search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடிப்படை வசதி"

    • அவனியாபுரத்தில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் மறியல் செய்தனர்.
    • அவனியாபுரம் 100-வது வார்டு ஜே.ஜே. நகர் பகுதியில் சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

    மதுரை

    மதுரை மாநகராட்சி அவனியாபுரம் 100-வது வார்டு ஜே.ஜே. நகர் பகுதியில் சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதை செய்து தரக்கோரி பலமுறை அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காததால் விரக்தியடைந்த அந்த பகுதி பொதுமக்கள் இன்று 100-க்கும் மேற்பட்டோர் மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அரசு பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், கவுன்சிலர் முத்துலட்சுமி அய்யனார், மாநகராட்சி பொறியாளர் செல்வ விநாயகம் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை முறையாக நிறைவேற்றுவோம் என்று அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • கிராமத்திற்கு அமைக்கப்பட்ட சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
    • பல ஆண்டுகளாக அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    ஊட்டி.

    ஊட்டியில் கோடை சீசனையொட்டி நடைபெற்ற குதிரை பந்தயம் நிறைவு பெற்று உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது.

    அப்போது வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இவர்களை மகிழ்விக்க கோடை விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கோடை விழாவைெயாட்டி கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, ஊட்டியில் மலர் மற்றும் ரோஜா கண்காட்சி, குன்னூரில் பழக்கண்காட்சி ஆகியவை நடைபெற்றது.

    கோடை சீசனின் முக்கிய நிகழ்வான குதிரை பந்தயம், மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஊட்டியில் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி குதிரை பந்தயம் தொடங்கும். ஆனால் கடந்த ஆண்டு மழை காரணமாக பல்வேறு போட்டிகள் ரத்தானதால், இந்த ஆண்டுக்கான பந்தயம் முன்னதாகவே ஏப்ரல் மாதம் 1-ந் தேதி தொடங்கியது. தி நீல்கிரிஸ் 1000 மற்றும் 2000 கீன்னீஸ் உள்ளிட்ட பந்தயங்கள் மற்றும் முக்கிய பந்தயங்களில் ஒன்றான 'தி நீல்கிரிஸ் டெர்பி ஸ்டேக்ஸ்' கிரேட்-1 குதிரை பந்தயம் நடந்து முடிந்தது.

    இதைத்தொடர்ந்து கடைசி குதிரை பந்தயம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த போட்டியில் குளோரியஸ் கிரேஸ் முதலிடம் பிடித்தது. பின்னர் ஜாக்கி உமேஷ் மற்றும் பயிற்சியாளர் செபஸ்டின் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக திரளான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் கலந்து கொண்டு குதிரை பந்தயத்தை கண்டு ரசித்தனர். மேலும் நேரில் வர முடியாதவர்கள் ஆன்லைன் மூலம் பந்தயத்தை பார்த்தனர். பந்தயம் நிறைவு பெற்றதால் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட குதிரைகள் வாகனங்கள் மூலம் மீண்டும் அங்கேயே கொண்டு செல்லப்படுகிறது.

    • ரெயில்களை பயன்படுத்தும் உடுமலை பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
    • 4 லட்சத்து 20 ஆயிரம் பயணிகள் ஓராண்டில் வந்து சென்றுள்ளனர்.

    உடுமலை :

    திண்டுக்கல் - பாலக்காடு அகல ெரயில்பாதையில் உடுமலை ரெயில் நிலையம் அமைந்துள்ளது.மதுரை கோட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த ரெயில் நிலையம் வாயிலாக ஆண்டுதோறும் ெரயில்வேக்கு வருவாய் அதிகரித்து வருகிறது.தற்போது உடுமலை ரெயில் நிலையத்தில் அமிர்தா எக்ஸ்பிரஸ், சென்னை எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் சிறப்பு ரெயில், கோவை - மதுரை உள்ளிட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இதில் அனைத்து ெரயில்களையும் பயன்படுத்தும் உடுமலை பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

    அவ்வகையில் தெற்கு ரெயில்வே மதுரை ெரயில்வே கோட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ரெயில்வே நிலையங்களில் பெறப்பட்ட ஆண்டு வருவாய் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.அதன்படி 2022 - 23ம் ஆண்டில் உடுமலை ரெயில் நிலையம் வாயிலாக 4 கோடியே 18 லட்சத்து 47 ஆயிரத்து 465 ரூபாய் வருவாய் பெறப்பட்டுள்ளது.இந்த நிலையத்திற்கு 4 லட்சத்து 20 ஆயிரம் பயணிகள் ஓராண்டில் வந்து சென்றுள்ளனர்.

