search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிசி தேக்கம்"

    • ஆரணி மற்றும் களம்பூர் சுற்று வட்டார பகுதியில் சுமார் 80 அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன.
    • ஆரணி பகுதியில் மட்டும் 5 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகின்றன.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, களம்பூர் என்றாலே அரிசிக்கு பெயரெடுத்த ஊராக விளங்கி வருகின்றன. ஆரணி மற்றும் களம்பூர் சுற்று வட்டார பகுதியில் சுமார் 80 அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன.

    இங்கு பொன்னி, பிடிடி, சோனா டீலக்ஸ், ஐ.ஆர் 50, ஐ.ஆர் 20 உள்ளிட்ட பல ரக அரிசிகள் உற்பத்தி செய்யபடுகின்றன. நாள் ஓன்றுக்கு ஆரணி பகுதியில் மட்டும் 5 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இதில் 50 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், கோவை உள்ளிட நகரங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடக போன்ற வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    தமிழகத்தில் இருந்து மட்டும் 20 சதவீத அரிசி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் 5 சதவீதம் ஆரணியில் இருந்து ஏற்றுமதியாகிறது.

    சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஆரணி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    தற்போது உள்நாட்டு நெல் அரிசி உற்பத்தி குறைவாக உள்ளது. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை குறைவானதாலும் அரிசி உற்பத்தி மிகவும் பாதிக்கபட்டுள்ளதால் வெளிநாட்டு அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்தது.

    ஏற்றுமதி தடை செய்யபட்டதால் அரிசி ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசிகள் ஆலைகளில் தேக்கமடைந்துள்ளன.

    இதுகுறித்து ஆரணி அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறியதாவது:-

    ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆரணி, களம்பூரில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய அரிசி மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.

    கடந்த ஒருவாரத்தில் 5சதவீதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் தொழில் முழுமையாக பாதிக்கும். அரிசி மூட்டைகள் தேங்கியுள்ளதால் விலை குறைய வாய்ப்புள்ளது. மற்றும் சீராக இருக்கும்.

    அரிசி ஆலைகளுக்கு மின் கட்டணம் மானியம் வழங்க வேண்டும் அரசு விதித்த ஜி.எஸ்.டி 5 சதவீதத்தை முற்றிலும் அகற்றி மானியம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    இதுகுறித்து ஆரணி பகுதி விவசாயிகள் கூறுகையில்:-

    அரிசி ஆலைகள் தொடர்ந்து உற்பத்தியை குறைத்தால் நெல் மூட்டைகள் தேங்கும். நெல்கொள்முதல் நிலையங்கள் திறப்பதில் தாமதம் ஏற்படும்.

    ஏற்றுமதிக்கு தடைநீங்கும் வரை நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதில் பெரும் பிரச்சனை ஏற்படும்.

    மேலும் நெல் விலையும் குறையும், விவசாயம் சம்பந்தபட்ட மூல பொருட்களான பொட்டாசியம், யூரியா உள்ளிட்ட பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வு ஏற்பட்டுள்ளது.

    இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். நாடு ஒருபோதும் அரிசி நெருக்கடியை சந்திக்காது. விவசாயிகள் நெருக்கடியை சந்திக்க வேண்டும். அரிசி ஏற்றுமதிக்கான தடையை நீக்க வேண்டும் என்றனர்.

    • விலை குறைய வாய்ப்பு
    • அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி களம்பூர் என்றாலே அரிசிக்கு பெயரெடுத்த ஊராக விளங்கி வருகின்றன. ஆரணி மற்றும் களம்பூர் சுற்று வட்டார பகுதியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன.

    மேலும் ஆரணி மற்றும் களம்பூர் கஸ்தம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பொன்னி பிடிடி சோனா டீலக்ஸ் ஐ.ஆர் 50, ஐ.ஆர் 20 உள்ளிட்ட பல ரகங்கள் அரிசிகள் உற்பத்தி செய்யபடுகின்றன. நாள் ஓன்றுக்கு ஆரணி பகுதியில் மட்டும் 5 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகின்றன.

    மேலும் சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், கோவை உள்ளிட நகரங்களிலும் ஆந்திரா, கேரளா, கர்நாடக போன்ற வெளி மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஆரணியிலிருந்து தினந்தோறும் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    இதனையடுத்து தற்போது உள்நாட்டு நெல் அரிசி உற்பத்தி குறைவாக உள்ளது. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை குறைவானதாலும் அரிசி உற்பத்தி மிகவும் பாதிக்க பட்டுள்ளதால் வெளிநாட்டு அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்தது.

    ஆரணியிலிருந்து 5 சதவீதம் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.

    தற்போது ஏற்றுமதி தடை செய்யபட்டதால் அரிசி ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசிகள் ஆலைகளில் தேக்கமடைந்துள்ளது.

    இதனால் நேரடிடையாக அரிசி ஆலைகள் உரிமையாளர்கள் பாதிக்க படுவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

    மேலும் விவசாயம் சம்பந்தபட்ட மூல பொரு ட்களான பொட்டாசியம், யூரியா உள்ளிட்ட பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வு ஏற்பட்டுள்ளது.

    தற்போது அரிசி உற்பத்தி அதிகளவில் உள்ளதால் அரிசி விலை குறைய வாய்ப்புள்ளன.

    அரிசி ஆலைகளுக்கு மின் கட்டணம் மானியம் வழங்க வேண்டும் அரசு விதித்த ஜி.எஸ்.டி 5 சதவீதத்தை முற்றிலும் அகற்றி மானியம் வழங்க வேண்டும் என்று அரிசி ஆலை உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×