

    தற்போது அரிசி விலையும் கடுமையாக கூடியுள்ளது. நமது அன்றாட உணவில் அரிசியின் பங்கு இன்றியமையாதது. காலை உணவாக இட்லி, தோசையும் மதியம் சாப்பாடு வகையிலும் அரிசியை அதிகளவில் பயன்படுத்துகிறோம்.

    கடந்த மாதத்தில் இருந்தே அரிசி விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த மாதத்தில் மேலும் உயர்ந்து 25 கிலோ சாப்பாட்டு அரிசி மூட்டை ரூ.200 வரை கூடியுள்ளது. சில்லரையில் கிலோவிற்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது.

    தரமான சாப்பாட்டு அரிசி வகைகள் 25 கிலோ மூட்டை கடந்த மாதத்தில் ரூ.1,400 ஆக இருந்தது. அவை தற்போது ரூ.1,600 ஆகவும், 2-வது ரக சாப்பாட்டு அரிசி ரூ.1,200-ல் இருந்து ரூ.1,400 ஆகவும் அதிகரித்துள்ளது. ஒரு மாதத்தில் மூட்டைக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை கூடியுள்ளது.

    இதே போல இட்லி அரிசியும் 25 கிலோ மூட்டை ரூ.850-ல் இருந்து ரூ.950 ஆக உயர்ந்துள்ளது. அரிசி மொத்த வியாபாரிகள் கூறும்போது, "கடந்த மாதத்தில் இருந்து விலை உயரத் தொடங்கியது. இந்த மாதத்தில் மட்டும் 20 கிலோ மூட்டைக்கு ரூ.80 கூடியுள்ளது. ரூ.820-க்கு விற்கப்பட்ட இட்லி அரிசி தற்போது ரூ.900-க்கு விற்கப்படுகிறது.

    இதே போல சாப்பாட்டு அரிசி (சிவாஜி, 5 ஸ்டார்) போன்றவை ரூ.1,400-ல் இருந்து ரூ.1,480 ஆக அதிகரித்துள்ளது. சில்லரையில் ரூ.1,600 ஆக விற்கப்படுகிறது.

    இந்த விலை உயர்வுக்கு அரிசி உற்பத்தி குறைந்தது மற்றும் வட மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணம் என்று தெரிவிக்கின்றனர்.

    எல்லா ரக அரிசி விலையும் கூடியுள்ளதால் கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது. ஆந்திரா பொன்னி அரிசி கிலோ ரூ.38-ல் இருந்து ரூ.55 ஆக அதிகரித்து உள்ளது. இதே போல் இட்லி அரிசியும் கிலோவுக்கு ரூ.4 வரை உயர்ந்துள்ளது.

    அரிசி விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட வரவு-செலவில் துண்டு விழுந்துள்ளது. அன்றாட கூலி தொழிலாளர்கள், மாதச் சம்பளம் வாங்குவோரின் வருவாயில் மளிகை பொருட்களின் விலை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு தற்காலிகமாக தடை விதித்து இருப்பதால் அடுத்த மாதம் முதல் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாதம் ஒன்றுக்கு தலா 10,000 மெட்ரிக் டன் கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
    • மத்திய அரசின் கையிருப்பில் இருந்து உணவுப் பொருட்களை விடுவிப்பது நிலைமையை எளிதாக்கும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் உணவு மற்றும் பொது விநியோகத்துறை மந்திரி பியூஷ்கோயலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வினால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பண வீக்கத்தைப் பொறுத்த வரையில், 2023 மே மாதத்தில், தானியங்கள் மற்றும் அவற்றின் தயாரிப்புகளுக்கு 12.65 சதவீதம் ஆகவும், பருப்பு வகைகள் மற்றும் அவற்றின் தயாரிப்புகளுக்கு 6.56 சதவீதம் ஆகவும் இருந்தது. சமீபத்தில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு இந்த நிலைமையை மேலும் மோசமாக்க வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில், கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் உழவர் சந்தைகள் மூலம் காய்கறிகள், உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை வெளிச்சந்தை விலையை விட குறைவான விலையில் விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு குறுகிய மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவற்றை மானிய விலையில் வழங்கி வருகிறது.

    அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பயன்பெறத் தகுதியுடைய பயனாளிகள் மட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் அரிசி மற்றும் கோதுமையை தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்கி வருகிறது. ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு, மசூர் பருப்பு, கோதுமை ஆகியவற்றின் இருப்பு விவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

    இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள போதிலும், நாடு தழுவிய அளவில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தின் காரணமாக, குறிப்பிட்ட சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து உள்ளது.

    இதுதொடர்பாக 10.7.2023 அன்று விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தி, தமிழ்நாட்டில் கூட்டுறவு மற்றும் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கும் பல்பொருள் அங்காடிகள், நியாயவிலைக் கடைகள் மூலம் காய்கறிகள், மளிகைப் பொருட்களை விற்பனை செய்திட உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    மேற்கூறிய சில உணவுப் பொருட்களை உள்நாட்டு அல்லது வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, அந்த நடவடிக்கை தற்போது செயல்பாட்டில் உள்ளது. உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, இந்தப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விரைவு படுத்த வேண்டும்.

    ஒன்றிய அரசின் கையிருப்பில் இருந்து மேற்காணும் உணவுப் பொருட்களை விடுவிப்பது நிலைமையை எளிதாக்கும் என்பதால், மாதம் ஒன்றுக்கு தலா 10,000 மெட்ரிக் டன் கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    இந்தப் பொருட்கள் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு விலை கட்டுப் படுத்தப்படும். இந்த விஷயத்தில் ஒன்றிய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை மந்திரி உடனடியாகத் தலையிட வேண்டும்.

    இவ்வாறு கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டு உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் மளிகை பொருட்கள் விலை இன்னும் குறையவில்லை.
    • வட மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக காய்கறி-மளிகை பொருட்கள் போதிய அளவு வராததால் விலை உயர்ந்து விட்டதாக கடைக்காரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.

    காய்கறிகள் விலை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் மளிகை பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்து விட்டது.

    சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தக்காளி கிலோ ரூ.130-க்கும், சின்ன வெங்காயம் ரூ.220-க்கும் விலை உயர்ந்து விட்டது.

    விலை உயர்வை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அத்தியாவசிய பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அது மட்டுமின்றி உழவர் சந்தைகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை அதிகம் கொள்முதல் செய்து விற்க ஏற்பாடு செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    சென்னையில் பரீட்சார்த்தமாக கூட்டுறவு கடைகள் உள்ளிட்ட 87 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 302 ரேஷன் கடைகளில் தக்காளி இப்போது விற்கப்பட்டு வருகிறது.

    ஆனாலும் மற்ற காய்கறிகளான கேரட், வெண்டைக்காய், பீன்ஸ், அவரை, கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலையும் தாறுமாறாக விலை உயர்ந்துள்ளது.

    அது மட்டுமின்றி மளிகை பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால் சாதாரண ஏழை-எளிய நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    அரிசி கிலோவுக்கு 10 ரூபாய் வரை அதிகரித்து விட்டது. இஞ்சி கிலோ ரூ.350-க்கு உயர்ந்து விட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை 20 சதவீதம் அளவுக்கு உயர்ந்து உள்ளது.

    விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் மளிகை பொருட்கள் விலை இன்னும் குறையவில்லை. வட மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக காய்கறி-மளிகை பொருட்கள் போதிய அளவு வராததால் விலை உயர்ந்து விட்டதாக கடைக்காரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க மாநிலத் தலைவர் மயிலை மாரித்தங்கம் கூறியதாவது:-

    வெளிநாட்டில் இருந்து பருப்பு வகைகள் வருவது குறைந்து விட்டதால் துவரம் பருப்பு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    இதற்கு முன்பு 1 கிலோ துவரம் பருப்பு ரூ.120-க்கு கிடைத்தது. ஆனால் இப்போது 60 ரூபாய் கூடி ரூ.180-க்கு விற்கப்படுகிறது. சீரகம் 1 கிலோ ரூ.400-க்கு கிடைத்து வந்த நிலையில் இப்போது இரு மடங்கு விலை உயர்ந்து 1 கிலோ சீரகம் ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    நமது உள்நாட்டில் கிடைக்க கூடிய மற்ற மளிகைப் பொருட்கள் மற்றும் அரிசி விலையும் இப்போது உயர்ந்து விட்டது. இஞ்சி 1 கிலோ ரூ.150-க்கு விற்பனையாகி வந்த நிலையில் இப்போது ரூ.350-க்கு விலை உயர்ந்து விட்டது.