    மதுரை ரெயில்வே கோட்டத்திலுள்ள 50 ெரயில்வே நிலையங்களில் வருவாய் அடிப்படையில் உடுமலைக்கு 23வது இடம் கிடைத்துள்ளது.கடந்த 2019-20ம் நிதியாண்டில் உடுமலை ரெயில் நிலைய வருவாய் 2.75 கோடியாக இருந்தது. வருவாய் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் நிலுவையிலுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றினால் பயணிகளும் பயன்பெறுவார்கள். ரெயில்வே நிர்வாகத்துக்கும் வருவாய் அதிகரிக்கும்.குறிப்பாக ரெயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பிடம், ப்ளாட்பார்ம் மேற்கூரை, உணவக வசதி முக்கிய தேவையாக உள்ளது. மேலும் ராமேஸ்வரம் உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு சிறப்பு ெரயில்கள் இயக்கலாம். சென்னைக்கு செல்லும் ரெயில்கள் நிரம்பி வழிவதால், கூடுதல் பெட்டிகள் இணைத்தல், விடுமுறை நாட்களில் சிறப்பு ெரயில்கள் இயக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில் உடுமலை ரெயில் நிலையத்தில் சரக்குகளை கையாளும் கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும். இதனால், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் உதவியாக இருக்கும்.வருவாயும் கூடுதலாகும். எனவே மதுரை ரெயில்வே கோட்டம் சார்பில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி நீண்ட காலமாக வலியுறுத்தப்படும் ெரயில்களை இயக்க நடப்பாண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • இருக்கைகள் சேதமடைந்தும் இல்லாமலும் உள்ளதால் மணிக்கணக்கில் கால்கடுக்க காத்திருக்க வேண்டியது உள்ளது.
    • குடிநீர் வசதியும் இல்லாததால் விலைக்கு தண்ணீரை வாங்கி குடிக்க வேண்டிய சூழல் உள்ளது.

    உடுமலை :

    உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் நாள்தோறும் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வெளி மாவட்ட பஸ்களும் உடுமலை பஸ் நிலையத்திற்கு வந்து செல்கிறது. இதன் காரணமாக நாள்தோறும் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது.

    இந்த சூழலில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மத்திய பஸ் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தவில்லை.சேதம் அடைந்த இருக்கைகள், காட்சிப் பொருளான குடிநீர் தொட்டி, சுகாதார வளாக வசதி இல்லாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், உடுமலையின் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், வெளிமாவட்ட மக்கள் ஒன்றிணைந்து பிரிந்து செல்லும் இடமாக உடுமலை மத்திய பஸ் நிலையம் உள்ளது.இங்கு பஸ்சுக்காக காத்துக் கொண்டிருக்கும் பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யவில்லை. இருக்கைகள் சேதமடைந்தும் இல்லாமலும் உள்ளதால் மணிக்கணக்கில் கால்கடுக்க காத்திருக்க வேண்டியது உள்ளது. அல்லது தரையில் அமர வேண்டிய சூழல் உள்ளது. குடிநீர் வசதியும் இல்லாததால் விலைக்கு தண்ணீரை வாங்கி குடிக்க வேண்டிய சூழல் உள்ளது. முக்கியமாக அடிப்படை அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான சுகாதார வளாக வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் பெண்கள் ,குழந்தைகள், கர்ப்பிணிகள், இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகி உள்ளது.

    ஆண்களுக்காக கட்டப்பட்ட சிறுநீர் கழிக்கும் பகுதி பராமரிப்பு இல்லாமல் துர்நாற்றம் வீசியும் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது. நாள்தோறும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். பொதுமக்களுக்கு என்ன தேவை என்று அறிந்து அவர்கள் கோரிக்கை வைக்கும் முன்பே நிறைவேற்றித் தர வேண்டியது அவர்களது கடமையாகும். ஆனால் குறைபாடுகள் கண்ணுக்கு தெரிந்தும் கண்டும் காணாமல் செல்வது வேதனை அளிக்கிறது.

    உடுமலை மத்திய பஸ் நிலையம் என்பது சுற்றுப்புற கிராம பொதுமக்களை ஒன்றிணைக்கும் பகுதியாகும். இங்கு ஏற்படுகின்ற சிறு குறைபாடு கூட அனைத்து கிராமங்களிலும் எதிரொலிக்க கூடிய சூழல் உள்ளது. இதனால் அரசுக்கு பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது. எனவே உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருக்கைகள், குடிநீர், சுகாதார வளாக வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றனர். 

    • அடிப்படை வசதிகள் கேட்டு மேயரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
    • பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் குறை தீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித்சிங், மண்டலத் தலைவர் வாசுகி சசிகுமார், உதவி ஆணையர் காளிமுத்தண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்த முகாமில் ஆனையூர், பார்க்டவுன், நாகனாகுளம், அய்யர் பங்களா, திருப் பாலை, கண்ணனேந்தல், கற்பக நகர், கோமதிபுரம், ஆத்திக்குளம் உள்பட கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    அவர்கள் தங்கள் பகுதிகளில் சாலை வசதி வேண்டியும், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதிமற்றும் வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய வேண்டி கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனர்.

    அதனை பெற்றுக்கொண்ட மேயர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து நேரில் மனுக்கள் குறித்து விசாரணை செய்து உடன டியாக நடவடிக்கை எடுக் கும்படி உத்தரவிட்டார்.

    மேலும் இந்த முகாமில் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் பலர் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மனு அளித்தனர்.

    • தோவாளை அரசு உயர்நிலை பள்ளி வகுப்பறையில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கலெக்டரிடம் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மனு

    நாகர்கோவில்:

    தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித் தார். அந்த மனுவில் கூறி யிருப்பதாவது:-

    குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அடுத்த பால்குளத்தில் வீட்டு வசதி வாரியத்தால் கட்டி கொடுக்கப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் பல்வேறு பகுதி யில் இருந்து இங்கு குடிய மர்த்தப்பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு தேவை யான அடிப்படை வசதி இல்லை. குடிநீர் இல்லாமல் இவர்கள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும், ரேசன் பொருட்கள் வாங்குவதில் இவர்களுக்கு அதிக சிரமம் உள்ளது. அதே போல் இங்கு குடியிருப்போரின் குழந்தைகள் அங்கன்வாடி பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த பகுதியில் நிரந்தர ரேசன் கடை மற்றும், அங்கன்வாடி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    அதேபோல, பால்குளம் பகுதியில் அரசு கலை கல்லுாரி செயல்பட்டு வரு கிறது. இந்த கல்லுாரிக்கு என்று மைதானம் இல்லை. மேலும், இருக்கும் இடத்தில் செடி கொடிகள் வளர்ந்து புல் மண்டி காணப்படுகிறது. மேலும், இந்த கல்லுாரியில் கம்ப்யூட்டர் படிப்பு பி.சி.ஏ. உள்ளது. சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் உள்ளனர். எனினும், இவர்கள் படிப்பிற்காக இங்கு ஒரு கணினி கூட கிடையாது. எனவே, புதிய கணினிகள் கல்லூரிக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதேபோல, கல்லுாரி யில் அஞ்சுகிராமம் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராள மானோர் படிக்கின்ற னர். ஆனால் கல்லுாரிக்கு உரிய நேரத்தில் அரசு பஸ் வசதியில்லை. காலை 10 மணிக்கு வகுப்பு கள் தொடங்குகிறது. ஆனால் 10.15 மணிக்கு தான் பஸ் வருகிறது. மாலை 3.30-க்கு கல்லூரி முடிந்து விடும் ஆனால் 4 மணிக்கு பிறகுதான் பேருந்து உள்ளது. எனவே, கல்லுாரி மாணவ, மாணவிகளின் நலன் கருதி உரிய நேரத்தில் பேருந்து இயக்க வேண்டும்.