    உளுந்து ரூ.110-க்கு கிடைத்தது. இப்போது கிலோ ரூ.154-க்கு விற்கப்படுகிறது. மிளகு 1 கிலோ ரூ.550-ல் இருந்து ரூ.700-க்கு விலை உயர்ந்து விட்டது. சோம்பு கிலோ ரூ.400-ல் இருந்து ரூ.500 ஆகவும், கடுகு ரூ. 90-ல் இருந்து ரூ.120 ஆகவும் வெந்தயம் ரூ.90-ல் இருந்து ரூ.120 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

    பூண்டு ரூ.150-ல் இருந்து ரூ.180-க்கும், கடலை பருப்பு 1 கிலோ ரூ.70-ல் இருந்து ரூ.90-க்கும் விலை உயர்ந்துள்ளது. உதயம் கடலை பருப்பு 1 கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது.

    பாசிப்பருப்பு கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.154 ஆகவும், தனியா ரூ.120-ல் இருந்து ரூ.140-க்கும், பெருங்காயம் 1 கிலோ ரூ. 700-ல் இருந்து ரூ.800 ஆகவும் விலை உயர்ந்து விட்டது.

    அரிசியை எடுத்துக் கொண்டால் கிலோவுக்கு 10 ரூபாய் வரை உயர்ந்து விட்டது. சிவாஜி பிராண்ட் பொன்னி, புழுங்கல் அரிசி 25 கிலோ பாக்கெட் ரூ.1,600-க்கு விலை உயர்ந்து விட்டது. பொன்னி பச்சரிசி 25 கிலோ ரூ.1,500-க்கு விற்கப்படுகிறது.

    இதயம் நல்ல எண்ணெய் 1 லிட்டர் ரூ.400-ல் இருந்து ரூ.440-க்கு உயர்ந்து விட்டது. கடலை எண்ணெய் ரூ.180-ல் இருந்து ரூ.195 ஆகி விட்டது.

    விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள முயற்சிகள் போதாது. இன்னும் அதிகம் கவனம் செலுத்தினால்தான் அனைத்து பொருட்களின் விலையையும் கட்டுக்குள் கொண்டு வர முடியம்.

    இவ்வாறு மாரித்தங்கம் தெரிவித்தார்.

    • கேரளாவில் அரிசியின் விலை பொது சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளது.
    • அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    தமிழகத்தில் தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மற்ற காய்கறிகளின் விலையும் வழக்கத்தை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. தமிழகத்தை போன்று மற்ற மாநிலங்களிலும் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் கேரளாவில் அரிசியின் விலை பொது சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.10 வரை அதிகரித்துள்ளது. சுரேகா அரிசி ரூ.38-ல் இருந்து ரூ.48 ஆகவும், மட்டாவடி அரிசி கிலோ ரூ.46-ல் இருந்து ரூ.54 ஆகவும், குருவா அரிசி ரூ.38-ல் இருந்து ரூ.40 ஆகவும், சோனாமசூரி ரூ.45-ல் இருந்து 50 ஆகவும், உயர்ந்துள்ளது.

    இதேபோல் மற்ற ரக அரிசிகளின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. ஜெயா ரக அரிசி ஆந்திரா அரசு மூலம் சப்ளைக்கு வந்ததால் அதன் விலை மட்டும் உயரவில்லை. அந்த அரிசி மானிய விலையில் கிலோ ரூ.25-க்கும், மானியம் இல்லாமல் ரூ.38-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    அரிசிகளின் விலை உயர்வு தொடர்ந்து இதே நிலையில் நீடித்தால் ஓணம் பண்டிகையின்போது ஒரு கிலோ ரூ.60-ஐ தாண்டுமென கூறப்படுகிறது. இதனால் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×