    மேலும், மயிலாடி கூட்டுறவு வங்கியில் கடன் பெற்ற சுய உதவி குழு கடன் தள்ளுபடியில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் இங்குள்ள குறிப்பிட்ட குழுவை சேர்ந்தவர்களிடம் வட்டியுடன் கடனை திருப்பி செலுத்துமாறு நிர்பந்திப்பதாக தெரிகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதேபோல, தமிழ்நாடு அரசால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப் படுகின்ற அனைத்து பாடப் புத்தகங்களும் தோவாளை அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர்கள் கல்வி பயில் கின்ற வகுப்பறையில் வைக் கப்பட்டுள்ளது. இதனால், மாணவ, மாணவிகள் வளா கத்தில் உள்ள மரத்தடி யில் படிக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த புத்தகங்களை வேறு இடங்களுக்கு மாற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இது தொடர்பான அனைத்து மனுக்களையும் பெற்று கொண்ட கலெக்டர் அரவிந்த் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

    இந்த நிகழ்வில் தோவாளை யூனியன் சேர்மன் சாந்தினி பகவதியப்பன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் ஜெசீம், அஞ்சு கிராமம் பேரூர் செயலாளர் ராஜபாண்டி, மயிலாடி பேரூர் செயலாளர் மனோ கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    • வளர்ச்சிக்கான பணிகள் குறித்தும் விவாதங்கள் நடந்தது

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மாதாந்திர கூட்டம் அலுவலக மன்ற கூடத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர்கள் ஆராஞ்சி ஏ.எஸ் ஆறுமுகம், சாந்தி கண்ணன், துணை தலைவர் வாசுகி ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் பரிமேலழகன் அனைவரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில், ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், ஒன்றிய வளர்ச்சிக்கான பணிகள் குறித்தும் விவாதங்கள் நடந்தது.

    ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சங்கர், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, குப்புசாமி, அனுராதாசுகுமார், பாரதி, மணிமேகலை சேகர், புஷ்பா சதாசிவம், மகேஸ்வரி சங்கர் உள்ளிட்டவர்கள் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டும் பொதுமக்களின் சுகாதாரத்தை சீர் கெடாமல் பாதுகாக்கும் நோக்கில், ஒன்றியத்திற்கு தேவை அடிப்படை வசதிகளை உடனடியாக விரைந்து செயல்படுத்திடவேண்டும் என விவாதித்தனர்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் (கி. ஊ) காந்திமதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) பரிமளா, கல்வித்துறை, மருத்துவத்துறை, வேளாண்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

    • அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் வருகிற 9-ந்தேதி நடக்கிறது.
    • அடிப்படை தேவைகளை ஊராட்சி நிர்வாகம் செய்வார்களா? என்று நாவினிப்பட்டி கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    மேலூர்

    மேலூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த நாவினிப்பட்டி ஊராட்சியில் குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரவில்லை என்று கூறி இந்த பகுதி பொதுமக்கள் ஏற்கனவே நடந்த கிராம சபை கூட்டத்தின் போது வலியுறுத்தினர்.

    மேலும் கிராமசபை கூட்டத்தில் இருந்து வெளியேறி மேலூர்- காரைக்குடி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவலறிந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அதன் பின்பும் நடத்தி மறியலை கைவிட செய்தனர்.

    இருந்த போதிலும் தங்கள் பகுதிக்கு இன்னும் குடிநீர் முறையாக வழங்க வில்லை எனக்கூறி 6 மற்றும் 7-வது வார்டு கிராமமக்கள் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழுவின் செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் மாவட்டத் தலைவர் சக்திவேல், மாவட்ட துணைத் தலைவர் மெய்யர் முன்னிலையில் வருகிற 9-ந்தேதி நாவினிப்பட்டி ஊராட்சியில் அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்ற கோரி மேலூர் யூனியன் அலுவலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

    அப்போதாவது தங்கள் பகுதிக்கு அடிப்படை தேவைகளை ஊராட்சி நிர்வாகம் செய்வார்களா? என்று நாவினிப்பட்டி கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • முடுவார்பட்டி ஊராட்சியில் மயானத்திற்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும்.
    • மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி ஊராட்சியில் உள்ள மயானத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    2010-11-ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் முடுவார்பட்டி ஊராட்சியில் உள்ள மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. அதன் பிறகு பராமரிப்பின்றி மயானத்தில் செடிகள் அடர்ந்து வளர்நது காடு போல காட்சியளிக்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மயானத்திற்கு உடலை அடக்கம் செய்வதில் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மயானத்தில் நடப்பதற்கு கூட வழியில்லாமல் புதர் போல காட்சி அளிப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடுவார்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது
    • பாராளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி பேச்சு

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட ரெயில்வே கோரிக்கைகள் தொடர்பாக விஜய் வசந்த் எம்.பி. பாராளுமன்றத்தில் பேசியதாவது:-

    தமிழகத்தையும் குறிப்பாக எனது தொகுதியான கன்னியாகுமரியையும் ரெயில்வே திட்ட வளர்ச்சி பணிகளில் மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. இந்தியா முழுவதும் புதிய ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ரெயில்கள் மக்களின் தேவைக்கேற்ப நீட்டிக்கப்படுகிறது.

    ஆனால் தமிழக மக்களின் கோரிக்கைகளுக்கு ரெயில்வே அமைச்சகம் செவி சாய்க்கவில்லை. இந்தியாவின் அனைத்து ரெயில்வே மண்டலங்களும் பயணிகளின் தேவைக்கேற்ப ரெயில்களை நீட்டிக்கிறது. ஆனால் சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ரெயில்வே மண்டலம் மட்டும் மக்களின் தேவை களைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறது.

    தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்குப் பயணம் செய்வதற்கான ரெயில் சேவைகள் இங்கு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. இது தொடர்பாக கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக டெல்லி, சென்னை, திருவனந்தபுரம் என அனைத்து ரெயில்வே அலுவலகத்திலும் நான் கோரிக்கைகளை வைத்து வருகிறேன். ரெயில்வே துறை அமைச்சரை நேரில் சந்தித்தும் கோரிக்கைகளை முன்வைத்தேன்.

    ஐதராபாத் - தாம்பரம் சார்மினார் விரைவு ரெயிலைக் கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தேன். ஆனால் பல காரணங்களைச் சுட்டிக்காட்டி ரெயில்வே நிர்வாகம் இதனை மறுத்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்னைக்குத் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் இந்த மக்களுக்குப் பயணம் செய்வதற்கு இரண்டே 2 தினசரி ரெயில்கள் மட்டுமே உள்ளன. இதன் காரணமாக மக்கள் மூன்று மடங்கு பயண கட்டணத்தைச் செலுத்தி தனியார் பேருந்துகளில் பயணம் செய்ய நிர்ப்பந்திக்க ப்படுகின்றனர்.

    ஐதராபாத்-சென்னை ரெயிலைக் கன்னியாகுமரி வரை நீட்டிப்பதன் மூலம் கன்னியாகுமரி மக்களுக்கு சென்னை செல்வதற்கும் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வருவத ற்கும் கூடுதலாக ஒரு ரெயில் என்று கோரிக்கையும் நிறை வேற்றப்படும்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் வேளாங்கண்ணிக்குச் சென்று பிரார்த்தனை செய்வதற்கு வசதியாக திருவனந்தபுரத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர ரெயில் இயக்க வேண்டும்.

    கன்னியாகுமரி மாவட்ட த்தின் ரெயில் நிலையங்களில் மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்ய வேண்டி யது மிக அத்தியாவசியமான ஒரு கோரிக்கை. மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் 2-வதாக ஒரு ரெயில் நிலையம் இயங்கி வருகிறது. இந்த ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏதுவுமின்றி ரெயிலுக்காகக் காத்து நிற்கும் பயணிகள், மழைக்காலத்தில் ஒதுங்கு வதற்கு மேற்கூரை கூட இல்லாத ஒரு நிலை இருந்து வருகின்றது.

    அது போன்று நாகர்கோவிலின் முக்கிய சந்திப்பான கோட்டாறு ரெயில் நிலையத்தில் தேவையான அளவு கழிப்பறை வசதிகள் கூட இல்லாமல் மக்கள் அல்லல்படுகின்றனர். பல ஊர்களில் ரெயில்வே தண்ட வாளத்தை கடக்க மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ரெயில்வே கேட் பல நேரங்களில் மூடப்படுவதால் அவசரத்திற்குப் பயணம் செய்வதற்கு மக்கள் தத்தளிக்கின்றனர்.

    ஆகவே எங்கள் கோரி க்கைக்கு ஏற்ப முக்கிய இடங்களில் ரெயில்வே மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும். மந்தமாக நடை பெற்று வரும் ரெயில்வே இரட்டை வழிப்பாதையை விரைந்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு
    • இரவு நேரங்களில் தெருவிளக்குகள் அனைத்தும் எரிவதற்கு உறுதி செய்திட வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்திற்கு வருகை தரும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற் கொள்வது குறித்து பேரூராட்சிகள் உதவி இயக்குனர் (பேரூ ராட்சிகள்) மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலக சிறு கூட்ட அரங்கில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலெக் டர் அரவிந்த் கலந்து கொண்டு, துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற் கொண்டார்.

    பின்னர் அவர் கூறியதா வது:-

    கன்னியாகுமரிக்கு நவம்பர் மாதத்தில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்வரை அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்ப டுகிறது. எனவே அய்யப்ப பக்தர்க ளுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளை கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி, சுகாதாரத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

    மேலும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை போக்குவரத் துக்கு இடையூறு இல்லாமல் உரிய இடத்தில் நிறுத்துவதற்கு ஏதுவாக இடங்களை ஏற்பாடு செய்வதோடு, இரவு நேரங் களில் எந்தவித பயமும் இல்லாமல் பொதுமக்கள் நடந்து செல்ல ஏதுவாக தெருவிளக்குகள் அனைத்தும் எரிவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் மின்சாரத்துறை மற்றும் பொதுப்பணித்துறை உறுதி செய்திட வேண்டும்.

    மேலும் கன்னியா குமரியை சுற்றியுள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், உணவு பாதுகாப்புதுறை உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள் வதோடு, பிளாஸ்டிக் பயன் பாட்டை முற்றிலும் தவிர்ப்ப தற்கான துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதோடு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) விஜய லெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை காலத்தோடு செய்ய தவறிவிட்டது.
    • சீருடை, நோட்டு, புத்தகம் வழங்கும் பணியும் இதுவரை முழுமைபெறமால் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முன்னாள் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், நிருபர்களிடம் கூறியதாவது:- புதுச்சேரி மாநிலத்தை மத்திய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. அதேபோல், புதுச்சேரியை ஆளும் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக அரசு காரைக்காலை அனைத்து வகையிலும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. குறி ப்பாக சொல்லப்போ னால், மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை காலத்தோடு செய்ய தவறிவிட்டது. மாணவ ர்களுக்கான ஒரு ரூபாய் பஸ் வசதி முற்றிலும் கிடையாது.

    சீருடை, நோட்டு, புத்தகம் வழங்கும் பணியும் இதுவரை முழுமைபெறமால் உள்ளது. நகர் மற்றும் கிராமப்புற சாலைகள் போக்கு வரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. முதல் கட்டமாக, புதுச்சேரி அரசின் கல்வித்துறையின் அலட்சியப்போக்கை கண்டித்து, காரைக்காலில், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சந்திரமோகன் தலைமையில் ஓரிரு நாளில், காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அல்லது, கல்வித்துறை அலுவலகத்தை காங்கிரஸ் கட்சி, ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளுடன் இணைந்து முற்றுகை போராட்டத்தை நடத்த உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

    ×